வெள்ளி, 24 டிசம்பர், 2010

மருத்துவம் ஒற்றை தலைவலி நீங்க

மருத்துவம் ஒற்றை தலைவலி நீங்க

படரும் தும்பை தழை ,வேலை தழை, பூண்டு,கட்டி கற்பூரம்,மிளகு அளவு பெருங்காயம் சேர்த்து கையால் கசக்கி வலிக்கும் பாகத்தின் எதிர் பக்கம் உள்ள காதில் நான்கு சொட்டு விடவும் .

வெள்ளை பூனைக்காய்ச்சல் இலையை வலி எடுக்கும் பாகத்தில் ஓட்ட வேண்டும் பிடித்து கொண்டால் விட்டு விட வேண்டும் .விழுந்து    விட்டால்  நரம்பின்  மேல்  ஒவ்வொன்றாக    மூன்று  முறை  செய்யவும்  

திருமணத்தடை   நீங்க

     திருமணத்தடை   நீங்க -

 பசுவும்,கன்றையும் 48 நாட்கள் சுற்றினால் நல்லது. வெள்ளி கிழமை   பச்சரிசியும் வெல்லமும் கொடுக்க வேண்டும். அகத்தி   கீரையை வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.பசுவின் பின் புறத்தில் மஞ்சள்   குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி விழுந்து கும்பிடவும்.

கர்ப்பிணி

கர்ப்பிணி.

தாய்பால் கொடுத்தால்   குழந்தைக்கு ஆசைகள் வளர்ந்து வரும்..

     வாயில் எச்சில் ஒழுகும்   குழந்தை நன்றாக பேசும். வாந்தி எடுக்கும் குழந்தைக்கு வளர்ச்சி அதிகம்.

   கர்ப்பிணி சூரியகிரஹ இருளை   பார்க்க கூடாது பார்த்தால் குழந்தையின் மூளையை பாதிக்கும்.
     ஏழுமாத கர்ப்பமாக இருந்தால்   சூரியகிரஹணம் ஒன்றும் செய்யாது.சூரியகிரஹணத்தில் குழந்தை பிறந்தால் அம்சமாக   வளரும்.
     வலதுகால் சுண்டுவிரலில் காப்பு   கட்டி எடுத்த கீழாநெல்லிசெடியை வேருடன் பிடுங்கி கட்டினால் சுகப்பிரசவம் ஆகும்.
     பிரசவ அவதிபடும் பெண் தன்னை   மறந்த நிலையில் சிவ சிவா என்று உணரும் போது தாய் வேறு குழந்தை வேறாகிறது.
     அழும் குழந்தையும் வாயில்   விரல் சப்பும் குழந்தையும் பிற்காலத்தில் நனறாக இருக்கும் .
   குழந்தை மாலையிட்டு பிறந்தால்   மாமனுக்கு ஆகாது கொடிசுத்தி பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது .
     மூல   நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை மிகவும் செல்வாக்காக வளரும்.திருமண காலத்தில்  மாமனாரை பாதிக்கும். தனித்தனியாக இருந்தால்   பாதிக்காது.ஒரே குடும்பமாகஇருந்தால் தொல்லைகள் கொடுக்கும்


சேற்றுப்புண் விலக

ஒரு அம்மையாருக்கு காலில் சேற்றுப்புண் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்கு சுவாமிகளிடம் மருந்து கேட்க அதற்கு சுவாமிகள் " புளியை கரைத்து அத்துடன் மஞ்சள் தூளை அளவாக கரைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி குழம்பு போல் வரும் .அக் குழம்பை சேற்றுப்புண் உள்ள இடத்தில்  போட குணமாகும் என்றார் .

அந்த அம்மையாரும் சுவாமிகள் கூறியபடி செய்தார். மருந்து போடும் போது எரிச்சல் மிகுதியாக இருந்தது . இரு முறை போட்டதும் முற்றிலும் குணமானது .

 

வியாழன், 23 டிசம்பர், 2010

சொறிசிரங்கு விலக

ஆமணக்கு  எண்ணெய்  எருக்கன் பால் சேர்த்து பனியில்  காய வைத்து சொறி சிரங்கு மேல் தேய்க்கவும். பிரம்மதண்டி விதையை வறுத்து தூள் செய்து உடம்பில் தேய்க்கவும். 

குங்குமப்   பூ

குங்குமப் பூ

     குங்குமப்   பூவை பிரசவ பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்து பாலில் போட்டு பால்   மஞ்சளாகிய பின் குடித்து வந்தால்  ஞானமுள்ள சிகப்பான குழந்தை   பிறக்கும்.  

மரணபடுக்கை

மரணபடுக்கை

     மரணபடுக்கையில்   இருக்கும் போது  கோரோசனத்தை தண்ணீரில்   போட்டு,பாலில் வெள்ளி காசு போட்டு சிறிது நேரம் பொறுத்து,  கோரோசனத்தையும் பாலையும்  சுவாமிகளை நினைத்து கொடுத்தால் 3 3\4 நாழிகை   உயிருடன் இருப்பார்கள்.

ஈரைக்கிர கிணறு   ஊறும்

ஈரைக்கிர கிணறு ஊறும்.

ஈரைக்கிர கிணறு   ஊறும்.கெட்ட செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல செலவு செய்தாலும் காசு வந்து சேரும் வந்து சேரும்..

ஆணின் தத்துவம் 

ஆணின் தத்துவம் .

     ஆணின் தத்துவம்   நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே பெண்களிடம் சொல்ல வேண்டும். முன் யோசனை   நாளைக்குச் செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரி பார்க்க வேண்டும்.  

சம்சாரி

 சம்சாரி

ஒரு   சம்சாரி தன் பெண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து நியாயத்துடன் தொழில் நடத்தி   கடமைகளை சரிவர   செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை காட்டில் 36 வருடங்கள் கடுந்தவம் இருந்தாலும்  அடைய முடியாது .


சம்சாரியாக இருந்தாலும் களவும்   கற்றுக்கொள்ளவும். கற்று மறந்து விடு.

ஆண்

ஆண்

ஆண் - இரும்பு பெண் -தங்கம்.

 பெண் -- பூட்டு ஆண் -- சாவி

நம் வீட்டில் பெண் தவறு   செய்தால் அது பாவம் இல்லை காரணம் ஆண்கள் தப்பு.

கட்டின மனைவியைத் தாயாக மதிக்க   வேண்டும்.

பெண்கிட்ட வாங்கி சாப்பிட்டால்   கடன்.

     கட்டிய   மனைவி இல்லாமல் மோட்சத்திற்குப் போக முடியாது. மனைவி விட்டு கொடுத்தால்தான்   கணவன் மோட்சத்திற்கு போவான்.

 தாயும் ஒன்று தான் மனைவியும்   ஒன்று தான்.

ஆணுக்கு வலிமை வலது கை கட்டை   விரல், வலது கால் கட்டை விரல்.

     கடையில் பொருட்கள் வாங்கும்   போது பெண்களிடம் காசு கொடுத்து விட வேண்டும் அழுத்தமாக வாங்குவார்கள். ஆண்   வாங்கினால் குறை சொல்வார்கள்.
  பெண் பிள்ளையிடம்   உத்தரவாதம் சொல்லக்கூடாது.
நம்மை படைத்த,   உலகத்தை படைத்த தாயை மறக்க கூடாது.
     32 வயதுக்கு மேல் ஆணுக்கு   கல்யாணம் செய்தால் சிறந்தது.32க்கு மேல் எல்லா அம்சமும் கிடைக்கும்.
  போதும் என்ற மனமே பொன் செய்த   மனம்.
     ஆண்  சம்பாதிக்க பாடுபடும்போது எந்த கஷ்டம்   வந்தாலும் தைரிய லக்ஷ்மியை கைவிடக்கூடாது.
 ஆட்டி வைப்பதும்,கூட்டி   வைப்பதும் தாய்.

சொர்க்கம்.

சொர்க்கம்.

கட்டை பிராணன் போகும் இடம் தான் சொர்க்கம்.

பர்வத மலை

பர்வத மலை

பர்வத மலை துறவிகள் வாழ்ந்த இடம்.

பர்வத   மலைக்கு,செல்லும் போது அவல் வாங்கி செல்ல வேண்டும் பசி ஆற்ற பயன்படும்.

துறவி

துறவி

பிரம்மாவின் தலை   எழுத்தையே மாற்றக் கூடியவர் துறவி,  துறவிக்கு கடவுளே கட்டுப்பட்டவர்.

7-1/2 நாட்டு சனி

7-1/2 நாட்டு சனி.

7-1/2 நாட்டு சனி வந்தால் ஒரு அரசன் கூட ஆண்டி ஆகி விடுவான் அந்த நேரத்தில் பொருமை அவசியம் .

கிரகங்களின் தோஷம் கெடுதல்களை தடுக்க

கிரகங்களின் தோஷம் கெடுதல்களை தடுக்க .
தர்மம் செய்தால்   மட்டுமே கிரகங்களின் தோஷம்,கெடுதல்களை தடுக்க முடியும்,
பூஜைகளாலும்   தவத்தாலும் கிரகங்களை தடுக்க முடியாது.

சுவாமிகள் கூறும் அறுபடை வீடுகள்

சுவாமிகள் கூறும் அறுபடை வீடுகள் .
1) சுண்டூர் 2) திருப்பதி மலை, 3) மதுரை திருப்பரங்குன்றம் 4) வெள்ளியங்கரி 5) திருச்செந்தூர் 6) பழனி.

பெண்

மனைவி
குடும்பத்திற்கு வரும் பெண் (மனைவி) எல்லோரையும் தன் கூட பிறந்தவர்களைப் போல் பாவிக்க வேண்டும்,எப்போதும் பொறுமையுடனும் கோபப்படாமலும் இருக்க வேண்டும்.

கல்லானாலும் கணவன் புல்லான்னாலும் புருஷன்.

ஆவதும் பெண்ணாலே கோடான கோடி குடும்பம் கெட்டதும் பெண்ணாலே.
ஆத்திரத்தை பாராட்ட கூடாது, கோபமான சொல் கூடாது.

10   மாதம் சுமந்து 3-3\4 நாழிகை கஷ்டப்பட்டு குழந்தை பிறந்த பிறகு கணவண், குழந்தை
சாப்பிட்டானா என்று பார்பார்கள் .
கணவன் பெரிய குழந்தை தன் வயிற்றில் பிறந்த குழந்தை சின்ன குழந்தை.

தன் மனைவியை   அடிக்கவும்,திட்டவும்,அணைக்கவும் கணவனுக்கு உரிமை உண்டு.

கோபமாக வரும் கணவன்   அடித்தாலும்,திட்டினாலும் மனைவி பொறுத்துக் கொண்டு அடியையும் வாங்கிக் கொண்டு அரைமணி   நேரம் தணித்து கோபம் மாறிய உடன் உணவு பரிமாறிய பிறகு மனைவி அடித்தாலும் கணவன் வாங்கிக்கொள்வான்.

 வீட்டில் எது சமைத்தாலும் முதலில் மாமியாருக்கு கொடுக்கவும்.

நம்மை திட்டுபவபர்கள்தான் நம்மை வாழ்விப்பவர்கள்.

பெண்கள் உருப்படமாட்டாள் என்ற வாய்ச்சொல் வாங்க கூடாது.

பெண்கள் ஆண்களுக்கு   தைரியத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அன்பு மட்டுமே அழியா   சொத்து. பெண்கள் வாயால் இல்லை என்று சொல்ல கூடாது.

கணவனை   தெய்வமாக நினைத்து குடும்பத்திற்காக எந்த தவறு செய்தாலும் அவள் உத்தமி.

தகப்பனுக்கு பின்   தாய்,அம்மாவுக்கு பின் அண்ணி.

தளராத நெஞ்சமும்   இடராத சொல்லும் உடைய மனைவி கிடைப்பது அரிதினும் அரிது.

மனைவியை   தாயாகவும்,கணவரை தகப்பனாகவும் எண்ணி நடப்பவர்கள் கோடியில் கிடைப்பது  அரிது.

கொண்டுகிட்டாலும் சொல்லாதே கொடுத்துகிட்டாலும் சொல்லாதே.

கூடி கெட்டவர்கள்   யாருமில்லை,பிரிந்து கெட்டவர்கள் உண்டு.

அடிப்பதும் தாய்   உண்டாக்குவதும் தாய் ,ஆண்கள் அவர்களுக்கு பொம்மை, அவர்கள் கயிற்றை இழுத்தால்   ஆண்கள் ஆடுகிறார்கள்.

தலைமுடி,குடுமியை   முடியனும்.பக்கத்தில் இருக்கும் முடி அலையப்படாது,குடும்பத்தை அல்லல்   படுத்தும்.

முந்தியில்தான் எந்த   பொருளையும் வாங்க வேண்டும். மடிபிச்சை உயர்ந்தது.

     குடும்பத்தை மூடி   வைக்கும் தத்துவம் நல்லது.எது இருந்தாலும் பொறுமை வேண்டும்.ஆழ்ந்து செயல்பட   வேண்டும்..

   கட்டின   கணவனை தெய்வமாக நினைத்து வாழ்ந்து, கால் கட்டைவிரல்களை ஊன்றி நடந்து,பெரிய   கட்டைவிரல்களை பார்த்து கொண்டு போகும்  பெண்ணை   பேய்,பிசாசு,பில்லி சூன்யம் யாதும் அணுகவே அணுகாது.

தாய்க்கு தலைபிள்ளை   மேல் பற்று அதிகம், தகப்பனுக்கு கடைசிபிள்ளை மேல் பற்று அதிகம்.திட்டினாலும்   உள்ளுக்குள் பாசம் அதிகம்.

பெண்பிள்ளை   வீட்டில் கஷ்டப்பட்டால் குடும்பம் வளர்ச்சியடையாது.

கோபம் வரும்   வீட்டில் சண்டை வளரும்.

குழந்தைகளை   ஒழுக்கமாக வளர்பவர்கள் பெண்கள் தான்.

காலையில்   கணவன்,மாமியார் மாமனாரை கும்பிட வேண்டும்.

பெண்கள் காலை எழுந்தவுடன் கால் பெருவிரல்களை பார்த்து கொண்டு   நடந்துபோனால் கஷ்டப்படமாட்டார்கள்.

நெருப்பும்,தண்ணீரும்   சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்பொழுதும் இலக்ஷ்மி கடாக்ஷம் உண்டு.

கணவனோ   பெரியவர்களோ நாயே, பேயே என்று திட்டினாலும் பெண்கள் சந்தோஷமாக ஏற்று கொள்ள வேண்டும்.

ஆண்கள் செய்யும் நன்மையில்   பெண்கள் பாதி புண்ணியம் பெறுவர்.

பெண்களுக்கு 55 வயதுக்கு   மேல்தான் அமைதி வரும்.

     சதை,இரத்தம்,நீர்  தாய் சக்தியைக்கொடுத்து  இரட்சிக்கிறது,அவ்வளவும் தாரத்திற்கும்  உண்டு. தாயைவிட அதிகமாக பாசமுள்ளவள் தாரம்.

     10 வருடம் தவம் செய்யும்   ஆளைவிட புண்ணியத்தை பெண் சில மாதங்களில் வாங்கி விடுவாள்.

கணவனுக்கு வரும் கண்டத்தை   மனைவிதான் காப்பாற்றுவாள்.

பெண்கள் எப்போதும் கலங்கக்   கூடாது.

     பெண்களிடம்   மன அமைதியும் தெய்வநம்பிக்கையும் எப்போதும் இருந்தால் சனீஸ்வரன் இடம் இல்லை   என்று போய் விடுவார். போகும் போது   கொடுத்துவிட்டுத்தான் போவார்.

  பெத்தமனம் பித்து பிள்ளை மனசு   கல்லு.

ஆண் இல்லாமல் பெண் இல்லை பெண்   இல்லாமல் ஆண் இல்லை.

     பெண்கள் சீக்கிரம் வரம்   வாங்கிவிடுவார்கள், வாங்கவும் முடியும்.கணவன் உயிரை காப்பாற்ற பெண்ணால்தான்   முடியும் (மாங்கல்ய பிச்சை).

  பெண்கள் எப்போதும் பொறுமையுடன்   இருக்க வேண்டும்,ஆண்களுக்கு மன அலைச்சல் கொடுக்கக்கூடாது.
வெற்றிலை - இலக்ஷ்மி, பாக்கு -   சிவன், சுண்ணாம்பு - சக்தி.
     பெண்கள் சக்தி அம்சம்,   உடம்பு-சக்தி ,பெண்கள் சுவாமிகளின் அன்பை சீக்கிரம்  பெறுவார்கள்.
  ஆண் கஷ்டப்படும் போது பெண்கள்   ஊக்கம் கொடுத்து தைரியப்படுத்த வேண்டும்.
பெண்கள் நல்ல இராசியாக   இருந்தால் தான் ஆணுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
     ஆண்கள்   செய்யும் புண்ணியத்தில் பெண்களுக்கு பாதி பங்கு உண்டு. பெண்கள் செய்யும்  பாவத்தில் ஆண்களுக்கு பாதி பங்கு உண்டு.
  நம்பிக்கைக்கு ஆதாரம் மனைவிதான்.
பெண்கள் மதிப்போடு   போனால்தான் ஆண்களுக்கு மதிப்பு.
     சண்டை போட்டுக்கொண்டாலும்   கணவனிடம் அன்பு செலுத்தி சந்தோஷமாக நடந்துக்கொண்டு வரவேண்டும்.
 அடித்தாலும் தாங்கள்தான் என்று   பொறுமையுடனும்,நிதானத்துடனும் இருக்க வேண்டும்.
 பெண் தன் கணவன் நல்லவன் என்று   எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
  ஆணுக்கு கண்டத்தில்   முடி, பெண்ணுக்கு கிடையாது.
இரத்தம், சதை -  தாய்,   எலும்பு - தகப்பன் .
தாய் மடியில் தங்கம்   இருந்தாலும் தன் மடியில் தவிடாகிலும் இருக்க வேண்டும்.
     ஆண் ஆகிலும் பெண் ஆகிலும்   பயந்து திக் என்றால்,அந்த சமயத்தில் தான் பேய் பிடிக்கும். பெரிய கால் கட்டை   விரல்களை ஊன்றி நடந்தால் எதுவும் பிடிக்காது.
     கணவன் சொல்லை மனைவி   தட்டாமலும்,மனைவி சொல்லை கணவன் தட்டாமலும், இருவரும் இருக்க வேண்டும்.

  பெண் பண்போடு   ஒற்றுமையாக இருப்பது தான் பெருமை.

பெண்ணுக்கு வலிமை மார்பு   முனை, மூக்கு முனை.

     கொண்டு வந்தால்தான் - தந்தை.   கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் - தாய், சீர் கொண்டு வந்தால் - சகோதரன்.

  பெண்களிடம் எப்பொழுதும் கையில்   ஜம்பது ரூபாயாகிலும் இருக்க வேண்டும்.

கணவன் நன்றாக வைத்திருக்கையில்   பெண்ணுக்கு காசு ஆசை இருக்க கூடாது.

     குடும்பத்தின் நன்மைக்காக   செலவு செய்வதை கேட்கவோ தடுக்கவோ கூடாது.
 பெண்களின் மன ஆழத்தை   கண்டுபிடிக்க முடியாது பெண்பிள்ளை மன ஆறுதல்.
 பெத்த பிள்ளைக்கு இல்லை என்று   சொல்லப்படாது.
     பெண்களுக்கு   கடவுள் அச்சம், ஆசை, மர்மம் கொடுத்துள்ளார்.
 தாய் வீட்டு பாசம் பெண்ணுக்கு   போகாது
 தான் புருஷனை   திட்டலாம்,மற்றவர்கள் திட்டக்கூடாது போச்சி
  மடிப்பிச்சை வாங்கி கணவனைக் காப்பாற்றுபவர்
 ஆண் செய்யும் வேலையை பெண்   செய்வாள்.பெண்செய்யும் வேலையை ஆண் செய்ய முடியாது.
 குழந்தை பிறந்த இரண்டு மணி   கழித்து புருஷன் சாப்பிட்டாரா என்று கேட்பாள்
     இருமனம் ஒருமனமாக இருந்தால்   நன்றாக அமையும்.
 பெண் தண்ணீரை அதிகமாக செலவு   செய்யக்கூடாது.
 கடவுள்   படைப்பை எல்லாம் பெண்களிடம் கொடுத்துள்ளார்,லகான் கயிறு அவர்களிடம்  கொடுத்துள்ளார்
 இரட்சிப்பதும் பெண்களே   தேடுவதற்காக பாசத்தை
 கொடுத்திருக்கிறார்.
 எவ்வளவு சம்பாதித்தாலும்   ஆண்துணை இல்லாமல் பெண் வாழ முடியாது.
       சொத்து,சரீரம்   பெண்களுக்குத்தான் சொந்தம் பெண் மனம் கஷ்டப்பட்டு நாம் போனால் காரியம்   கெட்டுவிடும்.
     பெண்களின்   மனம் சந்தோஷமாக இருந்தால் வீட்டில் நோய் வராது .
 தாலி கயிறு அறுந்தால் கணவருக்கு கஷ்டம் வரும்
 பெண்ணை தகப்பன் சொல்லுகிற இடத்தில் கொடுப்பது நல்லது .
    பெண்கள் பொறுமையாக இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் .
 பெண்கள் எப்போதும் கலங்ககூடாது
 கணவனுக்கு எப்பொழுதும் முதன் முதலில் மனைவிதான் சாப்பாடு போட வேண்டும் . அப்படி போட்டு வரும் குடும்பம் நன்றாக இருக்கும் .
பெண்களிடம் எப்பொழுதும் கையில்   ஜம்பது ரூபாயாகிலும் இருக்க வேண்டும்.

எச்சில் இலை

எச்சில் இலை .

அன்னதானத்தின் போது
பந்தி பரிமாறுவதை விட மக்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதுதான் புண்ணியம் .

பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகுமா ?

பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகுமா ?

 பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகாது.
 செய்த தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கெட்ட நேரம் விலக

கெட்ட நேரம் விலக

குறைந்தது   108 பேருக்கு சாப்பாடு போட்டு அவர்கள் சாப்பிட்ட இலைகளை எல்லாம் எடுக்க வேண்டும் .
குறைந்தது இரண்டு பேருக்காவது அரைசவரன் எடைக்கு குறையாமல் மாங்கல்யம் வாங்கி  ஏழை எளியவர்களுக்கு திருமணத்திற்கு  கொடுக்கவும்.
  

விளக்கு

விளக்கு 

பூஜை விளக்கு ஏற்ற பயன்படும் எண்ணைகள் .

ஆமணக்கு எண்ணை
எள் எண்ணை ( கெட்டது ஒழிக்க நல்லது )
நெய்
தேங்காய் எண்ணை
இலுப்பை  எண்ணை
வேப்பம் எண்ணை ( கெட்டதற்கு பரிகாரம் )
கடலை எண்ணை கூடவே கூடாது .

ஆமணக்கு எண்ணையை லேசாக காய்ச்சி ஏற்றவும் .கொதி வரவிட்டு இறக்கவும் .

விளக்கு ஏற்றுவதற்கு உகந்தது இலுப்ப எண்ணை .

குத்து விளக்கு ஏற்றும்போது ஒரு திரிசல் ஏற்றக்கூடாது .
குறைந்தது இரண்டு திரிசலாவது இருக்கவேண்டும் .
மூன்று திரிசல் போட்டால் கெட்டது போகும்.
நான்கு திரிசல் சகலத்திற்கும் நல்லது .
ஐந்து திரிசல் சர்வ ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் .

மண் அகல் விளக்கு மிகவும் நல்லது .

வடக்கு -சக்தி - கர்மகாண்டம்
தெற்கு - சிவன் -ஞானகாண்டம்
கிழக்கு -சாந்தி - மத்யகாண்டம் .

காமாட்சி அம்மன் விளக்கில் இரண்டு திரிகள் போட்டு விளக்கு ஏற்றினால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
சூரிய உதிக்கும் முன்னும் , சூரிய அஸ்தமனம் முன்னும் ( கால் மணி நேரம் முன் ) ஆமணக்கு எண்ணை விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் அமைதி கிடைக்கும் .
        
விளக்கை ஊதி அணைக்ககூடாது.கையால் பக்கத்தில் ஒட்டி அணைக்கலாம் .
விளக்கிலிருந்து கற்பூரத்தை கொழுத்த கூடாது.




    

புதன், 8 டிசம்பர், 2010

துறவியிடம் வரம் வாங்குவது எப்படி?

துறவியிடம் வரம் வாங்குவது எப்படி?

தங்கத்தையும் செப்பையும் இணைப்பது எப்படி? இரண்டையும் உருக்கினால் தான் ஒட்ட முடியும்அதே போல் இரண்டு மனமும் உருக வேண்டும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் பூஜைகளால் கடவுள் கிடைப்பதில்லை நம்பிக்கையால் தான் மட்டும் தான் கிடைப்பார்.

வியாழன், 2 டிசம்பர், 2010

மருத்துவம் கை வீக்கம்

மருத்துவம் கை வீக்கம்

தழுதாளி இலை, மிளகு சித்திரத்தை ,சுக்கு அரிசி ,கண்டம் திப்பிலி பூண்டு பரங்கிபட்டை இலைகளை கஷாயம் போட்டு தினம் இரண்டு வேளை சாப்பிடவும் 

மருத்துவம் கைகுடைச்சல்

மருத்துவம் கைகுடைச்சல்

அருகம்புல் வேரின் கிழங்கை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிடவும்

மருத்துவம் காலில் கருப்பு படை

மருத்துவம்  காலில் கருப்பு படை

கண்டங் கத்தரிக்காயை இடித்து ஒன்றரை லிட்டர் தேங்காய் எண்ணையில் எரிக்கவும் .சிறிது பூண்டு பற்களை போடவும். பூண்டு மொர மொர என்று இருந்தால் பதமானதாகிவிடும்.நெல்லிக்காய் கந்தகம் பத்துகிராம் சேர்க்கவும் .இந்தக் கலவையை படையின் மேல் தேய்த்து வரவும்      

மருத்துவம் காச நோய்

மருத்துவம் காச நோய்  

கண்டங் கத்தரிக்காயை இரண்டாக வெட்டி வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற வைத்து உலர வைத்து இடித்து தூள் செய்து சாப்பிடவும்          

மருத்துவம் கேன்சர் கட்டி உடைய

மருத்துவம் கேன்சர் கட்டி உடைய

உத்தாமணி சாற்றில் சுண்ணாம்பு விட்டு மஞ்சள் கொம்பால் இழைத்து கட்டியின் மேல் தடவினால் உடைந்துவிடும் அல்லது இழைத்ததை துணியில் தோய்த்து கட்டியின் மேலே போட்டு வரவும் .பழுத்து கட்டி உடைந்து விடும் .    

மருத்துவம் கெட்ட நீரினால் கட்டி இருந்தால்

மருத்துவம் கெட்ட நீரினால் கட்டி இருந்தால்

கருநொச்சி தழையுடன் மிளகையும் சேர்த்து அரைத்து காலையில் கச்சக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிடவும் .

புதன், 1 டிசம்பர், 2010

பல கடவுள்

பல கடவுள்
பல கடவுளை கும்பிடாதே எல்லாம்  குருவே .குருவே கடவுள் ஆவார் .

சாந்தி

சாந்தி

1008 விளக்கு எரிந்தால் எல்லாவற்றையும் சாந்தி செய்யும்

மருத்துவம் பிரசவ காலத்தில் குழந்தை சுலபமாக பெற

மருத்துவம் பிரசவ காலத்தில் குழந்தை சுலபமாக பெற

சிற்றாமணக்கு எண்ணை இரண்டு சோடா பாட்டில் அளவு எடுத்துக்கொண்டு அதில் பேயன் வாழைபழத்தை துண்டு துண்டுகளாகி ஊற வைத்து வெயிலில் காய வைத்து ஜாடியுடன் சூரிய ஸ்புடம் போடவும் .பிரசவகால பெண்கள் இரவு படுக்கும் முன்  சிற்றாமணக்கு எண்ணையில் ஊறிய பேயன்பழ வாழைபழ துண்டை சாப்பிட்டு வந்தால் சூடு தணியும் சுலபமாக குழந்தையும் பிறக்கும் .

முருங்கை தழையை சாம்பாரில் போட்டு கொடுத்தால் சுக பிரசவாமாகும் .     

மருத்துவம் சுகபிரசவம்

மருத்துவம் சுகபிரசவம்

பூச நட்சத்திரத்தில் சிகப்பு நாயுருவி செடியை காப்பு கட்டி சுவாமிகளை மனதார நினைத்து 108 முறை ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று ஜெபித்து மஞ்சள் தண்ணீர் தெளித்து பிடுங்கி வைத்து பிரசவமாகாமல் இருக்கும் பெண் உள்ள அறையில் ஈசான்யம் பக்கம் போட்டால் சுக பிரசவமாகும்

மருத்துவம் பிரசவத்திற்கு

மருத்துவம்  பிரசவத்திற்கு

பிரசவ வலி வந்தவுடன்   கீழாநெல்லி செடியை காப்பு கட்டி வேருடன் பிடுங்கி வலதுகால் சுண்டுவிரலில் கட்ட வேண்டும்.
இரண்டுமணி நேரம் கழித்து குழந்தை பிறக்கும் என்றால் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டால் கொழ கொழ என்றாகும் அந்த தண்ணீரை குடிக்க செய்யவும் .
தாயின் வயிற்றிலேயே இறந்த குழந்தையையும் அப்புற படுத்துவதற்கும் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டு சிறுக சிறுக ஒரு டம்பளர் நிறைய ஐந்து அல்லது ஆறு முறை கொடுத்தால் இறந்த குழந்தையும் நல்லபடியாக வெளியே வரும்.
யானைநேருஞ்சி - சிருகுறிஞ்சி  வகையை சேர்ந்தது .யானை நெருஞ்சி இருக்குமிடத்தில் யானை வராது .

பிரசவ பாதை ஆரம்பித்தவுடன் மூன்றேமுக்கா  நாழிகையிலே என்னை ஏன் பிறக்க வைத்தாய் என்று கடவுளை வேண்ட, உடம்பிலே உள்ள சூட்டை குறைத்தால் உடனே பிரசவமாகும்.கணவன்,மகள் இருந்தால் தாமதமாகும் தனியே விட்டுவிட்டால் ஐந்து நிமிடத்தில் தன்னைதானே மறந்தால் நரம்பை இழுத்து பிடித்திருப்பது விட்டுவிடும் .
நான்குமாதம் ஆன பிறகு கிராம்பு சாப்பிடவேண்டும்,குங்குமப்பூ கொஞ்சமாக கொடுக்கவும்.

கற்பூரம் ஆராதனை செய்யும் முறை

கற்பூரம் ஆராதனை செய்யும் முறை

சுவாமி படங்களுக்கு முதலில் மேலே காட்டி  பிறகு  கீழே வலது பக்கம் மூன்று சுற்றும் இடது பக்கம் ஒரு சுற்று அதிகமாக நான்கு சுற்றுக்கள் சுற்றவேண்டும் [சிவனுக்கு மூன்று சுற்று சக்திக்கு நான்கு சுற்று ]

வெள்ளைகாரம்பசு

 வெள்ளைகாரம்பசு:-
 வெள்ளைகாரம்பசு  (சந்தன கலர்) முடி ,வால்,எல்லாம் வெள்ளை யாக இருக்கும் .திட்டினால் கண்ணீர் விடும்  தனியாகவே ஓடும்.அந்த  வெள்ளைகாரம்பசு விருந்து  தான் கோரோசனம் கிடைக்கும் ."காராம்பசு கடவழிபோகும்".ஒரிடத்தில் நிற்காது 

மருத்துவம் கர்ப்பஸ்திரி

மருத்துவம் கர்ப்பஸ்திரி 

போட்டது போட்டபடி  குழந்தை இருக்கும்.குழந்தை முட்டும்.
சங்கத்தழையை எள் எண்ணையில் வதக்கி சாப்பிட்டால் கைகுத்தல் குடைச்சல் நீங்கும்.
தனியா சுக்கு வறுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிடவும் (.சூடும் குளிமையும் இல்லாத பொருள் பனைவெல்லம்)
இரவு படுக்கும் போது கொதிக்கும் பாலில் குங்குமப்பூவை போட்டு மஞ்சளாக பால் மாறிய பின்  ஆற்றி சாப்பிடவும்.      

புண்ணியம்

புண்ணியம்

பத்துபேருக்கு சாப்பாடு போடுவதில் வரும் புண்ணியத்தில் பாதி சாப்பிட்ட இலையை எடுப்பவர்களுக்கு வந்து சேரும்.

கோயிலுக்கு   சென்றால் கீழே உட்கார வேண்டும் அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

சட்டி எடுத்து   பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.

சாப்பிடும் போது   யாராவது வந்தால் உள்ள சாப்பாட்டை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும்.

செவ்வாய், 30 நவம்பர், 2010

மருத்துவம் சளி கட்டுவது நீங்க

மருத்துவம் சளி கட்டுவது நீங்க

முருங்கை பூ ,மூன்று பூண்டு பள்ளு ,மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிடவும் .

மருத்துவம் கோமக்கோனை கட்டி

மருத்துவம் கோமக்கோனை கட்டி

கும்னா செடியின் வேர்,பட்டையைக் கொண்டு வந்து  சுத்தம் செய்து தூள் செய்யவும். ஒரு படி எள்ளு மாவும் ஐந்து பெரிய பனைவெல்ல கட்டி எல்லாவற்றையும்  இடித்து ஆறு உருண்டைகளாக செய்து ஒரு உருண்டையை தர்மம் செய்யவும், மீதி உருண்டையை தினம் ஒன்று சாப்பிடவும்.     

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் கட்டித்தருகிறேன் என்று போகாதே. நன்கு தெரிந்தவர்கள் பத்து பேர்களிடம் காசு வாங்கி செய்யவேண்டும் .பிரியபட்டதை கொடு என்று கேக்கவேண்டும்.

ஒருவனே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கோயில் நல்லபடியாக இருந்தாலும் கும்பாபிஷேகம் ஆன ஒரு வருடத்தில் இறந்து விடுவான் அல்லது பின்னப்படுவான்.     

திங்கள், 29 நவம்பர், 2010

மருத்துவம் கர்ப்ப கோளாறு

மருத்துவம் கர்ப்ப கோளாறு

அருகம்புல் அரைத்து பாலில் கொடுக்கவேண்டும்

மருத்துவம் இளம்பிள்ளைவாதம் பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க

மருத்துவம் இளம்பிள்ளைவாதம் பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க
கர்ப்பிணிக்கு தனியா அதிகமாகவும்,மோடி குச்சி, மிளகு ,சீரகம்,சுக்கு வறுத்து இடித்து சலித்து தழுதாளி இலையை எள் எண்ணையில் வதக்கி பூண்டு வைத்து ஆட்டி கடுகு போட்டு தாளித்து ஊறுகாய் போல் உபயோகித்து வரவேண்டும் .    

மருத்துவம் கைக்குழந்தைக்கு கபம்,சளி நீங்க

மருத்துவம் கைக்குழந்தைக்கு கபம்,சளி நீங்க 

குப்பை மேனி இலை,துளசி இலை ஆவி கட்டி சாரு எடுத்து அதில் நான்கு சொட்டு தேன் விட்டு  பாலாடையில் தினமும் காலை கொடுத்தால் கபம் ,சளி மூன்று மாத குழந்தைகளுக்கு
விலகும். 

மருத்துவம் குழந்தை மாந்தத்திற்கு

மருத்துவம் குழந்தை மாந்தத்திற்கு
கல்யாணமுருங்கை கொழுந்து ,வெள்ளை வேலம் பட்டை ,உதயங் கொழுந்து இவைகளை சம அளவு சேர்த்து அரைத்து பாலில் ஒரு தேக்கரண்டி ஆறு மாதம் வரை கொடுக்கலாம் .ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைக்கு இரண்டு அவுன்ஸ் கொடுக்கலாம் .

பாகற்காய்  இலையின் சாற்றை சனிக்கிழமை அன்று பாலாடையில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் நீங்கும்.

 
 

மருத்துவம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க

மருத்துவம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க

உத்தாமணிசாறு, வேப்பம் எண்ணை சேர்த்து இரண்டு பூண்டு பள்ளு போட்டு காய்ச்சி கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.    

மருத்துவம் காக்காய் வலி

மருத்துவம் காக்காய் வலி  

உத்தாமணி சாறு, வேப்பம் எண்ணை பூனை காய்ச்சல் பட்டை தூள் கலந்து காய்ச்சி மாதத்திற்கு மூன்று நாள் வீதம் மூன்று அமாவாசை கொடுக்கவும் 

மருத்துவம் காதில் குடு குடு என்ற சப்தம் கேட்பது,பேசுவது கேட்காமல் இருப்பது விலக

மருத்துவம் காதில் குடு குடு என்ற சப்தம் கேட்பது,பேசுவது கேட்காமல் இருப்பது விலக

தேங்காய் எண்ணை , வெள்ளை வேளைகீரை,நாயுருவி வேர் ,பொரித்த பெருங்காய நைஸ்தூள் ,பூண்டு பள்ளு, சிறிது கற்பூரம் இவைகளை எரித்து சூடு தாங்கும் அளவு காதில் ஊற்றி வரவும் .     

32 லட்சணங்கள்

32 லட்சணங்கள்

கைவிரல்கள்--------------------------- பத்து
கால் விரல்கள்------------------------- பத்து
காது--------------------------------------- இரண்டு
கண்---------------------------------------- இரண்டு
மூக்கு துவாரம்------------------------ இரண்டு
வாய்--------------------------------------- ஒன்று
மூத்திரதாரை------------------------- -ஒன்று
தொப்புள்--------------------------------- ஒன்று
மார்பு--------------------------------------- இரண்டு
மலம் அடிக்கும் தாரை --------------ஒன்று

மொத்தம் 32

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மருத்துவம் காது அடைப்பு விலக

மருத்துவம் காது அடைப்பு விலக   

வெள்ளை வேளைக்கீரை வேர் ,சிறுகுருஞ்சா நாயுருவி வேர் ,பெருங்காயம், கற்பூரம் சேர்த்து தேங்காய் எண்ணையில்  எரிக்கவும். எல்லாவற்றையும் போடி செய்து கடைசியில் கற்பூரம் சேர்க்கவும். காது சூடுதாங்கும் வரை காதில் ஊற்றவும் 

சனி, 27 நவம்பர், 2010

கும்பாபிஷேகத்திற்கு எடுத்து வரவேண்டிய தீர்த்தங்கள்

கும்பாபிஷேகத்திற்கு எடுத்து வரவேண்டிய தீர்த்தங்கள்
ஐந்து கிணற்று தண்ணீர்
மூன்று  ஆற்று தண்ணீர் அல்லது மூன்று நதி நீர் .
கடல் நீர்

காலசர்ப்ப யோகம் நீங்க

காலசர்ப்ப யோகம் நீங்க
பற்று அற்ற துறவிக்கு அன்னம் அளித்து அவரை 48 நாட்கள் வலம் ஒன்பதும் இடம் பத்தும் சுற்றிவந்தால் காலசர்ப்ப யோகம் நீங்கும் .

நம் சுவாமிகளை 108 சுற்றுகள் சுற்றி விட்டு வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சுவாமிகள் கோயிலுக்கு சென்று கோயில் ஆருகில் இருக்கும் ஓடையில் குளித்து ஈரத் துணியுடன் அழுக்கு சுவாமிகள் சமாதியை நான்குமுறை அங்க பிரதஷ்டம் செய்தால் தன்னாலே நீங்கும் .

என்றென்றும் காற்றாக உலாவிக்கொண்டு இருக்கும் துறவிகள் ,சித்தர்கள், முனிவர்கள் சமாதியை அங்க பிரதஷ்டம் செய்தால் தன்னாலே எல்லா கஷ்டங்களும் குறைகளும் விலகி விடும் .
முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்           

அம்மனின் பெயர்கள்

அம்மனின் பெயர்கள் 

முதல்  பெயர்
ஜமதகன முனிவரின் மனைவி ரேணுகாதேவி

இரண்டாவது பெயர்
காவேரி

மூன்றாவது  பெயர்
காசி விசாலாட்சி அன்னபூரணி

நான்காவது பெயர்
மதுரை மீனாட்சி

ஐந்தாவது பெயர்
சமயபுரம் மாரியம்மன்

ஆறாவது பெயர்
மலையனூர் மாரியம்மன்

ஏழாவது பெயர்
கழுத்து மாரியம்மன்

எட்டாவது பெயர்
மசான உத்திரி

ஒன்பதாவது பெயர்
காஞ்சி காமாட்சி         




சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் போது சுவாமிகளின் அன்பும் , அருளும் , ஆசிர்வாதமும் , தரிசனமும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்

வெள்ளி, 26 நவம்பர், 2010

சுப்ரமணியர் அம்சம்

சுப்ரமணியர் அம்சம்


நம் தவத்திரு சற்குருநாதர் அப்பா பைத்தியம் சுவாமிகள் சுப்ரமணியரின் அம்சம்

வியாபார ஸ்தலத்தில் எந்த பக்கம் பார்த்து அமர்வது ?

வியாபார ஸ்தலத்தில் எந்த பக்கம் பார்த்து  அமர்வது ?

ஒரு வியாபார ஸ்தலத்தில் அமர்வது மேற்க்கு முகம் அல்லது தெற்க்கு முகம் பார்த்து அமர வேண்டும்.

Swamiji Photo

Swamiji Art (old )

மருத்துவம் கால் கை விழுந்ததற்கு

மருத்துவம் கால் கை விழுந்ததற்கு

தாம்பூலத்தில் தங்க பஸ்பம் அரிசி எடை வைத்து மூன்று வேளையும் கொடுத்தால் குணமாகும்
மருத்துவம் காசம் ( TB ), படை, மூலச்சூடு நீங்க

நிலகடம்பையுடன் மிளகையும் சேர்த்து அரைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நீங்கும்.

கண்டங்கத்தரிக்காயை வெள்ளாட்டு கோமியத்தில்  ஊறவைத்து மறுபடியும் காயவைத்து வறுத்து தூள் செய்து தேய்க்கவும் .காசத்திற்கு உள்ளுக்கு சாப்பிடவும்        

மருத்துவம் கால்களில் உள்ள ஆணி விலக

மருத்துவம் கால்களில் உள்ள ஆணி விலக

கீழாநெல்லியை அரைத்து பாதத்தில் தேய்த்து இரவு அப்படியே கட்டிவிட வேண்டும் .பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் ஆணி வெளியே வரும்    

மருத்துவம் காதுகளில் சீழ் வருவது நிற்க

மருத்துவம் காதுகளில் சீழ் வருவது நிற்க

தேள்கொடுக்கு இலையையும் ,பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து எள் எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். 15 நாட்கள் விட்டு மறுபடியும் போடவும் . பிறகு தேள்கொடுக்கு இலையையும் ,பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து தேங்காய்  எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். இது போல் காது சுத்தம் ஆகும் வரை போடவும்           



மருத்துவம் கண் நன்றாக தெரிய

மருத்துவம்  கண் நன்றாக தெரிய

கரிசலாங்கண்ணி சாப்பிடவேண்டும் .கீழாநெல்லி செடியை பிடுங்கி சீரகத்துடன் அரைத்து சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் .

மருத்துவம் கக்கூஸ் படை

மருத்துவம்  கக்கூஸ் படை 

ஆடுதின்னாபாளை, நெல்லிக்காய் கந்தகம் சம எடை எரித்து தேங்காய் எண்ணையில் சேர்த்து தடவினால் குணமாகும் . 

மருத்துவம் கண் சிகப்பாக இருப்பது & நீர் வடிதல் நிற்க

மருத்துவம்  கண் சிகப்பாக இருப்பது  & நீர் வடிதல் நிற்க

அடுக்கு நந்தியாவட்டை பூவை பாலில் ஊற வைத்து ,ஊறின பாலை கண்ணில் ஊற்றினால் கண்ணீர் வருவது நிற்கும் .

மருத்துவம் கண் பார்வை பெற

மருத்துவம் கண் பார்வை பெற

கீழாநேல்லியையும் ,சீரகமும் அரைத்து லேகியம் செய்து சாப்பிடவேண்டும் .            

மருத்துவம் கண்வலி விலக

மருத்துவம்  கண்வலி விலக

பிரம்மதண்டியின் மஞ்சள் நிறமான பாலை மூன்று நாட்கள் போடவும் 

மருத்துவம் ரத்தம் சுத்தியாக

மருத்துவம்  ரத்தம் சுத்தியாக

சின்ன வெங்காயம் ( சாம்பார் வெங்காயம் ) சாப்பிட ரத்தம் சுத்தியாகும்.

மருத்துவம் தலைவலி குணமாக

மருத்துவம் தலைவலி குணமாக
ஒன்றரைகிலோ மிளகு வாங்கி தலையணை  போல் தைத்து ஒரு மாதம் அதில் தலைவைத்து படுக்க தலைவலி குறையும். தலையில் உள்ள நீரை எல்லாம் மிளகு உறிஞ்சிவிடும்.தலைவலி முற்றும் குணமாகும் . 

மருத்துவம் நரம்பு தளர்ச்சி நீங்க

மருத்துவம்  நரம்பு தளர்ச்சி நீங்க
கல் சுண்ணாம்பு ஒரு மண் காலத்தில் போட்டு தெளிந்த நீரை எடுத்து அதில் ரசமணியை போட்டு பின் நீரை மட்டும் குடிக்கவும்.

அழுக்கு சுவாமிகள்

அழுக்கு சுவாமிகள்

தன்னை உணர்ந்து ( தன் உள்ளத்தை உணர்ந்து  ) புல் பூண்டு எல்லா ஜீவராசிக்குள் இருக்கும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் வேட்டைக்காரன்புத்தூர் அழுக்கு சுவாமிகள் ஆவார்   

மனதை ஒருநிலைப் படுத்துவது

மனதை ஒருநிலைப் படுத்துவது

பூஜைஅறையில் குத்துவிளக்கை எள் எண்ணை விட்டு ஏற்றி நம் பின் வைக்க வேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடி வைத்திருக்க வேண்டும் .இவற்றின் நடுவில் உட்கார்ந்துகொண்டு சுடரொளியை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே வரவேண்டும் .கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை அடையும்போது மனம் ஒருமுகமாக நின்று விட்டதற்கு ஆரம்பமாகும் .

நிலைக்கண்ணாடி முன் நாம் உட்கார்ந்து கொண்டு நாம் நம் உருவத்தை பார்த்துக்கொண்டு வரவேண்டும். மனம் ஒடுங்கும்போது நம் உருவம் நமக்கு கண்ணாடியில் தெரியாது

செய்யும் தர்மத்தை வெளியில் சொல்லாதே

செய்யும் தர்மத்தை வெளியில் சொல்லாதே

செய்யும் தர்மம், நல்லவை செய்யும் போது அடுத்தவனுக்கு தெரியக்கூடாது.தெரிந்தாலும் சொன்னாலும் நாம் செய்த புண்ணியம் போய்விடும் .

மிச்சம்

மிச்சம்
உண்டாகின இடத்தில் சிறிது எப்போதும் இருக்க வேண்டும் . எல்லாம் கொடுத்து விடாமல் சிறிதாகிலும் மிச்சம் வைக்க வேண்டும் . கடவுள் கொடுத்தவர் அவருக்காக மறுநாள் வரை இருக்க வேண்டும் .பாத்திரத்தில் இரவு சமைப்பதில் கொஞ்சம் போட்டு வைக்க வேண்டும் .மறுநாள் எடுத்து நாய், பசு ,காக்கை ஏதோ ஒரு ஜீவராசிக்கு கொடுக்க வேண்டும் .

போகும் காரியம் வெற்றி பெற

போகும்  காரியம்  வெற்றி  பெற


நிலைக்கண்ணாடி , பெரிய கால் விரல்களை பார்த்து புறப்பட்டால் போகும் காரியம் வெற்றியாகும் .

வியாழன், 25 நவம்பர், 2010

கடன்

கடன்

கடன் வாங்கி தொழில் செய்ய கூடாது .


அவசரத்தில் கடன் வாங்கினால் ஆறு மாதத்தில் அடை.


கடன் வாங்கினால் மனது கஷ்டப்படும் .


பிறரிடம் வாங்கும் பணத்தை திருப்பி கொடுத்து விடவேண்டும் . ருனாபாதம் கூடாது பிறர் பொருள் நமக்கு வேண்டாம்

பிள்ளைகளை வளர்க்கும் முறை

பிள்ளைகளை வளர்க்கும் முறை

பிள்ளைகளுக்கு சம்பாதித்து வைத்து செல்ல பிள்ளைகளாக வளர்க்காமல் நல்லது கெட்டது என்பன உணரச் செய்ய வேண்டும் . உணர்ந்து நடக்க பழக்கப்படுத்த வேண்டும் .

உன் வீட்டையும் பிள்ளைகளையும் திருத்தி வைக்க முடியாமல் ஏன் ஊர் விவகாரம் .

மகனை முன்னே விட்டு அவனுக்கு துணையாக இரு

 பிள்ளைகளை காலை 4.30  மணிக்கு படிக்க வைத்தால் படிப்பு நன்றாக வரும் .
பெண் பிள்ளைகள் கட்டின கணவர் வீட்டை பெரியதாக நினைக்க வேண்டும் .அதுவே தாய் வீட்டார்க்கு மதிப்பு .
அடுத்தவர்க்கு கெட்டது செய்யக்கூடாது
திருடன் அபசாரி என்ற பெயர் வாங்கக்கூடாது .
கன்னத்தில் கை வைக்க கூடாது ( தரித்திரம் , கஷ்டம் வரும் )
அப்பன் கொடுக்கும் காசில் இரண்டு தம்படி மிச்சம் பண்ணும் பிள்ளை என்றும்  முன்னுக்கு வருவான்

முருங்கை கிளையை ஒடித்து வளர்க்கனும் , பெண்ணை கிள்ளி  வளர்க்கனும்,பையனை அடித்து வளக்கணும் 16   வயதுக்குள் செய்ய வேண்டும்.
பிள்ளையின் பாதையில்   பெற்றோர்கள் போக வேண்டும் ஆனால் சேரபடாது.


மர்மம்

மர்மம்
தெரியாமல் வருவது தான் மர்மம் .
சொல்லாதே
கண்டேன் என்று சொல்லி நீ தற்பெருமை ஏற்படுத்திக் கொள்ளாதே 

ஆகாது

ஆகாது

ஆகாது என்று சொல்லும் குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்கும்

கருப்பு மாப்பிள்ளை

கருப்பு மாப்பிள்ளை 

கருப்பாக இருக்கிற மாப்பிள்ளை சிகப்பாக இருக்கிற பெண்ணை கட்டி கொண்டால் குடும்பம் நன்றாக இருக்கும் .

பூஜை அறை

பூஜை அறை

சமையல் அறைக்கு மேற்கே பூஜை அறை இருக்க வேண்டும்

சுவாமிகள்

சுவாமிகள்
சுவாமிகளை நோக்கி நாம் ஒரு அடி எடித்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி
வருவார் .
சுவாமிகள் பெற்ற தாயைவிட ஆயிரம் மடங்கு பாசம் உள்ளவர் .
சுவாமிகளுக்கு நாம் ஒரு ரூபாய் செலவு செய்தால் அவர் நமக்கு பத்து ரூபாய் வருமானம் கொடுக்காமல் இருக்க மாட்டார்.
சுவாமிகள் பிரம்மன் எழுத்தையே மாற்றக்கூடியவர் .ஆனால் நாம் வாங்கி வந்த கிரகத்தை ஒரே நாளில் போக்கமுடியாது
சுவாமிகளின் ஆசிர்வாதத்திற்கு மிஞ்சினது எதுவுமே இல்லை .
சுவாமிகளுக்கு மனோபூஜை செய்ய வேண்டும் .மனோபூஜை பத்தியம் இல்லாதது .எந்த நேரமும் கும்பிடலாம்       

ராகு திசை

ராகு  திசை

ராகு திசையில் யாதாகிலும் குறைபாடு கொடுத்துக்கொண்டே இருக்கும்

ராகு  திசை அல்லல் விலக

பசுவுக்கு அவுத்தி கீரை கொடுக்க வேண்டும் . செவ்வாய் கிழமை , வெள்ளி கிழமைகளில் பச்சரிசியும் வெல்லமும் சேர்த்து கொடுக்க வேண்டும் .
வெள்ளிகிழமைகளில் மாட்டின் பின்புறத்தை கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு வலம் ஒன்பதும் இடம் பத்தும் ( சக்திக்கு ஒரு சுற்று அதிகம் ) சுற்றிவிட்டு பின்புறத்தை தொட்டு கும்பிடவேண்டும் ,விழுந்தும் கும்பிடவேண்டும்       

பின்னப்பட்ட பிள்ளையார்

பின்னப்பட்ட பிள்ளையார்

பிள்ளையார் பின்னமாக இருந்தால் பூஜைக்கு வேண்டாம் .

விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க

விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க

கடவுளுக்கு ஒருகாணி நிலம் ஒடுக்கி பயிர் செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் .

ஒரு மூடைக்கு ஒர் மரக்கால் கடவுளுக்கு  ஒடுக்க வேண்டும்


சரணாகதியின் மகத்துவம்

சரணாகதியின் மகத்துவம்

நம் சற்குருநாதர் அப்பா பைத்தியம் சுவாமிகளின் திருவடிகளில் சரணடைந்து எல்லா நிலைகளிலும் எல்லா சந்தர்பங்களிலும் கடைசி வரை அவரையே சரணடைந்து இருப்பவர்கள் உண்மையில் சுவாமிகளின் கிருபையை பெறுவார்கள் .

நமது குருநாதர் தம்மிடம் சரணடைந்தவர்களை காத்து இரட்சித்து திருவருள் புரிகிறார் என்பதில் உறுதியாக நம்பிக்கை வைக்கவேண்டும்.

சுவாமிகளிடம் சரணாகதி அடையும் போது அவன் வாழ்கையில் பெற வேண்டியவை எல்லாம் பெறுவான் .
சுவாமிகளிடம் சரண்புக விரும்புவர்கள் தங்களையே சுவாமிகளிடம் ஒப்படைத்து விட வேண்டும் .
உயிருக்கு சுதந்திரம் இல்லை அது சுவாமிகளையே சார்ந்து வாழ வேண்டும் .எனவே பற்றுகோடு சுவாமிகளே . நாம் பைத்தியக்காரனை போல் எதையோ பிடித்துகொண்டு இருக்கிறோம் . இந்த பைத்தியமும் பித்தும் தெளிவதற்கு மாமருந்தாக விளங்குபவை சுவாமிகள் திருவடிகளை பற்றி கொள்வதேயாகும் .
அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான் நடைபெறுகிறது என்று நினைப்பது   பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் .
சுவாமிகள் கூறும் வழி முறைகளை இயன்றவரை பின்பற்றுவதற்கு எப்பொழுதும் முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும்.
மனிதன் அற்ப விஷயங்களுக்கு  எல்லாம் தன் உள்ளத்தில் இடம் கொடுத்தால் அவன் வாழ்வே பாழாகும், நிலைகுலைந்து விடும் .
சாதகமான சூழ்நிலையோ ,பாதகமான சூழ்நிலையோ எது நேர்ந்தாலும் சுவாமிகள் திருவடிகளை மறக்காமல் இருப்பதே எவ்விதத்திலும் நன்மை தரும் .
திரு அருட்பா , நடராஜர் பத்து எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் .
 சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும் கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும் .ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .அச்சமும் ஆசையும் அறிவுள்ளவர்களுக்கு இல்லை .அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம் .
ஒரே வீடு கடவும் கட்டின வீடு அதில்தான் வாழ வேண்டும் ( ஆன்மா ) சரீரத்தை கட்டுவித்தவர் கடவுள் .
அச்சம், ஆசை, மர்மம் இம்மூன்றையும் போக்கினால் தான் தெரியும் .அதற்கும் நேரம் வர வேண்டும் .இம்மூன்றையும் விட்டால் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் மனம் நிதானமாக இருக்கும் ,இரண்டையும் சமமாக நினைக்கும் மனம் வரும் . இம்மூன்றையும் அடக்கினால் கடவுளை சீக்கிரம் அடையலாம் .வைராக்கியம் விடா முயற்ச்சி சிரத்தை முக்கியமானவை .
அன்பே தெய்வம் நம்பிக்கையே தெய்வம் .
எத்தனை சோதனைகள் வந்து நம்மை துன்புறுத்தினாலும் கஷ்டப்படுத்தினாலும் சுவாமிகளை ஒரே நிர்ணயமாய் அவரையே பிடித்துக்கொள்ள வேண்டும் .
சுவாமிகள் கஷ்டங்களை கொடுக்கிறார் அந்த கஷ்டத்திலும் யாதோ நன்மை இருக்கத்தான் செய்கிறது அந்த நன்மையை நாம் உணரவேண்டும் .
நோயற்ற வாழ்வில் நாம் வாழ்வதும் சுவாமிகளின் திரு அருளால்தான் .
நன்மை தீமை சரிசமமாக ஒரே நிர்ணயமாக பிடித்து வந்தால் எந்த கவலையும் சுவாமிகள் தீர்ப்பார் .
நம்பிக்கை ஆதார பொருள் . சுவாமிகள் சொன்ன சொல்லை மனதில் பதிய வைக்க வேண்டும் . நம்பிக்கை இழக்காமல் பூரண நம்பிக்கையுடன் சுவாமிகளை நம்பினால் எல்லாம் கிடைக்கும் .
சுவாமிகளின் திருவடிகளை தொட்டு கும்பிடும் பொழுது சுவாமிகளின் கடைக்கண் பார்வையாவது தேவை என்றும் ,சுவாமிகளை என்றென்றும் மறவாதிருக்க வேண்டும் என்றும் , சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசிர்வாதமும் எப்பொழுதும் நமக்கு வேண்டும் என்றும் அவருடைய தரிசனமும் தொடர்ந்து கிடைத்து கொண்டு இருக்கவேண்டும் என்றும் மனமார சுவாமிகளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் .        
 


தாலி

தாலி

தாலி வாங்ககூட முடியாத ஏழைகளின் திருமணத்திற்கு 5  பேர் சேர்ந்து தாலி வாங்கி கொடுத்தால் நல்லது . சுவாமிகள் இதனை எப்பொழுதும் கடைபிடிக்க சொல்வார்     


புதன், 24 நவம்பர், 2010

இரண்டு துடப்பங்கள்

இரண்டு துடப்பங்கள்

வீட்டில் இரண்டு துடப்பங்களை ஒரே இடத்தில் அல்லது அருகருகே வைக்ககூடாது சண்டைகள் வரும்  .

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்

காலை 4-1/2 முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம்.
 எந்த நல்ல காரியமும் செய்யலாம்,எந்த   நாளாக இருந்தாலும் பரவாயில்லை.

மருத்துவம் இருதயத்தில் ஓட்டை இருந்தால்

 மருத்துவம் இருதயத்தில் ஓட்டை இருந்தால்

சிதிரமூலக்குச்சி உடன் கடை சரக்கு செலவுகளையும் சேர்த்து ரசம் போல் வைத்து சாப்பிடவும்  அல்லது தட்டி கஷாயம் போல் சாப்பிட்டு வரவும் .
முருங்கை கொழுந்தை வேகவைத்து சாறு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டால் இருதயத்தில் உள்ள சதை வளர்ந்து துவாரத்தை மூடிக்கொள்ளும்  

ஆண் பெண் சக்தி அளவு

ஆண் பெண் சக்தி அளவு

   ஒரு நாள் சுவாமிகளிடம் எல்லா ஆண்களுக்கும் பெண்களை பார்க்க வேண்டும் என்றும் , பார்க்கும் போதும் ஆசை உண்டாகிறது , கண்கள் தானாகவே திரும்பிகிறது ஏன் என்று  கேட்டோம் .
அதற்கு சுவாமிகள் சிரித்துக்கொண்டே கடவுள் ஆணுக்கு மூன்று பாகம் சக்தியையும் பெண்ணுக்கு ஏழு பாகம் சக்தியையும் கொடுத்துள்ளார் . அங்கு சக்தி அதிகம் இருப்பதால் கண் தானாகவே திரும்புகிறது .உலக்கைக்கு சேலை கட்டிவைத்தால் கூட நீங்கள் உற்று பார்ப்பீர்கள் உங்களில் எவனாவது ஒருவனாவது பெண்ணைப்பார்த்து ஆசைப்படாதவன் உண்டா என்றார் யாரும் வாய்  திறக்கவில்லை.பெண்டாட்டி அருகில் இருந்தால் கூடபுத்தி உங்களுக்கு அப்படிதானடா போகும் என்றார் .

பெண்களுக்கு ஆண்களை பார்த்தால் இது போல் ஆசை ஏற்படுமா என்று கேட்க? ஏற்படும் என்றார் .          

தவறு இல்லை

தவறு   இல்லை

மோசம்  செய்பவனிடம்  மோசம்  செய்தால்  தவறு  இல்லை  . வரும்  பணத்தை  நல்ல  செலவிற்கு  தர்மத்திற்கு  பயன்படுத்தவும்

செவ்வாய், 23 நவம்பர், 2010

வயல் நன்றாக விளைய

வயல் நன்றாக விளைய

வயல் நன்றாக விளைய காலை 5 மணிக்கு பசும் கோமியத்தை சூரிய உதயத்திற்கு முன் சுவாமிகளை நினைத்து   எல்லா இடமும் தெளிக்க வயலில்  நல்ல விளைச்சல் விளையும்.

மருத்துவம் இடுப்பு எலும்பு தேய்ந்து இடுப்பு வலி

மருத்துவம்  இடுப்பு எலும்பு தேய்ந்து இடுப்பு வலி

மூங்கில் தழை சாறு இருமடங்கு, எள் எண்ணை ஒரு மடங்கு சேர்த்து எரித்து நூலில் தொட்டு எரித்தால் சிடு சிடு என்ற சப்தம் வரக்கூடாத பக்குவ நிலை வரவேண்டும் .காலையில் உள்ளங்கை அளவு சாப்பிடவேண்டும் .புழுங்கல் அரிசியுடன்  உளுத்தம் பருப்பும் சேர்த்து வறுத்து பவுடர் ஆக்கி மிளகு பூண்டு பள்ளு சேர்த்து புட்டுபோல் ஆவிகட்டி அதை  ஒத்தடம் கொடுக்க வேண்டும் அந்த புழுங்கல் அரிசி புட்டையும் சாப்பிடவேண்டும் .எல்லா எலும்பு வலிக்கும் இதை செய்யலாம் குணமாகும்.   

மூன்று குருவிகள்

மூன்று குருவிகள்

யார் எது செய்தாலும் சுவாமிகளுக்கு தெரிந்து விடும் .  துறவிகளிடம் மொத்தம் மூன்று குருவிகள் உள்ளது . அவை ஊர்க்குருவி,வெளிகுருவி ,மெய்க்குருவி .
ஊர்க்குருவி ஊரில் நடப்பவை எல்லாவற்றையும் வெளி குருவியிடம் சொல்லும் .வெளிக்குருவி மெய்க்குருவியிடம் எல்லா தகவலும் சொல்லும்.
உங்களைபோல் ( நம்மைப்போல் ) பேப்பர் படிக்க வேண்டாம் . எவன் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து விடுவேன் தெரிந்தாலும் வெளியே காட்டிகொள்ள மாட்டேன் . உலகத்தில் நடப்பவை எல்லாம் துறவிக்கு தெரியும் என்றார் .

சுவாமிகளிடம் எதையும் மறைக்காமல் கூற வேண்டும் .அப்படி மறைத்து வைத்தால் திருநீறு மட்டும் கொடுப்பேன் .பொய் சொல்லாமல் உண்மையை கூறி மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும் செய்த தவறுகளையும் சுவாமிகளிடம் மறைக்காமல் கூறினால் அடை சரி செய்ய சுவாமிகள் கடவுளிடம் நீதானே அந்த கெட்ட புத்தியை கொடுத்தாய் அவனுக்கு நல்ல புத்தியை கொடு என்று கேட்பேன் என்றார் .

கோடி நிம்மதி

கோடி நிம்மதி

ஒருவனுக்கு நல்ல பெண் ( மனைவி ) , வீடு , தண்ணீர் அமைந்தாலே போதும் கோடி நிம்மதி கிடைக்கும்

திங்கள், 22 நவம்பர், 2010

மருத்துவம் எலி கடி

மருத்துவம்  எலி கடி

ஆகாசத்தாமரை இலையை எள் எண்ணையில் எரித்து காலையில் சாப்பிட்டு கடிவாயில் தேய்க்கவும் .உப்பு இல்லாத பத்தியம் .

எருக்கன் பால் கடித்த இடத்தில் தேய்க்கலாம் 

மருத்துவம் ஊமையை மெல்லமெல்ல பேச வைக்க

மருத்துவம் ஊமையை மெல்லமெல்ல பேச வைக்க

கீழாநெல்லி தழையை அரைத்து தலையில் தேய்த்து அயக்காந்த செந்தூரம் அரிசி எடை தேனில் கலந்தும், நாயுருவி தழையை பசும்பாலிலும் சாப்பிட்டு வர பேச்சு வரும்     

மருத்துவம் உடம்பு பலம் பெற

மருத்துவம் உடம்பு பலம் பெற

பருத்தி கொட்டை ,வெள்ளை பூசணிக்காய் விதை, அருகம்புல் கிழங்கு இவைகளை நிழலில் காய வைத்து தூள் செய்து சாப்பிடவேண்டும்   

மருத்துவம் உடம்பு எரிச்சல் நீங்க

மருத்துவம் உடம்பு எரிச்சல் நீங்க

குப்பைமேனி தழையுடன் உப்பு மிளகு சேர்த்து  அரைத்து உள்ளுக்கு சாப்பிட்டு எரிச்சல் இருக்கும் இடத்திலும் தேய்க்கலாம்.

தும்பை இலை சாற்றுடன் உப்பையும் சேர்த்து மேல் தடவி விட்டு குளித்தால் சீக்கிரம் போகும் . ( எரிச்சல் தாங்கவேண்டும் ) 

நிலக்கடம்பையை அரைத்து மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு மேலுக்கும் தடவலாம் .

மருத்துவம் உடம்பு அசதி நீங்க

மருத்துவம் உடம்பு அசதி நீங்க

தூதுவேளை கீரையும் முருங்கை கீரையும் சேர்த்து அரைத்து சாப்பிடவும் .


மருத்துவம் இழுப்பு சீதபேதி

மருத்துவம் இழுப்பு சீதபேதி 

உத்தாமணி இலைச்சாறு வேப்ப எண்ணை இரண்டையும் சம எடை எடுத்து காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கொடுக்கவும்

மருத்துவம் ரத்தம் சுத்தி செய்ய

மருத்துவம் ரத்தம் சுத்தி செய்ய

அருகம்புல் வேரை அரைத்து பாலுடன் சாப்பிடவும் .
கேரட் சாப்பிட்டால் ரத்த சுத்தி விருத்தியாகும் .

மருத்துவம் இருமல் ஆஸ்த்மா

மருத்துவம்  இருமல் ஆஸ்த்மா

கருப்பு பூனைக்காய்ச்சல் இலையை பசும் நெய்யால் வதக்கி மிளகு லவங்கம் கிராம்பு மூன்றையும் இடித்து சர்க்கரை கலந்து சாப்பிடவும் . 

மருத்துவம் இருமல் மார்வலி விலக

மருத்துவம்  இருமல் மார்வலி விலக

சிகப்பு பூனை காய்ச்சல் இலை, தூதுவேளை இலை இரண்டையும் வெயிலில் காய வைத்து தூள் செய்து தேனுடன் காலையில் சாப்பிடவும் 

மருத்துவம் இடுப்பு வலி நீங்க

மருத்துவம் இடுப்பு வலி நீங்க

தழுதாளி இலையை எள் எண்ணை விட்டு வதக்கி பூண்டுடன் அரைத்து துவையலாக சாப்பிடவும் . 

மிளகை பொன்வறுவலாக வறுத்து எள் எண்ணையுடன் சேர்த்து சாப்பிடவும் .

கூழாங்கல் சின்ன கற்களை சுடு தண்ணீரில் போட்டு எடுத்து துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும் . வலியுள்ள பாகத்தில் எள் எண்ணை தடவி குண்டு மணி இலையை மேலே ஒட்டி வைக்கவும் .  

மருத்துவம்- வயிற்று புண் அப்பன்டிஸ்

மருத்துவம்- வயிற்று புண்   அப்பன்டிஸ்
வாழை தண்டை பச்சடி செய்து தயிருடன் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்   

மருத்துவம் ஆஸ்த்மா

மருத்துவம் ஆஸ்த்மா
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து விட்டு பிறகு சுட்ட சுண்ணாம்பு கற்களை பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து தெளிந்த சுண்ணாம்பு நீரை ஒரு மண்டலம் ( 48 நாள் ) சாபிடவும் .

சிகப்பு பூனைகாய்ச்சல் தழையை வறுத்து தூள் செய்து, மிளகையும் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து இரண்டையும் சேர்த்து சாபிட்டால் நீங்கும்


ஆஸ்த்மா இஸ்நோபியா விலக
   அரிசி திப்பலி பத்து கிராம் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து அதனுடன்   தூதுவேளை தழையை  காய வைத்து இடித்து தூள் செய்து  இரண்டையும் கலந்து தேனில் கொடுக்கவும்.




மருத்துவம் - அக்கி

மருத்துவம் - அக்கி
சிறுபசலை, சீம ஓடு  தூள்,உப்பு,மிளகாய் இவற்றுடன் மண் அல்லது செம்மண்  போட்டு நன்கு  அரைத்து நான்கு கோடுகள் போட்டு தெரிந்த விலாசத்திற்கு எழுதி ( ஓம் காகா பரா காகா மூவா காகா சுவா காகா.குருவே துணை  ) மூன்று வேளையும் எழுதினால் போகும்.

வயது

வயது
ஆணுக்கு 32 வயதுக்கு மேல் எல்லா அம்சமும் கிடைக்கும்
63 வயதுக்கு மேல் எந்த கிரகமும் ஒன்றும் செய்யாது
90 வயதுக்கு  மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது
120 வயதுக்கு மேல் தெய்வப் பிறவி . உலகத்துக்கு பொதுவானவர் கலசம் வைத்து யாகம் வளர்பதற்கு ஒப்பாகும் 

தெய்வ அம்சம்

தெய்வ  அம்சம்

காட்டு முயல் , பதினெட்டு அடி வேங்கை , கவரி மான் , காராம் பசு தெய்வ அம்சம் பொருந்தியவை .

வேகாத ஒரு புல்

வேகாத ஒரு புல்

வேகாத ஒரு புல் அருகம்புல்
வாடாத ஒரு பயிர் அன்பு
வருத்தமில்லாத ஒரு பாரம் - கரு உருவாகும் குழந்தை

ஞாயிறு, 21 நவம்பர், 2010

மருத்துவம் அல்சர் வயிற்றில் புண் உள்ளது விலக

மருத்துவம்  அல்சர்    ( வயிற்றில் புண் உள்ளது விலக )
அம்மான் பச்சரிசி தழையை அரைத்து எலுமிச்சை பழம் அளவு  பாலில் சாப்பிடவும் .
வலி குறையும் வரை சாப்பிடவும் .புளி காரம் நீக்கவும்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

மருத்துவம் - முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய

மருத்துவம் - முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய

முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய சுண்ணாம்பும் தேனும் சேர்த்து போட்டால் உள்ளே அமுங்கிவிடும் .
உடைந்து விட வேண்டுமானால் அரசமரத்து பழுப்பு இலையை எரித்து தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழைத்து போட வேண்டும் .

வன்னி இலையை வறுத்து  தேங்காய் எண்ணையில் எரித்து போட்டால் எப்பேர்பட்ட ரண காயமும் குணமாகும் .

சித்திரை மூல குச்சியை எருக்கன் பாலில் இழைத்து கட்டியின் மேல் போட்டால் பழுத்து உடைந்து விடும் .
சித்திரமூல வேர் ( கொடிவேலி என்று மற்றொரு பெயர் ) ( மருந்து கடையில் கிடைக்கும் 50 கிராம் வாங்கி  )   எருக்கன் பால் விட்டு அரைத்து அந்த கட்டியின் மேல் போட்டு வந்தால் இளகி கட்டியில் சீழ் வருவது போல் இளகி வந்து அந்த திரவம் இருக்கும் அதை வெளியே அகற்றி விட்டால் கட்டி மறைந்து விடும் .

சங்கை எருக்கன் பாலில் ஊற வைத்து பிறகு பூசலாம்    .

உத்தாமணி சாறு எடுத்து சுண்ணாம்பு கலந்து மஞ்சள் கொம்பால் தேய்த்து  பத்து போடவும். மூன்று நாட்களில் உடையும் .

விதி

விதி

விதியை யாராலும் தடுக்க முடியாது . மதியால் ( குரு கடாட்சத்தால் ) தெய்வ நம்பிக்கையால் பெரியதாக வருவதை சிறியதாக்கலாம் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விடும் .மனோ நம்பிக்கை  வேண்டும் .

விதியை மதியால் வெல்ல வேண்டும்.

விதி முடிந்தால் பாம்பு ஓடிவந்து கடிக்கும்

விதியின் விளையாட்டு கெட்ட நேரம் யாரையும் பிடித்து தள்ளும் .

விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

மண்ணுக்கு மண் மாத்தனும் , தண்ணீருக்கு  தண்ணீர் மாத்தனும் . விதி இருந்தால் தான் மாறும் .

விதியால் வரும் சுகமும் விலக்க முடியாத துக்கமும் வணக்கத்துடன் ஏற்க்கப்பட வேண்டியவை .

பாவம்

பாவம்

முன் ஜென்மத்தில் பிறரை பழித்தவன், வட்டி விட்டு சம்பாதிதவனுக்கு யானைக்கால் வரும் .
கோயில் சொத்தை சாப்பிட்டவன் வவ்வாலாக தொங்குவான்

தான் செய்யும் பாவத்திற்கு தன் மனைவி மக்கள் அனுபவிப்பார்கள் .வியாதி வீண் செலவுகள் போன்றவை அடிகடி ஏற்படும், நஷ்டங்களும் ஏற்படும்.

பாவம் செய்பவன் பணம் சேர சேர தைரியமாக பாவங்கள் செய்வான்.

நாலுபேர் சொத்து சிவன் சொத்து .

சிவன் சொத்து குலநாசம் .

கோயில் கரியங்களில் ஈடுபடக்கூடாது .ஈடுபட்டால் நேர்மையாக ,நேரான வழியில் போகவேண்டும் .

பொருள் சேர சேர கர்வம் அதிகமாகும் .அதனால் அழிவுப் பாதையில் போவான்

திருமூலர் சமாதி

திருமூலர் சமாதி

சிதம்பரத்தின் கோயிலில் உள்ள ஸ்ரீ மூலநாதர் ( லிங்கம் ) தான் திருமூலர் சமாதி .

துறவிகளின் சமாதி ஸ்தலங்களை மனதிலே பதிவு செய்ய வேண்டும்

சற்குரு

சற்குரு
சற்குருவின் மேல் நிர்ணயமாக இருப்பவனிடம் சற்குரு தானும் நிர்ணயமாக இருக்கையில் இருமனமும் ஒன்று கலந்து பிரம்ம தேவனின் எழுத்தை முறியடித்து விடும் .ஆகையால் பக்தனின் நிர்ணயத்தை கலைப்பதற்கு பிரம்ம தேவன் மாயாவையே அனுப்பி அவன் மனதில் சபலத்தை எழுப்பும் .இச் சோதனைகளை எல்லாம் வென்று எல்லாம் சற்குருவே என் செயல் யாது ஒன்றும் இல்லை தனது என்று ஒன்றும் இல்லை பட்டற்றநிலையை ஏற்படுத்தி கொண்டவனுக்கு சற்குருவே சாப்பாடும் கொடுப்பார் குறைகளையும் தவிர்ப்பார்         

ஓம் பராசக்தி துணை

ஓம் பராசக்தி துணை

தாயை நினைத்து ஓம் பராசக்தி துணை என்று எழுது .ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் உதவி செய்யும்.

ஓம் பராசக்தியே துணை நமசிவாய நம :    என்று எப்பொழுதும் ஜெபித்துவா. எல்லா நன்மைகளும் வரும் . மனம் அலைபாய்வது அடங்கும் .மனம் ஒருநிலைப்பட்டவுடன் நம சிவாய நமக என்று உபாசிக்க வேண்டும் .    

குறையில்லாத மனிதன்

குறையில்லாத மனிதன்

குறையில்லாத  மனிதனே கிடையாது.
குறையுடன்  கடவுள் பிறப்பித்தார்
குறையில்லாமல் யாரையும் பிறப்பிக்கவில்லை 

திருமண மூகூர்த்த நேரம்

திருமண மூகூர்த்த நேரம் 

திருமணங்களை விடியற்காலையிலோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்பே  நடந்தால் எல்லா தோஷங்களும் விலகும்     

திதி

திதி

தாய் தந்தை இறந்த நாளில் இரண்டு பேருக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும் .
மாட்டுக்கு அவுத்தி கீரை கொடுக்க வேண்டும் .

எங்கு தர்மம் செய்வது ?

எங்கு  தர்மம் செய்வது ?
எட்ட போய் தர்மம் செய்தால் ( சாப்பாடு போடுதல்  ) தான் புண்ணியம் கிடைக்கும் .
தன் வீட்டில் செய்தால் எப்போதும் புண்ணியம் இல்லை பிறர் இடத்தில்தான் செய்யவேண்டும் .

தன் வீட்டில் செய்யும் போது தனக்கு என்று எடுத்து வைத்திருப்போம் .சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லுவோம் . வீட்டில் இருத்தி வைத்துக்கொண்டே ஆயிடுச்சி என்று சொல்வது தர்மமா ?  

புதன், 17 நவம்பர், 2010

மனிதனுடைய சாப்பாட்டு அளவு

மனிதனுடைய சாப்பாட்டு அளவு

ஒரு மனிதனுடைய சாப்பாட்டு அளவு 32 கவளம் ( கையளவு ) தான் 

தீபாராதனை

தீபாராதனை 
சுவாமி படங்களுக்கு தீபாராதனை செய்யும் போது படத்தின் மேல் ஒருமுறை காட்டி கீழே பாதங்களுக்கு மூன்றுமுறை காட்ட வேண்டும்   

கோபம் வராமல் இருக்க

கோபம் வராமல் இருக்க
காலையில் எழுந்தவுடன் யார் கண்ணிலும் விழிக்காமல் சுவாமிகளை நினைத்துகொண்டு  தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க கோபம் வருவது குறையும் ,கோபம் வராது ,லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும் 

வயதான பெற்றோர்களுக்கு கோபம் அதிகம் வருவது ஏன்?

வயதான பெற்றோர்களுக்கு கோபம் அதிகம் வருவது ஏன்?
63 வயதுக்கு மேல்தான் அதிகமாக கோபம் வரும் ரத்தம் குறைய குறைய கோபம் வரும் வயதான பெற்றோர்களிடம் அதிகம் பேசக்கூடாது .பொறுமையுடன் நிதானமாக பேச வேண்டும் .  எனவே வயதான   பெற்றோர்களிடம் அவர்கள் கோபப்படும் போது நாம் அதிகமாக பேசக்கூடாது.

படிப்பு நன்கு வர

படிப்பு நன்கு வர

வெந்தயம் நாலு கொண்டைகடலை பதினைந்து இரவு ஊற வைத்து காலையில் பிதுக்கி சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட மூளை நன்கு  வளர்ச்சி அடையும்  படிப்பு நன்கு வரும்.

     குழந்தைகளை இரவு   படுக்க போவதற்கு முன் 1 மணி நேரமும்,காலை 4 மணிக்கும் படிக்க வைக்க வேண்டும்.

லக்ஷ்மி கடாட்சம்

லக்ஷ்மி கடாட்சம்

நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு

அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு ( அன்னதானம் செய்ய ) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.

காலையில்   எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு  குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.

முதலில் பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.தம்பி   மேல் பாசம் அதிகம் இருக்கும்.

பிள்ளையாரும் துறவியும்

பிள்ளையாரும் துறவியும்
பிள்ளையாரும் துறவியும் இருவரும் ஒன்றுதான் . இருவரையும் கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் நல்லதே செய்வார்கள்

முகம் லட்சுமிகரமாக இருக்க

முகம் லட்சுமிகரமாக இருக்க

காலையில் குளித்து நெற்றியில் மூன்று  விரல்களால் திருநீறு பூச முகம் லட்சுமிகரமாக இருக்கும்

தாயின் சக்தி

தாயின் சக்தி
தாயின் சக்திதான் ஜோதி
தாயின் சக்திதான் மயில்வாகனம்
தாயின் சக்திதான் குயில்
குயில் கூவுமிடத்தில் நீர் வளம் மிகுந்து இருக்கும்
மயில் கூட்டம் கூட்டமாக உள்ள இடத்தில் முருகர்   சக்தி   மிகுந்து  இருக்கும்
பேயாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான் .
தெய்வமாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான்
தாயினுடைய பாசவலைதான் பேயாகவும், பிசாசாகவும், சாமியாகவும் வந்து ஆடுவது .

நீர் ஊற்று கண்டு பிடிக்க

நீர் ஊற்று கண்டு பிடிக்க

காலை மூன்று மணிக்கு அலாரம் வைத்து அலாரம் அடித்தவுடன் எழுந்து யார் கண்ணிலும் படாமல் கிணறு வெட்டும் இடத்தை இடது  பக்கம் வட்டமாக சுற்றிக்கொண்டு வரவும் எப்பொழுது கோழி கூவுகிறதோ அந்த இடத்தில் கிணறு எடுத்தால் நல்ல தண்ணீர் கிடைக்கும் சுற்றும் பொழுது ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் திருவடிகள் துணை என்று மனதில் நினைத்துகொண்டு மூன்று மணி -நான்கு மணி முப்பது மணிக்குள்  சுற்றவும் . கோழி கூவும் . முதற் கோழி கூவும் நேரம் லக்ஷ்மி வரும் நேரம் .

ஓம் பராசக்தி சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று எழுத்து போட்டு மூன்று வரிசையாக ஒருவரிசைக்கு ஐந்து ஆமணக்கு கொட்டை முலைபக்கம் மேற்கு பக்கமாக வைத்து கூடை வைத்து மூடிவிட வேண்டும் அந்த 15 கொட்டைகள் எத்தனை அதிகம் திரும்பி இருக்கிறதோ அந்த இடத்தில் நீர் ஓட்டம் உண்டு கிணறு வெட்டலாம். இப்படி நிலத்தை சுற்றி வைத்து எந்த இடத்தில் அதிகம் கொட்டை  திரும்பிகிறதோ அந்தஇடத்தில் நீர் வளம் , நீர் ஊற்று அதிகம் என்று கண்டு கொள்ளலாம்

தான் தோன்றி பெருமாள் கோயில்

தான் தோன்றி பெருமாள் கோயில்

திண்டுக்கல்   வேடசந்தூர் அருகே தான் தோன்றி பெருமாள் கோயில் உள்ளது அக் கோயிலின் நிழல் பூமியில் எப்போதும் விழாது . மழை பெய்தால் தண்ணீர் நிற்காது

கெட்ட நேரம் , கிரக தோஷம் விலக

கெட்ட நேரம் , கிரக  தோஷம் விலக

பௌர்ணமி ,அமாவாசை இரவு 12 மணிக்கு சுவாமிகளை ஒன்பது சுற்று வலம்புரி ஒன்பது சுற்று இடம்புரி சுற்றி 108 வலம்புரி சுவாமிகளை மனதில் ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று மனதில் கூறிக் கொண்டே சுற்றிவர கெட்ட நேரம் ,கிரக தோஷம் எல்லாம் விலகும் .

கூலி வாங்காத கடவுள்

கூலி வாங்காத கடவுள்

கூலி  வாங்காத  கடவுள்  பிள்ளையாரும்  அகிலாண்டகோடி  பிரம்மாண்ட  நாயகி  பார்வதி  இந்த  இருவரும்  தான்    

செவ்வாய், 16 நவம்பர், 2010

வீக்கம் வற்ற

வீக்கம் வற்ற

எந்த வித வீக்கமாக இருந்தாலும் அதன்  மேல்  ஒண்ணுக்கு  ( சிறுநீர்  )   தடவ  சரியாகும்

மாங்கல்ய தோஷம் நீங்க

மாங்கல்ய தோஷம் நீங்க .

ஒரு முறை மாங்கல்ய தோஷம் உள்ள ஒரு பெண் மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் சுவாமிகளிடம் கேட்டார் .
அதற்கு சுவாமிகள் மாங்கல்ய தோஷமோ அல்லது எந்த தோஷம் இருந்தாலும் இரவு   வாழை மரத்தையும் அருகில் வைத்து இருந்து அறுபத்து  மூன்று வயது நிரம்பிய பிரம்மசாரி சுவாமியார் அல்லது துறவி உடுத்தியிருந்த துணி மீது படுத்து,  காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு பிள்ளையார் கோயிலைஒன்பது முறை  சுற்றி பின் வாழை மரத்தை வெட்டினால் சரியாகும் என்றார் .
அந்த பெண் துறவி யார் இருகிறார்கள் ? நீங்கள் தான் சுவாமி துறவி நீங்கள் தோஷம் நீங்க அனுமதியும் அருள் புரிய வேண்டும் என்று அழுதார்
சுவாமிகளும் அருள் புரிந்தார் சுவாமிகளின் ஆருளால் தோஷம் நீங்கியது .

வடலூர்

வடலூர்

வடலூர் மண்ணில் நாம் இருந்தாலே நம் பாவங்கள் விலகும் . அந்த மண்ணிற்கு அவ்வளவு மதிப்பு உண்டு

கொடியது

கொடியது

சுரத் தலை , முட மயிர் ,  ஏர் நெற்றி இவர்களிடம் ஞானிகள் கூட பக்குவமாக நடக்க வேண்டும் . அப்பேர்பட்ட பார்வை மிகவும் கொடியது .

கடவுளை கும்பிடும் முறை

கடவுளை கும்பிடும் முறை

ஆண்கள் விழுந்து கும்பிட வேண்டும் .கும்பிடும்போது நெஞ்சு ( மார்பு ) தரையில் பட வேண்டும் . குப்புற படுத்து வணங்கவேண்டும் .

பெண்கள் முட்டிக்கால் ,நெற்றி தரையில் படும்படி கும்பிடவேண்டும் .

திங்கள், 15 நவம்பர், 2010

அன்னதானத்தை விட சிறந்தது

அன்னதானத்தை விட சிறந்தது 

தினை அரிசி நான்கு படி வாங்கி தினமும் மூறு விரல்களால் ( பெரிய விரல் ,நடுவிரல் ,மோதிரவிரல் ) எடுத்து எறும்புக்கு தினமும் போடவும் .நூறுபேருக்கு சாப்பாடு போடுவதை விட மேலானது .தினை அரிசி நான்கு படி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து கொண்டுபோய் பிள்ளைகளுக்கு ( குழந்தைகளுக்கு )    கொடுக்கவேண்டும் 

கிளி மூக்கு

கிளி மூக்கு

கிளி மூக்கு இருப்பவர்கர்கள் எதிரியை வெல்லுவர்

கோர முடி குடியை கெடுக்கும்

சுருட்டை முடி சோறு போடும் 

பூவும் முடி புண்ணியத்தை கொடுக்கும்

மன்னிப்பு

மன்னிப்பு

பாடிய பட்டது பழுதது தவிழ்ந்து விட்டாலும்
நாடியே சுத்தி மத்தாளம் அது நயமது பரிந்து விட்டாலும்
ஆடிய கால்கள் இரண்டும் அடியது பிசகி விட்டாலும்
சொற்குற்றங்கள் பொருட்குற்றங்கள் சகல குற்றங்களையும்
சற்குருநாதா கணநாதா மன்னித்து அருள வேண்டும்
குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே துணை

சுவாமிகள் கூறும் தர்மம்

சுவாமிகள் கூறும்  தர்மம்

கோயில் குறையாக நிற்கும் போது பூர்த்தி செய்ய வேண்டும்
அன்னதானம்
கல்யாணம் கட்டுவிப்பது
தண்ணீர் பந்தல் குடிநீர் வசதி அமைத்தல்
சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை அமைத்தல்
சுமைதாங்கி அமைத்தல் 

வியாழன், 4 நவம்பர், 2010

108

108

தமிழ் வருஷங்கள் 60
நட்சதிரங்கள் ௦          27
இராசிகள்                  12
கிரகங்கள் ---------------9
மொத்தம் =             108






ஏழு சொட்டுக்கு கீழ்உள்ள உயிரனத்தை

ஏழு சொட்டுக்கு கீழ்உள்ள உயிரினத்தை  கொன்றால் பாவம் இல்லை    

நாழி கிணறு


நாழி கிணறு
திருச்செந்தூரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருந்தபோது முருகன் வேலால் ஊன்றி நீர் வந்த இடம் தான் நாழி கிணறு உப்பு கரிக்காது .    

வியாபாரம்

வியாபாரம்
நாஷ்டா கடையில் லாபம் உள்ளது போல் வேறு எந்த வியாபாரத்திலும் லாபம் கிடைக்காது.
 மளிகை கடை , ஹோட்டல் , ஜவுளி கடை வைத்து ஒருவன் முன்னேறவில்லை என்றால் அவன் வேறு எதிலும் முன்னேறமுடியாது.  .
  

பிச்சைகாரன்

பிச்சைகாரன்
பிச்சைகாரனுக்கு பிச்சை போட்டால் பாவம் வரும் .காசு கொடுக்காதே .சாப்பிட எதாச்சும் கொடு . காசை போட்டால் அவன் நல்லதிற்கு செலவு செய்தால் பரவாயில்லை . அந்த காசில் குடித்தாலோ வேறு கெட்ட செயல்கள் புரிந்தாலோ அப்பாவம் நம்மை சேரும் .
எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அவன் மனது போதும் என்று சொல்லாது .எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் . அவன் போதும் என்று எப்போது சொல்வது? உனக்கு புண்ணியம் எப்போது வருவது?
சாப்பாடு போட்டால் வயிறார மனதார போதும் என்று சொல்வான் .

ஒருத்தி ஒரு  பிச்சைகாரனுக்கு தினமும் தவறாமல் பிச்சை போடுவாளாம் . ஒருநாள் எதுவும் இல்லை அதனால் போடவில்லை அதற்கு அவன் எப்பவும் போடாத மகராசிதான்  போடவில்லை எப்பவும் போடுகிற கழுதை என் போடவில்லை என்றானாம் .

வயல் நன்றாக விளைய

வயல் நன்றாக விளைய
வயல் நன்றாக விளைய காலை 5 மணிக்கு பசும் கோமியத்தை சூரிய உதயத்திற்கு முன் சுவாமிகளை நினைத்து எல்லா இடமும் தெளிக்க வயலில் நல்ல விளைச்சல் விளையும்.

 ஞாயிற்று கிழமை விவசாயத்திற்கு   உகந்தது.

பாம்பு

பாம்பு

கொம்பேறி மூக்கன்
கொம்பேறி மூக்கன் பாம்பு வரம் பெற்ற பாம்பு . என்ன வரம் என்றால் தீண்டியவன் சாக வேண்டும் . தீண்டியவனை சுடுகாட்டில் புதைக்கும் வரை சுடுகாட்டில் காத்திருந்து பார்க்குமாம் . அவனை எரித்தவுடன்தான் சுடுகாட்டை விட்டு செல்லும்.
விஷயம் தெரிந்தவர்கள் தென்னமட்டையை கொளுத்தி விட்டு வந்துவிடுவார்கள்     

குடிப்பழக்கம் நீங்க

குடிப்பழக்கம்  நீங்க

கள்ளும் சாராயமும் கலந்து குடித்தால் போதை அதிகமாக இருக்கும்.
 
சாராயம் குடிப்பவன் அப்பழக்கத்தை விட கசகசா கஷாயம் போட்டு குடிக்க லேசான போதை  இருக்கும் .

குதிரையை நன்கு வேகமாக ஓட விட்டு அதன் வேர்வையை குடிபழக்கம் உள்ளவனை ஒரேமடக்கில் குடிக்க வைக்க வேண்டும் .அப்படி அவன் குடித்தால் குடிபழக்கத்தை அடியோடு விட்டுவிடுவான்       

புதன், 3 நவம்பர், 2010

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள்
சாவு பற்றி கனவில்  கண்டால் நல்லது அன்றோடு பீடை கழிந்தது என்று அர்த்தம் .
நரகல் பற்றி கனவில்  கண்டால் நல்லது
தண்ணீர் குடம் கனவில்  கண்டால் நல்லது .
பணம் கனவில்  கண்டால் நல்லதல்ல
பால் குடம் கனவில்  கண்டால் நல்லதல்ல

சுப காரியங்கள் செய்யும் போது

சுப  காரியங்கள் செய்யும் போது

வீட்டில் கிரகபிரவேஷம் புது குடித்தனம் போன்ற சுப காரியங்கள் செய்யும் போது பிள்ளையார் கோயிலில் இருந்து உப்பு தவிடு சாணம் இம் மூன்றையும் சுமங்கலிப் பெண்கள் எடுது செல்ல வேண்டும் .

இருக்கும் இடத்தில் இருந்து மாறுபவர்கள் கிழக்கு வடக்கு திசை நோக்கி செல்வது நல்லது .

எலி கடிக்கு மருந்து

எலி கடிக்கு மருந்து

எலி கடித்தால் ஆகாசத்தாமரை இலையை நல்லெண்ணையில் போட்டு எரித்து ஐந்து  நாட்கள் உப்பு புளி சேர்க்காமல் சாப்பிட குணமாகும் .
ராஜா எலி கடித்தால் பிளக்  நோய் வரும் 

திருமணம்

திருமணம் 

திருமணம் அனைத்தும் பிரம்மாவின் முடிச்சுபடிதான் நடக்கும் .

ஒரு நாட்டில் ராஜா ராணி நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தனர் . அவர்களுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவளுக்கு 32 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை.
ராஜாவுக்கு தனது தங்கை மகனுக்கு மணமுடிக்க ஆசை . ராணிக்கு தனது தம்பிகள் நால்வரில் யாராவது ஒருவருக்கு மணமுடிக்க ஆசை .
ராஜா திருமண பேச்சை எடுத்தால் ராணியும் ராணி திருமண பேச்சை எடுத்தால் ராஜாவும் தட்டி கழித்து விடுவார்கள் .

இப்படி இருக்கையில் சிவபெருமான் பிரம்மனிடம் எப்போது இளவரசிக்கு திருமணம் நடக்கும்? யார் மாப்பிள்ளை ? என்று கேட்டார் . அதற்கு பிரமன் காட்டில் ஒரு குஷ்டரோகி இருக்கிறான் அவன்தான் மாப்பிள்ளை இன்றில் இருந்து  45 வது நாளில் திருமணம் நடக்கும் என்று கூறினார்.
அதற்கு சிவன் அது எப்படி நடக்கும் அவளோ இளவரசி அவனோ குஷ்டரோகி என்றார் .
தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் 45 வது நாள்  வாருங்கள் சென்று பார்க்கலாம் என்று பிரமன் கூறினார் .
ஒரு நாள்  ராணி தனது மகளிடம் உனது தந்தை இந்த ஜென்மத்தில் உனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார் , நான் கூறியபடி கேள் உன்னை ஒரு மரப்பெட்டியில் உட்கார வைத்து அதில் பலகார பட்சணங்கள் , திருமாங்கல்யம் பட்டுடை அனைத்தும் வைத்து கொண்டியிட்டு ஒரு குறிப்பிட்ட தொலை தூரத்தில் வைத்து விட்டு எனது தம்பிமார்களிடம் கூறுகிறேன் யார் வந்து பெட்டியை திறந்து உன்னை முதன் முதலில் பார்கிறார்களோ அவர் யாரகிருந்தாலும் அவரையே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி சத்யம் செய்ய சொன்னாள் . தாயின் கட்டளைப் படி இளவரசியும் சத்யம் செய்தாள். ராணி ராஜாவுக்கு தெரியாமல் ஒரு மரப்பெட்டி செய்து இளவரசியை உட்கார வைத்து அதில் பலகார பட்சணங்கள் , திருமாங்கல்யம் பட்டுடை அனைத்தும் வைத்து கொண்டியிட்டு ஒரு குறிப்பிட்ட தொலை தூரத்தில் வைத்து வருமாறு சேவகர்களை அனுப்பினார் . சேவகர்களும் அவ்வாறே அவர்களும் ராணி கூறிய படியே செய்தனர் .
பின் ராணி தனது தம்பிமார்களிடம் விவரத்தை கூறி இளவரசியை கண்டு பிடிக்க அனுப்பினாள்.
அந்தக்காலத்தில் அண்டரண்ட பட்சி என்று இருந்தது அது ஒரு பெரிய வீட்டையே தூக்கி கொண்டு போய்விடும் . அப்பட்சி பட்சிண வாசனையை கண்டு இளவரசி உள்ள பெட்டியை தூக்கி கொண்டு ஒரு காட்டிற்கு வந்தது . பெட்டியை திறக்க மயற்சி செய்து முடியாமல் பெட்டியை காட்டிலேயே விட்டுவிட்டு சென்று விட்டது .
இளவரசி தனது மாமன்மார்கள் யாராவது வருவார்கள் என்று காத்துக்கொண்டு இருந்தாள். யாரும் வரவில்லை அந்திசாயும் நேரம் ஆகியும் யாரும் வரததால் பயந்து சட்டம் போட ஆரம்பித்தாள். அவ் வழியே வந்த குஷ்டரோகி யாரோ பாவம் என்று பேட்டியின் கொண்டியை திறந்தான். இளவரசி மாமன் என்று எதிர்பார்த்தாள் ஆனால்   குஷ்டரோகியை  கண்டு அதிர்ந்தாள் . தாயிடம் செய்த சத்யப்படி பெட்டியை யார் திறக்கிறார்களோ அவரை மணமுடிக்க ஒப்பு கொண்டதை நினைத்து பார்த்தாள்.விவரத்தை குஷ்டரோகி யிடம் கூறி திருமணம் செய்ய வற்புறுத்தினாள்.அதற்கு அவன் ஏற்கனவே நான் பவம் செய்து குஷ்டரோகியாக அவதிப் படுகிறேன் உன்னை திருமணம் செய்தால் பாவம் இன்னும் மிகுதியாகும் திருமணம் செய்ய மாட்டேன் என்றான். அதற்கு இளவரசி நீ எண்ணை திருமணம் செய்யவில்லை என்றால் நான் ஏன் உயிரை போக்கி கொள்வேன் அந்த பாவமும் உன்னை சேரும் என்றாள்.பிறகு குஷ்டரோகி அவளின் விருப்பபடி மாங்கலயம் அணிவித்து திருமணம் செய்தான் .அவனுக்கு குஷ்டம் இருந்ததால் அவனால் பலகார பட்சணங்களை கையால் எடுத்து சாப்பிட முடியவில்லை. இளவரசி அவனுக்கு அவள் கையால் ஊட்டி விட்டாள்.
பின் அவன் எந்த ஊர் எப்படி காட்டுக்கு வந்தான் என்று கேட்டாள். அதற்கு அவன் நானும் ராஜா வீட்டு பிள்ளைதான் ஏன் சிறு வயதில் ஒரு சாமியார் எங்கள் நாட்டுக்கு வந்திருந்தார் அவர் கந்தலாடை உடுத்தி அழுக்காக இருந்தார் என் அறியாமையால்  அவரை ஏளனம் செய்தேன் அவர் கோபம் கொண்டு குஷ்டரோகியாக அவதிப் படுவாய் என்று சாபமிட்டார் .உடனே எனக்கு குஷ்டம் வந்துவிட்டது மன்னிப்பு கேட்டேன் மன்னிப்பு கிடைக்கவில்லை . எனது தாய் தந்தையும் மன்னிப்பு கேட்டனர் சாப விமோசனம் கொடுக்குமாறு வேண்டினர் . அதற்கு அவர் சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் ஒன்றாக வந்து உன்னை பார்த்தால் குஷ்டம் நீங்கும் என்றார் .
அந்த மூவரும் ஒன்றாக சேர்ந்து எப்போது என்னை பார்ப்பது எனது குஷ்டம் எப்போது நீங்குவது என்று கூறி அழுதான் .
           பிரம்மா கூறியபடி 45 வது நாள் சிவன் பிரம்மாவை அழைத்தார் வா காட்டிற்கு சென்று திருமணம் நடந்ததா என்று பார்த்து வரலாம் என்றார் .பிரம்மா சிவனை பார்க்க செல்லும் போது மகாவிஷ்ணு எங்கு செல்கிறீர்கள் நானும் உடன் வருகிறேன் என்று கூறினார் . மூவரும் ( சிவன் பிரம்மா மகாவிஷ்ணு )  காட்டிற்கு சென்று மணமக்களை கண்டனர் . இளவரசிக்கும் குஷ்டரோகிகும் தரிசனம் கொடுத்து சாபத்தை நீக்கினர் .
குஷ்டரோகி அழகான வாலிபனாய் மாறினான் .              

சனி, 30 அக்டோபர், 2010

செடிகளில் உள்ள பூச்சிகள் விலக

செடிகளில்  உள்ள  பூச்சிகள் விலக  

ஒரு லிட்டர் உப்புக்கு இருபது லிட்டர் தண்ணீர் (1 :  20)   ஊற்றி கலந்து பூச்சி உள்ள இடத்தில் செடிகளில் தெளிக்க பூச்சிகள் மடியும் செடி செழிப்பாக விளையும் .

கருடன்

கருடன்
கருடனை பார்த்தால் மகாவிஷ்ணுவை பார்ப்பது போன்று .
கருடனை பார்த்தால் தலைக்கு மேல் இருகைகளையும் தூக்கி கும்பிடவேண்டும் .
சுவாமிகளை நினைத்து ஜபம் செய்தால் கருடன் வரும் . கருடன் வந்தால் நம் தோஷங்கள் நம்மை விட்டு விலகுவதாக அர்த்தம் . கருடபத்து படித்தால் கருடன்கள் நிறைய வரும் .



ஞானம் பெற

ஞானம் பெற 

ஒருவருக்கு ஞானம் வருவதற்கு எந்த ஆசையும் இருக்க கூடாது . தனக்கு என்று எதுவும் கேட்க கூடாது . நான் என்ற சொல் வரக்கூடாது . யாரையும் சிஷ்யன் என்று கூறக்கூடாது

துறவியின் சாபம்

துறவியின் சாபம்

துறவி சாபம் கொடுத்தால் ஊரே உருப்படாமல் போய் விடும் . சுவாமிகளை நினைத்து கும்பிட்டால் சரியாகும் .
ஒரு துறவி கொடுத்த சாபத்தை ஒரு துறவியால் தான் மாற்ற முடியும்

கஸ்தூரி

கஸ்தூரி
கஸ்தூரி ஒரு துளி வீட்டில் இருந்தாலே வீடு லட்சுமிகரமாக இருக்கும் .

கஸ்தூரி நல்லதா கெட்டதா என்று பார்க்க கஸ்தூரி யுடன்  பூண்டை நசுக்கி முகர்ந்து பார்த்தால் பூண்டு வாடை வராது .

தண்ணீரில் போட்டு குடிக்க மணமாக இருந்தால் நல்ல கஸ்தூரி கவுச்சி நாற்றம் அடித்தால் நல்ல கஸ்தூரி அல்ல .  

உடல் பலம் பெற

 உடல் பலம் பெற
சிறுவயது முதல் குழந்தைகளுக்கு தாமரை கொட்டை கொடுத்து வந்தால் எந்த வியாதியும் வராது .தாமரை கொட்டை குளிர்ச்சியானது 
சின்ன பருத்தி கொட்டையை ஊற வைத்து ஆட்டிபிழிந்து பசும் பாலுடன் காய்ச்சி பாயசம் போல் செய்து தினமும் குடித்து வர மார்பு பலம் பெரும் . நெஞ்சில் தேங்காய் உடைக்கலாம்
எருக்கன் வேர் மண்ணில் இருந்து ஒரு அடிக்கு ( பூமி மட்டத்தில் இருந்து ஒரு அடி வரை இருப்பது விஷத் தன்மை உள்ளது )   கீழே உள்ள வேரை எடுத்து இடித்து பசும்பாலில் போட்டு காய்ச்சி வடகம் போல் தட்டி வெயிலில்  காயவைத்து ( சிலநாட்கள் இது போல் தொடந்து செய்ய வேண்டும் ) பின் நன்றாக தூள் செய்ய வேண்டும் . பின் பனங்கற்கண்டு( சம எடை )  தேனுடன் சேர்த்து அரைத்து லேகியம் போல் செய்து சாப்பிடவேண்டும்  . உடம்பு தானே பலம் பெரும் ( இம் மருந்து சூட்டை அதிகப்படுத்தும் )  .
இம்மருந்தை சுவாமிகள் கூறிய முறைப்படி செய்து 85 வயதான கிழவருக்கு 45 நாட்கள்   கொடுக்க தள்ளாடி நடந்து கொண்டு இருந்தவர் ஓட ஆரம்பித்து விட்டார் ............
        

குரங்கு

குரங்கு
குரங்கை கொல்ல கூடாது . குரங்கை கொன்றால் ஏழு தலைமுறைக்கு பாவம் போகாது .
குரங்கு இறந்து விட்டால் அதை புதைத்து வேப்ப மரம் வைத்து கோயில் கட்டி கும்பிடுவார்கள் 

சுடுகாடு

சுடுகாடு

ஒருவனுக்கு யாரேனும் சூன்யம் வைத்து விட்டால் அவன் மூன்று நாட்கள் நிர்வாணமாக சுடுகாட்டில் படுத்து இருந்தால் சூன்யம் விலகி விடும் .
சுடுகாட்டில் தேவதைகள் இருக்கும் .இடுகாட்டில் தான் பேய் பிசாசுகள் இருக்கும் .வீட்டின் வாசற்படியில்ஒரு துணியில்  சுடுகாட்டு  சாம்பலை கட்டி  வைக்கபேய் பிசாசுகள் அண்டாது  

வடலூர்

வடலூர்   
வடலூர் மண்ணில் நாம் இருந்தால் நம் பாவங்கள் விலகும் .
அந்த மண்ணிற்கு  அவ்வளவு மதிப்பு உண்டு.

செருப்பால் யாரையும் அடிக்க கூடாது

செருப்பால் யாரையும் அடிக்க கூடாது
செருப்பால் யாரையும் அடிக்க கூடாது அடித்தால் அவனுடைய பாவம் முழுவதும்  நம்மை
ஒட்டிக்கொள்ளும் . நமது புண்ணியம் முழுவதும் அவனுக்கு போய் விடும்.

தலை எந்த பக்கம் வைத்து படுப்பது

தலை எந்த பக்கம் வைத்து படுப்பது 

இரவில் படுக்கும் போது தலையை தெற்குபக்கம்  வைத்து படுத்தால் கோபம் தணிந்து சாந்த நிலையில் மனம் இருக்கும் .
மேற்கில் தலை வைத்து படுத்தால் பொதுவாக நல்லது .

பணத் தட்டுபாடு வராமல் இருக்க

பணத் தட்டுபாடு வராமல் இருக்க .

ஒரு மண் குடுவையில் சுவாமிகளை மனதார நினைத்து கொண்டு கல் உப்பை போட்டு வாய் பகுதியெய் மஞ்சள் தடவிய துணியால் சுற்றி கல்லா பெட்டியில் வைக்க கூடிய வரை யில் பணத் தட்டுபாடு வராது .
நகையை அடகு வைக்க நேர்ந்தால் அடகு வைக்கும் முன் அம் மண் குடுவையில் நகையை வைத்து சுவாமிகளை நினைத்து கும்பிட்டு வைக்க விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கும்

உப்பு - தாயின் சக்தி .

  

தர்மம் செய்யும் முறை


1)      சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும் ஒரு பங்கை சேமித்து வைக்கவும் மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும் தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும்.

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது
சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசிர்வாதமும் அவரது தரிசனம் எவ்வித இடையூறும் இல்லாமல் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும் .
மனதிற்குள் எப்போதும் ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும் .தூங்கும் நேரம் தவிர மனதில் எப்போதும் சுவாமிகளின் நினைவு இருந்து கொண்டே இருக்க வேண்டும் .
மானசீக பூஜைக்கு பத்தியம் இல்லை     
1)      

பொய்

பொய்
மற்றவர்களை பாதிக்காமல் இருந்தால் பொய் சொல்வதில் பாதிப்பு இல்லை

திருநீர் வாங்கும் முறை

 வலது கையில் வாங்கும் திருநீரை அப்படியே பூசிக்கொள்ள வேண்டும்.

இடது கையில் போடக்கூடாது .போட்டால் புண்ணியம் அந்த இடத்திலேயே
போய்விடும் .

 இல்லையென்றால் பேப்பரில் போட்டுக்கொள்ள வேண்டும் .

.இடது கை கால் தாயின் சக்தி கொடுத்த புண்ணியத்தை வாங்கி கொள்ளும்.

1)      பெண்கள் திருநீர் வாங்கும் போது எப்போதும் முந்தானையின் மேல் வலது கை வைத்து வாங்க வேண்டும்.
2)     



முன் ஜென்ம பாவங்கள் நீங்க

முன் ஜென்ம பாவங்கள் நீங்க


தினமும் பிள்ளையார் கோயிலுக்கு சென்று போன ஜென்மத்தில் செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்பு கேட்டு மூன்று முறை கோயிலை சுற்றி வர முன் ஜென்ம பாவங்கள் நீங்கும்.
பிள்ளையாரும் , துறவியும் ( நம் சுவாமிகளும் )  ஒன்றுதான் 

வியாழன், 28 அக்டோபர், 2010

மின்னல் வெட்டும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று நாம் கூறுவது ஏன்?

 மின்னல் வெட்டும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று நாம் கூறுவது ஏன் ?

அர்ச்சுனன் பாசுபதத்தை பெறுவதற்கு இருவாட்சி மரத்தின் மேல் ஏறி தபசு இருந்தார்.
மின்னல் வந்து தவத்தை கலைக்க முயற்ச்சித்தான் .அப்போது மின்னலை அர்ச்சுனன் பிடித்து கொண்டார் . மின்னலால் தப்பிக்க முடியவில்லை கஷ்டப்பட்டது .
அர்ச்சுனன் என்ற பெயரை கேட்டால் யாருக்கும் தீங்கு செய்வதில்லை என்று சத்யம் செய்து தப்பித்து கொண்டது .
பன்றி உருவமாக சிவபெருமான் இருவாட்சி மரத்தை ஆட்டி தவத்தை கலைத்தார் . அர்ச்சுனன் பாணம் விட்டார் ரதம் சொட்டியது . ரத்தம் சொட்டிய இடம் எல்லாம் உருப்படாமல் போகட்டும் என்று சிவபெருமான் சாபம் இட்டார் .
வண்டி வாகனங்கள் மேல் பன்றி மோதி ரத்தம் பட்டால் ஈஸ்வர சாபத்தால் உருப்படாமல் போகிறது .       
   

திங்கள், 11 அக்டோபர், 2010

சேற்றில் தான் செந்தாமரை முளைக்கிறது

சாக்கடையில் தான் மஹா லட்சுமி வாசம் செய்கிறாள்

சேற்றில் தான் செந்தாமரை முளைக்கிறது

அன்பு மட்டுமே அழியா சொத்து

கவரி மானிடம் இருந்து கிடைப்பது கஸ்தூரி

காராம் பசுவிடம் இருந்து கிடைப்பது கோரோசனம்.

ராகு  காலம் முடியும் போது செய்யும் காரியம் வெற்றியாகும் ( முக்கால் பங்கு கழிந்த பிறகு )

வாணியன் ஆசை கோணி கொள்ளாது

தட்டானிடம் சிக்கிய பொன்னும் செக்கானிடம் சிக்கய மாடும் பத்த அவஸ்தை படும் .

கேடு வரும் பின்னே மதி கெட்டு போகும் முன்னே .

சுடுகாட்டில் தேவதைகள் இருக்கும்

இடுகாட்டில் தான் பேய் பிசாசுகள் இருக்கும்


பங்குனி மாதம் எல்லோருக்கும் விசேஷம்

செல்வம் வரும் போது செருக்கு வரக் கூடாது .

அன்பால் எதையும்  வாங்கலாம் அதிகாரத்தால் எதையும் வாங்க முடியாது
.
ஆடியில் பெருங்காற்று அடித்தால் அடை மழை பொழியும் .

ஆடி ஆவணியில் அதிகமாக காற்றடித்தால் அந்த வருட பருவமழை நன்றாக இருக்கும்.

ஆறு வழியில் கொல்லும் காலம் தெளிவில் கொல்லும்.

வரப்பு தண்ணீரைக் கெடுக்கும் துரும்பு கல தண்ணீரைக்   கெடுக்கும்

வேலி வெள்ளாமையை   கெடுக்கும்

வெள்ளாடு தோப்பை கெடுக்கும்

ஆற்றை நாணல் கெடுக்கும்

மந்திரம் கால் மதி முக்கால்

பிச்சை எடுத்தாலும் தர்மம் செய்ய வேண்டும் 

நாக்கு இல்லாத மிருகம் முதலை

ராமர் மகாவிஷ்ணுவின் அவதாரம் அல்ல

செட்டி பிள்ளை எட்டு பணம் இருந்தால் பிழைத்து கொள்வான்

சாமியார்கள் எல்லாம் ஊரை ஏமாற்ற வந்தவர்கள்

கேது திசை சந்திர திசையில் படிப்பு வராது

நல்லவன் வயிற்றில் கெட்டவன்  பிறப்பான்

கெட்டவன்   வயிற்றில் நல்லவன் பிறப்பான்

பர்வத மலை துறவிகள் வாழ்ந்த இடம்

கட்டை பிராணன் போகும் இடம் தான் சொர்க்கம்

குலைக்கிற நாய் கடிக்காது , வேட்டைக்கு ஆகாது

இடிக்கிற வானம் மழை பொழியாது

மகத்துவம் இருக்கும் இடத்தில கூடம் இருக்காது

தாயின் சக்தி தான் ஜோதி

கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும்

அப்பன் கொடுக்கும் காசில் இரண்டு தம்படி மிச்சம் செய்யும் பிள்ளை என்றும் முன்னுக்கு வருவான்
.
கிணற்றில் ஆமை இருந்தால் லக்ஷ்மி கடாட்சம் இல்லை

கோ தரிசனம் பாபவிமோசனம் 

சாது தரிசனம் பாபவிமோசனம்

கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னாலே வரும்.

அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம்

தொழில் செய்பவன் சிக்கனமாக இருக்க வேண்டும்

தர்மம் செய்தால் பிள்ளை கிடைக்கும்

இறைக்கிற கிணறு ஊரும்

கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் மரம் ஏறி கை விட்டவனும் ஒன்று

குடும்பத்தை மூடி வாழும் தத்துவம் நல்லது

துஷ்டர்களை கண்டால் தூரப்போ சுடுகாட்டை கண்டால் ஒதுங்கிப்போ

நண்டு திங்கும் ஊருக்கு போனால் நடுக்கண்டம் கொடு என்று சாப்பிட கேட்க வேண்டும்

கண்டதை பேசலாம் காணாததை பேசக் கூடாது

விளக்கில் இருந்து கற்பூரத்தை ஏற்ற கூடாது

கன்னத்தில் கை வைத்தால் தரித்திரம் கஷ்டம் வரும்

ஓடிபிழைத்தாலும் திசை இருக்க வேண்டும்

அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்

இளைந்து சாப்பிட்டாலும் எழுத்து இருக்க வேண்டும்

பரத்தையர் தெருவில் இருந்தாலும் இனத்தார் தெருவில் குடியிருக்க வேண்டும்

பசி சுவை அறியாது நித்திரை சுகம் அறியாது

கோயிலை சுற்றி வந்தால் கெட்டது நீங்கும்

அவனவன் செய்த வினையை அவனவன் அனுபவித்து தான் ஆக வேண்டும் .

எது நம்புகிறோமோ அதுதான் நம்மை காப்பாற்றும் .

கஷ்டத்தையும் கசப்பையும் இனிப்பாக நினைக்க வேண்டும்

தாய் மடியில் தங்கம் இருந்தாலும் தான் மடியில் தவிடாவது இருக்க வேண்டும்                                           

கூடி கேட்டவர்கள் யாருமில்லை பிரிந்து கெட்டவர்கள் உண்டு

பௌர்ணமியில் ஒரு பொருளை வாங்கினால் சொத்துக்கு சிறப்பு

நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரிபார்க்க வேண்டும் .

ஞாயிற்று கிழமை விவசாயத்திற்கு நல்லது

கோபம் வரும் வீட்டில் சண்டை வளரும்

பூஜை அறையில் படுத்து தூங்க கூடாது

சொந்தம் இருந்தால் மூக்கு ஒழுகும் வரை கேட்ப்பார்கள்

கொண்டுக் கொண்டாலும் , கொடுத்து விட்டாலும் சொல்லப்படாது

ஒழுக்கம் வளர்பவர்கள் பெண்கள்

எளியவனுக்கு ( ஏழைக்கு ) ஆசை வார்த்தை சொல்லாதே
பணக்காரனுக்கு வைத்தியம் சொல்லாதே

அடுத்தவருக்கு கெட்டது எப்போதும் செய்யாதே

திருடன் அபசாரி என்ற பெயர் வாங்கப்படாது 

சந்தோசம் தான் கடவுளின் ஆகாரம்

வாத்யார் சொல்லி கொடுப்பது சிறிய பாடம்
பெரியவர்கள் வாக்கு பெரியா பாடம்

மக்களை திருத்தினாலும் சாமியார்களையும் மந்திரவாதிகளையும் திருத்தமுடியாது

புண்ணியத்திற்கு போவதை தடுப்பது பேராசை பொருளாசை .

பெண்கள் பெரிய படிப்பு படித்தாலும் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.

எது வந்தாலும் வந்து விட்டு போகட்டும் என்று இருந்தால் எந்த நோயும் வராது

கெட்ட நேரத்தில் தணிந்து சாந்தமாக போக வேண்டும் . தைரியமாக இருக்க வேண்டும்

வீட்டிற்குள் கடை வைக்கபடாது

மனோ பூஜை பத்தியம் இல்லாதது எந்த நேரமும் கும்பிடலாம் .

பிள்ளைகளுக்கு ஒழுக்கம் பண்பாடு கற்பிக்க வேண்டும் ,தொழிலும் கற்று கொடுக்க வேண்டும் .

ஒன்றை பிடித்தால் வலுவாக பிடித்து கொண்டு ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் .

கட்டை இருக்கும் வரை இருந்து விட்டு ஆத்மா ஒரு இம்சை இல்லாமல் பிரிவது தான் புண்ணியம் .நோய் நொடி இல்லாமல் இருப்பதும் புண்ணியம் .

எதை செய்தாலும் இது நமது அல்ல என்று செய்ய வேண்டும் கடவுள் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும் .

யார் வந்து தண்ணீர் குடிக்க  கேட்டாலும் தண்ணீர் இல்லை என்று சொல்லப்படாது .

சாபிடவர்கள் உப்பு இல்லை என்று சொல்லப்படாது .அப்படி சொன்னால் செய்தவர்கள் மனம் புண்படும் எனவே சொல்லப்படாது.

பெண்கள் கட்டின கணவர் வீட்டை பெரியதாக நினைக்கவேண்டும்

தெய்வ நம்பிக்கை , நம் உழைப்பு எப்போதும் இருக்க வேண்டும் .

நல்லது செய்யும் போதும், நன்மை செய்யும் போதும் தர்மம் செய்யும் போதும் அடுத்தவனுக்கு தெரியக் கூடாது , தெரிந்தாலும் நாம் சொன்னாலும் புண்ணியம் எல்லாம் போய் விடும் .

குழந்தைகளுக்கு வெள்ளாட்டு பால் கொடுத்தால் நோய் வராது .

பசி பட்டினி என்று வந்தால் சாப்பாடு போடவும் .

நல்ல பாம்பு வாசம் செய்தால் இலட்சுமி கடாட்சம் , விபூதி போட்டு கற்பூரம் கொளுத்தினால் போய்விடும்.

சுவாமிகள் கையெய் தூக்கி காண்பிப்பது மக்களுக்கு அமைதி வேண்டும் என்பதே .

கெட்டவனுக்கு நல்லது கெட்டது புரிய வைத்தால் நல்லவனாக மாறலாம் .

பிள்ளைகளை காலை நாலரை மணிக்கு எழுப்பி படிக்க வைத்தால் படிப்பு நன்றாக வரும் .

உலகத்தை காக்கும் கடவுளின் பாதம் உலகம் முழுவதும் பட்டிருக்கும் ஆகையால் தான் அந்த பாதத்திற்கு முதல் வணக்கம்

முதலில் காலுக்கு உதிரி பூக்கள் சூடிய பிறகு  தான் சிரசில் பூ வைக்க வேண்டும்

இன்னும் குமபிட்டு இப்படி நடக்கிறது என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும் , எல்லாம் போய்விடும் .

கஷ்டம் வரும் காலங்களில் நபிக்கை அதிகமாக இருக்க வேண்டும் 

நம்பிக்கை தான் தெய்வம் என்ன துன்பங்கள் வந்தாலும் உயிரே போவதானுலும் நம்பிக்கையை சிறிதும  இழக்ககூடாது 

மண்ணுக்கு மண் மாத்தனும் தண்ணீருக்கு தண்ணீர் மாத்தனும்

சிவ பூஜை செய்தால் மன அமைதி கிடைக்கும் . தகப்பனுடன் தாய் இணைந்து விடுகிறாள் .

எந்த நேரமும் கோபமில்லாமல் சந்தமாக இருக்க வேண்டும் .

தற்பெருமையும் கெளரமும் இருக்க கூடாது

இடாதவனுக்கு இட்டு காட்டு.


குப்புற பிறந்த   குழந்தை அதிஷ்டகார குழந்தை,செல்வமாக வாழ்வார்கள்.

பழுப்பு அரச இலையில்   கையிலை தைத்தால் அழகாக இருக்கும்.

திருஷ்டி விலக

திருஷ்டி விலக

1)      கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும். குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச  திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.திருஷ்டி சுற்றும் போது பார்த்தவன் கண்ணு பார்க்காதவன் கண்ணு பேய் கண்ணு பிசாசு கண்ணு ....எந்த கண்ணும் படக்கூடாது என்று சுற்றவேண்டும். 
வாசலில் ஒரு சாக்கு பையில் பிரண்டையை போட்டு மிதித்து வர காற்று கருப்பு திருஷ்டி படாது ( அந்தக் காலத்தில் இது போன்று செய்வார்கள் )வீ ட்டின் வெளியே தேய்ந்து போன குதிரை லாடத்தை U வடிவில் மாட்டகாற்று கருப்பு அண்டாது.
துளசி எலுமிச்சை வைத்து  கும்பிட்டால் திருஷ்டி இருக்காது . வெளியே செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும் 


.
வீ
vv

பிள்ளையார்

பிள்ளையார்

பிள்ளையாரை ஜில்லா விட்டு ஜில்லா திருடி எடுத்து வந்தால் விசேஷம் . எப்படிப்பட்ட நலிந்த குடும்பமும் முன்னுக்கு வரும் நல்லநிலமைக்கு வரும் .

தன் வைத்தியம் தனக்கு பலிக்காது

பிள்ளையாரை திருடி வேறு யாருக்காவது ( நன்கு கவனித்து கொள்பவர்களிடம் ) கொடுக்க வேண்டும் .

கத்தரி செடியும் திருடி நட்டால் விளைச்சல் மிகுதியாக இருக்கும்

காசிக்கு சென்றால் பாவம் போகுமா ?

காசிக்கு சென்றால் பாவம் போகுமா ?

காசிக்கு போனாலும் கர்மம் தீராது
செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்டாலே போதுமானது   .
காசிக்கு சென்றால் பாவம் போகாது.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

swamiji statue teak wood 3



ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை

ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை

ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை மிக்க விசேஷமானது
அன்று விநாயகர் முருகர் சிவன் இந்த தெய்வங்களை தரிசனம் செய்வதும் மகான்களை தரிசனம் செய்வதும் புண்ணியமானது .
ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை அன்று காரைக்காய், கடாரங்காய் நகம் படாமலும் தரையில் விழாமல் பறித்து சுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற்று நாம் வீட்டு பூஜை அறையில் காற்றோட்டமான இடத்தில வைக்க இலட்சிமி கடாட்சம் கிடைக்கும் .      

Swamiji teak wood statue 1


Swamiji teak wood statue


சனி, 9 அக்டோபர், 2010

மந்திரம்

மந்திரம்   
மந்திரங்கள் எல்லாம் கரும காண்டம்
மந்திரம் கற்றவன் எவன் உருப்பட்டு இருக்கிறன்
மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு
சம்சாரிக்கு மந்திரம் தேவையில்லை
மந்திரம் செய்யும் போது தாய் பிரசவ நேரத்தின் போது என்ன கஷ்டப் படுகிறார்களோ அப்படி கஷ்டப்பட்டு அந்த தேவதை வேலை செய்யும் அதுவும் மந்திரவாதிக்கு நல்ல நேரம் இருக்கும் வரை தான் பின்பு அந்த தேவதையே அவனை அழித்து விடும்

அழகு

அழகு
ஆணுக்கு மீசை அழகு கால் கை கட்டை விரல் அழகு
பெண்ணுக்கு கூந்தல் மார்பு அழகு
ஆணுக்கு அவனுடைய கட்டை விரலை வெட்டி விட்டால் அவனுடைய பலம் போய்விடும் .
பெண்ணுக்கு மார்பின் நுனியோ மூக்கின் நுனியோ பின்னப் பட்டால்அவளின் பலம் போய் விடும் .
இலட்சுமணன் சூர்பனகை மூக்கை அறுத்ததன் கரணம் இதுதான்
மந்திரவாதி கட்டை விரல் வெட்டிவிட்டால் அவனது மந்திரம் எதுவும் பலிக்காது .
மந்திரவாதியின் முன் உள்ள நான்கு பற்களை உடைத்தாலோ அல்லது தானாக விழுந்தாலோ மந்திரம் வேலை செய்யாது     
 அப்போது மீசை வைக்காமல் இருந்தேன்
என்னடா மீசை இல்லாமல் இருக்கிறாய் என்று சுவாமிகள் கேட்டார் ?
மீசை வைக்காமல் இருந்தால் தான் முருகரின் அருள் எளிதில் கிடைக்கும் அதனால் தான் மீசை வைக்கவில்லை என்றேன் .
யாரடா கூறியது என்றார் .
அந்தக் காலத்தில் யாரும் வைக்கவில்லையே என்றேன் .
முட்டாள் அந்தக் காலத்தில் மீசை வளர்த்து எலுமிச்சை பழத்தை இருபக்கமும் நிறுத்தி வைப்பார்கள் , அக் காலத்தில் இப்போது போல் அரிசி சாதம் கிடையாது வெறும் கம்பங் கூழ் தான் . மீசை உள்ளவன் குடித்தால் மீசையெய் கழுவ இரண்டு குவளை நீர் வேண்டும் . சோம்பேறிகள் தான் மீசை வைக்காமல் இருந்தார்கள் அதுதான் உண்மையான காரணம் என்றார்                            

கருப்பு குழந்தை

கருப்பு  குழந்தை .
ஒரு நாள் ஒரு சிகப்பான பெண்மணி சுவாமிகளிடம் வந்து தன் கணவன் தன்னை சந்தேகப் படுவதாக கூறி அழுதார் . ஏன் என்று சுவாமி கேட்கையில் " நானும் சிகப்பு என் கணவனும் சிகப்பு எங்களுக்கு பிறந்த குழந்தை கருப்பாக உள்ளது " எனவே என் மீது சந்தேகப் படுகிறார் .
என்றார் . சுவாமிகள் உன் கணவனை என்னிடம் கூட்டி வா என்றார் . மறு நாள் அப் பெண்மணி கணவனை சுவாமிகளிடம் கூட்டி வந்தார் .
அப்போது  சுவாமிகள் கணவனை மனைவியும் , மனைவியெய்  கணவனும் மனமாற நம்ப வேண்டும் நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்கை இல்லை .மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று அறிவுரை  கூறினார் .
ஏன் குழந்தை கறுப்பாக பிறந்தது என்று கணவன் கேட்கையில் சுவாமிகள் கூறினார் " இருவரும் கூடிய பிறகு மூன்றே முக்கால் நாளிகை கழித்து அப்பெண் யார் முகத்தில் முழிக்கிறார்களோ அல்லது நினைகிறார்களோ அவர்களை போல் தான் குழந்தை பிறக்கும் என்றார் . பிறகு அப் பெண்மணியிடம் நீ காலையில் எழுந்து என்ன செய்வாய் என்று சுவாமிகள் கேட்டார் அதற்கு அப்பெண்மணி காலை நான்கு  மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவேன் அப்போது எதிர் வீட்டில் வயதான கருப்பாக உள்ள  பெரியவர் திண்ணையில் உட்கார்ந்து இருப்பார் அவரைத்தான் தினமும் பார்ப்பேன் என்றார் .
கணவனுக்கும் சந்தேகம் தீர்ந்தது .பிறகு இருவரும் ஒற்றுமையாக குடும்ப வாழ்கை நடத்தினார்கள் .
பின் எப்போதும் காலை எழுந்தவுடன் கணவனை மட்டுமே பார்ப்பாள் .இரண்டாவது குழந்தை கணவனைபோலவே பிறந்தது .
இதுவே காரணம் குழந்தை கணவனைப் போல பாட்டி பாட்டனை போல் இருப்பது .

இரட்டை குழந்தை

இரட்டை  குழந்தை

ஆணின் இந்திரியம் நன்றாக இருந்து முதலில் கூடியபிறகு மூன்றே முக்கால் நாழிகைபிறகு மீண்டும் கூடுவார்களேயானால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் .
இரட்டை குழந்தைகளில் இரண்டும் பெண் ஆக பிறந்தால் மிக்க விசேஷம் .

திருமூர்த்தி மலை முருகன் கோயில் அளவு

ஒரு முறை சுவாமிகளுடன் திருமூர்த்தி மலைக்கு சென்று இருந்தோம் . அப்போது அங்குள்ள பொறியாளரிடம் முருகன் கோயிலின் உள் அளவு என்ன என்று கேட்டார் . அதற்கு பொறியாளர் ஒரு தோராயமான அளவை சொன்னார் . என்னடா கணக்கு போடுகிறாய் . கை நீட்டி படுத்து கொண்டால் கை விரல்கள் முதல் கால் வரை அளந்து பார் கோயிலின் அளவையும் அளந்து பார் இரண்டும் ஒன்றாக இருக்கும் என்றார்
சரியான அளவு எட்டு அடி மூன்று  அங்குலம் 
திருமூர்த்தி மலை முருகன் கோயில் அளவு , அரும்பருத்தி பிள்ளையார் கோயில் அளவு இரண்டும் ஒன்றாகவே இருக்கும் எட்டேகால் அடி

கண் துடித்தால்

கண் துடித்தால்
சுவாமிகள் ரம்பாக்கதில்இருக்கும் போது சுவாமிகளை தரிசிக்க சென்று இருந்தேன் .
அப்போது ஒரு  அன்பரின்  கண் துடித்தது . அதற்கு சுவாமிகளிடம்  கேட்கையில்
கண் துடித்தால் கஷ்டம் வரும் என்பார்கள் . அது பாடுக்கு வந்து அது பாடுக்கு போகட்டும்  என்றார்.
எந்த கஷ்டம் வந்தாலும் மன தைரியத்தை விடக்கூடாது என்றார்             

மடிப்பிச்சை

மடிப்பிச்சை 
 அந்த காலத்தில் குழந்தை இல்லாத பெண்களும் , குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் நல்ல நாளில் ஏழைகளை கூப்பிட்டு விருந்து படைத்து அவர்களே பரிமாறி பின் மடியேந்தி அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் எச்சில் கையாலேயே சிறிது சாதம் வைக்க சொல்லி , வாங்கும் சாதத்தை ஓர் இடத்தில் பத்திரப் படுத்தி பின் எச்சில் சாதத்தை போட்டவர்களின் சாப்பிட்ட இலைகளை எடுத்து போட்டு விட்டு பத்திரப் படுத்திய சாதத்தை தரையில் கொட்டி சாப்பிடுவார்களாம்.
கையில் எடுத்து சாப்பிடுவதைவிட மண்டி போட்டு கைகளை பின்னல் கட்டிக் கொண்டு வாயாலே எடுத்து சாப்பிடுவது மிக்க விஷேசம்

குழந்தை இல்லை என்று பிரம்மன் எழுதியிருந்தாலும் பிரம்மன் தலை எழுத்தையே மடிபிச்சை மாற்றும் 

சிறியாநங்கை

சிறியாநங்கை
செடிகளில் சிறியாநங்கை பெரியா நங்கை இரண்டு வகை உண்டு .
வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக்   கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது எது கடித்தாலும் எந்த விஷமும் அண்டாது .

சுவாமிகள் ராம்பக்கத்தில் இருக்கும் போது அவரது உடலில் தேமல் போல் இருந்தது. அப்போது மேற்கூறியவற்றை கூறி சிறியாநங்கை எடுத்து வர சொன்னார் .  சிறியாநங்கை கையில் வைத்து கசக்கி சாரு எடுத்து சுவாமிகள்  கால்களில் பூசினார்கள் சக்கையை என்ன செய்வது என்றுஅவர்கள்  கேட்க அப்படியே வாயில் போட்டு கொள்ளடா என்றார் .சுவாமிகள் கூறியபடி வாயில் போட்டு கொண்டார்  எப்படியடா உள்ளது என்றார்? ஒரே கசப்பு சுவாமி என்றார்கள்   ,சர்க்கரை வேண்டும் என்றார்கள் அதற்கு சுவாமிகள் நீ இப்போது வாயில் எது போட்டாலும் இனிக்காது குறிப்பிட்ட நேரம் கழித்துதான் இனிக்கும் என்றார் ( அவர் கூறிய கால அளவு மறந்து விட்டது )  தோல் வியாதிகளுக்கு சிறியாநங்கை மிக நல்ல மருந்து.
கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் நோய் போகவே போகாது     

நம்பிக்கை

நம்பிக்கை
மனிதனுக்கு நம்பிக்கை தான் முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் .

எதை செய்தாலும் நமிக்கையுடன் செய்தால் தான் பலன் கிடைக்கும் .முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு .

நம்பிக்கையுடன் தான் எதையும் செய்ய வேண்டும் , இரு மனமும் இணைய வேண்டும் .

வைத்தியம் செய்யும் போது வைத்தியர் மருந்து கொடுக்கும் போது நோய் சரியாகி விட வேண்டும் என்று நினைத்து கொடுக்க  வேண்டும். நோயாளியும் இந்த மருத்துவர் கொடுக்கும் மருந்தால் நோய் குணமாகி விடும் என்று நம்பிக்கை இருக்க வேண்டும் அப்போதுதான் நோய் குணமாகும் .
தங்கத்தில் அணிகலன் செய்வது எப்படி ?
தங்கமும் , செப்பும் வேண்டும் .
இரண்டும் பக்கத்தில் வைத்தால் போதுமா?
 தங்கமும் , செப்பும் உருக வேண்டும் . இரண்டும் உருகி இணைந்தால் தான் அணிகலனாக மாறும் .
நாமும் இறைவனிடமும் ஸ்வாமிகளைடமும் மனமுருகி அன்பு கொண்டு நம்பிக்கை வைத்து அருள் ஆசியெய் பெற வேண்டும் .

கஷ்டம் சோதனை கொடுக்கும் மன நிம்மதி , மன நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் .
எது இருந்தாலும் தெய்வ நம்பிக்கை வேண்டும். ஆன்மாவால் கும்பிட வேண்டும்
தைரியத்தை வைத்துதான் கஷ்டத்தை குறைக்க வேண்டும் .
இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு  காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும் எல்லாம் போய்விடும் .
நம்பிக்கை  தான் சற்குரு ( கடவுள் ) யார் கை விட்டாலும் சற்குரு மட்டும் கைவிடமாட்டார் என்ற திடமான வைராக்கியம் இருக்க வேண்டும் .
மனிதனை மனிதன் நம்பாமல் இருப்பது கெட்டதாகும்.
அன்பு மட்டுமே  அழியா சொத்து