ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தெய்வீக குழந்தை

தெய்வீக குழந்தை 

 120 வருட வேப்ப மரத்தின் பட்டை ,காய் ,கொட்டை.தண்ணீரில் உள்ள செங்கொடி வேருடன் கூடியது.இவை அனைத்தையும் அரைத்து,அதில் சிறிது எடுத்து முற்றின வாழைக்காயில்  உள்ளே வைத்து எழு நாட்கள் மூடி  வைத்திருந்து எடுத்து பார்க்கும் போது காய் பழுக்காமல் இருந்தால் பக்குவமானது .அதனை உட்கொண்டு வந்தால் ஞானமுள்ள ,அறிவுள்ள குழந்தைபிறக்கும்.குந்திதேவிக்கு பிறந்த பாண்டவர்கள் பிறப்பு இவ்வகையான தெய்வீக பிறவிகள் ஆகும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011



ஒருமுறை அர்ச்சுனனுக்கு கர்வம் வந்து விட்டது .பீமன் கதாயுதத்தை எடுத்து சண்டை போடுகிறான் ,நானோ ஒரு அம்பு விட்டால் போதும் என்று நினைத்தான்.மகாவிஷ்ணு அர்ச்சுனனை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார் .


அங்கு பெண்கள் ஒரு பூச்செடியில் மலர் பறிக்க பறிக்க மீண்டும் பூக்கள் பூத்து கொண்டே இருந்தன.அர்ச்சுனன் அப்பெண்களிடம் சென்று யாருக்காக பூஜை?எப்படி இந்த பூ பறிக்க பறிக்க பூத்து கொண்டே இருக்கிறது என்று கேட்க அவர்கள் பீமனை பூஜிக்க என்றனர் .






பின்பு பசியை தூண்டிவிட்டார் மகாவிஷ்ணு .இருவருக்கும் நல்ல பசி .ஒரு வீட்டின் முன் பசி என்று கேட்டனர் ,எதுவுமில்லை என்று விரட்டினார் அவ் வீடு பெண்மணி ,தண்ணீராவது கொடுங்கள் என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்று விரட்டினாள்.அவளை பார்த்து மகரசியாய் இரு அம்மா என்றார்.


இன்னொரு வீட்டிற்க்கு வந்து பசி என்று கேட்க நன்கு உபசரித்து மோர் கொடுத்தார் அந்த வீட்டு அம்மா. மோர் முழுவதையும் மீதி வைக்காமல் குடித்து விட்டார் மகாவிஷ்ணு. மீண்டும் ஒரு சொம்பு அர்ச்சுனனுக்கு கொடுத்தார்.பசி அடங்கியது.அப்போது அவ்வீட்டு பசுங்கன்றுதுள்ளி ஓடி அருகிலுள்ள கிணற்றில் விழுந்து விட்டது ,அதை கண்ட தாய்ப்பசுவும் உடன் கிணற்றில் விழுந்தது ,அந்த வீட்டு பெண்ணும் இதை பார்த்து கிணற்றில் விழுந்தார் , உடன் கணவனும் கிணற்றில் விழுந்து விட்டான் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவிடம் காப்பாற்றி இருக்கலாமே என்று கேட்க?போனால் போĨ5;ட்டும் என்று மகாவிஷ்ணு கூறி பேசாமல் இருந்தார் .


பின்பு இருவரும் நடந்தார்கள் நடக்கும் போது ஒரு முள் மகாவிஷ்ணுவின் காலில் ஏறி விட்டது அதை எடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூற அவன் இவர் மீது கோபமுற்று மனதிற்குள் படுபாவி அவர்கள் அனைவரையும் காப்பாற்றி இருக்கலாமே தண்ணீர் கூட கொடுக்காதவளை மகராசியை இரு என்றாய் ,பசி ஆத்தியவர்களை காப்பாற்றாமல் விட்டு விட்டாயே என்று முள்ளை வெளியே எடுப்பதற்கு பதில் நன்கு உள்ளே தள்ளி விட்டார். மகாவிஷ்ணு பின்பு முள்ளை எடுத்து விட்டு நன்றாக உற்று பார் என்றார் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவின் காலில் முள் குத்திய இடத்தை பார்க்க கன்று,பசு,கணவன்,மனைவி யாவரும் பாதம் வழியே சொர்கத்திற்கு செல்வதை கண்டான் .பின்பு மகாவிஷ்ணுவிடம் மனிப்பு கேட்டான் .

புதன், 3 ஆகஸ்ட், 2011


ரங்கமலை ,தங்கமலை ,எல்லாம் சுற்றி ஒரு பாறைமேல் சுவாமிகள் படுத்து இருந்தபோது கொலை செய்யாத ஒரு நிரபராதியை ( கொலை நடந்தபோது அவர் ஊரிலேயே இல்லை ) மல்லீஸ்வரன் கோயிலுக்கு போலீசார்,போலீஸ் இன்ஸ்பெக்டர் இழுத்து சென்றனர் .தூக்கு போடஇன்னும் 26 நாட்கள் தான் உள்ளது என்று கூறி சுவாமிகளிடம் நிரபராதியை விட்ĩ5; விட்டு மேலே போனார்கள். குற்றவாளி, நீதிபதி கடவுளாக பிறக்க வேண்டியவர் ,மிகவும் தயாள குணம் உள்ளவர் ,ஆனால் தனக்கு சாட்சிகள் இல்லை என்பதால் தூக்கு என்று கூறினார் .
சுவாமிகள் நிரபாராதியிடம் நான் எது கூறினாலும் அது போல் செய்வாயா என்று கேட்டார் ,அவரும் செய்கிறேன் என்று கூற சத்தியம் வாங்கி கொண்டார் .நீதிபதி உன் கடைசி ஆசை என்னவென்று கேட்பார் அப்போது முதலில் ஒன்றும் இல்லை என்று கூறு வற்புறத்தி கேட்டால் நீதிபதியை பார்த்து உன் மனைவி மேல் ஆசை என்று கூறு என்றார் .நிரபராதி பயந்தார் சுவாமிகள் நகத்தை கிள்ளி வைத்து கொள் என்னை நினைத்து கொண்டு செல் என்றார் .
நீதிபதியிடம் அதே போல்,கூற நீதிபதி பேனாவை வைத்து விட்டு போய் விட்டார்.ராணி விக்டோரியா விடுதலை செய்து விட்டார் .

( அந்த நீதிபதி சுவாமிகளின் சித்தி மகன் பல ஊர்களில் இருந்து சிபாரிசு செய்து ஜட்ஜ் ஆக   வைத்தார்கள். அந்த சொல் சொன்ன இரண்டு வருடங்களுக்கு பின் சித்தியை திருச்சியில் பார்த்தார் .


சுவாமிகளுக்கு சிறு வயதாக இருக்கும் போது,சுவாமிகளின் வாயில் வெண்ணையை தடவுவார்கள். ஏன் என்று கேட்டால் அப்போது தான் நிறைய பால், தயிர், நெய் கிடைக்கும் என்பார்கள் .
பனைவெல்லம் கட்டி கட்டியாக இருக்கும் ,அதை யாருக்கும் தெரியாமல் உடைத்து அனைவருக்கும் கொடுப்பேன்  என்றார் . திருடனுக்கு எப்படி திருடுவது என்று கற்று கொடுப்பாராம். என்னிடமே ஏமாற்றினால் உதைப்பேன் .


ஒரு கிழவி கொல்லன் குடி கோட்டை என்ற ஊரில் மலையாள பகவதி மந்திரத்தை கொண்டு ஊர் மக்களை மிரட்டி பயந்து வாழும்படி செய்து வந்தாள்.ஒரு குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். சுவாமிகளிடம் வந்து அழுதார்கள் .ஸ்வாமிகள் ஒரு காரியம் செய்ய சொன்னார்கள் , அவர்கள் பயந்தனர் .என்னை நினைத்து கொண்டு தைரியமாக செல்லுங்கள் ,மலையாள பகவதி மந்திரத்திற்கு எதிர் மந்திரம் கற்று கொண்டோம் என்று கிழவி காதில் விழும்படி கூறுங்கள் என்றார். கிழவி காதில் அது விழ சுவாமிகள் படுத்து இருக்கும் இடத்திற்கு வந்தாள்.மந்திரத்தை கூறி பார்த்தாள்,எதுவும் நடக்க வில்லை,சுவாமிகளை பார்த்து மிரட்டினாள்.சுவாமிகள் அமைதியாக இருந்தார் .பின்பு கிழவி அழ ஆரம்பித்து விட்டாள்.மன்னிப்பும் கேட்டாள். பின்புதான் கிழவிக்கு அடிமையாக இருந்த கிராம மக்கள் விடுதலை பெற்று மகிழ்ச்சியாக இருந்தனர்.
சுவாமிகள் ஒருமுறை சென்னை சென்றபோது மதுராந்தகம் அருகே காபி,சிற்றுண்டி சாப்பிட வண்டியை நிறுத்தினார்கள். அப்போது காரின் அருகே மிகப்பெரிய பாம்பு ஒன்று தவளையை பாதி விழுங்கிய நிலையில் இருந்தது.அதை பார்த்து சுவாமிகள் " அம்மா உன் பசிக்காக ஒரு ஜீவனை கொல்கிறாயே" என்றார் .உடனே பாம்பு தவளையை விட்டு விட்டது .பாம்பை அடிக்கலாமா என்று மற்றவர்கள் கேட்க,வேண்டாம் அது ஒன்றும் செய்யாது என்று கூறினார் சுவாமிகள். பின்பு பாம்பு சென்றுவிட்டது .மறுநாள் சென்னையில் வீட்டில்  மூன்றாவது மாடியில்இருக்கும் போது அவ்வீட்டில் உள்ளவர்களிடம் ஏனம்மா பசி என்று வந்ததே ஒரு டம்பளர் பாலாவது கொடுத்து இருக்கிலாமே என்றார் சுவாமிகள் .சொல்லி முடிக்கவில்லை அன்று கண்ட பாம்பு மூன்றாவது மாடியின் வாசற்படியில் படம் எடுத்து நின்றது . பின்பு மறைந்து விட்டது .
எப்படியடா 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து மூன்றாவது மாடி பளிங்கு தரை வளவளப்பாக இருந்து எப்படி வந்தது ? என்று கேட்டார் சுவாமிகள் 

சுவாமிகளை சுற்றி

சுவாமிகள் இருக்குமிடத்தில் வீட்டின் வாசற்படி அருகே ஆதிபராசக்தியும் ,ஆதிபராசக்தியின் மடியில் முருகரும் ,( சில சமயம் எதிரேயும் ),சுவாமிகளுக்கு இடது புறம் உலகை படைத்தவள், பின் புறம் மகாவிஷ்ணு ,வலது புறம் நிர்வாண அம்மன் ,மொத்தம் சுவாமிகளை சுற்றி 14 பேர் இருப்பார்கள் .
ஒரு ஊரில் ஒரு பெரிய ரவுடி இருந்தான்,பெண் பித்து பிடித்தவன் ,எந்த ஒரு பெண்ணை பார்த்தாலும் அடைந்து விடுவான் .ஊரில் அனைவரும் பயப்படுவார்கள் ,பயந்து பெண்களையும் மனைவிகளையும் அனுப்பிவிடுவார்கள். 
அவ்வூருக்கு புதியதாக ஒரு பெண் மணம் முடித்து வந்தாள். தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை நடத்தினார்கள். ஒரு நாள் ரவுடியின் கண்களில் அப்பெண் அகப்பட்டு விட்டாள்.பார்த்தது முதல் அவளை அடிய ஆசைப்பட்டான்,அவள் இணங்கவில்லை .வீட்டில்  உள்ளவர்கள் ரவுடியை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை ,அவளை ரவுடியிடம் செல்ல சொன்னார்கள். அவள் மறுத்து விட்டாள் .தினமும் ரவுடி அவளை இணங்குமாறு வற்புறுத்தி கொண்டு இருந்தான் .
அவள் உயிரை மாய்த்து கொள்வது என முடிவு செய்து ஊரிற்கு வெளியே உள்ள காட்டிற்குள் சென்றாள்.அப்போது சுவாமிகள் ஒரு பாறையின் மேல் அமர்ந்து  இருந்தார்.அவளை அருகில் அழைத்தார்,எங்கு செல்கிறாய்? தற்கொலை செய்து கொள்ள போகிறாயா?என்று கேட்டார் .நான் சொல்வதை கேட்கிறாயா என்றார். அவள் கேட்கிறேன் என்றாள்.எது சொன்னாலும் கேட்க    வேண்டும்  என்றார் .சரி என்றாள். பின்பு  அவளிடம்  உனது  வீட்டில் உள்ளவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பிவிடு,அந்த ரவுடியிடம் குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட நேரத்திற்கு வருமாறு கூறு ,அவன் வரும்போது அதற்கு சிறிது நேரம் முன்பு தலைக்கு குளித்து வாசலின் உட்புறத்தில் நிர்வாணமாக நில் என்றார். என்ன சுவாமி அவனிடம் இருந்து தப்பிக்க வழி கேட்டால் , அவன் முன் அம்மணமாக நிற்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டாள்.நான் சொன்னதை செய் பயப்படாதே என்றார் சுவாமிகள். தாங்கள் கூறியபடி செய்கிறேன் எதாவது ஏற்பட்டால் அந்த பாவம் உங்களைச்சாரும் என்றாள்.எதவும் நேராது பாவம் வந்தால் என்னையே சாரட்டும் என்றார் சுவாமிகள். சுவாமிகள் கூறியபடியே வீட்டில் உள்ள எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு ரவுடியிடம் இந்த நேரத்திற்கு வா என்று தகவல் அனுப்பினாள்.அந்த நேரத்தில் தலைக்கு குளித்து நிர்வாணமாக தலைவிரிக்கோலமாக நின்றாள்.ரவுடி    வந்து   வாசற்படி  ஏறினான்  .இவளை  பார்த்தவுடன்  முதலில்  துணியை  உடுத்து என்று கூறிவிட்டு  உள்ளே  வராமல்  அப்படியே  சென்று விட்டான் . சென்றவன் படுத்த படுக்கையாக இருந்தான்.நான்கு  நாட்களில்  இறந்து  விட்டான்.  
அப்பெண் அச்சத்தை  தவிர்த்து  நிர்வாணமாக நின்றதால்  நிர்வாணி அம்மனுக்கு சமானம்,அதை பார்த்த ரவுடி உடனே துணி உடுத்து மாறு கூறினான்.என்றார்  சுவாமிகள், 

பசி

ஒருவனுக்கு எழுத, படிக்க தெரியாது .எப்பொழுதும் முருகர் துணை ,ஓம் பராசக்தி துணை என்று எழுதிக்கொண்டு இருப்பான். சுவாமிகளிடம் வந்து குறைகளை கூறினான் .அதற்கு சுவாமிகள்  "அப்பா பைத்தியமே துணை" இவ்வாறு எழுதினால் கஷ்டம் தீரும் ஆனால் சோதனை வரும் என்றார் .அந்த ஆளுக்கு எழுத தெரியாது.பக்கத்தில் இருந்தவர் எழுதி கொடுக்க அதன் மேல் எழுதி பழகி ,15 நாட்கள் விடாமல் எழுதினான். எழுத எழுத சக்தி  நிறைய வந்தது .
எலுமிச்சம் பழத்தை கையில் வைத்து மந்திரம் சொன்னால் திருடு போன பொருட்கள் இருக்குமிடம், திருடர்கள் யார் யார் என்றுகூறிவிடுவானாம்.எலுமிச்சம் பழத்தை கையில்வதால் மேலே ஏறி இறங்குமாம் .ஒவ்வொரு நாளும் எலுமிச்சை பழம் விற்பவரிடம் சென்று இலவசமாக வாங்கி விடுவான் .பழம் விற்ப்பவரும் சுவாமிகளிடம் வது செல்பவர் .ஒரு முறை பழம் கிராக்கி மார்க்கெட்டில் எங்கும் கிடைக்கவில்லை .
அந்த நேரத்தில் பழம் நிறைய கேட்கும் கையில் சிறிது மட்டும் எடுத்து செல்லுமாறு கூறினார் கடைக்காரர் .நான் மந்திரம் போட்டால் உனது கடை என்ன ஆகும் தெரியுமா என்று பயமுறுத்தினான் அந்த ஆள் .அதற்கு பழ கடைக்காரர் உன் மந்திரத்தை எல்லாம் வேறு யாரிடம்மாவது வைத்து கொள் நான் அப்பா பைத்தியம் சுவாமிகளை பயபக்தியுடன் கும்பிடுகிறேன்,அவர் இருக்கும் போது என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார் .
அதற்கு அவன் நான் எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்து மந்திரம் போட்டால் சுவாமியையே இங்கு வரவழைப்பேன் என்று ஆணவமாக கூறினான்.அன்று இரவு அவன் மேற்க்கு தலை வைத்து கிழக்கு கால் நீட்டி  படுத்துறங்கும் போது விடியற்காலை 3 . 30 மணிக்கு ஒரு பெண் குழந்தை அருகில் நின்று கொண்டு இருந்தது,அக்குழந்தை அருகில் பீமன் போல் ஒரு ஆள் இருந்தார் ,அவரிடம் ஏறி மிதித்து கொல் என்றது குழந்தை.அந்த ஆள் ஏற மந்திரவாதி அலறினான் .
அப்போது சுவாமி அங்கு வந்து அவனை விட்டு விடுங்கள் பாவம், அந்த புத்தியை நீங்கள் தானே கொடுத்தீர்கள் என்றார். பின் யாவரும் மறைந்து   விட்டார்கள்  . விடிந்ததும்  சுவாமிகளை தேடி ஓடி வந்து மன்னிப்பு கேட்டான் .

சுவாமிகளிடம் எதாவது சாப்பிடுங்கள் என்றான்,வேண்டாம் என்று கூறினார் சுவாமிகள் .கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினான் .எனது வயிறுக்கு யாரும் சாப்பாடு போட முடியாது என்றார் சுவாமி ,நான் போடுகிறேன் என்றான் மந்திரவாதி .அங்குள்ள செட்டியார் கடையில் 159 இட்லி ,15 பக்கெட் சாம்பார், சட்னி ,18 ரவா தோசை ,உப்புமா எடுத்து வந்தனர் .சுவாமிகள் தனது கைகளால் பிசைந்து சாப்பிட்டார் .செம்பு செம்பாக காபி, ஒரு சொட்டு கூட மீதி வைக்கவில்லை .அப்படி இருந்தும் சுவாமிகளுக்கு பசி நீங்கவில்லை .மறுபடியும் மன்னிப்பு கேட்டான்,எல்லாம் காலி,கொடுப்பதற்கு எதுவும் இல்லை .பசியை ஏன் உண்டாக்கினீர்கள் என்றார் சுவாமி,இத்தனைக்கும் வயிறு ஒட்டித்தான் இருந்தது .சாயந்தரம் ஏழு மணிக்கு தண்ணீர் குடித்தவுடன் தான் பசி அடங்கியது .சுவாமி சாப்பிட்டாரா?பூதம் சாப்பிடதா ? என்றனர் அனைவரும் .பூதமல்ல என்றார் சுவாமிகள் .தாயின் வயிற்றின் அகலம், ஆழம் தெரிந்தவன் தான் எனக்கு வயிறு பூரா சாப்பாடு போட முடியும் என்றார் சுவாமி. 


 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஒருமுறை ஒரு ஊரில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்தார்கள் . அம்மன் சிலைக்கு கீழ் யந்திரம் வைக்க வேண்டும்,இந்திரஸ்தாபனம் தங்கத்தில் இருந்தால் விசேஷம் என்றார்கள் .கொடுக்கூர் ரெட்டியார் அம்மா தங்கம் தருவதாக கூறினார்கள் .சுவாமி வேண்டாம் என்று கூறி சில செப்பு தகடு துண்டுகளை எடுத்து வர சொன்னார் ,அவர்களும் எடுத்து வந்தார்கள் .அதை ஒரு ஜாடியில் போட்டு தலைமாட்டில் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வருமாறு சொன்னார்.இந்த ஒரு வார காலத்தில் சுவாமிகள் அதில் எச்சிலை துப்பி கொண்டு இருந்தார் .மறு வாரம் ஆட்கள் வந்தனர் அச் செப்பு  தகடு துண்டுகளை  கொடுத்து உருக்கச் சொன்னார் .உருக்கி பார்த்தால் செப்பு சொக்கத் தங்கமாகி இருந்தது .அதை எடுத்து சுவாமிகள் தெய்வ திருப்பணிக்கு முழுவதும் உபயோகப்படுத்த வேண்டும் ,மேலும் இது சொக்கத்தங்கம் ,சந்தேகப்பட்டு இதை பரிசோதிக்க கூடாது என்றார் .
சுவாமிகள் சொன்னதை மீறி அவர்கள் பரிசோதனை செய்தனர் .சொக்கத்தங்கம் என்று உறுதியானது .பின்னர் அவர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகினர் .
சுவாமிகளிடம் வந்து அழுதனர் .

சுவாமிகள் தங்கத்தை பரிசோதனை செய்தாயா?என்னை பரிசோதனை செய்தாயா?என்று கேட்டார் .