திங்கள், 31 ஜனவரி, 2011

காசிக்கு போனால் பாவம் போகுமா ?

ஒருவன்    தன் அம்மாவை எட்டி உதைத்து அடித்து விட்டான்.அவனது குருநாதர் பெற்ற
தாயை அடிக்க கூடாது நீ அடித்துவிட்டாய் அது பெரிய பாவம், அந்த பாவம் போக காசிக்கு
சென்று ஒன்பது முழுக்கு முழுக்கு போட்டால் தான் பாவம் போகும் என்றார். காசிக்கு போக
காசு இல்லையே என்று அவன் கூற குரு பிச்சை எடுத்தாவது போ என்றார்.
ஒரு நாள் சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை பசி மிகுதியால் ஒரு வீட்டில் களைபாருகையில்
அந்த வீட்டின் மாடத்தில் கொட்டை பாக்கு இருந்தது அதை எடுத்து வாயில் போட்டு மென்றான்.
கொட்டை பாக்கு மெல்லும் சத்தத்தை கேட்டு அவ் வீட்டு பெண்மணி நான் தீட்டு  ஆன
நேரத்தில் வீட்டிற்குள் பாக்கை எடுத்து செல்ல கூடாது என்று மாடத்தில் வைத்து விட்டு
சென்றேன் அதைபோய்  சாப்பிடீர்களே என்றாள்.அதை கேட்டு அவன் தலையில் அடித்து
கொண்டு ஒரு பாவத்தை பாவத்தை போக்க காசிக்கு செல்கையில் இன்னொரு பாவம் வந்து
ஒட்டி கொண்டதே என்று கவலைப்பட்டான்.
இனி எங்கு சென்றாலும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்தான் .மீண்டும் காசி
நோக்கி  பயணத்தை தொடர்ந்தான். அன்று இரவு ஒரு வீட்டிற்கு சென்று தங்கினான். அவ் வீட்டு
பெண்மணி என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க அவன் எந்த பால இருந்தாலும் பரவாயில்லை
என்று கூறினான் .அவளும் பக்கத்துக்கு வீட்டில் கிண்ணம் கடன் வாங்கி கிண்ணத்தில் பாலை
ஊற்றி  அவனுக்கு கொடுத்தாள். அவனும் குடித்து இன்று எந்த பாவமும் செய்யவில்லை என்று
நினைத்து நிம்மதியாக தூங்கினான். மறுநாள் அதிகாலை பக்கத்துக்கு வீட்டுக்காரன் எனது
சவரக்கின்னத்தை கொடுங்கள் நான் பக்கத்துக்கு ஊருக்கு சவரம் செய்ய செல்ல வேண்டும்
என்றான். நான் பால் குடித்த கிண்ணம் சவரக்கின்னம் என்றால் நான் குடித்த பால் என்ன பால்
என்று கேட்க ? நீங்கள் இருக்கும் வீடு வண்ணான் வீடு அந்த வீட்டு கழுதை கன்று ஈர்ந்து
உள்ளது.தாங்கள் குடித்த பால் கழுதைப்பால் அவர்கள் வீட்டில் பாத்திரம் இல்லாததால்
என்னிடம் வந்து சவரம் செய்யும் கிண்ணத்தை கேட்க நான் கொடுத்தேன் என்று  நாவிதன்
கூறினான்.இதை கேட்டவுடன் தலையில் அடித்துக்கொண்டு ஒரு பாவத்தை போக்கலாம்
என்று காசிநோக்கி வந்தால் வரிசையாக பாவங்கள் வருகிறதே என்று காசி நோக்கி அழுது
கொண்டே சென்றான் .

இன்னொரு ஊரில் ஒரு நாவிதனின் தந்தை இறந்து போனார்அவன் அங்குள்ள
பிராமணர்களிடம் நீங்கள் என்ன செய்வீர்களோ  ஏது  செய்வீர்களோ  தெரியாது எவ்வளவு
பணம் செலவானாலும் பரவாயில்லை எனது தந்தை உயிரோடு வரவேண்டும் என்றான்.
அவர்களும் சவத்தை கொளுத்தி சாம்பலை வைத்து யாகம் செய்தார்கள்.பின்னர் இந்த
சாம்பலை  ஒரு பெரிய பானையில் போட்டு அவன் தலை மேல் வைத்து காசிக்கு சென்று
அங்குள்ள ஆற்றில் தொபுகடீர் என்று போட்டு உடைக்க உன் தந்தை உயிரோடு வருவார்
என்றனர்.
இவனும் தலையில் வைத்துகொண்டு காசிக்கு வந்தான்.அம்மாவை எட்டி உதைத்தவன்
ஆற்றில்   மூக்கை பிடித்து மூழ்கி கொண்டு இருந்தான் அப்போது நாவிதன் அவன் தலையில்
பானையை போட்டான்.பானை உடைந்து அவன் தலை தெரிந்தது. ஐயர்களை வைத்து பூஜை
செய்ததால்   அப்பா  ஐய்யர் ஆகவே வந்துவிட்டார் என்று நினைத்து அவனை அவனது
ஊருக்கு கூட்டி சென்று  நீ எனக்கு சிறு வயதில் ஊட்டி விட்டாய் இப்போது நான் ஊட்டி
விடுகிறேன் என்று மாமிச உணவுகளை வாயில் திணித்தான். விட்டால் போதும் என்று
அவன் ஊரை   நோக்கி ஓட்டம் விட்டான்.திரும்பும் வழியில் நம் சுவாமிகளை போல் ஒருவரை
எட்டி உதைத்தால் அதற்கு ஏன் காசிக்கு செல்ல வேண்டும் அம்மாவை நிற்க வைத்து மூன்று
முறை  சுற்று  சுற்றி காலில் விழுந்து தாயிடம் மன்னிப்பு கேட்டால் போதுமே என்று
கூறினாராம்   அவனும் அவ்வாறே செய்தானாம்.

கதையின் கருத்து : செய்த தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது.
காசிக்கு போனாலும் பாவம் போகாது .   

 










 
 




































 
 

வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.

கல் உப்பு
பருப்பு வகைகள் இரண்டு
சர்க்கரை ஒரு படி
தவிடு
சாணம்
கோமியம்

( சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் முன் அல்லது கத்தரி முடிந்த பின் போகலாம் )  



ஊமை பேச / திக்கு வாய் விலக

கீழாநெல்லியை அரைத்து தலையில் தேய்த்து, ஹயகாந்த செந்தூரம் அரிசி எடை தேனில் கலந்து சாப்பிடவேண்டும். சிகப்பு நாயுருவி தழையை  அரைத்து  வெள்ளாட்டு பாலில் சாப்பிட்டு வந்தால் ஊமையும் பேசுவான் ,திக்கு வாயும் குணமாகும்.      

விரதம்

செவ்வாய் கிழமை விரதம்,சோமவார விரதம்,பௌர்ணமி விரதம்,சஷ்டி விரதம்
இவ்விரதங்களுக்கு காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்யவேண்டும்.
இந்தநாட்களில் சிலமணி நேரமாகிலும் திருஅருட்பா,நடராஜர் பத்து படிக்க வேண்டும் .
உப்பில்லாமல் மூன்று வேளையும் சாப்பிடலாம்.
பாசி பருப்பை வேகவைத்து,அதில் வெல்லம் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
பாசி பருப்பு வெந்த பின்  வடிகட்டி பருப்பை சாப்பிடலாம்.
பச்சைபயிர்  பாயசம் சாப்பிடலாம். இரவு இனிப்பு சேர்த்த சிற்றுண்டியை சாப்பிடலாம்.
அவலை சுத்தம் செய்து பாலில் ஊற வைத்து சர்க்கரை போட்டு சாப்பிடலாம்  .
அவலை உப்புமா போல் செய்து சாப்பிடலாம்.
பௌர்ணமி விரத நாளில் காலையில் குளித்து பூஜை செய்யவேண்டும். காலையில் பாலும் பிற்பகல்  பழமும் இரவு இனிப்புடன் கூடிய சிற்றுண்டியும் சாப்பிடலாம்.
கந்த சஷ்டி விரதம் ஆரம்ப  நாள் முதல் ஒரேவேளைகடவுளுக்கு படைத்துவிட்டு  உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் ,கடைசி நாளில் சர்க்கரை பொங்கல் ,பஞ்சாமிர்தம் செய்து படைத்து கும்பிடவேண்டும்.
திங்கள் கிழமை  துறவிகளுக்கு சிறப்பானது .சாதாரண குடும்பத்தாரர்களும் சோம வார விரதம் இருக்கலாம்.
பாசி பருப்பு அரைப்படி வேகவைத்து வெல்லம் போட்டு சாப்பிட்டால் சஷ்டி விரதத்திற்கும் எல்லா விரதங்களுக்கும் சிரேஷ்டமானது.பாலில் அவல் போட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.   பாசி பருப்பு வேகவைத்து வடிகட்டி பனைவெல்லம் தட்டி சேர்த்து சாப்பிடலாம். 








துளசி

வீட்டில் துளசி வேர் ,துளசி மாலை வைத்து இருந்தால் காத்து சேஷ்டை அண்டாது .
இலக்ஷ்மி கடாட்சம் உண்டு .துளசிமணி கையில் இருந்தால் நல்லது.
மந்திரம் சூன்யம் ஒன்றும் செய்யாது .




தாய் தகப்பனார்க்கு கடைசி காலத்தில் நாம் செய்ய வேண்டியவை

பெற்றோர்களுக்கு வயதான காலத்தில் மகனும் மருமகளும் அவர்களை  நன்கு கவனித்து கொள்ள வேண்டும்.வராதே ,செய்யாதே என்று அவர்கள் கூறினாலும் கணவன் மனைவி இருவரும் நீங்கள் என்னை பெற்றதற்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை, எங்களுக்கு கட்டை தான் உரிமை உங்கள் சொத்துக்கள் அல்ல என்று சொல்லிக்கொண்டே பணிவிடைகள், சேவைகள் செய்ய வேண்டும் .

வியாழன், 20 ஜனவரி, 2011

வீட்டில் வைக்க கூடாத மரங்கள்

 அசோக மரம் 
எட்டி மரம் 
அழிஞ்சி மரம்
இலவம் பஞ்சி மரம் 
உதய மரம் 

இவைகள் வீட்டில் வைக்கபடாது .குடும்பத்திற்கு நல்லதல்ல. மரம் அழியும்போது குடும்பமும் அழிந்துவிடும். பினால் கஷ்டம் வரும் .

அண்டை கரையான் கூடு கட்டிக்கொண்டாலும்,வெள்ளை எருக்கன் வளர்ந்தாலும் குடும்பத்தை பாழாக்கும் .

வேதாள வண்டு வீட்டிற்குள் வந்தால் கட்டிடம் பாழ் .


           

வெள்ளி, 14 ஜனவரி, 2011

துறவி

எவனாய் இருந்தாலும் சரி,குருவாய் இருந்து நாலு சிஷ்யர்களை வைத்து  இருந்தாலும் சரி,கை நீட்டி காசு வாங்கினாலும் சரி,அவன் துறவி கிடையாது,சாமியார் கிடையாது அவன் சம்சாரியே.நான் எனது என்று சொல்லாதவன் எவனோ அவனே துறவி.ஈ முதல் எறும்பு வரை சகல ஜீவ ராசிகளையும் சரிபாவமாக நினைக்க வேண்டும்,அத்துடன் பத்தியம் என்பது கூடாது.பத்தியம் என்றால் ஜாதி மதம் வித்தியாசம் பார்த்தல், உயர்வு தாழ்வு பார்த்தல் அதை தொட்டால் தீட்டு இதை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது.  

வியாழன், 13 ஜனவரி, 2011

வயது அதிகம் ஆகி திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் ஆக

வயது  அதிகம் ஆகி திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் ஆக சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட்டு தனியாக இருக்கும் பிள்ளையாருக்கு
( வீதியிலோ,குளக்கரையிலோ,ஆற்றங்கரையிலோ உள்ள பிள்ளையார் ) அகல் விளக்கு ஏற்றி கற்பூரம் கொளுத்தி வலது கை பக்கம் ஒன்பது சுற்றும் இடது கை பக்கம் பத்து சுற்றும் ( சக்திக்கு ஒரு சுற்று கூடுதலாக ) சுற்றிவிட்டு பிள்ளையார் தலையில் மூன்று கொட்டுக்கள் கொட்டி விட்டு ( நீ தான் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறாய் எனக்கு நல்லபடியாக நல்ல குணமுள்ளவனை மணம் முடித்துவை)   வணங்க வேண்டும். நெய்வேத்தியம் பனைவெல்லம் அல்லது வெல்லம் அதன் மேல் நெய் கொஞ்சம் ஊற்றி வைக்க வேண்டும். விக்னம் அற விநாயகனை தொழு.உமா மகேஸ்வரி தன் பிள்ளைகளை கொண்டே மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நீக்குகிறார்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆக

திருமணம் ஆகாதவர்களும், பிள்ளைபேறு இல்லாதவர்களும்  நான்கு வெள்ளிகிழமை சுமங்கலிக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டி சாப்பாடு போட்டு சாப்பிட்ட இலைகளை குறை உள்ளவர்களே எடுக்கவேண்டும்.  

கூடாத கல்யாணத்தை கூட்டுவிப்பது

  இடது கை பக்கமுள்ள கோயில் உண்டியலில் கல்யாணம் ஆகாத பேத்தியின் கழுத்தில் தாத்தாவே தாலி கட்டி பின் தாலியை உண்டியலில் போட வேண்டும். அப்படி செய்தால் கூடாத கல்யாணமும் கூடும்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

துறவி

எவனாக இருந்தாலும் சரி, குருவாயிருந்து நாலு சிஷ்யர்களை வைத்திருந்தாலும் சரி,அவன் துறவி கிடையாது , சாமியார் கிடையாது அவன் சம்சாரியே.நான் எனது என்று சொல்லாதவன் எவனோ அவனே துறவி. ஈ முதல் எறும்பு வரை சகல ஜீவ ராசிகளையும் சரிபாவமாக நினைக்க வேண்டும் அத்துடன் பத்தியம் என்பது கூடாது. ஜாதி மதம் வித்தியாசம்  பார்த்தல்,உயர்வு தாழ்வு பார்த்தல்,அதை தொட்டால் தீட்டு இதை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கி வைத்தல் கூடாது .    

மந்திரம்

 மந்திரம் கரும காண்டம். நம்மையும் உலகத்தையும் படைத்த தாயை மந்திரம் செய்து தன் கட்டுபாட்டில் கொண்டு வந்து எவ்வளவு வேலை மந்திரவாதி வாங்குகிறானோ அந்த பாவமெல்லாம் போகாது. எத்தனையோ பேர்களுக்கு அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று அவனிடம் காசு வாங்கும் போது அது பாதிக்கும். அந்த காசை வேறு ஒருவரிடம் கொடுக்கும் போது  அவனையும் பாதிக்கும் .

பத்மாசுரனின் தாய் எவ்வளவோ துறவிகளிடம் வரம் பெற்று தவம் செய்து பத்மாசுரனை பெற்றார். அவனும் வாங்கிய வரங்கள் பத்தாது என்று மேலும் வரங்கள் வாங்க பிரியப்பட்டு ஈஸ்வரனை குறித்து கடுந்தவம் செய்தான். ஈஸ்வரன் இவனுக்கு வரங்கள் கொடுக்க கூடாது என்று மறைந்தே இருந்தார். ஆனால் பத்மாசுரனின் கடும் தவத்தால் ஈஸ்வரனுக்கு பதிலாக சக்தி தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல், என் சந்தேகங்களை நீக்கு என்றான்.
உன் சந்தேகங்களை நீக்க ஈஸ்வரன் தான் பதில் சொல்ல முடியும் என்று சக்தி சொல்ல , அவன் அவரையே வரச்சொல் என்று கூறி மீண்டும் தவம் செய்தான். அதனால் வேறு வழியின்றி ஈஸ்வரனும் வேறு வழியின்றி காட்சி கொடுத்து என்ன வேண்டும் என்று கேட்க " நான் யார் தலை மீது கை வைத்தாலும் அவன் உடன் தீ பற்றி எறியவேண்டும் என்று கேட்டான்" ஈஸ்வரனும் வரம் அளித்தார். வரத்தை பரிசோதனை செய்ய நினைத்த பத்மாசுரன் ஈஸ்வரன் தலையிலே கை வக்க சென்றான். ஈஸ்வரன் ஓட பத்மாசுரனும் விடாமல் துரத்த இதனை பார்த்து கொண்டு இருந்த சக்தி அழகிய வடிவத்துடன் அசுரனில்  பின்னால் ஓடினாளாம். பின்னே யாரோ வருவதை அறிந்த அசுரன் சற்று நின்று திரும்பி பார்த்தானாம். அந்த சமயம் ஈஸ்வரன் அரளி மரத்தின் பின்னால்  மறைந்து வேர் வழியாக புகுந்து அரளி பூவாகி இருந்தார். அசுரன் திரும்பி பார்த்ததும் சக்தி மறைந்து போனாள்.அசுரனும் அங்கேயே ஒரு மரத்தின் கீழ் படுத்து கொண்டு எப்படியும் ஈஸ்வரன் தாம் உண்பதற்கு படி அளிக்க வரவேண்டும் அப்போது பார்த்து கொள்வோம் என எதுவும் உண்ணாமல் இருந்தான்.
இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த மகாவிஷ்ணு முன்பு சக்தி அழகிய வடிவம் கொண்டு வந்தது போல் அதே வடிவம் கொண்டு உருமாறி பத்மாசுரனின் முன் தோன்றி னாராம்.அந்த அழகியை கண்டு பத்மாசுரன் அவள் மீது மோகம் கொண்டு தன்னை மணக்கும் படி கேட்டான், அதற்கு அவளும் சரி என்று கூற,அசுரன் தன் பின்னால் வரும்படி கூறினான்.அதற்கு அவள் எங்கே என்னை கூட்டி செல்கிறாய் என்று கேட்க அவன் என் தாய் பந்துக்களிடம் அழைத்து செல்கிறேன் என்றான்.சரி நான் உன் பின்னே வரவேண்டும் என்றால் நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் என்றாள். அவன் என்ன சத்தியம் செய்து தர வேண்டும் என்று கேட்க அவள் "இதோ இங்கு ஓடும் ஆற்றில் மூழ்கி எழுந்து உன்கையால் இந்த பூமி மீது அடித்து உன் தலை மீது கை வைத்து எந்த நாளும் என்னை கை விட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்" என்றாள். அதற்கு அசுரன் ஒப்புக்கொண்டு அப்படியே செய்ய எரிந்து மாய்ந்து போனான்.பின் ஈஸ்வரன் வெளிவர அழகிய பெண் வடிவத்தில் இருந்த மகாவிஷ்ணுவை கண்டதும் அவர்மீது சந்தோசம் உண்டாக ஈஸ்வரனிடமிருந்து விந்து ஒரு துளி வெளி வர அதனை மகாவிஷ்ணுவும்  ஈஸ்வரனும் சேர்ந்து எடுக்க அந்த விந்துஒரு குழந்தையாக மாறியது. அக்குழந்தையே கையப்பன் பின் மெய்யப்பன் பின் ஐயப்பன் பின் மணிகண்டன் என நான்கு பெயர்களை கொண்ட ஐயப்பன் தோன்றினான் . இதுவே ஐய்யப்பன் கதை .

வரம் கொடுத்த ஈஸ்வரன் தலையிலே கை வைப்பது போல நம்மை படைத்த சக்தியையே வேலை வாங்குவது பாவமல்லவா அதெல்லாம் எங்கு போகும் என்றார். ஒருவனுடைய கஷ்டத்தை போக்க காசு வாங்காமல் செய்யும் வரை ஒன்றும் பாதிக்காது. காசு வாங்கும் போது அதனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

சனி, 8 ஜனவரி, 2011

உரல் உலக்கை

அந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உரல், உலக்கை,அம்மி, அம்மிக்கல் இருக்கும்.அதன் மகத்துவமே தனி. அம்மிகல்லையும் உரலையும் சேர்த்து சிவலிங்கமாகவே வீட்டில் வழிபட்டு வந்தார்கள். வீட்டில் புழங்கப்பட்டு  வந்த உரல் அம்மியை கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்பனை செய்ய மாட்டார்கள். வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அதனையும் சேர்த்துதான் வழி படுவார்கள். இப்படி புழக்கத்தில் இருந்து வந்த அம்மி அம்மிக்கல் உரல் உலக்கை இவைகளை திருடுவதற்கு அந்தக்காலத்தில் ஆள் வைப்பார்களாம். அதை திருடிக்கொண்டு போய் வீட்டில் வைத்தால் அன்றில் இருந்து அவனுக்கு நல்ல காலம் உண்டாகி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்று கூறினார். இந்தக்காலத்தில் உரல் உலக்கை அம்மி அம்மிக்கல் இவைகளில் அக்கறை கொள்வதில்லை.புழக்கத்தில் இருக்கும் உரல் உலக்கை அம்மி அம்மிக்கல் விசேஷ மகத்துவம் வாய்ந்தது என அருளுரைத்தார் .    

சிவன்

ஒரு  நாள் சுவாமிகளிடம் சிவன் என்ற நிலை முன்கூட்டியா  ?  சக்தி என்ற நிலை முன்கூட்டியா? என்று கேட்டதற்கு இது என்னடா இது கோழி முன்னையா முட்டை முன்னையா என்று கேட்பது போல் இருக்கிறது.இரண்டும் ஒன்றுதானடா என்று கூறினார்.
சிவன் ஞான நிலை , சக்தி இயக்க நிலை என்றும் கூறினார்.

சிவன்

சிவன் உலகத்தை படைக்கும் போது முதலில் பிரம்மனை படைத்து படைப்பு தொழிலை செய்யும்படியாகவும், இரண்டாவதாக நாரதரை படைத்து உலகில் சம்பவங்களும் அதனை தொடர்ந்து உலகம் இயங்கிகொண்டு இருக்கவும்,உலகத்தில் கலகங்கள் செய்து கொண்டிருக்கும் படியாகவும். மூன்றாவது இயமனை படைத்து உலகில் உள்ள ஜீவன்களின் உயிரை பறித்து கொண்டு வரும்படியாகவும். நான்காவது மஹா விஷ்ணுவை படைத்து காத்தல் தொழில் முதற்கொண்டு மேலே சொல்லப்பட்ட மூன்று பேர்களின் தொழில் நீங்கலாக பாக்கி உள்ள எல்லாவற்றையும் நீயே கவனித்து பரிபாலனம் செய், நீயே நான், நானே நீ என அருள் பாலித்தார்.   

பிரண்டை

பிரண்டையில் இரண்டு விதம் உண்டு. மூன்று பக்கம் உள்ள பிரண்டை ஆண் பிரண்டை என்றும் நான்கு பக்கம் உள்ள பிரண்டை பெண் பிரண்டை.ஆண் பிரண்டை கிடைக்காது ,சக்தி வாய்ந்தது என்றும் அதனை காயவைத்து இட்லி போடி போல் மிளகு  சேர்த்து பொடி செய்து வைத்து வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள அனைவரும் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும் .

தாது புஷ்டி

தாமரை கொட்டையுடன் ,கடுக்காய்,காய்ந்த சுக்கு இரண்டையும் வறுத்து தூள் செய்து சாப்பிட வேண்டும் .
தாமரை  கொட்டை தினமும் சாப்பிட்டு வர உடம்பு இரும்பு போல் ஆகும் .

குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு

ஒரு வண்டி ஓட்டுனர்  கல்யாணமாகி சிலவருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று சுவாமிகளிடம் கூறினார் .அதற்கு சுவாமிகள்அவரது மனைவியை  இலந்தை இலை ஓர் கைப்பிடி, பூண்டு 5 பல் , மிளகு 5 , தூரமான நாள் முதல் 15 நாட்கள்  வரை தொடர்ந்து 3 தூரங்கள் சாப்பிடுமாறு கூறினார். 5 வாரம் வெள்ளிகிழமைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு இலையில் வெல்லம் எள் பிடித்து வைக்க வேண்டும் என்றார்.

அவர்களும் சுவாமிகள் கூறியது போல் செய்ய அழகான குழந்தை பிறந்தது .

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சிக்கு ஒரு புது பானையில் கல் சுண்ணாம்பு போட்டு அதில் தண்ணீர் விட்டு ஒரு கல் உரலின் மேல் வைத்தால் ஓரிரு நாட்களில் சுண்ணாம்பு நீர் உரலில் இறங்கியிருக்கும். அந்த நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துகொண்டு தினப்படி சாப்பிட்டு வர எல்லாவிதமான நரம்பு தளர்சிகளும் நீங்கும்     

மலச்சிக்கல்

 மலச்சிக்கலுக்கு தினப்படி காலையில் நீராகாரத்தில் எலுமிச்சை பழ சாறு விட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

வயிற்று புண்

வயிற்று புண்ணுக்கு அம்மான் பச்சரிசி தழையை அரைத்து பாலுடன் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டுவர குணமாகும்.நோணான்தழையை பாலுடன் அரைத்தும் சாப்பிடலாம்.  

வெள்ளி, 7 ஜனவரி, 2011

கண்பார்வை மந்தமாக இருப்பது குணமாக

கீழாநெல்லி செடியை பிடுங்கி சீரகத்துடன் அரைத்து சாப்பிட கண் பார்வை நன்றாக தெரியும் .

கார் ஓட்டுவது

ஒரு நாள்  சுவாமிகள் கார் ஓட்டுனரிடம் என்னை போல் கார் ஒட்டுவாயா?  மணிக்கு 100௦௦ கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓடும் போதும் நிற்க வைத்த ஒரு ரூபாய் கீழே விழாமல் ஓட்டுவேன் நீ ஓட்டுவாயா என்றார் .ஒரு டம்பளர் முழுவதும் நீர் ஊற்றி காரில் வைத்து கார் ஓட்டும் போது ஒரு சொட்டு நீர் கூட கீழே சிந்தாமல் ஒட்டவேண்டும் என்று கூறினார் .      

இரத்த அழுத்தம் ( Blood pressure ) கால்களில் கண்டாய் சதை நரம்புகள் ( தொடை ) சுருட்டு ,ரத்த நாள சுருட்டுகள் நீங்க

 அரிசி திப்பிலியை வறுத்து தூள் செய்து ஒரு சிட்டிகை, சிரங்கை அளவு முருங்கை இலையுடன் 45 நாட்கள் சாப்பிட்டு வர கால் வலி ரத்த நாள சுருட்டு தீரும்.

இதய நோய் ( heart attack )

இதய நோய்க்கு அருகம்புல் வேருடன் பிடுங்கி அரைத்து கொடுக்க தீரும்.

எல்லாவகை விஷங்களுக்கு

 நஞ்சு முறிச்சான் கொடி ( பாலைக் கொடி ) ,வெள்ளை பூனை காஞ்சொறி,தரைதும்பை,நொச்சி இலை யாவும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு கொடுக்க தீரும். மூன்று நாட்கள் பத்தியம் இருக்க வேண்டும் .

எடை குறைய

 ஒரு அம்மையாருக்கு கால்கள்  நடக்கும் போது மரத்து விடும்.அதற்கு என்ன செய்வது என்று கேட்க சுவாமிகள் உடல் எடையை குறைத்தால் சரியாகிவிடும் என்று கூறி உடல் எடையை குறைக்கவும்,எடையால் ஏற்படும் ரத்தநாளங்கள் இருக்கம் நரம்புகள் இருக்கம் நீங்க " கிராம்பை லேசாக வறுத்து தூள் செய்து ஒரு சிட்டிகை வீதம் 45 நாட்கள் சாப்பிட குணமாகும் என்றார் .
ஒரு சிலருக்கு கிராம்பை வாயில் போட்டு சாப்பிடும் போது வாய் புண்ணாகிவிடும் .மருந்து கடைகளில் காலி மருந்து குப்பி ( empty capsules ) வாங்கி அதில் போட்டு சாப்பிடலாம் .
வெளிக்கு மிகுதியாக சென்றால் கிராம்பு அளவை குறைத்து சாப்பிடவேண்டும் என்றும் கூறினார் .  

காசு வாங்காதே

காசு வாங்காதே
சுவாமிகள் மருத்துவர்களிடம் வைத்தியம் பார்த்தால் நோயாளிகளிடம் காசு வாங்ககூடாது என்பார். நோயாளிகள் பிரியப்பட்டு கொடுப்பதையே   வாங்கிக்கொள்ளவேண்டும் என்பார் .

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி .
ஒரு வைத்தியருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. அவர் சுவாமிகளிடம் சர்க்கரை வியாதிக்கு மருந்து கேட்க சுவாமிகள் " மிளகு 200௦௦ கிராம் ஆடு தின்னா பாளை 800 கிராம் இரண்டையும் நன்றாக அரைத்து பயரளவு மாத்திரை செய்து வேளைக்கு இரண்டு அல்லது மூன்று மாத்திரை சாப்பிட  தீரும் என்றார்.

 

வயிற்று வலி நீங்க

வாழைத்தண்டு களை ( நூல் எடுத்தது ) ஒரு பாத்திரத்தில் துண்டு துண்டுகளாக நறுக்கி நீர் ஊற்றி ஒரு குச்சி அல்லது கரண்டியால் துண்டுகளை கிளற வாழை தண்டில் உள்ள நூல்கள் எல்லாம் குச்சியில் சுற்றி கொள்ளும்.பின்பு நீரை கீழே ஊற்றி மோரில் ஊறவைத்து சாப்பிட வயிறு வலி நீங்கும்   

இடுப்பு வலி

ஒரு 25 வயது உள்ள  அன்பருக்கு சில மாதங்களாக இடுப்பு வலி இருந்து வந்தது . அவர் சுவாமிகளிடம் வந்து தனக்கு நடு இடுப்பில் சுருக் சுருக் என்று குத்துவது போல் வலி உள்ளது என்றார், மாத்திரை மருந்துகள் சாப்பிடும் பலன் இல்லை, மருத்துவர்கள் எலும்பு தேய்ந்து உள்ளது என்கிறார்கள் என்று கூறினார்.
அதற்கு சுவாமிகள் "மிளகை லேசாக நெய் விட்டுவறுத்து  அரைத்து தூள் செய்து திரிகடிகை பிரமானம் மூன்று வேளை சாப்பிட சொன்னார்.
சுவாமிகள் கூறிபடி அவரும் மிளகை நெய் விட்டு வறுத்து அரைத்து மூன்று  நாட்கள் சாப்பிட்டார்.சாப்பிட்டவுடன் அவரின் இடுப்பு வலி மிகவும் அதிகமாகி விட்டது.முதலில் அவருக்கு  ஏன் மிளகை சாப்பிட்டோம் என்றாகிவிட்டது. சுவாமிகள் கூறியதை நம்பிக்கையுடன் ஒழுங்காக செய்யவேண்டும்,என்னவானாலும் பரவாயில்லை என்று அவர் சுவாமிகளை மனமார நினைத்து தொடர்ந்து சாப்பிட்டார். ஒரே வாரத்தில் இடுப்பு வலி எப்படடி போனது என்று தெரியவில்லை. அதன் பிறகு அவருக்கு அந்த இடுப்பு வலி வரவேயில்லை. எல்லாம் ஸ்ரீலஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகளின் திருவருள்.  

தோஷங்கள் விலக

சுவாமிகளின் திருஉருவ படத்தை வைத்து கொண்டு மனதார அவரை எப்போதும் நினைத்துகொண்டு அவர் கூறியுள்ள படி அன்னதானமும் ,தர்மங்களையும் , அவர் அறிவுரைகளின்  படி நடந்து வந்தால் எந்த தோஷமும் நம்மை அண்டாது.

பல் கூசுதல் நீங்க

உப்பு,பிரண்டை,நிலகடம்பை இலை உலர்த்தி இடித்து தூள் செய்து,இவைகளை கருக வறுத்து தூள் செய்து பல் விளக்கவும்.


பித்தம் விலக

கொத்தமல்லியை பொன் நிறமாக வறுத்து தூள் செய்து பனைவெல்லம் போட்டு காபி சாப்பிடவும். சுக்கும் கொத்தமல்லியுடன் சேர்க்கலாம்.


பேசாத குழந்தையை பேச வைக்க

சிகப்பு நாயுருவி தழையை அரைத்து சுண்டக்காய் அளவு கொடுத்துவர வேண்டும்.
சிகப்பு நாயுருவி தழையை  காயவைத்து தூள் செய்து  தேனில் கலந்து கொடுக்கவும்.

பேய் பிடித்து இருப்பது விலக

திப்பிலி,மிளகு,சைவத்தரோசனம்,கோரோசனம் இவற்றை தூள் செய்து தேன் விட்டு குழைத்து புகை போட்டு வந்தால் பேய் பிசாசு விலகிவிடும்.

பேதி நிற்க

ஆவாரம் தழையை அரைத்து கொடுத்தால் பேதி ஆவது நிற்கும்.
பூண்டு தழையினை கற்பூரவள்ளி தழை சாற்றுடன் கொடுத்தாலும் நிற்கும்.
மூங்கில் தழை, மூங்கில் குச்சியை உரசி உருண்டைகளாக்கி கொடுத்தால் நிற்காத பேதியும் நிற்கும்.

  

பேன் நீங்க

கீழா நெல்லி தழையை அரைத்து தலையில் ( சீக்காய் தேய்ப்பது போல் ) தேய்த்து பத்து நிமிடம் கழித்து குளித்தால் பேன் நீங்கும் .
புங்கோட்டை    எண்ணையை தலையில்  தேய்க்கவும் .




பேதியாக

காணாங்கோழி தழையையும், கற்பூரவள்ளி தழையையும்,கடலை மாவு கரைத்து உள்ளே வைத்து பஜ்ஜி போல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். காணாங்கோழி தழையையும் பாசிப்பருப்புடன் வேக வைத்து கடந்து சாப்பிட்டால் வயிறு வலியும்,மலச்சிக்கலும் நீங்கும்.
கன்றுக்குட்டிக்கும் கொடுக்கலாம்.

பெரிய வியாதி அதிகமாவதை தடுக்க

வெள்ளை வெற்றிலையில் சுண்ணாம்பு சேர்த்து பாகு சாப்பிட்டால் அதிகபடுத்தாது.


பெரிய நோய் நீங்க

மருதாணி தழையை ஆடு மேய்வது போல் கையில் தொடாமல் வாயினால் தின்று, தன் சிறுநீரை தானே குடித்து வந்தால் நீங்கும் .


பெண்கள் வயிறு வலி ,நமச்சல்,மூலச்சூடு நீங்க

அம்மான்பச்சரிசியை கழுவி சும்மாவே சாப்பிட்டால் வயிறு வலி நீங்கும்.

சிறுமிகள் உயரமாக வளர

காலையில் ஐந்து மணிக்கு ஒரு டம்பளர் தண்ணீர் குடித்து விட்டு கை கால்களை உதறி வந்தால் உயரமாக வளர்வார்கள்.காலையில் தண்ணீரில் தேன் ஊற்றி சாப்பிடுவது நல்லது .


பூச்சை கொட்டை

பூச்சை கொட்டையை தலைக்கு தேய்த்து குளித்தால் குளிர்ச்சி.


பூச்சி கடிக்கு

தும்பை இலையையும்,மிளகையும் சேர்த்து நன்றாக ஓட்ட ஓட்ட அரைத்து மூன்று கோலிக்குண்டுகளாக சாப்பிட்டால் பூச்சி கடியினால் ஏற்பட்ட விஷம் சரியாகும் .நாக்கில் படாமல் மருந்தினை உள்நாக்கில் வைத்து விழுங்க வேண்டும்.


பூரான் கடி

முருங்கை கொழுந்தை கசக்கி மிளகுடன் சேர்த்து உள்ளுக்கு சாப்பிடவும்.இலையை கடிவாயில் தேய்க்கவும். உப்பில்ல பத்தியம்.


 

புட்டத்தில் சிரங்கு

ஆமணக்கு எண்ணையில் எருக்கன் பால் சேர்த்து (கிண்ணத்தில் எருக்கன் பால் பிடிக்கவும் )காலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து குளித்தால் காயாத புண்ணும் காய்ந்து விடும்.

சிரங்கிற்கு விளகெண்ணை (ஆமணக்கு எண்ணை ) அதிகமாகவும்,எருக்கன் பால் குறைவாகவும் இருக்க வேண்டும்.

காயாத படைக்கு எருக்கன் பால் அதிகமாகவும்,ஆமணக்கு எண்ணை குறைவாகவும் இருக்க வேண்டும்.    


புற்று நோய் விலக

சிகப்பு சித்திரமூல குச்சி ( செஞ்சியில் உள்ளது ) மிளகு,சுக்கு தட்டி போட்டு நான்கு அல்லது ஐந்து சொம்பு தண்ணீர்  ஊற்றி காய்ச்சி ஒரு சொம்பு ஆக குறைந்த பின் இரசம் போல் சாப்பிடவும்.


பீமசேனன் ஆக

பருத்தி கொட்டையை காலையில் ஊறவைத்து மறுநாள் எடுத்து ஆட்டுகல்லில் விட்டு அரைத்து பால் எடுத்து பசும்பால் சேர்த்து, பனைவெல்லம் ,சீரகம்,மிளகு போட்டு காய்ச்சி குடித்தால் ரத்தம் விருத்தியாகும் .தினமும் குடிப்பவன் பீமசேனன் ஆவான் .

பருத்தி கொட்டை பாலில் முழு கடலையும்  சேர்த்து காலையில் உணவாக சாப்பிட்டால் ௬௩ வயது தாத்தாவிற்கும் பீமசேனனாக பிள்ளை பிறப்பான் .

 

 

பித்தம் நீங்க

முருங்கைப் பூ, மிளகு,கற்பூர துண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

நொச்சி சாற்றில் 108 மிளகுகளை ஒரு நாள் ஊற வைத்து ,இரண்டாவது நாள் உத்தாமணி சாற்றில் அதே மிளகுகளை ஊற வைத்து,தழுதாளி சாற்றில் மூன்றாவது நாளில் ஊற வைத்து பிறகு தூள் செய்து சாப்பிட்டால் பித்தம் யாவும் களைந்து விடும்.

 இரவு உப்பை குடி நீரில் அதிகம் போட்டு வைத்து காலையில் எழுந்தவுடன் உப்பு கரைச்சலை
குடிக்க வாந்தி வரும், வாந்தி எடுக்கவும் அதில் பித்தமும் வெளி வரும்.


பாதங்களில் பாளம்பாளமாக உள்ள வெடிப்புகள் நீங்க

நிலக்கடம்பையுடன் மிளகு சிறிது சேர்த்து அரைத்து கச்சக்காய் அளவு காலையில் சாப்பிடவேண்டும்.பிரண்டையுடன் புளி சேர்த்து தொக்கு செய்து சாபிடவேண்டும் .
குறைந்தது முப்பது நாட்கள் சாப்பிட வேண்டும் .வெள்ளை வேட்டையும் போக்கும் .
நிலக்கடம்பை குளிர்ச்சி,பிரண்டை குளிர்ச்சி பசியை உண்டுபண்ணும்,எலுமிச்சை பலம் சூடு உடம்புகாரர்க்கு,புளி குளிர்ச்சி உடம்புகாரர்க்கு.

 











































































   

பவளம் கரைய

சுத்தமான தேனில் சுத்தமான உயர்ந்த ரக பவளத்தை துண்டுகளாக்கி கிண்ணத்தில் போட்டு அடுப்பில் வைத்தால் பவளம் கரைந்து போகும்.


புதன், 5 ஜனவரி, 2011

படைகள் விலக

ஆடுதின்னா பாளை சாறு ஒரு படி, வேப்பம் எண்ணை ஒரு படி, மிளகு இரண்டரை பலம், கிராம்பு ஒரு பலம்.மிளகு கிராம்பு இரண்டையும் நைசாக தூள் செய்து கொள்ளவும்.ஒரே மரத்தின் குச்சியால் எரித்து காய்ச்ச வேண்டும்.துணியை திரியாக வைத்து அதில் தோய்த்து அதனை விளக்கில் எரித்தால் சிடுசிடுப்பு இருக்காமல் வரை காய்ச்சி பதமாக வரும்போது இறக்கி பக்குவப் படுத்தி படையின் மேல் தடவ வேண்டும்.


 

தொப்புள் சுற்றி வலி ,சாப்பிட்டால் வாந்தி வருவது நிற்க

சிறு செருப்பு படை தழை சாறு, யானை லத்தி சாறு சமமாக எடுத்து நான்கு நாட்கள் பூமியில் புதைத்து ஐந்தாம் நாள் எடுத்து சாப்பிட்டால் தொப்புள் சுற்றி வலி ,சாப்பிட்டால் வாந்தி வருவது நின்றுவிடும்.

தேன் சுத்தமானதா என்று கண்டு பிடிக்க

சுத்தமான தேனை பாட்டிலில் ஊற்றி மூடி வெயிலில் வைத்தால் பாட்டில் உடைந்துவிடும்.
சுத்தமான தேனுடன் தண்ணீரை சேர்த்து குலுக்கினால் அடியில் திப்பி இல்லாமல் கரைந்துவிடும்.

தேள்கடி

மொளகா பூண்டு பாலை கடிவாயில் வைத்தால் கடிவலி நீங்கும்.
சங்கு தழையை அரைத்து கொடுக்கவும்.
முள்ளை எடுத்து விட்டு வெற்றிலையுடன் கொடுத்தால் விஷம் இறங்கும்.
காட்டாமணக்கு செடியின் பாலை தேள்கடி வாயில் போட்டால் விஷம் நீங்கும்,மரத்து விடும்.
வேளைத்தழையை கசக்கி சாற்றை  வலது கை பக்கத்தில் கடித்தால் இடது காதில் விடவும்,இடது கை பக்கத்தில் கடித்தால் வலது காதில் விட்டால் விஷம் இறங்கும்.
நாகதாளி மரத்தின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து சந்தனம் போல் இழைத்து கொடுத்தால் தேள்,பாம்பு விஷம் இறங்கும்.

   

செவ்வாய், 4 ஜனவரி, 2011

பல்வலி குறைய

நிலக்கடம்பு,மிளகு,பிரண்டை,உப்பு காய வைத்து சட்டியில் வறுத்து கரியாக்கி தூள் செய்து அதை கொண்டு தினமும் பல் விளக்கி கொண்டுவந்தால் பல் சுத்தமாக இருக்கும்.பல்லில் பூச்சி இருந்தாலும் எடுத்துவிடும்.



தூரமாகுதல் அதிகம் போதல் குணமாக

பூங்காவி அரைத்து நெல்லிக்காய் கந்தகம் 1/10 இரண்டையும் அரைத்து வெண்ணையில் சேர்த்து கொடுக்கவும்.

திருஷ்டி

பெரிய படிகாரத்தை கம்பளி கயிற்றால் கட்டி தொங்க விடவும்.
பாத ரசம் ஒரு பாட்டிலில்  வைத்திருக்கவும்.  

தீராத நோய்கள் விலக

ஆணுக்கு பெண்ணின் சிறுநீரும், பெண்ணிற்கு ஆணின் சிறுநீரும் அமிர்தமாய் சாப்பிட்டால் நோய் இல்லை .

தித்திப்பு நீர் குறைய

மிளகு தூள், ஆடுதின்னா  பாளை தழையை சேர்த்து அரைத்து உருண்டையாக்கி சாப்பிடவும்.

தாது புஷ்ட்டி

தாமரை கொட்டையை இடித்து பால் சேர்த்து சாப்பிடவும்.அணு குறைவாக இருந்தாலும் அதிகமாகும்.

தலை குடைச்சல் விலக

வெள்ளை வேளை கீரையை நசுக்கி சாறு எடுத்து விட்டு  சக்கையை குடைச்சல் உள்ள இடத்தில் கட்டவேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இருமுறையாவது செய்யவேண்டும்.
பத்து நாட்கள் செய்ய தலை குடைச்சல் நீங்கும்.

தலை குத்தல்

ஓம உப்பு அரிசி அளவு இரவு தண்ணீரில் போட்டு காலையில் தண்ணீரை சாப்பிட்டால் உடல் வாய்வு குத்தல் நீங்கும் .

 

நெஞ்சு வலி இருமல் விலக

சின்ன வெங்காயத்தை எள் எண்ணையில் மஞ்சள் தூள்,மிளகு தூள் போட்டு வதக்கி ஐந்து நாட்கள் சாப்பிடவும். அரைத்து ஊறுகாய் போலவும் சாப்பிடவும்.

நீர் அழிவு வியாதி விலக

வெள்ளை அருகையும்,மிளகையும் சேர்த்து அரைத்து காலையில் கச்சக்காய் அளவு மூன்று நாட்கள் ஒரு வேளை  சாப்பிடவும். கடுமையான பத்தியம் உப்பு இல்லாமல் இருக்கவேண்டும் . வெள்ளை அருகவேர் மிகவும் சிறந்தது,கிடைக்கவில்லை என்றால் தழையை பயன்படுத்தவும்.


திங்கள், 3 ஜனவரி, 2011

நெற்றியில் குங்குமம் வைத்த இடம் கருப்பாக இருப்பது மறைய

துளசி இலையை பத்துநாட்கள் கருப்பான இடத்தின் மேல் தேய்க்கவும் .வில்வ பட்டையை சந்தனம் போல் அரைத்து அதன் மேல் வைத்து வர விலகும் .

நாய்க்கடி

வீட்டு நாய் கடித்தால் நாய் வளர்ப்பவர் வீட்டில் சோற்று தண்ணீரில் உப்பு போட்டு கடிபட்டவன் குடித்தால் விஷம் இறங்கும் . தெரு நாய் கடித்தால் தெருவில் உள்ள வீடுகளில்  சோற்று தண்ணீரில் உப்பு போட்டு கடிபட்டவன் குடித்தால் விஷம் இறங்கும்.
நாயுருவி தழையை அரைத்து கடிவாயில் தேய்த்து  செப்பு காசை அதன் மேல் வைத்து மறுபடியும் நாயுருவி தழையை அரைத்து வைத்து கட்டி விட்டு எட்டு மணி நேரம் கழித்து அவிழ்க்கவும்.  

நரிகட்டிக் கொண்டது கரைய

நன்னாரியை அரைத்து பாலில் சேர்த்து நான்கு நாட்கள் சாப்பிடவும் .

நரம்பு பலமில்லாமல் இருப்பவர்களுக்கு

கசி வேந்தா சமு தோலை வெண்ணையில் கலந்து மேலுக்கு தடவி வந்தால் நரம்பு பலம் பெரும் .

 

காசநோய் விலக ( T B )

கண்டங்கத்தரிக்காயைவெட்டி மண்பாண்டத்தில் போட்டு வெள்ளாட்டு கோமியத்தில் ஊற வைத்து, காய வைத்து எரித்து பவுடர் செய்து சாப்பிடவேண்டும்.    

சூதக சமயத்தில் ரத்தபோக்கு எட்டுநாட்கள் வந்தால் விலக

அருகம்புல்லை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிடவேண்டும்

மருத்துவம் சிரங்கு விலக

குப்பைமேனி தழையுடன் உப்பையும் சேர்த்து அரைத்து சிரங்கின் மேல் போட்டால் விலகும். 

மருத்துவம் சளி நீங்க

தும்பை இலையை ஐந்து மிளகுடன் அரைத்து சாப்பிட்டால் எப்பேர்பட்ட சளியும் நீங்கும்

மருத்துவம் சர்க்கரை வியாதி விலக

சிறுகுறிஞ்சானை பவுடர் ஆக்கி தேங்காய் பாலில் கலந்து விடாமல் நான்கு மாதங்கள் சாப்பிட வேண்டும் .
சிறுகுறிஞ்சான், காட்டு சீரகம் சேர்த்து சாப்பிட்டாலும் ,
ஆடுதொடாபாளை ( ஆடு தின்னா பாளை ) யை அரைத்து சுண்டக்காய் அளவு காலையில் சாப்பிட்டு  வந்தாலும் சர்க்கரை வியாதி நீங்கும்.               

மருத்துவம் சளி கட்டுவது நீங்க


முருங்கைப் பூ , மூன்று பூண்டு பள்ளு , மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிடவும்

மருத்துவம் கோமக்கொனை கட்டி


கும்ணா செடியின் வேர் பட்டையை கொண்டு  வந்து சுத்தம் செய்து தூள் செய்யவும் . ஒரு படி எள்ளு மாவும் ஐந்து பெரிய பனைவெல்ல கட்டியும் சேர்த்து இடித்து ஆறு உருண்டைகளாக செய்து ஒரு உருண்டை தர்மம் செய்யவும் மீதி உருண்டைகளை தினம் ஒன்று சாப்பிட்டு வரவும்.

விலை மதிக்க முடியாத சொத்து

விலை மதிக்க  முடியாத  சொத்து படிப்பு ஒன்றுதான் 

புண்ணியம்



நாம் கெட்டது செய்யாமல் இருந்தால் அதுவே புண்ணியம்   

எட்டு வகை பூக்கள்


பூக்கள் 
அலரி
பாதிரி
புன்னை
செந்தாமரை
குவளை
வெள்ளெருக்கு
சண்பகம்
நந்தியா வர்த்தம்

மனதில் மலர்கின்ற எட்டுவகை பூக்கள்

கொல்லாமை
புலனடக்கம்
சாந்தம்
அன்பு
தியானம்
தவம் ( சகிப்புதன்மை )
சத்தியம்
மெய்யறிவு


திருமூலர் கூறுவது

கொல்லாமை
பொய்யாமை
விருப்பு இல்லாமை
வெறுப்பு இல்லாமை
கள்ளுன்னாமை
ஆசையின்மை
சாந்தம்
கொடை குணம்
முதலிய தீர்த்தங்கள் உள்ளன . இத் தீர்த்தங்களில் மூழ்கினால் வினைகள் யாவும் கெட்டொழியும் 









இடம்புரி வலம்புரி

இடம்புரி - இடது பக்கம் துதிக்கை வளைந்து துதிக்கை வாயின் நுனி வலது பக்கம் பார்த்து கொண்டு இருக்கும் .

வலம்புரி
வலது  பக்கம் துதிக்கை வளைந்து துதிக்கை வாயின் நுனி இடது  பக்கம் பார்த்து கொண்டு இருக்கும் .

வீட்டுக்கு ---------- இடம்புரி விநாயகர்
கோயிலுக்கு -------வலம்புரி விநாயகர்

யானைக்கு கோபம் வந்தால் வலது பக்கம் ஆட்டும்