புதன், 27 ஜூலை, 2011

ஒருமுறை தெலுங்கில் காண்டம் புத்தகம் ஒன்றை படித்தார்கள். அதில் துறவியிடம் அன்பை பெறுவது முக்கியம்,துறவி என்றால் தனக்கென்று ஒரு பொருள் வைத்திருக்க கூடாது, உயிர் அணுக்கள் யார் தலையில் வைத்து இருக்கிறார்களோ, அவர்களே துறவி,குறிஞ்சிப்பூ 12  வருடங்களுக்கு ஒரு முறை பூப்பது போல் 12 வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்படும் என்றும்,அச்சத்தை தவிர்த்து இருப்பவரே துறவி என்று இருந்தது .
இது போன்று யார் உள்ளார்கள் , நம் சுவாமிகள் தான் உள்ளார்கள், வேறு யாருமில்லை என்று பேசிக்கொண்டார்கள்.இதை ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த அந்த வீட்டு பெண்கள் இருவரும் சுவாமியின் கால்களை கெட்டியாக பிடித்து கொண்டு சுவாமிகளின் கைகளால் தாலி கட்டுமாறு கேட்டனர்.அதற்கு சுவாமி சிரித்து கொண்டே கொட்டாங்குச்சியில் கட்டுகிறேன் ,வயதான காலத்தில் காட்டிற்கு சென்று விட்டால் ஒருத்தியை நண்டு பிடித்து வா என்று கூறலாம்,ஒருத்தியை நரி பிடித்துவா என்று கூறலாம் என்றார் . பிறகு எனக்கு இது வேண்டும்,அது வேண்டும் என்றால் நான் எங்கே போவது,பிறகு என் தாடியை பிடித்து இழுப்பீர்கள்  என்றார்.  நான் இரண்டு முடிச்சு தான் போடுவேன் மூன்றாவது முடிச்சு உனது கணவன் தான் வந்து போடுவான் என்றார் . அது முதல் கல்யாணம் ஆகாத பெண்கள் தாலி காட்டுங்கள் என்பார்களாம்.சுவாமிகளின் கையால் தாலி கட்டினால் நல்ல கணவன் கிடைப்பான் என்று அடம்பிடித்து கட்டி செல்வார்கள் , சுவாமிகளும் ரசமணியை கழுத்தில் போட்டு விடுவார் .
 சுவாமிகள் கொடுக்கூரில் இருந்த போது, ஒரு பெரியவருக்கு உடல் நலம் மோசமானவுடன் கூடி வந்தார்கள் .

சாகிற நேரத்தில் சங்கரா போட்டால் பிழைக்க முடியுமா ? 
தர்மம் ஏதும் செய்யவில்லை , புண்ணியமும் ஏதும் செய்யவில்லை ?
எப்படி பிழைக்க வைப்பது  என்று கூறி அனுப்பி விட்டார் . 
ஒரு ஊரில் ஒரு பெரியவருக்கு உடல் நலமில்லாமல் இருந்தது .மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள். சுவாமிகளிடம் கூடி வந்தனர் .எங்கள் ஊர் ஜோசியர் மிகவும் திறமை வாய்ந்தவர்,எங்கள் மகனின் ஜாதகத்தை கணிக்கும்  போது குழந்தையின் தகப்பனுக்கு ஆயுள் 80 வயது வரை கெட்டி என்று கூறியுள்ளார் .மேலும் பையனுக்கு இத்தனை வயது நடக்கும் போது வயல்,பம்ப் செட் ,வீடு அமையும் என்றார் அது போலவே நடந்தது . இப்போது இவருக்கு வயது 60 தான் ஆகிறது ,நீங்கள் மனது வைத்தால் குணமாக்கலாம் என்றார்கள் .அந்த ஆள் சுவாமிகள் அருகில் இருக்கும் போது நன்றாக இருக்கிறார் , அந்த பக்கம் தூக்கி கொண்டு செல்லுங்கள் என்று சுவாமிகள் கூற வெளியே தூக்கி சென்றால் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சுவாமிக்கு தெரிந்து விட்டது ,இவனது ஆயுள் முடிந்து விட்டது  என்று. ஜோசியர் போட்ட கணக்கு தான் என்னவென்று தெரியவில்லை .பின்பு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த பெண்ணிடம் உண்மையைச் சொல் உன் கணவனுக்கு மட்டும் முந்தி விரித்தாயா ? மற்றவர்களுக்கும் விரித்தாயா ? என்று கேட்க ,அப் பெண் என்னுடைய அத்தை பசங்களுடன் மணம் முடித்தபிறகு கூட உறவு வைத்து கொண்டு இருந்தேன் என்று கூறினாள். அப்போது சுவாமிகள் கூறினார் ஜோசியர் கூறியது உண்மை,உன் பிள்ளை இவனுக்கு பிறக்கவில்லை , உன் அத்தை பையனுக்கு தான் பிறந்துள்ளான், அவனுக்குதான் ஆயுசு கெட்டி ,இவனுக்கல்ல என்று கூறி தூக்கி செல்லுமாறு  கூறினார்.சுவாமிகள் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது .
ஒரு முறை சுவாமிகளிடம் ஒரு ஜோசியர் வந்திருந்தார்,அப்போது பல்லி ஒன்று கத்தியது .உடனே அவர் சுவாமிகளிடம் நாளை தங்களிடம் வரும் ஒருவருக்கு உயிர் போகப்போகிறது என்று பல்லி சொல்லுகிறது என்றான் .அதற்கு சுவாமிகள்  என்னை நம்பி வருபவனுக்கு எந்த ஆபத்தும் வராது ,அவன் உயிரும் போகாது , முதலில் நாளை அந்த பல்லி உயிரோடு உள்ளதா பார் என்று கூறினார் .எனது ஜோசியம் இதுவரை பொய்த்ததில்லை,என்றான் ஜோசியர் .நாளை வாடா
பார்க்கலாம் என்றார் சுவாமிகள் .
மறுநாள் ஜோசியர் காலையில் வந்தான் ,ஜோசியர் கூறியபடியே, உடல் நலம் சரியில்லாமல் ஒருவர் வந்தார் ,அவருடன் வந்தவர்கள் உடல் நலம் மோசமாக உள்ளது ,மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர் ,நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அழுதனர். சுவாமிகள் கவலை படவேண்டாம் என்று கூறி திருநீறு கொடுத்தார்.உடல் நலம் சரி இல்லாமல் இருந்தவர் பத்து நிமிடத்தில் எழுந்து உட்கார்ந்தார் .அனைவரும் சந்தோஷப்பட்டனர்.திடீரென மேலே உள்ள கூரையில் சத்தம் கேட்டது.சுவாமிகள் மேலே என்ன சத்தம் ஒரு குச்சியை வைத்து தட்டுங்கள் என்றார்  .மேலே உள்ள கூரையை தட்ட ஒரு பாம்பு கீழே விழுந்தது. பாம்பு வாயில் பல்லி இருந்தது,என்ன ஜோசியரே என்று சுவாமி கேட்க, ஜோசியர் எதுவும்  கூறவில்லை .

ஒரு ஆளிடம் சுவாமிகள் உன் வீட்டில் ஏதேனும் சினையாக உள்ளதா என்று கேட்டார் . நாய் மட்டும் சினையாக உள்ளது என்றார் அவர் .நாய் குட்டி போடும் போது ஒரு குட்டியை  மையால் குறியிட்டு நேரத்தை குறித்து கொள்,பிறகு உனக்கு பேரனோ,பேத்தியோ பிறந்து இருப்பதாக கூறி ஜோசியரிடம் ஜாதகம் கணிக்கச்சொல் என்றார் .அவ்விதமே அவர் ஜோசியரிடம் சொல்ல ஜோசியர் ஜாதகம் கணித்து என்ன என்னவோ எழுதி கொடுத்து ஆயுள் 80 என்று கணித்தார் .பிரக்ஹு தான் நாய் என்று சொன்னார்கள் .நாயிக்கு ஆயுள் 80 தாடா என்று கேட்டார் சுவாமிகள்?


    
ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தார் .அவர்  கோயில் ஒன்று கட்ட விரும்பி  வேலையை ஆரம்பித்தார், கட்டும் போது பயங்கர வறுமையை அடைந்தார்.கடன் மிகுதியானது,வீடு மற்றும் நிலங்களை வைத்து கடன் வாங்கியதால் குறிப்பிட்ட நாளில்  மீட்க முடியவில்லை, கடன் கொடுத்தவர்கள் ஜப்தி செய்ய வந்தனர் .இனி உயிரோடு இருப்பது என்ன பயன் எங்கேயாவது சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று காட்டிற்கு சென்றார் .அப்போது சுவாமிகள் ஒரு பாறையின் மேல் அமர்ந்து இருந்தார்.பணக்காரனை கூப்பிட்டு எங்கே போகிறாய் என்றார்? பணக்காரன் நடந்தவற்றை எல்லாம் கூறினார் .
சுவாமிகள் நான் எது கூறினாலும் செய்கிறாயா என்று கேட்டார் .பணக்காரன் நீங்கள் எது சொன்னாலும் செய்கிறேன் என்று கூறினார் . பின்பு அவரிடம் சுவாமிகள் அவரிடம் உனக்கு 45 நாட்கள் நேரம் சரியில்லை,எனவே பக்கத்தில் உள்ள சேரிக்கு சென்று தோட்டி வேலை செய் என்றார். அவரும் அது போல் சுவாமிகள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கௌரவம் பார்க்காமல் தோட்டி வேலை செய்தார் . 25 நாட்கள் ஆனது அன்று குப்பையை கொட்டும் போது குப்பை தொட்டியில் ரூபாய் 10000 துணியில் சுற்றி இருந்தது கிடைத்தது .அதை எடுத்து பத்திரப்படுத்தி மேலும் 20 நாட்கள் தோட்டி வேலையை செய்தார்.45 நாட்கள் ஆனவுடன் சுவாமிகளிடம் அப்பணத்தை எடுத்து சென்றார் .சுவாமிகள் அப்பணத்தை கொண்டு கடன்களை எல்லாம் அடைத்து விடு என்றார் . அவரும் கடன்களை அடைத்து வீடு மற்றும் நிலங்களை மீட்டார் .மீண்டும் அவர் சுவாமிகளை வந்து தரிசனம் செய்து நிலத்தில் என்ன பயிரிடுவது என்று கேட்டார். மறுபடியும் சுவாமி நான் எது கூறினாலும் செய்வாயா என்று அவரிடமுள்ள நோஞ்சான் மாடு இரண்டு தருமாறு கேட்டான் ,வசதி வந்தவுடன் பணம் கொடுப்பதாக கூறினான் . ஜமீன்  வேலையாளை கூப்பிட்டு இருப்பதிலேயே நல்ல மாடு இரண்டும் ,ஒரு வண்டியும் பூட்டி கொடு ,என்றார் திருப்பி தர தேவை இல்லை  என்றார். விட்டுக்கு திரும்பும் வழியில் குப்பையில்  போட இருந்த மூன்று மூட்டை கொத்தமல்லியை ஒரு விவசாயி மாட்டு  வண்டியில் போட்டான்.பணக்காரன் சுவாமிகள் கூறிய படி வெங்காயத்தையும் நடுநடுவே கொத்தமல்லியும் விதைதான்  .எல்லோரும் கேலி செய்தனர் ,இவர்  சுவாமிகள் கூறியதை வேத வாக்காக நினைத்து பயிரிட்டார். தீடீரென்று வெங்காயம் விலையும்,கொத்தமல்லி விலையும் எக்கசக்கமாக ஏறி விட்டது .நிலத்தில் உள்ளவற்றை அறுவடைக்கு முன்னமே விலை பேசி வாங்க பொடி போட்டனர்.நல்ல விலைக்கு விற்று பழைய நிலைமையை அடைந்தார் பணக்காரன் .சுவாமிகளிடம் வந்து கோவில் கட்டுவது குறித்து கேட்க சுவாமிகள் எல்லோரிடமும் சிறிது பணம் வாங்கி கட்டு ,தனியாக செய்யாதே என்று அறிவுரை கூறினார் .

எப்படி பணக்காரன் பழைய நிலைமையை அடைந்தார்?

முதலில் சுவாமிகள் ஆசீர்வாதம் ,
இரெண்டாவது சுவாமிகள் மேல் அவர் கொண்ட நம்பிக்கை ,
மூன்றாவது கௌரவம் பார்க்காமல் சுவாமிகள் சொன்னதை வேத வாக்காக ஏற்று நடந்தது .
 

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஒருமுறை பணக்கார பையனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.சித்தபிரமையை யாரிடம் அழைத்து சென்றாலும் சரி செய்ய முடியவில்லை.சுவாமிகளிடம்  அழைத்து வந்தார்கள்.நான் சொல்வது போல் செய்வீர்களா என்று சுவாமிகள் கேட்டார்.செய்கிறோம் என்று அவர்கள் கூற,ஒன்றுமில்லை இரு விலை மாதர்களை கூப்பிட்டு இவனையும் தனி அறையில் விட்டு விடுங்கள் என்றார் .
அதே போல் அவர்கள் இருவரை அழைத்து வந்து தனி அறையில் விட்டனர்.
அவர்கள் அவனிடம் சல்லாபம் செய்ய விந்து வெளியானது , விந்து வெளியானதும் அவன் சித்தபிரமையும் விலகியது. பழைய நிலைமையை அடைந்தான் . காரணம் விந்து தலைக்கு ஏறி இருந்தது,அதை விடுவித்தவுடன் சரியாகி விட்டது என்று சுவாமிகள் கூறினார்.
மந்திரவாதிகளில் மலையாளிகள் திறமை வாய்ந்தவர்கள்.ஒரு பெண் ஆணை பார்த்து அவனை அடைய ஆசைப்பட்டால் இரண்டு வகையான வேர்கள் எடுத்து மந்திரம் கூறினால் ஆண்  அந்த பெண்ணுக்கு அடிமையாகி விடுவானாம்.அப்படி ஒருவனுக்கு செய்துவிட்டார்கள் , அவனை அவளிடமிருந்து பிரித்து சங்கிலியால் கட்டி போட்டு வைத்து இருந்தனர்.அவன் பைத்தியம் போல் இருந்தான். எங்கே சென்றாலும் சரியாகவில்லை,பின் சுவாமிகளிடம் அழைத்து வந்தனர் .சுவாமி எட்டி ஒரு உதை விட்டாராம்,பின்புதான் அவனுக்கு சரியாகியதாம்.சிலநாட்கள் கழித்து சரியாகி விட்டதா இல்லையா என்று பரிசோதிக்க மற்றொரு மலையாளியிடம் காண்பிக்க அவன் மறுபடியும் வைத்துவிட்டானாம்.மறுபடியும் சுவாமிகளிடம் அழைத்து வந்து காண்பிக்க சுவாமிகள் சரி செய்து திட்டி அனுப்பினார். 
மந்திரத்தில் நல்லதும் உள்ளது ,கெட்டதும் உள்ளது

திங்கள், 25 ஜூலை, 2011

மருந்தும் நான் அறியேன் மந்திரமும் நான் அறியேன்

ஒருவருக்கு குளிர் ஜுரம் இரண்டு பேர் அமுக்கினாலும் நடுக்கம் நிற்கவில்லை .இருபது நாட்களாக அப்படியே இருந்தது .சுவாமிகளிடம் அழைத்து வந்தார்கள் .சுவாமிகள் அருகில் இருந்த ஆளிடம் செங்கலை தூள் செய்து ஐந்து பொட்டலங்களாக எடுத்து வர சொன்னார். ஒரு பொட்டலத்தை தண்ணீரில் போட்டு  குடிக்க சொன்னார். மதியம் இன்னொரு பொட்டலம்  சாப்பிட்டார் .மீதி மூன்று பொட்டலங்களை பீரோவில் வைத்து விட்டனர் .இரண்டு வேளை மருந்து சாப்பிட்டதில் முற்றிலும் குணமாகி விட்டது .மறுநாள் சுவாமிகளிடம் வந்து அருமையான மருந்து கொடுத்தீர்கள் என்று கூறினார்கள். நான் எங்கே மருந்து கொடுத்தேன் செங்கல் தூள் தான் கொடுத்தேன் என்றார் சுவாமிகள் .அவர்கள் நம்பவில்லை மீதி தூளை எடுத்து பார் என்று கூறினார்கள் சுவாமிகள் .

 அதே  போல் ஒரு ஜோசியருக்கு TB ஜுரம் மருத்துவ மனைக்கு செல்ல பணம் இல்லை சுவாமியிடம் அழைத்து வந்தார்கள். அச்சமயம் சுவாமிகள் எங்கோ வெளியே சென்று இருந்தார்,தாழ்வாரத்தில் படுக்க வைத்து இருந்தார்கள் .சுவாமிகள் இரவு பத்து மணிக்குதான் வந்தார் ,ஜோசியரை தூக்கினால் கூட எழுந்திருக்க முடியவில்லை . பெரு விரலால் மண்ணை எடுத்து பல் பொடியுடன் கலந்து வாயில் போட்டு இரண்டு குவளை ரசம் குடிக்க சொன்னார்.
பிறகு உடனே சரியாகி விட்டது . இது வரை அவர் நோய் என்று படுக்கவில்லை.

இது குறித்து எழுதும் போது  சுவாமிகள் என்னடா எழுதுகிறாய்? இது எல்லாம் ( வைத்தியம் எல்லாம் ) வறுமைக்கு உதவாதடா என்று கூறினார் .


  . 

ஞாயிறு, 24 ஜூலை, 2011

வடஆற்காடு  மாவட்டத்தில் நிறைய சிஷ்யர்களை வைத்து கொண்டு ஒரு ஆள், திரு அருட்பா படித்து கொண்டு இருந்தாராம் .ஒருமுறை சுவாமி என்னப்பா படிக்கிறாயே ஒரு பாடலுக்காவது அர்த்தம் தெரியுமா என்று கேட்டார் .

(பாட்டு-- பெட்டிக்குள் இருக்கும் திறவுகோல் ) 

எனக்கு அது எல்லாம் தெரியாது என்று திரு அருட்பாவை கீழே போட்டான்.அவன் கீழே போட்டதும் சுவாமிக்கு கடுமையான கோபம் வந்ததாம் .சுவாமிகள் அமர்ந்து இருந்த சாய்வு நாற்காலி நான்கு அடி உயரம் கிளம்பியதாம்.
அதன் பின் அவனை ஊர் மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர் ,பின் மிகவும் கஷ்டப்பட்டு செத்தானாம் .
வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு கோயில் கட்டி இருந்தபோது அன்னதானம் செய்ய இருந்தார்கள். எல்லோரும் அரிசி போட்டு செய்யுங்கள் என்றார் சுவாமிகள்.ஒரு பணக்காரன் நானே செய்கிறேன் என்றான்.நீ ஒருவன் மட்டும் செய்யாதே, எல்லோரும் சேர்ந்து செய்யுங்கள் அப்போதுதான் புண்ணியம் அனைவருக்கும் கிடைக்கும் என்றார் சுவாமிகள் .இறுதியில் எல்லோரும் அரிசி போட பணக்காரன் மட்டும் அரிசி போடவில்லை.எல்லோரும் சுவாமியை கும்பிட இவன் மட்டும் கும்பிடவில்லை சாமியார் என்கிறீர்களே பெரிய சாமியாரா என்றான் . சுவாமிகள் இதை கேட்டு அமைதியாக இருந்தார் .இராமலிங்க சவாமியாவது,கீமலிங்க சவாமியாவது,திரு அருட்பாவது ,இரு வருட்பாவது என்றான் . 
ராமலிங்க சுவாமிகளை பற்றியும் ,திரு அருட்பா பற்றியும் அவன் தரக்குறைவாக பேசியவுடன் சுவாமிகள் அருகில் இருந்த கரி துண்டை எடுத்து நிலத்தில் கட்டம் போட்டு ஏதோ எழுதினாராம் .அதன் பின்பு அவனுடைய சொத்து எல்லாம் போய்விட்டது .சாப்பாட்டுக்கு கூட வழியில்லை ,இப்போது பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறான் .
   

கற்பக விருட்சம்

ஒருமுறை சுவாமிகள் பர்வதமலையில் படுத்து இருந்தபோது பெரிய பூதம் ஒன்று வந்து மார்போடு அணைத்து கொண்டதாம்,பின்பு அங்கே பெரிய மரமாக காட்சி தந்ததாம் .அதுதான் கற்பகவிருட்சம்,அதுவே தாயின் சக்தி. பின்பு படுத்து கொண்டாராம் சுற்றிலும் இலைகளாக சிறு சிறு செடிகளாக இருந்ததாம் . தொட்டு பார்க்கலாம் என்று போனால் காணவில்லை, அதுவே கரும்நொச்சி  .
கற்பகவிருட்சமும் , கரும்நொச்சி யும்   இருந்தால் ரசவாதம்  தங்கம் செய்யலாம்.

திங்கள், 4 ஜூலை, 2011

சுவாமிகள் மோளாம்பாக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு அய்யரும் அவர் மனைவியும்  வந்து அழுதார்கள் ( இருவரும் தானதருமங்கள் செய்வதில் சிறந்தவர்கள்) .ஏன்அழுகிறீர்கள்  என்று சுவாமிகள் கேட்க அவர் எங்கள் குடும்பத்தில் அனைவரும் சிறு வயதில் நன்கு இருப்பார்கள் பதினாறு வயதானவுடன் கைகால்கள் விளங்குவதில்லை முடமாகிப்போகிறது .கட்டிலிலே படுத்த படுக்கையாக உள்ளார்கள் என்னவென்று தெரியவில்லை என்றார்கள் .

உண்மையிலே தெரியாதா என்று சுவாமிகள் கேட்டார்?

தெரியாது என்று அவர்கள் கூற 

உன் மூதாதையர்கள் முக்கால் பங்கு தங்கம் கால் பங்கு பஞ்சலோகத்தால் ஆன சக்தி விக்ரகத்தை   திருடி எடுத்து நாட்டுகோட்டை செட்டியார் ஆடைஆபரணங்களை யும்  விக்ரகத்தை இடுப்பு அருகே அறுத்து  பாதிப்பாதி    படையாச்சி மேல் பாகத்தையும் அய்யர் உனது பாட்டன் கீழ் உள்ளதையும் எடுத்து கொள்ளவில்லையா ?    மேலும் உனது பாட்டன் கோயில் நிலம் ஆறு காணியை அவன் பேருக்கு பட்டா செய்து கொள்ள வில்லையா?
 மூன்று மாதத்தில் அவனுக்கு பைத்தியம் பிடிக்கவில்லையா ? அவன் பெண் மேளக்காரனுடன் சிநேகிதம் வைத்து சொத்துக்காக கொலை செய்யவில்லையா? இந்த பஞ்சமா பாதகங்கள் செய்ததினால் தானடா உன் வீட்டு குடும்பத்தில் பதினாறு வயது ஆனதும் கை கால் முடங்கிபோகிறது .அம்மன் விக்ரகத்தை  பின்னப்படுதியதால் வந்தது என்று சுவாமிகள் கூறினார். ஆமாம் சுவாமி பாட்டன் காலத்தில் இது போல் நடந்தது என்று ஐய்யரும் ஒத்துகொண்டார் .

இதற்கு எல்லோரும் கூடி சாந்தம் செய்ய வேண்டும் என்றார் சுவாமி.
அதற்கு எல்லோரும் கூடி செய்வது கடினம் மற்றவர்கள் வரமாட்டார்கள் ,ஐயர்  மனைவி நாங்கள் என்ன பாவம் செய்தோம் ,எங்களுக்கு நீங்கள் தான் வழி காட்ட வேண்டும் என்று அழுதார் .பிறகுதான் சுவாமிகள் மற்றவர்கள் வரவில்லை என்றால் பரவாயில்லை உனது பிள்ளைகள் அது போல் அவஸ்தை வராமல் இருக்க வழி சொல்கிறேன் என்றார். 

பரிகாரமாக சுவாமிகள் பசுமாட்டை கன்றுடன் யாருக்காவது தானமாக கொடுக்க சொன்னார் .
ஜில்லா விட்டு ஜில்லா பிள்ளையாரை திருடி எடுத்து வந்து வழிபட சொன்னார் .
வருடம் மூன்று பேருக்கு தாலி, கூறை   சேலை வாங்கி கொடுக்க சொன்னார்.

அவர்களும் சுவாமிகள் கூறியபடி இருப்பதிலேயே நல்ல நல்ல பசுமாட்டை கன்றுடன் தானம் செய்தனர்,அவர்கள் அப்பா திருடி எடுத்து வந்த பிள்ளையாரை தான் அவர்கள் வழிபடுவதாக சொன்னார்கள், தாலியும் கூறை புடவையும் வாங்கி கொடுத்தனர் , 4000  பேருக்கு அன்னதானமும் செய்தனர் .
இப்போது சுவாமிகள் அருளால் நலமாக உள்ளனர்.




திருமணம்

தன்  பெண்ணுக்கு இருபத்திநான்கு வயதாகிறது எங்கு தேடியும் வரன் சரியாக அமையவில்லை என்று பெண்ணின் தகப்பனார் சுவாமிகளிடம் வந்து அழுதார் .சுவாமிகள் எதுவும் கூறாமல் இருந்தார் .பதினைந்து நிமிடம் கழித்து முடிந்து பொய் விட்டது போ என்றார் .தகப்பனாருக்கு எதுவும் புரியவில்லை.கடைக்கு வேலைக்கு சென்றால் வீட்டிற்க்கு முதலில் போ என்றார்கள் .வீட்டிற்க்கு செல்ல  புதியதாக மூன்று பேர் பெண் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்தார்கள் பெண் பிடித்து உள்ளது திருமணம் செய்து கொள்ள சம்மதம் நல்ல நாள் பாருங்கள் சீக்கிரம் கல்யாணம் வைத்து கொள்ளலாம் என்றனர்.
அப்போது தான் சுவாமிகள் சொன்னது அவருக்கு புரிந்ததாம் .

" அப்பா பைத்தியமே துணை"

ஒரு அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை ,கை கால் விழுந்து விட்டது .மருத்துவர்கள் அனைவரும் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர் .அவரின் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் .ஐந்து நாளில் உடல் நலம் சரியாகி விடும் என்று சுவாமிகள் கூறினார் . மறுநாள் அந்த அம்மாவிற்கு நினைவு தவறியது மீண்டும் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் ." அப்பா பைத்தியமே துணை"  என்று தொடர்ந்து தினமும்  சொல்லுங்கள்    பதினைந்து வருடங்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று சுவாமிகள் கூறினார் .

இப்போது அந்த அம்மா நன்றாக உள்ளார்கள் .

மந்திரம்

வட ஆற்காட்டில் ஒரு முறை சுவாமிகள் இருந்தபோது தினம் ஒருவர் சுவாமிகளை பார்க்க வருவார், சுவாமிகளிடம் தனக்கு மந்திரம் எதாவது சொல்லி கொடுங்கள் என்று கேட்பாராம் .சுவாமிகள் எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது போடா என்று திட்டுவாராம் .அடுத்த நாளும் வந்து  மந்திரம் எதாவது சொல்லி கொடுங்கள் என்று கேட்பாராம். தினசரி வந்து இதே போல் நச்சரிப்பார்.ஒருநாள் அவர் மந்திரம் சொல்லி கொடுங்கள் என்று கேட்க  சுவாமிகள் விளையாட்டாக ஒரு துடைப்பத்தை எடுத்து கொள் " உனக்கு வலித்தால் எனெக்கென்ன எனக்கு வலித்தால் உனக்கென்ன " என்று அடிடா எல்லாம் சரியாகி விடும் என்றார்.அவரும் அதையே சுவாமிகளை நினைத்து கொண்டு எப்போதும் சொல்லிக்கொண்டு இருந்தார் .இப்போது அவர் வட ஆற்காட்டில் பாம்பு கடி, தேள் கடி, விஷக்கடி என்று வருபவர்களுக்கு சுவாமிகளை மனதில் நினைத்துக்கொண்டு துடைப்பத்தை வைத்து அடித்து கொண்டு  " உனக்கு வலித்தால் எனெக்கென்ன எனக்கு வலித்தால் உனக்கென்ன "என்று மூன்று முறை அடிக்க விஷம் இறங்கிவிடுமாம் ,

சுவாமிகள் சும்மா விளையாட்டுக்கு சொன்னதை கெட்டியாக பிடித்து கொண்டு முழு நம்பிக்கையுடன் அவர் செய்ததால் பலித்தது . 

உழைப்பு

சில வருடங்களுக்கு முன் ஒரு ஏலேக்ட்ரிசியன் முதலியார் குடும்பத்தை சேர்ந்தவர் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்யும் போது தவறி கீழே விழுந்து இறந்து விட்டார்.அவருக்கு ஐந்து பிள்ளைகள் கணவன் இல்லாத அந்த அம்மாள் பிள்ளைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார் .குடியான் குப்பம் முதலியார்கள் எவரும் ஆதரவு தரவில்லை .சுவாமிகளிடம் வந்து அந்த அம்மாள் அழுதார்கள்.தெருவில் இட்லி சுட்டு விற்கிறீர்களா என்று கேட்டார் சுவாமி.நீங்கள் எது சொன்னாலும் செய்கிறேன் என்றார் அந்த அம்மாள். வீடு இருக்கிறது,தோடு அரை சவரன் உள்ளது ,வீட்டிற்க்கு பக்கத்தில் இடம் உள்ளது தோடை விற்று இட்லி பாத்திரம்,அரிசி பருப்பு  வாங்கி   சுவாமிகள் ஆசியுடன் இட்லி கடை ஆரம்பித்தார் .

முதலில் மூன்று  படி  அரிசி போட்டார்கள்,பாதிதான் விற்றது மீதியை பிள்ளைகள் சாப்பிட்டார்கள் .மறுநாள் மூன்று படியும் விற்று விட்டது .பிள்ளைகள் சாப்பிடகூட இட்லி இல்லை .அடுத்து காபியும் டீயும் போட்டனர்,பாத்து நாட்களில் ஆறுபடி வியாபாரம் ஆனது .பின்பு ஒரு ஆளை ஆட்டுக்கல்லில் மாவாட்ட வேலைக்கு வைத்தார்கள்.பின்பு பத்து படி விற்றது.வந்த வருமானத்தில் செலவு போக சேமித்து பக்கத்தில் உள்ள காலி இடத்தில் கடை கட்டி 250 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டனர் .பிள்ளைகளை நன்கு படிக்கவைத்தார் 16 சவரன் நகை சேர்த்து பெண்ணுக்கு திருமணம் நடத்தினார் .பதினெட்டு ஆட்கள் வேலைக்கு இருந்தனர் கூரை வீடு மெத்தை வீடாகியது.பணம் கையில் 50000 உள்ளதாக சுவாமிகளிடம்  வந்து கூறினார்கள் .

உழைப்பு தான் முன்னுக்கு வரவைத்தது ,சுவாமிகள் ஆசியால் எல்லாம் நல்லபடியாக நடந்தது .

நாஷ்டா கடையில் இலாபம் உள்ளது போல் வேறு எந்த தொழிலும் லாபம் இல்லை .மளிகை கடை ,ஹோட்டல், ஜவுளி கடை இவை வைத்து ஒருவன் முன்னுக்கு வரவில்லை என்றால் வேறு எதிலும் முன்னேற முடியாது என்று சுவாமிகள் கூறினார்          

வைதீஸ்வரன் கோயில்

ஒரு பெரிய  சித்த வைத்தியர் நோய் வந்து அவஸ்தை பட எந்த மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை,இறுதியில் எல்லா மருந்துகளையும் ( வீரம் போன்ற பாஷானங்களை) அருகில் உள்ள குளத்தில் போட்டு அதிலேயே விழுந்து உயிரை விட்டு விடலாம் என்று தலை முழுக  உடல் பரிபூரணமாக குணமானதாம் .அது தான் வைதீஸ்வரன் கோயில்.இப்போதும் அங்குள்ள மண்ணை எடுத்து சந்தனம் வீபூதியுடன் கலந்து கொடுக்கிறார்கள்.    

வெள்ளி, 1 ஜூலை, 2011

மாமியார் மருமகள் சண்டை

மாமியாரும் மருமகளும் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள் .மாமியார் செருப்பை எடுத்தால் மருமகள் துடபத்தை எடுத்துகொள்வாள் .கணவன் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான் .மாமியார் செய்தது சரி என்றால் மனைவி கோவித்துகொள்வாள்.மனைவி செய்தது சரி என்றால் மாமியார் கோவித்துகொள்வாள்.இவர்களிடம் இருப்பதை விட சாமியாராக போகலாம் என்று கணவன் முடிவு செய்தான்.சுவாமிகளை கேள்விப்பட்டு வந்தான் .சுவாமிகள் ஒருவாரம் அவன் செலவுக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொண்டு தாயிடமும் மனைவியிடமும் கோவித்து கொண்டு எங்கேயாவது சென்று உயிர் விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வர சொன்னார் அவனும் அப்படியே செய்தான் .எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று கூறி வக்கீல் வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் .
மாமியாரும் மருமகளும் ஊரில் உள்ள ஜோசியர்கள் ,சாமியார்கள் அனைவரையும் பார்த்து மகன் எப்போது வருவான்   ,கணவன் எப்போது வருவான் என்று கேட்டார்கள் .யாரும் சொல்லவில்லை .சுவாமிகளை பற்றி யாரோ கூற இருவரும் ஒன்று சேர்ந்து வந்து அழுதார்கள் .நீங்கள் இருவரும் ஒற்றுமையாக  இருந்தால் அவன் ஏன் செல்கிறான் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்படி ஒற்றுமையாக இருப்பதாக சத்தியம் செய்தால் அவனை மந்திரம் போட்டு எங்கிருந்தாலும் வரச் செய்கிறேன் என்று கூறினார் சுவாமிகள் .இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று சுவாமிகள் முன் சத்தியம்  செய்தனர் .சுவாமிகள் அருகில் இருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து மந்திரம் போடுவதுபோல் நடித்து அவர்களிடம் கொடுத்து இதை  வைத்து பூஜை செய்யுங்கள் மூன்றாவது நாள் அவன் இங்கே வந்துவிடுவான் நீங்கள் சென்று மூன்றாவது நாள் வாருங்கள் என்றார் அவர்களும் அவ்வாறே பூஜை செய்தனர் .அவர்கள் சென்ற உடன் சிறிது நேரத்தில் கணவன் சுவாமிகளை பார்க்க வந்தான் சுவாமிகள் அவனை பார்த்து ஏன்டா முண்டம் வெளியே வரவேண்டாம் என்று சொன்னேனே ஏன் வந்தாய் என்று திட்டினார் .பின் மூன்றாவது நாள் ஆளை அனுப்புவதாகவும் அப்போது வா என்று கூறினார் .வரும் போது ஒரு எலுமிச்சம் பழம்தான் என்னை கூட்டி வந்தது என்னை விடுங்கள் நான் எங்கேயாவது போகிறேன் என்று கூறி நடிக்க சொன்னார் அவனும் அப்படியே செய்தான் .அவனிடம் இருவரும் இனி சண்டை போடமாட்டோம் என்று கதறி அழுதனர்.அதற்கு  பின் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள் .கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளை பெற்று கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .      
            

துறவியின் சாபம்

சின்ன தச்சூர்  இந்த ஊரில் உள்ள வீடுகள் எல்லாம் காலையிலும் மாலையிலும் பற்றி எரியும் .எல்லோரும் தண்ணீர் ஊற்றி அணைப்பார்கள் .ஊரில் உள்ள எல்லோரும் மந்திரவாதிகள் ,சங்கராச்சாரி மற்றும் பலரையும் பார்த்தார்கள். யாராலும் சரி செய்ய முடியவில்லை .

நம் சுவாமிகள் அவ்வூர் பக்கத்தில் சென்று இருக்கையில் ஒரு சிறுவன் மடிபிச்சை வாங்கும் பொது இரண்டு தடவை வாங்கினானாம், ஏன் இருமுறை வாங்குகிறாய் பத்தாதா என்று சுவாமிகள் சிறுவனை கேட்டார் .அதற்கு அந்த சிறுவன் பின் வரும் விவரத்தை கூறினான் .

ஒரு நாள் காலையில் காவி கட்டி வந்த ஒருவர் அவ்வூர் ப்ரெசிடென்ட் வீட்டின் முன் பசிக்கிறது என்று கேட்டாராம் , அதற்கு அந்த ப்ரெசிடென்ட் அவரை திட்டி விட்டான் .அவர் கோபமுற்று எல்லாம் பத்திகிட்டு போகட்டும் என்று சொல்லி விட்டு போனார் .அன்று முதல் அவ்வூரில் உள்ள எல்லா வீடுகளும் எரிய ஆரம்பித்து விட்டது எவராலும் சரி செய்ய இயலவில்லை என்று கூறினான்.

சுவாமிகள் அவனிடம் சாபம் கொடுத்தவர் பிச்சைகாரன் அல்ல துறவி என்று கூறினார் .மடிப்பிச்சை வாங்கிய அரிசியுடன் ஊரில் உள்ள எல்லார் வீட்டிற்கும்     சென்று சிறிது அரிசி வாங்கி பிள்ளையார் கோயிலில் காஞ்சி காய்ச்சி யாவருக்கும் கொடுக்க சொன்னார் .
ஊரில் உள்ள அனைவரும் அரிசி கொடுத்தார்கள் ப்ரெசிடென்ட் மட்டும் அரிசி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டான் . சிறுவன் சுவாமிகளிடம் வந்து இது குறித்து கூற இனி உங்கள் வீடு பத்தாது எவன் வீட்டில் அவர் சொன்னாரோ அந்த வீடு மட்டும் எரியட்டும் என்று சுவாமிகள் கூறினார் .
அன்று முதல் மற்றவர்கள் வீடு எரியவில்லை ப்ரெசிடென்ட் வீடு மட்டும் பத்தி எரிந்தது .பிறகு தான் சுவாமிகளை ப்ரெசிடென்ட் தேடி வந்தான் ,சுவாமிகள் அவனை திட்டி பின் சரி செய்தார் .

சுவாமிகளை நினைத்து கும்பிட்டால் எல்லாம் சரியாகி விடும் ,அது அந்த துறவிக்கு தெரியும்,தெரிந்தவுடன் கோபம் சாந்தியாகிவிட்டது .

ஒரு துறவி கொடுத்த சாபத்தை ஒரு துறவியால் தான் மாற்றமுடியும்