சனி, 30 அக்டோபர், 2010

செடிகளில் உள்ள பூச்சிகள் விலக

செடிகளில்  உள்ள  பூச்சிகள் விலக  

ஒரு லிட்டர் உப்புக்கு இருபது லிட்டர் தண்ணீர் (1 :  20)   ஊற்றி கலந்து பூச்சி உள்ள இடத்தில் செடிகளில் தெளிக்க பூச்சிகள் மடியும் செடி செழிப்பாக விளையும் .

கருடன்

கருடன்
கருடனை பார்த்தால் மகாவிஷ்ணுவை பார்ப்பது போன்று .
கருடனை பார்த்தால் தலைக்கு மேல் இருகைகளையும் தூக்கி கும்பிடவேண்டும் .
சுவாமிகளை நினைத்து ஜபம் செய்தால் கருடன் வரும் . கருடன் வந்தால் நம் தோஷங்கள் நம்மை விட்டு விலகுவதாக அர்த்தம் . கருடபத்து படித்தால் கருடன்கள் நிறைய வரும் .



ஞானம் பெற

ஞானம் பெற 

ஒருவருக்கு ஞானம் வருவதற்கு எந்த ஆசையும் இருக்க கூடாது . தனக்கு என்று எதுவும் கேட்க கூடாது . நான் என்ற சொல் வரக்கூடாது . யாரையும் சிஷ்யன் என்று கூறக்கூடாது

துறவியின் சாபம்

துறவியின் சாபம்

துறவி சாபம் கொடுத்தால் ஊரே உருப்படாமல் போய் விடும் . சுவாமிகளை நினைத்து கும்பிட்டால் சரியாகும் .
ஒரு துறவி கொடுத்த சாபத்தை ஒரு துறவியால் தான் மாற்ற முடியும்

கஸ்தூரி

கஸ்தூரி
கஸ்தூரி ஒரு துளி வீட்டில் இருந்தாலே வீடு லட்சுமிகரமாக இருக்கும் .

கஸ்தூரி நல்லதா கெட்டதா என்று பார்க்க கஸ்தூரி யுடன்  பூண்டை நசுக்கி முகர்ந்து பார்த்தால் பூண்டு வாடை வராது .

தண்ணீரில் போட்டு குடிக்க மணமாக இருந்தால் நல்ல கஸ்தூரி கவுச்சி நாற்றம் அடித்தால் நல்ல கஸ்தூரி அல்ல .  

உடல் பலம் பெற

 உடல் பலம் பெற
சிறுவயது முதல் குழந்தைகளுக்கு தாமரை கொட்டை கொடுத்து வந்தால் எந்த வியாதியும் வராது .தாமரை கொட்டை குளிர்ச்சியானது 
சின்ன பருத்தி கொட்டையை ஊற வைத்து ஆட்டிபிழிந்து பசும் பாலுடன் காய்ச்சி பாயசம் போல் செய்து தினமும் குடித்து வர மார்பு பலம் பெரும் . நெஞ்சில் தேங்காய் உடைக்கலாம்
எருக்கன் வேர் மண்ணில் இருந்து ஒரு அடிக்கு ( பூமி மட்டத்தில் இருந்து ஒரு அடி வரை இருப்பது விஷத் தன்மை உள்ளது )   கீழே உள்ள வேரை எடுத்து இடித்து பசும்பாலில் போட்டு காய்ச்சி வடகம் போல் தட்டி வெயிலில்  காயவைத்து ( சிலநாட்கள் இது போல் தொடந்து செய்ய வேண்டும் ) பின் நன்றாக தூள் செய்ய வேண்டும் . பின் பனங்கற்கண்டு( சம எடை )  தேனுடன் சேர்த்து அரைத்து லேகியம் போல் செய்து சாப்பிடவேண்டும்  . உடம்பு தானே பலம் பெரும் ( இம் மருந்து சூட்டை அதிகப்படுத்தும் )  .
இம்மருந்தை சுவாமிகள் கூறிய முறைப்படி செய்து 85 வயதான கிழவருக்கு 45 நாட்கள்   கொடுக்க தள்ளாடி நடந்து கொண்டு இருந்தவர் ஓட ஆரம்பித்து விட்டார் ............
        

குரங்கு

குரங்கு
குரங்கை கொல்ல கூடாது . குரங்கை கொன்றால் ஏழு தலைமுறைக்கு பாவம் போகாது .
குரங்கு இறந்து விட்டால் அதை புதைத்து வேப்ப மரம் வைத்து கோயில் கட்டி கும்பிடுவார்கள் 

சுடுகாடு

சுடுகாடு

ஒருவனுக்கு யாரேனும் சூன்யம் வைத்து விட்டால் அவன் மூன்று நாட்கள் நிர்வாணமாக சுடுகாட்டில் படுத்து இருந்தால் சூன்யம் விலகி விடும் .
சுடுகாட்டில் தேவதைகள் இருக்கும் .இடுகாட்டில் தான் பேய் பிசாசுகள் இருக்கும் .வீட்டின் வாசற்படியில்ஒரு துணியில்  சுடுகாட்டு  சாம்பலை கட்டி  வைக்கபேய் பிசாசுகள் அண்டாது  

வடலூர்

வடலூர்   
வடலூர் மண்ணில் நாம் இருந்தால் நம் பாவங்கள் விலகும் .
அந்த மண்ணிற்கு  அவ்வளவு மதிப்பு உண்டு.

செருப்பால் யாரையும் அடிக்க கூடாது

செருப்பால் யாரையும் அடிக்க கூடாது
செருப்பால் யாரையும் அடிக்க கூடாது அடித்தால் அவனுடைய பாவம் முழுவதும்  நம்மை
ஒட்டிக்கொள்ளும் . நமது புண்ணியம் முழுவதும் அவனுக்கு போய் விடும்.

தலை எந்த பக்கம் வைத்து படுப்பது

தலை எந்த பக்கம் வைத்து படுப்பது 

இரவில் படுக்கும் போது தலையை தெற்குபக்கம்  வைத்து படுத்தால் கோபம் தணிந்து சாந்த நிலையில் மனம் இருக்கும் .
மேற்கில் தலை வைத்து படுத்தால் பொதுவாக நல்லது .

பணத் தட்டுபாடு வராமல் இருக்க

பணத் தட்டுபாடு வராமல் இருக்க .

ஒரு மண் குடுவையில் சுவாமிகளை மனதார நினைத்து கொண்டு கல் உப்பை போட்டு வாய் பகுதியெய் மஞ்சள் தடவிய துணியால் சுற்றி கல்லா பெட்டியில் வைக்க கூடிய வரை யில் பணத் தட்டுபாடு வராது .
நகையை அடகு வைக்க நேர்ந்தால் அடகு வைக்கும் முன் அம் மண் குடுவையில் நகையை வைத்து சுவாமிகளை நினைத்து கும்பிட்டு வைக்க விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கும்

உப்பு - தாயின் சக்தி .

  

தர்மம் செய்யும் முறை


1)      சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும் ஒரு பங்கை சேமித்து வைக்கவும் மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும் தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும்.

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது
சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசிர்வாதமும் அவரது தரிசனம் எவ்வித இடையூறும் இல்லாமல் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும் .
மனதிற்குள் எப்போதும் ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும் .தூங்கும் நேரம் தவிர மனதில் எப்போதும் சுவாமிகளின் நினைவு இருந்து கொண்டே இருக்க வேண்டும் .
மானசீக பூஜைக்கு பத்தியம் இல்லை     
1)      

பொய்

பொய்
மற்றவர்களை பாதிக்காமல் இருந்தால் பொய் சொல்வதில் பாதிப்பு இல்லை

திருநீர் வாங்கும் முறை

 வலது கையில் வாங்கும் திருநீரை அப்படியே பூசிக்கொள்ள வேண்டும்.

இடது கையில் போடக்கூடாது .போட்டால் புண்ணியம் அந்த இடத்திலேயே
போய்விடும் .

 இல்லையென்றால் பேப்பரில் போட்டுக்கொள்ள வேண்டும் .

.இடது கை கால் தாயின் சக்தி கொடுத்த புண்ணியத்தை வாங்கி கொள்ளும்.

1)      பெண்கள் திருநீர் வாங்கும் போது எப்போதும் முந்தானையின் மேல் வலது கை வைத்து வாங்க வேண்டும்.
2)     



முன் ஜென்ம பாவங்கள் நீங்க

முன் ஜென்ம பாவங்கள் நீங்க


தினமும் பிள்ளையார் கோயிலுக்கு சென்று போன ஜென்மத்தில் செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்பு கேட்டு மூன்று முறை கோயிலை சுற்றி வர முன் ஜென்ம பாவங்கள் நீங்கும்.
பிள்ளையாரும் , துறவியும் ( நம் சுவாமிகளும் )  ஒன்றுதான் 

வியாழன், 28 அக்டோபர், 2010

மின்னல் வெட்டும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று நாம் கூறுவது ஏன்?

 மின்னல் வெட்டும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று நாம் கூறுவது ஏன் ?

அர்ச்சுனன் பாசுபதத்தை பெறுவதற்கு இருவாட்சி மரத்தின் மேல் ஏறி தபசு இருந்தார்.
மின்னல் வந்து தவத்தை கலைக்க முயற்ச்சித்தான் .அப்போது மின்னலை அர்ச்சுனன் பிடித்து கொண்டார் . மின்னலால் தப்பிக்க முடியவில்லை கஷ்டப்பட்டது .
அர்ச்சுனன் என்ற பெயரை கேட்டால் யாருக்கும் தீங்கு செய்வதில்லை என்று சத்யம் செய்து தப்பித்து கொண்டது .
பன்றி உருவமாக சிவபெருமான் இருவாட்சி மரத்தை ஆட்டி தவத்தை கலைத்தார் . அர்ச்சுனன் பாணம் விட்டார் ரதம் சொட்டியது . ரத்தம் சொட்டிய இடம் எல்லாம் உருப்படாமல் போகட்டும் என்று சிவபெருமான் சாபம் இட்டார் .
வண்டி வாகனங்கள் மேல் பன்றி மோதி ரத்தம் பட்டால் ஈஸ்வர சாபத்தால் உருப்படாமல் போகிறது .       
   

திங்கள், 11 அக்டோபர், 2010

சேற்றில் தான் செந்தாமரை முளைக்கிறது

சாக்கடையில் தான் மஹா லட்சுமி வாசம் செய்கிறாள்

சேற்றில் தான் செந்தாமரை முளைக்கிறது

அன்பு மட்டுமே அழியா சொத்து

கவரி மானிடம் இருந்து கிடைப்பது கஸ்தூரி

காராம் பசுவிடம் இருந்து கிடைப்பது கோரோசனம்.

ராகு  காலம் முடியும் போது செய்யும் காரியம் வெற்றியாகும் ( முக்கால் பங்கு கழிந்த பிறகு )

வாணியன் ஆசை கோணி கொள்ளாது

தட்டானிடம் சிக்கிய பொன்னும் செக்கானிடம் சிக்கய மாடும் பத்த அவஸ்தை படும் .

கேடு வரும் பின்னே மதி கெட்டு போகும் முன்னே .

சுடுகாட்டில் தேவதைகள் இருக்கும்

இடுகாட்டில் தான் பேய் பிசாசுகள் இருக்கும்


பங்குனி மாதம் எல்லோருக்கும் விசேஷம்

செல்வம் வரும் போது செருக்கு வரக் கூடாது .

அன்பால் எதையும்  வாங்கலாம் அதிகாரத்தால் எதையும் வாங்க முடியாது
.
ஆடியில் பெருங்காற்று அடித்தால் அடை மழை பொழியும் .

ஆடி ஆவணியில் அதிகமாக காற்றடித்தால் அந்த வருட பருவமழை நன்றாக இருக்கும்.

ஆறு வழியில் கொல்லும் காலம் தெளிவில் கொல்லும்.

வரப்பு தண்ணீரைக் கெடுக்கும் துரும்பு கல தண்ணீரைக்   கெடுக்கும்

வேலி வெள்ளாமையை   கெடுக்கும்

வெள்ளாடு தோப்பை கெடுக்கும்

ஆற்றை நாணல் கெடுக்கும்

மந்திரம் கால் மதி முக்கால்

பிச்சை எடுத்தாலும் தர்மம் செய்ய வேண்டும் 

நாக்கு இல்லாத மிருகம் முதலை

ராமர் மகாவிஷ்ணுவின் அவதாரம் அல்ல

செட்டி பிள்ளை எட்டு பணம் இருந்தால் பிழைத்து கொள்வான்

சாமியார்கள் எல்லாம் ஊரை ஏமாற்ற வந்தவர்கள்

கேது திசை சந்திர திசையில் படிப்பு வராது

நல்லவன் வயிற்றில் கெட்டவன்  பிறப்பான்

கெட்டவன்   வயிற்றில் நல்லவன் பிறப்பான்

பர்வத மலை துறவிகள் வாழ்ந்த இடம்

கட்டை பிராணன் போகும் இடம் தான் சொர்க்கம்

குலைக்கிற நாய் கடிக்காது , வேட்டைக்கு ஆகாது

இடிக்கிற வானம் மழை பொழியாது

மகத்துவம் இருக்கும் இடத்தில கூடம் இருக்காது

தாயின் சக்தி தான் ஜோதி

கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும்

அப்பன் கொடுக்கும் காசில் இரண்டு தம்படி மிச்சம் செய்யும் பிள்ளை என்றும் முன்னுக்கு வருவான்
.
கிணற்றில் ஆமை இருந்தால் லக்ஷ்மி கடாட்சம் இல்லை

கோ தரிசனம் பாபவிமோசனம் 

சாது தரிசனம் பாபவிமோசனம்

கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னாலே வரும்.

அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம்

தொழில் செய்பவன் சிக்கனமாக இருக்க வேண்டும்

தர்மம் செய்தால் பிள்ளை கிடைக்கும்

இறைக்கிற கிணறு ஊரும்

கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் மரம் ஏறி கை விட்டவனும் ஒன்று

குடும்பத்தை மூடி வாழும் தத்துவம் நல்லது

துஷ்டர்களை கண்டால் தூரப்போ சுடுகாட்டை கண்டால் ஒதுங்கிப்போ

நண்டு திங்கும் ஊருக்கு போனால் நடுக்கண்டம் கொடு என்று சாப்பிட கேட்க வேண்டும்

கண்டதை பேசலாம் காணாததை பேசக் கூடாது

விளக்கில் இருந்து கற்பூரத்தை ஏற்ற கூடாது

கன்னத்தில் கை வைத்தால் தரித்திரம் கஷ்டம் வரும்

ஓடிபிழைத்தாலும் திசை இருக்க வேண்டும்

அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்

இளைந்து சாப்பிட்டாலும் எழுத்து இருக்க வேண்டும்

பரத்தையர் தெருவில் இருந்தாலும் இனத்தார் தெருவில் குடியிருக்க வேண்டும்

பசி சுவை அறியாது நித்திரை சுகம் அறியாது

கோயிலை சுற்றி வந்தால் கெட்டது நீங்கும்

அவனவன் செய்த வினையை அவனவன் அனுபவித்து தான் ஆக வேண்டும் .

எது நம்புகிறோமோ அதுதான் நம்மை காப்பாற்றும் .

கஷ்டத்தையும் கசப்பையும் இனிப்பாக நினைக்க வேண்டும்

தாய் மடியில் தங்கம் இருந்தாலும் தான் மடியில் தவிடாவது இருக்க வேண்டும்                                           

கூடி கேட்டவர்கள் யாருமில்லை பிரிந்து கெட்டவர்கள் உண்டு

பௌர்ணமியில் ஒரு பொருளை வாங்கினால் சொத்துக்கு சிறப்பு

நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரிபார்க்க வேண்டும் .

ஞாயிற்று கிழமை விவசாயத்திற்கு நல்லது

கோபம் வரும் வீட்டில் சண்டை வளரும்

பூஜை அறையில் படுத்து தூங்க கூடாது

சொந்தம் இருந்தால் மூக்கு ஒழுகும் வரை கேட்ப்பார்கள்

கொண்டுக் கொண்டாலும் , கொடுத்து விட்டாலும் சொல்லப்படாது

ஒழுக்கம் வளர்பவர்கள் பெண்கள்

எளியவனுக்கு ( ஏழைக்கு ) ஆசை வார்த்தை சொல்லாதே
பணக்காரனுக்கு வைத்தியம் சொல்லாதே

அடுத்தவருக்கு கெட்டது எப்போதும் செய்யாதே

திருடன் அபசாரி என்ற பெயர் வாங்கப்படாது 

சந்தோசம் தான் கடவுளின் ஆகாரம்

வாத்யார் சொல்லி கொடுப்பது சிறிய பாடம்
பெரியவர்கள் வாக்கு பெரியா பாடம்

மக்களை திருத்தினாலும் சாமியார்களையும் மந்திரவாதிகளையும் திருத்தமுடியாது

புண்ணியத்திற்கு போவதை தடுப்பது பேராசை பொருளாசை .

பெண்கள் பெரிய படிப்பு படித்தாலும் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.

எது வந்தாலும் வந்து விட்டு போகட்டும் என்று இருந்தால் எந்த நோயும் வராது

கெட்ட நேரத்தில் தணிந்து சாந்தமாக போக வேண்டும் . தைரியமாக இருக்க வேண்டும்

வீட்டிற்குள் கடை வைக்கபடாது

மனோ பூஜை பத்தியம் இல்லாதது எந்த நேரமும் கும்பிடலாம் .

பிள்ளைகளுக்கு ஒழுக்கம் பண்பாடு கற்பிக்க வேண்டும் ,தொழிலும் கற்று கொடுக்க வேண்டும் .

ஒன்றை பிடித்தால் வலுவாக பிடித்து கொண்டு ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் .

கட்டை இருக்கும் வரை இருந்து விட்டு ஆத்மா ஒரு இம்சை இல்லாமல் பிரிவது தான் புண்ணியம் .நோய் நொடி இல்லாமல் இருப்பதும் புண்ணியம் .

எதை செய்தாலும் இது நமது அல்ல என்று செய்ய வேண்டும் கடவுள் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும் .

யார் வந்து தண்ணீர் குடிக்க  கேட்டாலும் தண்ணீர் இல்லை என்று சொல்லப்படாது .

சாபிடவர்கள் உப்பு இல்லை என்று சொல்லப்படாது .அப்படி சொன்னால் செய்தவர்கள் மனம் புண்படும் எனவே சொல்லப்படாது.

பெண்கள் கட்டின கணவர் வீட்டை பெரியதாக நினைக்கவேண்டும்

தெய்வ நம்பிக்கை , நம் உழைப்பு எப்போதும் இருக்க வேண்டும் .

நல்லது செய்யும் போதும், நன்மை செய்யும் போதும் தர்மம் செய்யும் போதும் அடுத்தவனுக்கு தெரியக் கூடாது , தெரிந்தாலும் நாம் சொன்னாலும் புண்ணியம் எல்லாம் போய் விடும் .

குழந்தைகளுக்கு வெள்ளாட்டு பால் கொடுத்தால் நோய் வராது .

பசி பட்டினி என்று வந்தால் சாப்பாடு போடவும் .

நல்ல பாம்பு வாசம் செய்தால் இலட்சுமி கடாட்சம் , விபூதி போட்டு கற்பூரம் கொளுத்தினால் போய்விடும்.

சுவாமிகள் கையெய் தூக்கி காண்பிப்பது மக்களுக்கு அமைதி வேண்டும் என்பதே .

கெட்டவனுக்கு நல்லது கெட்டது புரிய வைத்தால் நல்லவனாக மாறலாம் .

பிள்ளைகளை காலை நாலரை மணிக்கு எழுப்பி படிக்க வைத்தால் படிப்பு நன்றாக வரும் .

உலகத்தை காக்கும் கடவுளின் பாதம் உலகம் முழுவதும் பட்டிருக்கும் ஆகையால் தான் அந்த பாதத்திற்கு முதல் வணக்கம்

முதலில் காலுக்கு உதிரி பூக்கள் சூடிய பிறகு  தான் சிரசில் பூ வைக்க வேண்டும்

இன்னும் குமபிட்டு இப்படி நடக்கிறது என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும் , எல்லாம் போய்விடும் .

கஷ்டம் வரும் காலங்களில் நபிக்கை அதிகமாக இருக்க வேண்டும் 

நம்பிக்கை தான் தெய்வம் என்ன துன்பங்கள் வந்தாலும் உயிரே போவதானுலும் நம்பிக்கையை சிறிதும  இழக்ககூடாது 

மண்ணுக்கு மண் மாத்தனும் தண்ணீருக்கு தண்ணீர் மாத்தனும்

சிவ பூஜை செய்தால் மன அமைதி கிடைக்கும் . தகப்பனுடன் தாய் இணைந்து விடுகிறாள் .

எந்த நேரமும் கோபமில்லாமல் சந்தமாக இருக்க வேண்டும் .

தற்பெருமையும் கெளரமும் இருக்க கூடாது

இடாதவனுக்கு இட்டு காட்டு.


குப்புற பிறந்த   குழந்தை அதிஷ்டகார குழந்தை,செல்வமாக வாழ்வார்கள்.

பழுப்பு அரச இலையில்   கையிலை தைத்தால் அழகாக இருக்கும்.

திருஷ்டி விலக

திருஷ்டி விலக

1)      கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும். குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச  திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.திருஷ்டி சுற்றும் போது பார்த்தவன் கண்ணு பார்க்காதவன் கண்ணு பேய் கண்ணு பிசாசு கண்ணு ....எந்த கண்ணும் படக்கூடாது என்று சுற்றவேண்டும். 
வாசலில் ஒரு சாக்கு பையில் பிரண்டையை போட்டு மிதித்து வர காற்று கருப்பு திருஷ்டி படாது ( அந்தக் காலத்தில் இது போன்று செய்வார்கள் )வீ ட்டின் வெளியே தேய்ந்து போன குதிரை லாடத்தை U வடிவில் மாட்டகாற்று கருப்பு அண்டாது.
துளசி எலுமிச்சை வைத்து  கும்பிட்டால் திருஷ்டி இருக்காது . வெளியே செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும் 


.
வீ
vv

பிள்ளையார்

பிள்ளையார்

பிள்ளையாரை ஜில்லா விட்டு ஜில்லா திருடி எடுத்து வந்தால் விசேஷம் . எப்படிப்பட்ட நலிந்த குடும்பமும் முன்னுக்கு வரும் நல்லநிலமைக்கு வரும் .

தன் வைத்தியம் தனக்கு பலிக்காது

பிள்ளையாரை திருடி வேறு யாருக்காவது ( நன்கு கவனித்து கொள்பவர்களிடம் ) கொடுக்க வேண்டும் .

கத்தரி செடியும் திருடி நட்டால் விளைச்சல் மிகுதியாக இருக்கும்

காசிக்கு சென்றால் பாவம் போகுமா ?

காசிக்கு சென்றால் பாவம் போகுமா ?

காசிக்கு போனாலும் கர்மம் தீராது
செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்டாலே போதுமானது   .
காசிக்கு சென்றால் பாவம் போகாது.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

swamiji statue teak wood 3



ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை

ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை

ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை மிக்க விசேஷமானது
அன்று விநாயகர் முருகர் சிவன் இந்த தெய்வங்களை தரிசனம் செய்வதும் மகான்களை தரிசனம் செய்வதும் புண்ணியமானது .
ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை அன்று காரைக்காய், கடாரங்காய் நகம் படாமலும் தரையில் விழாமல் பறித்து சுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற்று நாம் வீட்டு பூஜை அறையில் காற்றோட்டமான இடத்தில வைக்க இலட்சிமி கடாட்சம் கிடைக்கும் .      

Swamiji teak wood statue 1


Swamiji teak wood statue


சனி, 9 அக்டோபர், 2010

மந்திரம்

மந்திரம்   
மந்திரங்கள் எல்லாம் கரும காண்டம்
மந்திரம் கற்றவன் எவன் உருப்பட்டு இருக்கிறன்
மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு
சம்சாரிக்கு மந்திரம் தேவையில்லை
மந்திரம் செய்யும் போது தாய் பிரசவ நேரத்தின் போது என்ன கஷ்டப் படுகிறார்களோ அப்படி கஷ்டப்பட்டு அந்த தேவதை வேலை செய்யும் அதுவும் மந்திரவாதிக்கு நல்ல நேரம் இருக்கும் வரை தான் பின்பு அந்த தேவதையே அவனை அழித்து விடும்

அழகு

அழகு
ஆணுக்கு மீசை அழகு கால் கை கட்டை விரல் அழகு
பெண்ணுக்கு கூந்தல் மார்பு அழகு
ஆணுக்கு அவனுடைய கட்டை விரலை வெட்டி விட்டால் அவனுடைய பலம் போய்விடும் .
பெண்ணுக்கு மார்பின் நுனியோ மூக்கின் நுனியோ பின்னப் பட்டால்அவளின் பலம் போய் விடும் .
இலட்சுமணன் சூர்பனகை மூக்கை அறுத்ததன் கரணம் இதுதான்
மந்திரவாதி கட்டை விரல் வெட்டிவிட்டால் அவனது மந்திரம் எதுவும் பலிக்காது .
மந்திரவாதியின் முன் உள்ள நான்கு பற்களை உடைத்தாலோ அல்லது தானாக விழுந்தாலோ மந்திரம் வேலை செய்யாது     
 அப்போது மீசை வைக்காமல் இருந்தேன்
என்னடா மீசை இல்லாமல் இருக்கிறாய் என்று சுவாமிகள் கேட்டார் ?
மீசை வைக்காமல் இருந்தால் தான் முருகரின் அருள் எளிதில் கிடைக்கும் அதனால் தான் மீசை வைக்கவில்லை என்றேன் .
யாரடா கூறியது என்றார் .
அந்தக் காலத்தில் யாரும் வைக்கவில்லையே என்றேன் .
முட்டாள் அந்தக் காலத்தில் மீசை வளர்த்து எலுமிச்சை பழத்தை இருபக்கமும் நிறுத்தி வைப்பார்கள் , அக் காலத்தில் இப்போது போல் அரிசி சாதம் கிடையாது வெறும் கம்பங் கூழ் தான் . மீசை உள்ளவன் குடித்தால் மீசையெய் கழுவ இரண்டு குவளை நீர் வேண்டும் . சோம்பேறிகள் தான் மீசை வைக்காமல் இருந்தார்கள் அதுதான் உண்மையான காரணம் என்றார்                            

கருப்பு குழந்தை

கருப்பு  குழந்தை .
ஒரு நாள் ஒரு சிகப்பான பெண்மணி சுவாமிகளிடம் வந்து தன் கணவன் தன்னை சந்தேகப் படுவதாக கூறி அழுதார் . ஏன் என்று சுவாமி கேட்கையில் " நானும் சிகப்பு என் கணவனும் சிகப்பு எங்களுக்கு பிறந்த குழந்தை கருப்பாக உள்ளது " எனவே என் மீது சந்தேகப் படுகிறார் .
என்றார் . சுவாமிகள் உன் கணவனை என்னிடம் கூட்டி வா என்றார் . மறு நாள் அப் பெண்மணி கணவனை சுவாமிகளிடம் கூட்டி வந்தார் .
அப்போது  சுவாமிகள் கணவனை மனைவியும் , மனைவியெய்  கணவனும் மனமாற நம்ப வேண்டும் நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்கை இல்லை .மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று அறிவுரை  கூறினார் .
ஏன் குழந்தை கறுப்பாக பிறந்தது என்று கணவன் கேட்கையில் சுவாமிகள் கூறினார் " இருவரும் கூடிய பிறகு மூன்றே முக்கால் நாளிகை கழித்து அப்பெண் யார் முகத்தில் முழிக்கிறார்களோ அல்லது நினைகிறார்களோ அவர்களை போல் தான் குழந்தை பிறக்கும் என்றார் . பிறகு அப் பெண்மணியிடம் நீ காலையில் எழுந்து என்ன செய்வாய் என்று சுவாமிகள் கேட்டார் அதற்கு அப்பெண்மணி காலை நான்கு  மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவேன் அப்போது எதிர் வீட்டில் வயதான கருப்பாக உள்ள  பெரியவர் திண்ணையில் உட்கார்ந்து இருப்பார் அவரைத்தான் தினமும் பார்ப்பேன் என்றார் .
கணவனுக்கும் சந்தேகம் தீர்ந்தது .பிறகு இருவரும் ஒற்றுமையாக குடும்ப வாழ்கை நடத்தினார்கள் .
பின் எப்போதும் காலை எழுந்தவுடன் கணவனை மட்டுமே பார்ப்பாள் .இரண்டாவது குழந்தை கணவனைபோலவே பிறந்தது .
இதுவே காரணம் குழந்தை கணவனைப் போல பாட்டி பாட்டனை போல் இருப்பது .

இரட்டை குழந்தை

இரட்டை  குழந்தை

ஆணின் இந்திரியம் நன்றாக இருந்து முதலில் கூடியபிறகு மூன்றே முக்கால் நாழிகைபிறகு மீண்டும் கூடுவார்களேயானால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் .
இரட்டை குழந்தைகளில் இரண்டும் பெண் ஆக பிறந்தால் மிக்க விசேஷம் .

திருமூர்த்தி மலை முருகன் கோயில் அளவு

ஒரு முறை சுவாமிகளுடன் திருமூர்த்தி மலைக்கு சென்று இருந்தோம் . அப்போது அங்குள்ள பொறியாளரிடம் முருகன் கோயிலின் உள் அளவு என்ன என்று கேட்டார் . அதற்கு பொறியாளர் ஒரு தோராயமான அளவை சொன்னார் . என்னடா கணக்கு போடுகிறாய் . கை நீட்டி படுத்து கொண்டால் கை விரல்கள் முதல் கால் வரை அளந்து பார் கோயிலின் அளவையும் அளந்து பார் இரண்டும் ஒன்றாக இருக்கும் என்றார்
சரியான அளவு எட்டு அடி மூன்று  அங்குலம் 
திருமூர்த்தி மலை முருகன் கோயில் அளவு , அரும்பருத்தி பிள்ளையார் கோயில் அளவு இரண்டும் ஒன்றாகவே இருக்கும் எட்டேகால் அடி

கண் துடித்தால்

கண் துடித்தால்
சுவாமிகள் ரம்பாக்கதில்இருக்கும் போது சுவாமிகளை தரிசிக்க சென்று இருந்தேன் .
அப்போது ஒரு  அன்பரின்  கண் துடித்தது . அதற்கு சுவாமிகளிடம்  கேட்கையில்
கண் துடித்தால் கஷ்டம் வரும் என்பார்கள் . அது பாடுக்கு வந்து அது பாடுக்கு போகட்டும்  என்றார்.
எந்த கஷ்டம் வந்தாலும் மன தைரியத்தை விடக்கூடாது என்றார்             

மடிப்பிச்சை

மடிப்பிச்சை 
 அந்த காலத்தில் குழந்தை இல்லாத பெண்களும் , குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் நல்ல நாளில் ஏழைகளை கூப்பிட்டு விருந்து படைத்து அவர்களே பரிமாறி பின் மடியேந்தி அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் எச்சில் கையாலேயே சிறிது சாதம் வைக்க சொல்லி , வாங்கும் சாதத்தை ஓர் இடத்தில் பத்திரப் படுத்தி பின் எச்சில் சாதத்தை போட்டவர்களின் சாப்பிட்ட இலைகளை எடுத்து போட்டு விட்டு பத்திரப் படுத்திய சாதத்தை தரையில் கொட்டி சாப்பிடுவார்களாம்.
கையில் எடுத்து சாப்பிடுவதைவிட மண்டி போட்டு கைகளை பின்னல் கட்டிக் கொண்டு வாயாலே எடுத்து சாப்பிடுவது மிக்க விஷேசம்

குழந்தை இல்லை என்று பிரம்மன் எழுதியிருந்தாலும் பிரம்மன் தலை எழுத்தையே மடிபிச்சை மாற்றும் 

சிறியாநங்கை

சிறியாநங்கை
செடிகளில் சிறியாநங்கை பெரியா நங்கை இரண்டு வகை உண்டு .
வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக்   கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது எது கடித்தாலும் எந்த விஷமும் அண்டாது .

சுவாமிகள் ராம்பக்கத்தில் இருக்கும் போது அவரது உடலில் தேமல் போல் இருந்தது. அப்போது மேற்கூறியவற்றை கூறி சிறியாநங்கை எடுத்து வர சொன்னார் .  சிறியாநங்கை கையில் வைத்து கசக்கி சாரு எடுத்து சுவாமிகள்  கால்களில் பூசினார்கள் சக்கையை என்ன செய்வது என்றுஅவர்கள்  கேட்க அப்படியே வாயில் போட்டு கொள்ளடா என்றார் .சுவாமிகள் கூறியபடி வாயில் போட்டு கொண்டார்  எப்படியடா உள்ளது என்றார்? ஒரே கசப்பு சுவாமி என்றார்கள்   ,சர்க்கரை வேண்டும் என்றார்கள் அதற்கு சுவாமிகள் நீ இப்போது வாயில் எது போட்டாலும் இனிக்காது குறிப்பிட்ட நேரம் கழித்துதான் இனிக்கும் என்றார் ( அவர் கூறிய கால அளவு மறந்து விட்டது )  தோல் வியாதிகளுக்கு சிறியாநங்கை மிக நல்ல மருந்து.
கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் நோய் போகவே போகாது     

நம்பிக்கை

நம்பிக்கை
மனிதனுக்கு நம்பிக்கை தான் முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் .

எதை செய்தாலும் நமிக்கையுடன் செய்தால் தான் பலன் கிடைக்கும் .முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு .

நம்பிக்கையுடன் தான் எதையும் செய்ய வேண்டும் , இரு மனமும் இணைய வேண்டும் .

வைத்தியம் செய்யும் போது வைத்தியர் மருந்து கொடுக்கும் போது நோய் சரியாகி விட வேண்டும் என்று நினைத்து கொடுக்க  வேண்டும். நோயாளியும் இந்த மருத்துவர் கொடுக்கும் மருந்தால் நோய் குணமாகி விடும் என்று நம்பிக்கை இருக்க வேண்டும் அப்போதுதான் நோய் குணமாகும் .
தங்கத்தில் அணிகலன் செய்வது எப்படி ?
தங்கமும் , செப்பும் வேண்டும் .
இரண்டும் பக்கத்தில் வைத்தால் போதுமா?
 தங்கமும் , செப்பும் உருக வேண்டும் . இரண்டும் உருகி இணைந்தால் தான் அணிகலனாக மாறும் .
நாமும் இறைவனிடமும் ஸ்வாமிகளைடமும் மனமுருகி அன்பு கொண்டு நம்பிக்கை வைத்து அருள் ஆசியெய் பெற வேண்டும் .

கஷ்டம் சோதனை கொடுக்கும் மன நிம்மதி , மன நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் .
எது இருந்தாலும் தெய்வ நம்பிக்கை வேண்டும். ஆன்மாவால் கும்பிட வேண்டும்
தைரியத்தை வைத்துதான் கஷ்டத்தை குறைக்க வேண்டும் .
இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு  காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும் எல்லாம் போய்விடும் .
நம்பிக்கை  தான் சற்குரு ( கடவுள் ) யார் கை விட்டாலும் சற்குரு மட்டும் கைவிடமாட்டார் என்ற திடமான வைராக்கியம் இருக்க வேண்டும் .
மனிதனை மனிதன் நம்பாமல் இருப்பது கெட்டதாகும்.
அன்பு மட்டுமே  அழியா சொத்து

மற்றவர்கள் கஷ்டத்தை போக்க

மற்றவர்கள் கஷ்டத்தை போக்க
ஒருவனுடைய கஷ்டத்தை போக்க காசு வாங்காமல் செய்யும் வரை ஒன்றும் பாதிக்காது.
காசு வாங்கும் போது அதனை அனுபவித்து தான் ஆக வேண்டும் .
 மற்றவர்கள் கிரகத்தை நீக்க நினைத்தால் அவனுடைய கிரகம் உன்னை பிடித்து கொண்டு கஷ்டப்படுத்தும் .
நீங்கள் எல்லாம் மற்றவர்கள் கஷ்டத்தை போக்க நினைத்தால் அதற்குள்ளவர்களை காட்டிவிடலாமே தவிர நாமே எடுத்து கொண்டு செய்தல் கூடாது .அது தப்பாய் போய் முடியும் .          

எந்த தோஷமும் அண்டாமல் இருக்க

எந்த  தோஷமும்  அண்டாமல் இருக்க

தோஷம் இருப்பவர்கள் சுவாமிகளை எப்போதும் நினைத்து கொண்டு இருந்தால் தோஷம் அண்டாது

படுக்கை அறையில் இரவு படுக்கும் முன் ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணை ஊற்றி திரி போட்டு வைத்து கொள்ளவும் காலையில் எழுந்திருக்கும் போது வேற்று மனிதர்கள் முகத்தில் விழிக்கும் முன் அந்த அகல் விளக்கில் தீபத்தை ஏற்றி கண் குளிர பார்த்து சிவ சிவா என்று சொல்லி வணங்கினால் ( தினப்படி செய்து வர ) எந்த   தோஷமும் அண்டாது .
அந்த விளக்கை பூஜை அறையில் உபயோக்கிக்க வேண்டாம் . அது வேறு இது வேறு .

நியாயமான வழக்கு வியாஜங்களில் வெற்றி பெற

ஒரு பெரியவர் ஓய்வு  ஊதியம் ( பென்ஷன் )  கிடைக்காமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டார். இது குறித்து சுவாமிகளிடம் அவர் கேட்கையில் சுவாமிகள் கூறியது

நியாயமான  வழக்கு வியாஜங்களில் வெற்றி காண்பதற்கு பூச நட்சத்திரத்தில் நல்ல வேளைசெடிக்கு சுவாமிகளை நினைத்து காப்பு கட்டி தினமும் அச் செடியெய் மூன்று சுற்றுக்கள் சுற்றி வரவும் வழக்கு நிம்மித்தம் வெளியில் செல்லும் போது ஒரு இலையை பறித்து எடுத்து செல்ல அவ்வழக்கு வெற்றி கிட்டும்.

              

செவ்வாய், 5 அக்டோபர், 2010

கொடுமுடி

கொடுமுடி  

கொடுமுடி பார்க்காதவன் கொடும்பாவி
மதுரை பார்க்காதவன் மா பாவி   
கொடுமுடியில் குளிக்கும்  போது தலையில் எண்ணை வைத்து தலையின் மேல் காசு வைத்து முழுக வேண்டும் .
காசியில் நீராடுவதை விட கொடுமுடியில் நீராடுவது விசேஷம்
ஆடி மாத தொடக்கத்தில் வீட்டில் ஒரு சிறிய சட்டியில் நவதான்யங்களை போட்டு  முளைப்பாரி வளர்த்து   ஆடி பதினெட்டு அன்று கொடுமுடிக்கு சென்று ஆற்றில்   முளைப்பாரி  விட நமது கஷ்டங்கள் ஆற்றோடு போய்விடும்  என்று சுவாமிகள் கூறுவார்கள்.
                       

கடவுள்

 கடவுள்

காற்று- தகப்பன்

நீர் - தாய்

காற்றும், நீரும் சேர்ந்தது நெருப்பு  ( ஜோதி )

சிவனும் சக்தியுமே கடவுள் அதற்கு மேல் ஒன்றுமில்லை

சிவம் என்பது  அருவநிலை

சக்தி என்பது உருவநிலை

தாய் தான் எல்லாவற்றையும் படைத்தாள்
.
சிவனும் சக்தியும் வேறில்லை

மகாவிஷ்ணு  State Government , சிவ சக்தி    Central Government

சிவ வழிபாடு சிறந்தது
 .
சிவ வழிபாடு அருளுடன் பொருள் உண்டாகும்

சக்தி வழிபாடு பொருட்ச்செல்வம் மட்டும் அதிகம் அளிக்கும்

, உச்ச நிலைக்கு கொண்டு போய் விடும் ஆனால் கொடுத்து விட்டு

 எனெக்கென்ன செய்வாய் ( கொடுப்பாய் ) என்று கேட்க்கும்

அதாவது கொடுத்து கேட்கும் .

சிவ வழிபாடு ஞானத்துடன் பொருட் செல்வமும் கிடைக்கும் .

விநாயகர் முருகர் சிவன் மூன்றுமே சிவ வழிபாடு

சிறந்தது முருகர் வழிபாடுதான் .

சிவன் ஞான நிலை சக்தி இயக்க நிலை

ஒருவன்  ஒரு தெய்வத்தை  வழிபடும் போது எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதற்கு நீ செய்யும் சேவையை நிறுத்த கூடாது அவ்வாறு நிறுத்துவது தவறு  .
தெய்வம் ஒன்றும் செய்யவில்லையே என்று நினைக்க கூடாது . தெய்வம் சோதனை செய்யும் உனக்கு நல்ல நேரம் வரும் போது வட்டியுடன் சேர்த்து உனக்கு செய்து விடும்
பிள்ளையார் கோயிலுக்கு  தினமும் சென்று மூன்று முறை கோயிலை சுற்றி போனஜென்மத்தின் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க மன்னிப்பு கிடைக்கும் .                


ஜாதி

ஜாதி

ஜாதியில் என்னடா இருக்கிறது? அனைவரின் உடம்பிலும் கீறி பார்த்தால் சிவந்த நிறமுடைய ரத்தம் தானே இருக்கிறது. அப்படி  இருக்கும் போது பாகுபாடு எதற்கு என்பார் சுவாமிகள்

ஒரு வீட்டில் உள்ள குழந்தைகளில் ஒருவன் மட்டும் கெட்ட குணமுள்ளவனாய்  இருந்தான் அவனை திருத்த முயன்றும் முடியவில்லை அவனுடன் சேர்ந்தால் மற்ற பிள்ளைகளும் கெட்டு விடும்   என்று ஒதுக்கினார்கள் . இப்படி ஒழுக்கத்தை முன்னிட்டு  வந்ததே ஜாதி 

Surguru Appa paithiyam swami temple

 http://www.youtube.com/watch?v=15sChjibOpo

திங்கள், 4 அக்டோபர், 2010

வீட்டில் கடவுளை வணங்க வேண்டிய முறை

வீட்டில் கடவுளை வணங்க வேண்டிய முறை

சம்சாரிக்கு விரதம் தீவிர பக்தி மந்திரம் ஜெபங்கள் தேவை இல்லை விநாயகர் முருகன் சிவன் சக்தி மகாவிஷ்ணு மகாலட்சுமி எதாவது ஒரு தெய்வத்தை கை எடுத்து வணங்கி எங்களை படைத்த கடவுளே எங்களை காப்பாற்று என சொல்லி வணங்கினால் போதுமானது .
வீட்டில் ஆஞ்சநேயர் , சீதா ராமர் , குழல் ஊதும் கிருஷ்ணன் , வீரத்துடன் கட்சி கொடுக்கும் சக்தி போன்ற படங்களை வைத்து கொள்ளக் கூடாது .
வீட்டில் ஆஞ்சநேயர் வைத்து வழி படக் கூடாது ஒரு நாள் கற்பூரம் ஏற்றாமல் விட்டால் கூட கோபம் வரும் . பிள்ளையாரை வழி படலாம்.

நெய்வேத்தியம்

நெய்வேத்தியம்

சுவாமிகள் யாருக்கு எது கொடுத்தாலும் , கடவுளுக்கு படைத்தாலும் பின்னப் படுத்தி கொடுக்க வேண்டும் . வாழைபழத்தை   படைத்தாலும் சிறிது கிள்ளி     வைக்க வேண்டும் என்பார் .
  கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தது ருசி குறையும் ஒரே சட்டியில் பொங்கல் செய்து  சிறிது கடவுளுக்கு படைத்து விட்டு , கடவுளுக்குபொங்கலையும் படைத்த பொங்கலையும் , சட்டியில் உள்ள   பொங்கலையும் சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் தெரியும் .
சக்தி பூஜை செய்பவர்கள் பாயசம் இலையில் வைத்து படைக்கும் போது முதலில் இருந்ததை விட அளவு ( சுருங்கி ) இருப்பது தெரியும் .

 வெல்லம் தேன் நெய் சிறந்த நெய்வேத்தியம் 

ஜீவசமாதி

ஜீவசமாதி
  பழனியில் போகர் சமாதி உள்ளது ,நாகப்பட்டினத்தில் கோரக்கர் சமாதி உள்ளது . ஆனால் நூறு வருடங்களுக்கு முன்பு போகர் தான் கோரக்கரை அடக்கம் செய்தார் என்று கல்வெட்டில் உள்ளது என்று சுவாமிகளிடம் விளக்கம் கேட்க . சுவாமிகள் கூறியது
                         
சமாதியில் உயிரோடு உட்கார்ந்து    விடுவார்கள் கட்டை எங்காவது உலவும் , இங்கும், அங்கும்  எங்கும் உருவமாக இருக்கும் . அன்பு இருக்கும் இடம் எல்லாம் உலவும்.

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம  முகூர்த்தம் 

காலை நான்கு மணி முப்பது நிமிடங்களிலிருந்து ஆறு மணி வரை பிரம்ம  முகூர்த்தம் .
எந்த நல்ல காரியமும் செய்யலாம் . எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை

திருமணத் தடை நீங்க

திருமணத் தடை நீங்க

திருமணம் நடக்காத பெண்களும் , திருமணம் நடந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து வாழவும் வேருடன் தொட்டாச்சினுங்கி செடியையும் துளசி செடியையும் இணைத்து ( கிராஸ் ஆக X )  பூந் தொட்டியில் வளர்த்து . வெள்ளி கிழமை, திங்கள் கிழமை களில் அதிகாலை குளித்து சூரியன் எழும்முன் நெய் விளக்கு ஏற்றி தேன் பனை வெல்லம் நெய்வேத்தியம் செய்து  நம் சற்குரு நாதரை ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று மனதார நினைத்து இருபதுஒன்று (21 )     சுற்றுக்கள் சுற்றி சூரியனை  கும்பிட்டு  வர பலன் கிடைக்கும்.
ஒரு இன்ஜினியரிங் படித்த பெண்ணுக்கு வயது 32 ஆகியும் திருமணம் நடக்காமல் இருந்தது. அப் பெண்ணின் தாய் தந்தை சுவாமிகளிடம் வந்து முறையிட்டு அழுது சென்றார்கள் .அன்று இரவு சுவாமிகள் இதை நினைத்து உலகத்தை படைதவளிடம் கேட்க குள்ளமாக   வெள்ளை உருவம் ஒன்று அவருக்கு அருகில் வந்து ஆடியதாம் (தொட்டாச்சினுங்கி ) .
மறுநாள்   அப் பெண்ணின் தாய் தந்தை யிடம் மேற் கூறிய வழி முறைகள் கூறி செய்ய சொன்னார் . இருவாரங்களிலே அப் பெண்ணிற்கு டாக்டர் மாப்பிள்ளை வரன் கிடைத்தது.

  .தொட்டாச்சினுங்கி- தாயின் சக்தி துளசி - தகப்பன் சக்தி

குரு

குரு
குரு என்பவர் ஞானகாரகர் ,  உனக்கு நல்லது கெட்டது சொல்லக்கூடியவர்,சாந்த குணங்களையும் , மற்றவைகளையும் கொடுக்க கூடியவர் . தெற்கு பக்கம் சிவன் இருக்கிறார் ( அதனால் தான் தட்சிணாமூர்த்தி   தெற்கு பக்கம் பார்த்து இருக்கிறார்).
நாம் ஒருவரை குருவாக ஏற்று கொண்டால் அவருடைய படத்தை தெற்கு முகம் பார்த்து வைக்க வேண்டும் .
இரவு படுக்கும் போது தலை தெற்கு வைத்து படுத்தால் கோபம் தணிந்து சாந்த நிலையுடன் இருக்கும் .

கடவுளிடம் கேட்க வேண்டியது

கடவுளிடம் கேட்க வேண்டியது.

வீட்டில் இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியும் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமார வேண்டி வந்தால் போதுமானது .

கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணெய் கொண்டு செல்ல வேண்டும்

வாழும் முறை

வாழும் முறை 
சம்சாரி மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதம் இன்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது .
ஒரு சம்சாரி தன் மனைவி குழந்தைகளை நியாயத்துடன் தொழில் நடத்தி காப்பாற்றி கடமைகளை சரிவர செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை
 முப்பது வருடங்கள் காட்டில் கடுந்தவம் இருந்தாலும் அடைய முடியாது .

திருஷ்டி


1)      கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும்.
.   குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச  திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.


.       வீட்டில் மூன்று கண்ணுள்ள கொட்டான் குச்சியில் திருஷ்டி பொட்டு வைத்து கயிற்றினால் கட்ட யாருடைய திருஷ்டியும் ஒன்றும் செய்யாது .        



தர்மம் செய்யும் முறை

சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும்.


 ஒரு பங்கை சேமித்து வைக்கவும்
.
 மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும்
.
 சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும்
.
 தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும் 
   

அன்னதானம்


1)      உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.

மடிப்பிச்சை

மடிப்பிச்சை 
 அந்த காலத்தில் குழந்தை இல்லாத பெண்களும் , குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் நல்ல நாளில் ஏழைகளை கூப்பிட்டு விருந்து படைத்து அவர்களே பரிமாறி பின் மடியேந்தி அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் எச்சில் கையாலேயே சிறிது சாதம் வைக்க சொல்லி , வாங்கும் சாதத்தை ஓர் இடத்தில் பத்திரப் படுத்தி பின் எச்சில் சாதத்தை போட்டவர்களின் சாப்பிட்ட இலைகளை எடுத்து போட்டு விட்டு பத்திரப் படுத்திய சாதத்தை தரையில் கொட்டி சாப்பிடுவார்களாம்.
கையில் எடுத்து சாப்பிடுவதைவிட மண்டி போட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு வாயாலே எடுத்து சாப்பிடுவது விசேஷம். குழந்தைஇல்லை என்று பிரம்மன் எழுதி இருந்தாலும் பிரம்மாவின் தலை எழுத்தையே மடிப்பிச்சை மாற்றிவிடும் .      

வெள்ளி, 1 அக்டோபர், 2010

நாடார்கள் குறித்து சுவாமிகள் கூறியது

நாடார்கள் குறித்து சுவாமிகள் கூறியது   
நாடார்கள் நல்ல உழைப்பாளிகள் .
சாணான் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும் போது ஒரு புத்தி என்பார்
காரணம் கேட்கையில்
சாணான் மரம் ஏறும் போது கடவுளே என் பெண்டாட்டி பிள்ளைகளை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மரம் ஏறுவான் ஏறியவுடன் மரத்தின் மேல் உள்ள கள்ளை பார்த்தவுடன் புத்தி மாறி குடித்து விடுவான்   ஏறும் போது இருந்த புத்தி  இறங்கும் போது அப்படியே மாறி விடுமாம் எனவே சாணனுக்கு   ஏறும் போது ஒரு புத்தி இறங்கும் போது ஒரு புத்தி அப்படி அவன் கள்ளை குடித்தால் தான் எல்லா மரங்களையும் ஏற முடியும் இல்லை என்றால் ஏற முடியாது .


ஒழுக்கத்தை முன்னிட்டு வந்ததே சாதி
.