புதன், 29 செப்டம்பர், 2010

உயிர் பொருள்கள்

 உயிர் பொருள்கள்   

தலை முடியும் , நகமும் உயிர் பொருள்கள் .
நெருப்பால் மட்டும் அழியும் , மற்றது எதுவாலும்  அழியாது 

மூச்சு காற்று

மூச்சு காற்று 

சாதாரண மனிதன் மூச்சு காற்று ஒரு வினாடிக்கு 18 அடி சுருதி சென்று வரும் 
கடவுளுக்கு ஒரு லட்சம் அடி  சென்று வரும் .
துறவிக்கு ஒரு கோடி அடி சென்று வரும் 

செவ்வாய் கிழமை

அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை
செவ்வாய் கிழமை லட்ஷுமி பிறந்த நாள் .
  முருகனுக்கு உகந்த நாள்.
 செவ்வாய் கிழமை விரதம் இருப்பது மிக விசேஷம் இரண்டு வருஷம் தொடர்ந்து இருந்தால் நமக்கு கெட்டது செய்பவர்களை திருப்பி விடும் .
செவ்வாய் புதன் வெள்ளி கிழமைகளில் விளக்கு வைத்த பிறகு கல்லாவில் இருந்து காசை எடுத்து கொடுக்க கூடாது . தனியாக வைத்து செலவு செய்யலாம்.

கீழே விழுந்த காசை யாருக்கும் கொடுக்க கூடாது .

Sur Guru Appa Paithiyam swamiji Video

http://www.youtube.com/watch?v=QNQ6dSyEGc8

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

Surguru Appa paithiyam swamiji Audio

http://www.youtube.com/watch?v=uIPtXj1PL6g

Sur Guru Appa Swamiji padia Padalgal

http://www.youtube.com/watch?v=-rTI-GRVGGs

Sur Guru Appa Paithiyam Swamiji history audio3.mp4

http://www.youtube.com/watch?v=F0N54a1buEk

Sur Guru Appa Paithiyam Swamiji history audio2.mp4

http://www.youtube.com/watch?v=jI12ZvreJCQ

Sur Guru Appa Paithiyam Swamiji history audio1.mp4

http://www.youtube.com/watch?v=RYAc8iMIDhQ

Swamiji Patha poojai video D

http://www.youtube.com/watch?v=XhdqPCCuvVI

Swamiji Patha Poojai Video D

http://www.youtube.com/watch?v=X3EnRxT05-w

Swamiji Patha Poojai Video B

http://www.youtube.com/watch?v=5_0hHBJdgws

Swamiji Patha poojai video A

http://www.youtube.com/watch?v=3oLQ4hvDpkU



வியாழன், 23 செப்டம்பர், 2010

Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamij Photo


Swamiji 12


Swamiji Photo 11


புதன், 22 செப்டம்பர், 2010

Swamigal Padiya padalgal kanthala

காந்தாள லோகியம்மா நீ காரம் தரித்தவளாம்





வேதாள லோகியம்மா நீ வேதம் தரித்தவளாம் 





நீ ஆறு உறுவத்தை ஓர் உருவம் ஆக்கினவளாம்





நீ எங்கும் நிறைந்தவளாம் இதயத்தில் உள்ளவளாம்





நீ மாயம் செய்யும் கோலம் அம்மா





நீ மன்னன் மேல் நம்புவதில்லை அம்மா





இந்த சித்து எதற்கு அம்மா 





ஜெபம் எதற்கு அம்மா தவம் எதற்கு அம்மா





இந்த மச்சு எதற்கு அம்மா     மாடி எதற்கு அம்மா





எங்கேயோ கவனம் அம்மா இது ஏகாந்த பாதையிலே





எதிர் ஒளியும் பெற்றவனாம் எதிர் வாதம் செய்பவனாம்





அவன் அஞ்சாத சிங்கம் அம்மா அடங்காத கூடாரி அம்மா





எட்டான திடமிருக்க எதற்கு அம்மா அஞ்ச வேண்டும்





அஞ்சுவதும் இல்லை அம்மா கெஞ்சுவதும் இல்லை அம்மா





அவன் தெற்கத்தி கள்ளனை போல் தென்னகத்து ராஜம் பிள்ளை





வண்டா மதுரை அம்மா வாகாஞ்சி தென் மதுரை





மதுரை ரெணலுடி மாடு மேய்க்கும் தென் மதுரை





மாட்டை மடக்கி அல்லோ மந்தையில் சேர்த்து விட்டு





எனனை பொத்தி வளர்காதே அம்மா புகழ்ந்து பேசாதே    





என்னை ஊட்டி வளர்காதே 





எங்கேயோ கவனம் அம்மா இது ஏகாந்த பாதையிலே





எதிர் ஒளியும் பெற்றவனாம் எதிர் வாதம் பேசுபவனாம் 





இநத காவி குதிரைக்கு சீனி கட்டி என்னை கானொலி நேரத்திலே அனுப்பு அம்மா





அந்த சட்ட மரக் குதிரை சாம்பிராணி வெள்ள குதிரை





துண்டு தடி எடுத்து துளசி மணி கழுத்தில் இட்டு





அந்த எண்ணூற்றுக்கு அனுப்புமப்பா





அந்த எண்ணூற்றுக்கு காத வழி இலங்கபுரி பட்டினமாம் 





இலங்கபுரி பட்டினத்திற்கு அப்பாலே ஆள் அண்டா தீவு





 ஆள் அண்டா தீவிலே மான் ஆடும் மயில் ஆடும்





வேலாடும் நீரோடும் சோங்குதே





உண்டு ஒரு வேளையும் உறங்காமல் ஒரு வேளையும்





கல்லே தலகானி கானலே பஞ்சி மெத்தை





என்று இருப்பேன் அம்மா





எனனை பொத்தி வளர்காதே அம்மா புகழ்ந்து பேசாதே  





என்னை ஊட்டி வளர்காதே 





அவன் தெற்கத்தி கள்ளனை போல் தென்னகத்து ராஜம் பிள்ளை





அஞ்சுவதும் இல்லை அம்மா கெஞ்சுவதும் இல்லை அம்மா





நானாட நீயாட நாட்டிய பெண்களாட





அண்டமாட பிண்டமாட குண்டலம் இரண்டாட குழந்தை





முருகேசனும் கூட ஆட





எனை நாட வினை ஓட விருதோட 












Swamigal Padiya padalgal Akilaanda Kodi


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி 





முந்தி உதித்தவரே முக்கண்ணணார் தன் மகனே





சக்தி விநாயகரே நீர் தானோ சண்முகரே நீர் தானோ





நாவில் சரஸ்வதியே நல்ல கணபதியே 





நான் காலமும் தொழுவேன்





அல்லல் வினைகள் எல்லாம் அகளியிடம் சொல்லி அறிவேன்





தொல்லல் வினைகள் எல்லாம் துரிதமாய் நீக்குவாயோ 





சிவ சிவா என்ற திருநாமம் சிந்தைதனில் நான் மறவேன்





ஓதி வைத்த என் குருவே ஓரு நாளும் நான் மறவேன்





பாடி வைத்த என் குருவே பல நாளும் நான் மறவேன் 





காற்றாய் நீராய் நெருப்பாய் 





அனலாகும் தனலாகும் அன்பு தெய்வமே 





கல்லார்க்கும் கருடார்க்கும் புல்லார்க்கும் 





பூண்டார்க்கும் புழுவார்க்கும் தெய்வமே 





ஒரு ஆணார்க்கும் பெண்ணார்க்கும் தெய்வமே 





 நாதாந்த தெய்வமே நடுவிருக்கும் தெய்வமே 





வேதாந்த தெய்வமே 





வேதமுடி மேலிருந்து வேண்டுகின்ற தெய்வமே





தாயாகி தந்தையாகி தாங்கி வளர்க்கும் தெய்வமே





ஆணும் நீயே பெண்ணும் நீயே ஆள வந்த அரசும் நீயே





எங்கும் நிறைந்தவரும் நீ இதயத்தில் உள்ளவரும் நீ





இந்த கொரக்குரும்பை கட்டடக்க வந்த வல்லவரும்  நீ 





Temple Address


செவ்வாய், 21 செப்டம்பர், 2010

Swamiji sign 4


Swamiji sign 3


Swamiji sign 2


Swamiji Signature 1


SWamiji Photo & swamiji sign


Swamiji Padham


Swamiji Signature

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் அருளுரைகள்

ஓம் சற்குரு அப்பா   பைத்தியம் சுவாமிகளின் அருளுரைகள்.
தர்மம் செய்தால்   மட்டுமே கிரகங்களின் தோஷம்,கெடுதல்களை தடுக்க முடியும்,
பூஜைகளாலும்   தவத்தாலும் கிரகங்களை தடுக்க முடியாது.
7-1/2 நாட்டு சனி   வந்தால் ஒரு அரசன் கூட ஆண்டி ஆகி விடுவான் அந்த நேரத்தில்
பொருமை அவசியம் .

கோயிலுக்கு   சென்றால் கீழே உட்கார வேண்டும் அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

கடவுள் ஆணுக்கு 3   பாகம் சக்தியையும் பெண்ணுக்கு 7 பாகம் சக்தியையும்
கொடுத்துள்ளார்.

சட்டி எடுத்து   பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.
கருடனைப் பார்த்தால் மகா விஷ்ணுவை பார்ப்பது போன்று.
கருடனைப்   பார்த்தால் தலைக்கு மேல்  இரு கைகளையும்   தூக்கி கும்பிட வேண்டும். 
சுவாமிகளை நினைத்து   ஜெபம் செய்தால் கருடன் வரும்.
கருடன் வந்தால் நம்   தோஷங்கள் நம்மை விட்டு விலகுவதாக அர்த்தம்.
சாப்பிடும் போது   யாராவது வந்தால் உள்ள சாப்பாட்டை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க
வேண்டும்.

மூன்று கண்ணுள்ள   கொட்டாங்குச்சியை திருஷ்டி பொட்டு வைத்து கயிற்றினால் கட்ட  
யாருடையதிருஷ்டியும் ஒன்றும் செய்யாது.

செல்வம் வரும் போது   செருக்கு வரக்கூடாது.
பிரம்மாவின் தலை   எழுத்தையே மாற்றக் கூடியவர் துறவி,  துறவிக்கு கடவுளே
கட்டுப்பட்டவர்.

தலைமுடியும் நகமும்   உயிர் பொருட்கள்,நெருப்பால் மட்டுமே அழியும் மற்றது
எதுவாலும் அழியாது.

காலை   4-1/2 முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் எந்த நல்ல காரியமும்
செய்யலாம்,எந்த   நாளாக இருந்தாலும் பரவாயில்லை. 

வயல் நன்றாக விளைய   காலை 5 மணிக்கு பசும் கோமியத்தை சூரிய உதயத்திற்கு முன்
சுவாமிகளை நினைத்து   எல்லா இடமும் தெளிக்க வயலில்

 நல்ல விளைச்சல் விளையும். 
பர்வத மலை துறவிகள்   வாழ்ந்த இடம்,கரும் நொச்சி கரும் தும்பை கற்பக விருட்சம்
யாருக்கும் தெரியாது.   தெய்வீக மூலிகை.

பர்வத   மலைக்கு,செல்லும் போது அவல் வாங்கி செல்ல வேண்டும் பசி ஆற்ற பயன்படும்.
கட்டை பிராணன்   போகும் இடம் தான் சொர்க்கம்.
பெண்கள் திருநீறு   வாங்கும் போது முந்தானையின் மேல் வலது கை வைத்து வாங்க
வேண்டும்.

வலது   கையில் வாங்கும் திருநீறை அப்படியே பூசிக் கொள்ள வேண்டும்.இடது கையில்  
போடக்கூடாது 

போட்டால் புண்ணியம்   அந்த இடத்திலேயே போய்விடும் காகிதத்தில்  போட்டு
கொள்ளலாம்.

துறவியிடம் வரம்   வாங்குவது எப்படி? தங்கத்தையும் செப்பையும் இணைப்பது எப்படி?   
இரண்டையும்

 உருக்கினால் தான் ஒட்ட முடியும் . அதே போல்   இரண்டு மனமும் உருக வேண்டும்  
மனிதனுக்கு

 நம்பிக்கை என்பது முக்கியம். அந்த   நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து
வரம் கிடைக்கும்

. பூஜைகளால் கடவுள்   கிடைப்பதில்லை நம்பிக்கையால் மட்டும் தான் கிடைப்பார்.பாவம்
செய்து விட்டு,

 காசிக்கு சென்றால் பாவம் போகாது.செய்த   தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு
கேட்டால் போதுமானது

கல்லடி   பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல
எண்ணை   விட்டு      

நனைத்து அதை   தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி
திருஷ்டி சுற்றி   தேங்காயை

முக்கூட்டில்   உடைக்கவும். குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை
பழத்தை 4 துண்டாக

நறுக்கி, உள்ளே   குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி, திருஷ்டி
சுற்றி பிழிந்து,

4 துண்டுகளையும் 4   திசைகளில் எறிய வேண்டும். குங்குமச் சாந்தை குழந்தைகளுக்கு
பூச  திருஷ்டி விலகும்

 பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.வீட்டில் ஒரு   துளி கஸ்தூரி இருந்தாலே வீடு
இலட்சுமிகரமாக இருக்கும்

பந்தி பரிமாறுவதை   விட மக்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதுதான் விசேஷம்.
கொடுமுடி   பார்க்காதவன் கொடும்பாவி மதுரை பார்க்காதவன் மாபாவி
காசியில் நீராடுவதை   விட கொடுமுடியில்  நீராடுவது விசேஷம்.
மந்திரங்கள்   அனைத்தும் கரும காண்டம் மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு?
குடும்பத்திற்கு   வரும் பெண் (மனைவி) எல்லோரையும் தன் கூட பிறந்தவர்களைப் போல்
பாவிக்க   வேண்டும்,

எப்போதும்   பொறுமையுடனும் கோபப்படாமலும் இருக்க வேண்டும்.
சம்பாதிக்கும்   பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும். ஒரு பங்கை சேமித்து
வைக்கவும்.  

மூன்று பங்கை   செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட
காலத்தில் உதவும்

தர்மம் செய்யும்   பங்கு மறு ஜென்மத்தில் உதவும்
உலகத்திலேயே   அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க
கூடியது

மற்றபடி ஜப தவங்கள்   எல்லாம் கர்ம வினைகளை போக்காது. வீட்டிலே
இருந்தாலும்,கோயிலுக்கு

போனாலும்   கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியும் இல்லாமல் காப்பாற்று,நல்ல  
சுகத்துடன் 

வைத்திரு என மனமாற   வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை
கொண்டு

செல்ல   வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு  
விரோதமின்றி 

நேர்மையுடன்   வாழ்ந்து வந்தால் போதுமானது.
அன்னதானம்   செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள்  
.வயிறும் 

மனமும் திருப்தி   அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த
ஜென்மத்திற்கும் அடுத்த

ஜென்மத்திற்கும்   நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.
சுவாமிகள் கூறும்   அறுபடை வீடுகள் 1) சுண்டூர்  2)   திருப்பதி மலை, 3) மதுரை
திருப்பரங்குன்றம்

 4) வெள்ளியங்கரி 5) திருச்செந்தூர் 6) பழனி.
ஒரு வியாபார   ஸ்தலத்தில் அமர்வது மேற்க்கு முகம் அல்லது தெற்க்கு முகம் பார்த்து
அமர   வேண்டும்.

ஆண்   - இரும்பு  பெண் -தங்கம்.கல்லானாலும்   கணவன் புல்லான்னாலும் புருஷன்.ஆவதும்
பெண்ணாலே 

கோடான கோடி   குடும்பம் கெட்டதும் பெண்ணாலே.ஆத்திரத்தை பாராட்ட கூடாது, கோபமான
சொல் கூடாது

10   மாதம் சுமந்து 3-3\4 நாழிகை கஷ்டப்பட்டு குழந்தை பிறந்த பிறகு கணவண், குழந்தை  
சாப்பிட்டானா 

என்று பார்பார்கள்   கணவன் பெரிய குழந்தை தன் வயிற்றில் பிறந்த குழந்தை சின்ன
குழந்தை

தன் மனைவியை   அடிக்கவும்,திட்டவும்,அணைக்கவும் கணவனுக்கு உரிமை உண்டு. கோபமாக
வரும்

கணவன்   அடித்தாலும்,திட்டினாலும் மனைவி பொறுத்துக் கொண்டு அடியையும் வாங்கிக்
கொண்டு

அரைமணி   நேரம் தணித்து கோபம் மாறிய உடன் உணவு பரிமாறிய பிறகு மனைவி அடித்தாலும் 
கணவன் வாங்கிக்   கொள்வான்.வீட்டில் எது சமைத்தாலும் முதலில் மாமியாருக்கு
கொடுக்கவும் .நம்மை

திட்டுபவபர்கள்தான்   நம்மை வாழ்விப்பவர்கள் பெண்கள் உருப்படமாட்டாள் என்ற
வாய்ச்சொல் வாங்க கூடாது

இரவில்   படுக்கும் போது தலையை தெற்க்கு அல்லது மேற்க்கு பக்கத்தில் தான் வைத்து
படுக்க   வேண்டும் 

தலையை தெற்க்கு   வைத்து படுத்தால் கோபம் தணிந்து சாந்த நிலையுடன் மனம் இருக்கும்
கல்லா பெட்டியில்   ஒரு மண் குடுவையில் உப்பு போட்டு மஞ்சள் துணியில் சுற்றி
வைத்து கொண்டால்

கூடிய வரை   பணத்தட்டுப்பாடு வராது
நாம் ஒருவரை குருவாக   ஏற்றுக்கொண்டு அவருடைய படத்தை தெற்க்கு முகம் பார்த்து
வைக்க வேண்டும்

 குரு என்பவர் ஞானகாரகர்  உனக்கு நல்லது கெட்டதுகளை சொல்ல கூடியவர்
ஒரு   சம்சாரி தன் பெண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து நியாயத்துடன் தொழில்
நடத்தி   கடமைகளை 

சரிவர   செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை காட்டில் 36 வருடங்கள்  
கடுந்தவம் இருந்தாலும் 

அடைய முடியாது
.ஞாயிற்று கிழமையில்   வரும் அமாவாசை மிக விசேஷமானது அன்று விநாயகர்
முருகர்   சிவன் மகான்களை தரிசனம் செய்வது புண்ணியமானது அன்று
கடாரங்காய்,காரைக்காய்  நகம் 

படாமலும் தரையில்   விளாமலும் பறித்து சுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற்று பூஜை
அறையில்

காற்றோட்டமான   இடத்தில் வைத்து பூஜை செய்ய வீடு இலட்சுமிகரமாக இருக்கும் 
கடுங்காற்றும்   மழையாகும் கடும் உறவும் பகையாகும் 
ஆடி ஆவணியில்   அதிகமாக காற்றடித்தால்  அந்த வருட   பருவமழை நன்றாக இருக்கும்.ஆறு
வழியில்

கொல்லும் காலம்   தெளிவில் கொல்லும் வரப்பு தண்ணீரைக் கெடுக்கும் துரும்பு கல
தண்ணீரைக்   கெடுக்கும்

வேலி வெள்ளாமையை   கெடுக்கும் வெள்ளாடு தோப்பை கெடுக்கும் ஆற்றை நாணல் கெடுக்கும்
விதியை மதியால்   வெல்ல வேண்டும்.கொண்டுகிட்டாலும் சொல்லாதே கொடுத்துகிட்டாலும்
சொல்லாதே

அன்பு மட்டுமே அழியா   சொத்து. பெண்கள் வாயால் இல்லை என்று சொல்ல கூடாது.
பெண்கள் ஆண்களுக்கு   தைரியத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தைகளை இரவு   படுக்க போவதற்கு முன் 1 மணி நேரமும்,காலை 4 மணிக்கும் படிக்க
வைக்க வேண்டும்.

நெருப்பும்,தண்ணீரும்   சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்பொழுதும் இலக்ஷ்மி
கடாக்ஷம் உண்டு

அப்பன் கொடுக்கும்   காசில் இரண்டு தம்படி மிச்சம் பிள்ளை என்றும் முன்னுக்கு
வருவான்.

வெந்தியம்   4 கொண்டகடலை 15 இரவு ஊற வைத்து காலையில் சர்க்கரை போட்டு தினமும்
சாப்பிட 

நல்ல மூளை   வளர்ச்சியும், படிப்பும் வரும்.
தரம்   அறிந்து, கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு,பெண்ணை வாங்கு. 
62   வயதுக் மேல்தான் அதிகமாக கோபம் வரும், இரத்த வீக்கம் குறைய குறைய கோபம்
அதிகம்   வரும் 

எனவே வயதான   பெற்றோர்களிடம் அவர்கள் கோபப்படும் போது நாம் அதிகமாக பேசக்கூடாது.

தளராத நெஞ்சமும்   இடராத சொல்லும் உடைய மனைவி கிடைப்பது அரிதினும் அரிது.
மனைவியை   தாயாகவும்,கணவரை தகப்பனாகவும் எண்ணி நடப்பவர்கள் கோடியில் கிடைப்பது  
அரிது. 

முருங்கை   மரத்தை (கிளையை) ஒடித்து வளர்கனும்,பெண்ணை கிள்ளி வளர்கனும்,பையனை
அடித்து 

வளர்கனும், 16   வயதுக்குள் செய்ய வேண்டும்.
பிள்ளையின் பாதையில்   பெற்றோர்கள் போக வேண்டும் ஆனால் சேரபடாது.
கணவனை   தெய்வமாக நினைத்து குடும்பத்திற்காக எந்த தவறு செய்தாலும் அவள் உத்தமி. 
கூடி கெட்டவர்கள்   யாருமில்லை,பிரிந்து கெட்டவர்கள் உண்டு.
தகப்பனுக்கு பின்   தாய்,அம்மாவுக்கு பின் அண்ணி.
அடிப்பதும் தாய்   உண்டாக்குவதும் தாய் ,ஆண்கள் அவர்களுக்கு பொம்மை, அவர்கள்
கயிற்றை இழுத்தால்   ஆண்கள் ஆடுகிறார்கள்.

குப்புற பிறந்த   குழந்தை அதிஷ்டகார குழந்தை,செல்வமாக வாழ்வார்கள்.
தலைமுடி,குடுமியை   முடியனும்.பக்கத்தில் இருக்கும் முடி அலையப்படாது,குடும்பத்தை
அல்லல்   படுத்தும். 

காலையில்   எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு  
குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.

மரணபடுக்கையில்   இருக்கும் போது  கோரோசனத்தை தண்ணீரில்   போட்டு,பாலில் வெள்ளி
காசு போட்டு சிறிது நேரம் பொறுத்து,

 கோரோசனத்தையும் பாலையும்  சுவாமிகளை நினைத்து கொடுத்தால் 3 3\4 நாழிகை  
உயிருடன் இருப்பார்கள்.

குங்குமப்   பூவை பிரசவ பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்து பாலில் போட்டு
பால்   மஞ்சளாகிய பின் குடித்து வந்தால் 

ஞானமுள்ள சிகப்பான குழந்தை   பிறக்கும். 
ஈரைக்கிர கிணறு   ஊறும்.கெட்ட செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல செலவு செய்தாலும் காசு
வந்து சேரும்.

முந்தியில்தான் எந்த   பொருளையும் வாங்க வேண்டும். மடிபிச்சை உயர்ந்தது.
குடும்பத்தை மூடி   வைக்கும் தத்துவம் நல்லது.எது இருந்தாலும் பொறுமை
வேண்டும்.ஆழ்ந்து செயல்பட   வேண்டும்.

ஆணின் தத்துவம்   நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே பெண்களிடம் சொல்ல வேண்டும்.
முன் யோசனை   நாளைக்குச் செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரி பார்க்க வேண்டும்.
ஞாயிற்று கிழமை விவசாயத்திற்கு   உகந்தது. 
பழுப்பு அரச இலையில்   கையிலை தைத்தால் அழகாக இருக்கும்.
கட்டின   கணவனை தெய்வமாக நினைத்து வாழ்ந்து, கால் கட்டைவிரல்களை ஊன்றி நடந்து,பெரிய  
கட்டைவிரல்களை பார்த்து கொண்டு போகும் 

பெண்ணை   பேய்,பிசாசு,பில்லி சூன்யம் யாதும் அணுகவே அணுகாது.
முதலில்   பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம்.பின் ஆண்குழந்தை பிறந்தால்
நல்லது.தம்பி   மேல் பாசம் அதிகம் இருக்கும். 

தாய்க்கு தலைபிள்ளை   மேல் பற்று அதிகம், தகப்பனுக்கு கடைசிபிள்ளை மேல் பற்று
அதிகம்.திட்டினாலும்   உள்ளுக்குள் பாசம் அதிகம்

பெண்பிள்ளை   வீட்டில் கஷ்டப்பட்டால் குடும்பம் வளர்ச்சியடையாது. 
கோபம் வரும்   வீட்டில் சண்டை வளரும்.
குழந்தைகளை   ஒழுக்கமாக வளர்பவர்கள் பெண்கள் தான்.
காலையில்   கணவன்,மாமியார் மாமனாரை கும்பிட வேண்டும்
பெண்கள் காலை எழுந்தவுடன் கால் பெருவிரல்களை பார்த்து கொண்டு   நடந்துபோனால்
கஷ்டப்படமாட்டார்கள்.

இடது கை கால் தாயின் சக்தி கொடுத்த புண்ணியத்தை வாங்கி கொள்ளும்.


    

ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள்வாழ்க்கை வரலாறு

ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள்வாழ்க்கை வரலாறு



1840 வருடம் சுவாமிகளின் தந்தை பிறந்தார். 1844 வருடம்சுவாமிகளின் தாய்
பிறந்தார்.1859ம் வருடம்தந்தைக்கு 19 வது வயது,தாய்க்கு15வயது திருமணம் நடந்தது.ஆறு
மாதங்கள் ஆன பிறகு சித்தப்பா,சித்திக்கு திருமணம் நடந்தது.சுவாமிகளின் சித்தப்பா
மனைவியும் (சித்தி) ,தாயும் அக்கா,தங்கைகளின் குழந்தைகள். இருவருக்கும் 3 மாதம்
வயது வித்தியாசம். குலமறியா நாத கன்னி கோட்டைக்குள் வந்து சேர்ந்தாள்(சுவாமிகளை
பெற்ற தாய்)நத்தை வயிற்றில் முத்து பிறக்கும் என்று எல்லோரும்
சந்தோஷப்பட்டார்கள்.ஒன்றரை 1 1\2 வருடம் பிற்பாடுஅண்டை பட்சி போல் குழந்தை
பிறந்தது  (சுவாமிகள் பிறந்தார்).(1861 சித்திரை 28ம் நாள்)).குழந்தையை முத்து
என்று பெயரிட்டு முத்தமிட்டு வளர்த்தார்கள். சுவாமிகளுக்கு ஜந்து மாதமாகையில்
பாட்டன் எனது பேரன் உலகத்தை ராஜபரிபாலனம் செய்வான் என்று கணித்து வைத்தார்.ஏழு
மாதமாகையி்ல் பாட்டி வீட்டில் சுவாமியின் எடைக்கு மூன்று எடை தங்கம்
கொடுத்தார்கள்.சுவாமிக்கு எட்டு மாதமாகையி்ல் சித்திக்கு 13 நாள் பெண்
குழந்தை.எட்டு மாதமாகையி்ல் யாரோ ஒருவர் பைத்தியகாரர் போல் வந்து பசிக்கிறது
என்று கேட்டார்சுவாமிகளின் தாய் ஐயோ யாரோ பசிக்குது என்கிறார்களே அவருக்கு
பசியாற்றுங்கள் என்றார்.அவர் ஆகாரம் சாப்பிட்டு விட்டு ஊஞ்சலில் ஆடும் குழந்தையை
(சுவாமிகளை) பார்த்து இது ஆண்டவன் குழந்தை என்று சொல்லி விட்டு மாயமாய்
மறைந்தார்.துழவி துழவி பார்த்தார்கள் காணவில்லை.இது நடந்த மூன்றாம் நாள்
சுவாமிகளின் தாய் ஒரு பயங்கரமான கனவு கண்டார்.அந்த கனவை மாமனாரிடம் சொல்கையில் நீ
ஒரு சிறிய குழந்தையம்மாஉன் கனவு பலித்தால் ஒரு வாரத்திற்குள் துயரமான செய்தி வரும்
என்று சொன்னார்மூன்றாம் நாள் நெய்விட்டு சாதம் பிசைந்து ஒரு வாய்
சாப்பிட்டவுடன்சுவாமிகளின் தாய் திரிலோகத்தை விட்டு பரலோகம் சென்றடைந்தார்.13 
 நாள் பெண் குழந்தையை வளர்க்காமல் சுவாமிகளை சித்தி வளர்த்தார்.சுவாமிகளுக்கு தாய்
யாரென்று தெரியாது,தகப்பன் யாரென்று தெரியாதுதகப்பன் தனக்கு மறுமணம் தேவையில்லை
"என் மனைவி போல் மற்றவள்இருக்க மாட்டாள்" என்று சொல்லி விட்டு நிறைய தர்மங்கள்
செய்து வந்தார்.சுவாமிகளுக்கு 3 வயது ஆகும் போது பாட்டன் தன்னுடைய அந்திம
காலம்வருடம்,மாதம்,நாள்,நாழிகை,நிமிடம்,திதியாருக்கும் தெரியாமல் குறித்து வைத்து
விட்டுஉறவினர்கள் அனைவரையும் அழைத்தார்.ஏன் அழைத்தீர்கள் என்றுஅவர்கள் கேட்க
சிரித்து விட்டு கார்களை எல்லாம் உள்ளே விடுங்கள்நாளைகாலை போகலாம் என்று
சொன்னார்.10.30 மணியளவில் பாலைஇரண்டாவது முறை குடித்து விட்டு படுத்தார் 12
மணியளவில்திரிலோகத்தை விட்டு பரலோகம் சென்றடைந்தார்.இது குறித்து சுவாமிகளுக்கு
அப்போது ஏதும் தெரியாது. சுவாமிகளுக்கு6 வயதாகையில் 6-1\2 காணி நஞ்சை நிலம் அந்
நாளில் இங்கிலாந்தில் படித்த வாத்தியாருக்கு எழுதி வைத்துவிட்டு கல்வி கற்பிக்க
சொன்னார்கள்.ஒரு நாள் காலை வாத்தியார் தன் மடியில் சுவாமிகளை அமர்த்தி விரல்களைப்
பிடித்துஅ ஆ எழுத சொன்னார்.மதியம் சுவாமிகள் வாத்தியாரை பார்த்து "நான் சொல்வது
போல் நீ எழுது" என்றார்."தப்பப்பா" என்றார் வாத்தியார்அதற்கு சுவாமிகள் நீ யார்
என்னை தப்பு என்று சொல்வதற்கு என்று கேட்டு வாத்தியாரைகன்னத்தில் அடித்து
விட்டார்.நீஎன்ன எனக்கு சொல்லி கொடுப்பது என்று கூறி எதையும் ஏற்று
கொள்ளவில்லை.சுவாமிக்கு 16 வயது முடிந்து 16ம் நாள் சுவாமிகளின் தகப்பன் தன்னுடைய
ஆவி பிரியும் அந்திம காலம் வருடம்,மாதம்,நாள்,நாழிகை,நிமிடம்,திதி (அப்பா எழுதியது
போல்) யாருக்கும் தெரியாமல் குறித்து வைத்து விட்டு அக்காவிடம்((சுவாமிகளின்
அத்தை) அத்தையை சுவாமிகள் பெரியம்மா என்று நினைத்து கொண்டு இருந்தார்) உறவினர்களை
கூப்பிட்டுவரச்சொல்லி ஆள் அனுப்புங்கள் என்றார்.அக்கா(அத்தை)எல்லோரையும் விட
மூத்தவர்.அம்மாவை விட பெரியவர். அத்தையும் தம்பி தர்மம் நிறைய செய்ய உறவினர்களை
அழைக்க சொல்வதாக நினைத்தார். சுற்றத்தார் நூற்றுக்கணக்கானவர் வந்து ஏன் எங்களை
அழைத்தீர்கள் என்று கேட்க ஒன்றும் இல்லை குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்
என்றார்.(அப்போதுதான் சுவாமிகளுக்கு தெரிந்தது அதற்கு முன் எதுவும்
தெரியாது).அதற்கு அனைவரும் குழந்தையை நீயா பார்த்து கொண்டு இருக்கிறாய் நாங்கள்
தானே பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்கள்.ஏன் அப்படி சொல்கிறீர்கள்
என்றி மனக்கலக்கத்துடன் கேட்க ஒன்றுமில்லை என்று சிரித்து நாளை நீங்கள் போகலாம்
என்றார்.அப்போதுதான் சுவாமிக்கு விவரம் தெரிந்தது அதற்கு முன் எதுவும் தெரியாது
தகப்பனை தகப்பன் என்று தெரியாது பெரியப்பன் என்றும்,சித்தப்பனை தகப்பன்
என்றும்,சித்தியை தாய் என்றும் இருந்தார். தாய் இறந்ததும் தெரியாது எதுவுமே
தெரியாது.காலையில் எல்லோரும் டிபன் சாப்பிட்டனர்.  தாயுடன் பிறந்தவர் (மாமா)
கட்டிலிலும் ஆண்கள் ஈஸி சேரிலும் பெண்கள் கீழே பாயிலும்
உட்கார்ந்திருந்துவெற்றிலைப்பாக்கு போட்டு கொண்டு இருந்தார்கள்.கூட்டம் ஹாலில்
நிறைந்து இருந்தது. சித்தப்பன் மேல் உட்கார்ந்திருந்த சுவாமிகளை தகப்பன்
கூப்பிட்டார்.அப்போதுதான் சுவாமிக்கு விவரம் தெரிந்தது அதற்கு முன் எதுவும்
தெரியாது தகப்பனை தகப்பன் என்று தெரியாது பெரியப்பன் என்று நினைத்திருந்தார்.
(எப்போதும் கூப்பிடுவார் முத்தம் கொடுப்பார்)சுவாமிகளை தன் மடி மீது அமர்த்தி
முத்தமிட்டுநான்   திரிலோகத்தை விட்டு பரலோகம் 

சேரப்போகிறேன் நீயும் சில காலம்  திரிலோகத்தை விட்டு பரலோகம் சேருவாய்
என்றார்.சுவாமிகள் திரும்ப வந்து சித்தப்பன் மீது அமர்ந்து கொண்டார்.சிறிது
நேரத்தில் தகப்பனுக்கு முகம் வியர்த்தது  அத்தை தகப்பனிடம் " நீ வெற்றிலைப்பாக்கு
போடும் போது  சொத்தை பாக்கை போட்டு மென்று விட்டாய்
அதனால் தான் வேர்க்கிறது வாய் கொப்பளித்து விட்டு ஒரு வாய் காபி குடி
என்றார்.எனக்கு ஒன்றும் இல்லை எல்லோரும் காபி குடியுங்கள் என்றார்.நம் வீட்டில்
எப்போதும் தவலை காபிஎப்போதும் காய்ந்து கொண்டிருக்கும் நீ முதலில்வாய்
கொப்பளித்து விட்டு காபி குடி என்றார்.காபி வாங்கி குடித்தார் பத்து
நிமிடத்துக்குள் கீழே சாய்ந்தார்.ஓரு மணி நேரத்தில் உயிர் பிரிந்தது. அப்போது
சுவாமியை துாக்கி வைத்து தாயும் இல்லை தகப்பனும் இல்லை என்று எல்லோரும்
அழுதார்கள்.அதுவரை சுவாமிகளுக்கு ஓன்றும் தெரியாது.அன்று முதல் 26 நாள் வரை
சுவாமிகள் என் தாய் எங்கே?  என் தந்தை எங்கே? இது நாள் வரை
ஏன் யாரும் சொல்லவில்லை? அழுது கொண்டும், தண்ணீர் அருந்தாமலும்,உணவு
சாப்பிடாமலும் இருந்தார்.மக்கள் அனைவரும் அழுது கொண்டு சமாதானப் படுத்த முயன்றனர்
முடியவில்லை.26ம் நாள் 6 வாசற்படி கடந்து பூஜை அறைக்கு சென்றார் பூஜை அறையில்
பெருமாள்,முருகன் படங்கள் இருந்தது
பூஜை அறைக்கு குளித்து சுத்தமாக இருக்கும்போதுதான் போவார்கள். என் தாய் எங்கே? 
என் தந்தை எங்கே?என்று அங்கே உள்ள படங்களை பார்த்து கேட்டு அழுதார்.கோபத்துடன்
படங்களை பிடுங்கி எறிந்தார்.இனி எங்கேயும் இருக்க கூடாது என்று எண்ணிணார்.அங்கு
பெரிய இரும்பு பீரோ இருந்தது அதை சாவி மூலம் திறக்க முயன்றார்,திறக்க
தெரியவில்லைஅருகே உள்ள ஸ்டுலின் மேல் ஏறி பீரோவின் மேல் கைவைத்து துழாவினார்   36
வெள்ளி ரூபாயும் (அப்போது நோட்டு கிடையாது) தகப்பன் போட்டிருந்த செயின் மோதிரம்
வைரக்கல் காப்பு சுவாமி போட்டிருந்த செயின் மோதிரம் வைரக்கல் காப்பு  இருந்தது
அதை எல்லாம் எடுத்து துணியில் சுற்றி மேலே போட்டு இருந்த பட்டு வஸ்திரத்தில்
மறைத்து வைத்தார்.அப்பொழுது எப்போதும் பசி தெரியாத குழந்தைக்கு மறைத்து
வைத்தவுடன் பசி தெரிந்ததுவெளியே வந்து அம்மா பசிக்கிறது என்றார்
அத்தை,பெரியம்மா,சித்தி மூன்று பேரும் நெய் சாதம் பருப்பு சாதம்  தயிர் சாதம் என்று
ஆளுக்கு ஒரு வாய் ஊட்டினார்கள்.26ம்    நாள் இன்று தான் ஆகாரம் குழந்தைக்கு
இறங்கியது என்று எண்ணி சந்தோஷப்பட்டு ஊஞ்சலில் வைத்து ஆட்டினார்கள்.நான்
தூங்குகிறேன் நீங்கள் போய் குளித்து விட்டு சாப்பிடுங்கள் என்று சுவாமி
கூறினார்.அவர்கள் சென்றவுடன் அலுங்காமல் வெளியே உள்ள தடம் வழியே வீட்டை விட்டு
வெளியேறினார்.ஏரிக் கரையோரம் 3/4 கி.மீ தூரம் நடந்து சென்றார்.அப்போது ரோடு
கிடையாது பஸ் கிடையாது 10-12 பேர் பாய் போட்டு உட்காரும் சிறிய அளவு கரியில்
லொடக் லொடக் என்று ஓடும் வண்டி வந்தது.அந்த வண்டி பழனி செல்லும் வண்டி. எனக்கு
ஒரு அட்டை (டிக்கெட்) கொடு என்று சுவாமி கேட்டார் .நீ ஜமீன் வீட்டு பிள்ளை உனக்கு
எதற்கு அட்டை என்று வண்டிக்காரர் கூறினார்.ஜமீன் வீட்டில் எல்லோரும் பழனி
சென்றிருப்பார்கள் அவர்களிடம் குழந்தையை சேர்ப்பித்து விடலாம் என்று எண்ணி
வண்டியில் அழைத்து சென்றார்பழனி சென்றவுடன் வண்டிக்காரர் குழந்தையின் சுற்றத்தாரை
தேடினார்.அப்போது சுவாமி ஓடி மறைந்து கொண்டார்.குடும்பத்தாரையும் காணவில்லை
குழந்தையையும் காணவில்லைநாம் ஊருக்கு திரும்பி சென்று குடும்பத்தாரிடம்
சொல்லிவிடலாம் என்று நினைத்து வண்டியை ஊருக்கு திருப்பினார். வண்டி சென்ற பிறகு
சுவாமி அருகில் உள்ள தேங்காய் பழக்கடைக்கு சென்றார். (அந்த காலத்தில் ஒரு
பைசாவிற்கு இரண்டு தேங்காய்) தேங்காய் பழம் கொடு என்றார்,கடைக்காரர் எவ்வளவு என்று
கேட்க? ஐந்து ரூபாய்க்கு கொடு என்றார்.ஒரு பெரிய கூடையில் வைத்தார் ஒரு முரடன்
கூடையை தூக்கி கொண்டு கோயில் வரை வந்தான்.அப்போது  அபிஷேக டிக்கெட்
காலணா.சுவாமிகள் டிக்கட் வாங்கவில்லை பூசாரி,ஜயர் எல்லாம் கிடையாது அந்த
காலத்தில்.  பூஜை செய்பவர்  டிக்கட் எங்கே என்று கேட்டார். கூடையை தூக்கிவந்த
முரடன்திட்டப்போகிறார்கள் என்று பயந்து எட்டப் போய் நின்று விட்டான்.சுவாமிகள்
தட்டை முதலில் எடுத்து சென்று பூஜை செய்து வந்து கொடுத்தார்,எல்லோருக்கும்
உடைத்து கொடுங்கள் என்று சுவாமிகள் கூறினார்.அவர் தேங்காயை எல்லோருக்கும் உடைத்து
கொடுத்தார்.சுவாமி ஜந்து ரூபாய்க்கு (வெள்ளி காசு) சில்லறை கொடு என்றார். காலணா
எடுத்து கொண்டு மீதியை கொடுத்தார் கூடையை தூக்கிவந்தமுரடனுக்கு காலணா
கொடுத்தார்.அந்த ஆள் இரண்டு நாள் சாப்பிட கூலி கொடுததார் என்று சுவாமியை இடம்புறி
வலம்புறி சுற்றி கும்பிட்டார்.னுக்கு காலணா கொடுத்தார்.அந்த ஆள் இரண்டு நாள்
சாப்பிட கூலி கொடுததார் என்று சுவாமியை இடம்புறி வலம்புறி சுற்றி
கும்பிட்டார்.சுவாமிகள் ஏழைகளுக்கும் சாமியார்களுக்கும் சில்லரையை போட்டு கொண்டே
மலையை விட்டு கீழே  இறங்கினார்.சில்லரை காசும் தீர்ந்து வட்டது, ஏழைகளும் கண்ணில்
தென்படவில்லை.அழுதுகொண்டே கீழே இறங்கினார் வழி வேறு தெரியவில்லை,{ முன்பு
சுவாமிகளை தூக்கி கொண்டு பலமுறை குடும்பத்தினர் பழனி வந்துள்ளனர்ஏழு மாதமாகையி்ல்
பாட்டி வீட்டில் சுவாமியின் எடைக்கு மூன்று எடை தங்கம் கொடுத்ததை பழனி கோயிலுக்கு
தங்கத்தேர் செய்ய கொடுத்தனர்)வெகுதூரத்தில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு வந்து
அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். அப்போது துணி இல்லாமல் ஒரு ஜீவன் வந்தார்(அழுக்கு  சுவாமிகள் )
கட்டிபிடித்து உன் ஊர் எது? தாய் தந்தை யார்? என்று கேட்டார்.சுவாமிகள்  எனக்கு
ஊரும் இல்லை பேரும் இல்லை தாயும் இல்லை தந்தையும் இல்லை என்று பயந்து கொண்டே
கூறினார். நெஞ்சை தடவி கொடுத்து பயப்படாதே எங்கே போகிறாய் என்று கேட்டார் அதற்க்கு
சுவாமிகள் எனது தாய் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி போகிறேன் என்றார்.

அதற்க்கு சுவாமிகள் எனது தாய் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி போகிறேன் என்றார்.உனது
தாய் தந்தை இருக்கும் இடத்திற்க்கு அழைத்து செல்கிறேன் என்றார் .அப்பொழுது தான்
முதன்முதலில் ரயில் சின்ன பெட்டி போட்டு ரயில் தடம் சரியாக உள்ளதா என்று பரிசோதனை
செய்து கொண்டிருந்தார்கள்.அந்த சின்ன ரயில் பெட்டியி்ல் இருவரும் பயணம்
செய்தனர்.என்னிடம் காசு இருக்கிறது என்று சுவாமிகள் கூறினார்.உனக்கும் எனக்கும்
காசு எதற்கு என்றார் அவர். வண்டி கிளம்பியது.வண்டி ஒரு கிலோமீட்டர் தூரம்
சென்றவுடன் நின்று விட்டது. தண்டவாளமும் அதுவரைதான் இருந்து.
அந்த  இடத்தை விட்டு இறங்கி குழந்தையை (  சுவாமிகளை ) அழைத்து கொண்டு மலைமேல் மூன்று நாள் நடத்தி அழைத்து சென்றார் .அந்த மலைமேல் உள்ள குகைக்குள் வா வா என்று கூப்பிட்டார் ,எனக்கு பயமாக இருக்கிறது நான் உள்ளே வரவில்லை என்று சுவாமிகள் கூறினார்.அவர் குகைக்குள் சென்று ஒரு காட்டாரியையும் ஏட்டு சுவடிகளையும் எடுத்து வந்து இதைப்படி என்று சொன்னார்.இது எல்லாம் எனக்கு எதற்கடா ? தாய் தகப்பனாரை காட்டடா என்று சுவாமிகள் கூறினார் .இதில் தான் உன்  தாய் தகப்பனார் இருக்கிறார்கள் படி என்று சொன்னார்.சுவாமிகள் எனக்கு படிக்க தெரியாது என்றார். இரண்டு நாள் இப்படி சொல் என்று சொல்லி கொடுத்தார் ,மூன்றாம் நாள் இது விற்பதும் அல்ல வாங்குவதும்  அல்ல இது அறியாத மொழி புரியாத கரங்கள் உனக்கு தன்னாலே தெரியும் என்றார் .இது எல்லாம் எனக்கு எதுக்கடா என்று சொல்லி விசிறி எறிந்துவிட்டு என் தாய் தகப்பனாரை காட்டடா என்று சொல்லி விட்டு ஒரு பாறையின் மேல் உண்ணாமலும் உறங்காமலும்  சுவாமிகள் படுத்து இருந்தார். பதினெட்டாம் நாள் ஒரு சிறு குழந்தையை போல் வந்து விசிறி எறிந்ததை எடுத்து கையில் கொடுத்து தெம்பில்லாமல் இருந்த குழந்தைக்கு சாப்பிட்டது போல் தெம்பு வந்தது.நாம் என்ன சாப்பிட்டோம் என்று சுவாமிகள் எண்ணினார் .தன் உள்ளதை   உற்று பார்த்தார் உள்ளத்தில் காற்று நீர் நெருப்பு மூன்றும் தெரிந்தது .துணி இல்லாமல் படுத்து இருந்தவருக்கு உனக்குத்தான் அப்பன் கொண்டுவந்து கொடுத்தார் என்று சொல்லி அந்த பெரியவர் முகத்தை துடைத்தார் .இப்படி வேண்டாம் என்று திட்டினாலும் அடித்தாலும் காய் கனிகளை கொண்டு வந்து ஊட்டி வளர்த்தினார் அழுக்கு சுவாமி .ஒரு நாள் நீ கோட்டீஸ்வரன் வீட்டு பிள்ளை உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் அழுக்கு சுவாமிகள் .என்னை ஏன் கோட்டீஸ்வரன் வீட்டு பிள்ளை என்று சொல்கிறாய் என்று கேட்டு தன்னிடமுள்ள  மோதிரம் செயின் காப்பு எல்லாவற்றையும் கழட்டி மலைமேல் இருந்து      வீசி எறிந்தார் .உனக்கு ஒன்றும் வேண்டாமா என்று மூன்று முறை அழுக்கு சுவாமிகள் கேட்க ஒன்றும் வேண்டாம் என்று சுவாமிகள் கூறினார் .
அதற்கு அழுக்கு சுவாமிகள்   உன் பெரியவர்கள் செய்த புண்ணியத்தால் அவர்கள் உன்னை பார்கத்தான் வேண்டும் நீ நாட்டுக்கு நல்லது செய்யத்தான் வேண்டும் என்று சொன்னார் .அதற்கு சுவாமிகள் நான் ஏன் ஒருமுறை அவர்களை பார்க்க போகிறேன் நான் ஏன் நாட்டுக்கு நல்லது செய்ய போகிறேன் நான் சாகத்தான் போகிறேன் என்று கூறி அழுக்கு சுவாமிகளை கல்லால் அடித்தார் .கல்லால் அடித்ததை வாங்கி கொண்டு உனக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை நீ சென்ற இடமெல்லாம் செல்வம் என்று அழுக்கு சுவாமிகள் கூறினார் .கல்லால் அடித்தாலும் உதைத்தாலும் அவர் காய்கனிகளை கொண்டு வந்து ஊட்டி சில காலம் அடியும் வாங்கி கொண்டு சுவாமிகளை வளர்த்தார் அழுக்கு சுவாமி .சில காலத்திற்கு பிறகு நாம் அடித்தாலும் நமக்கு காய் கனிகளை கொடுத்து வளர்த்தார் நாம் அவர்களை கும்பிடலாம் என்று நினைத்து எழுந்தார் சுவாமிகள் .உன்னிடம் தான் கடவுள் இருக்கிறார்    என்று சொல்லி நான் உன்னைத்தான் கும்பிடவேண்டும் என்று சொல்லி கும்பிடவிடாமல் ஊட்டி வளர்த்தினார் அழுக்கு சுவாமி .சில காலத்திற்கு பிறகு எனக்கு வேட்டி கட்டி விடுகிறாய் நீ ஏன் துணி இல்லாமல் இருக்கிறாய் என்று சுவாமிகள் அழுக்கு சுவாமிகளை கேட்டார் .
அதற்கு அவர் உண்பேன் அப்பா உறங்கினேன் அப்பா மக்களுக்கு நன்மை செய்தேன் அப்பா அந்த நன்மை எல்லாம் தீமை என்று சொன்னார்கள் அப்பா அதை ஒரு சிலர் நன்மை என்று சொன்னார்கள் அப்பா அதுவும் பொறாமை என்று மூவரை விட்டு என்னை கொல்வதற்கு அனுப்பினார்கள் .அந்த மூவரும் என் முகத்தை  பார்த்துவிட்டு அவர்களின் பேச்சை கேட்டு உங்களை கொல்ல வந்தோமே என்று கூறி கலங்கி அழுதார்கள் .என்னை கொன்று விட்டேன் என்று சொல்லுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு நான் யார் கண்ணிலும் படாமல் உண்ணாமலும் உறங்காமலும் ஆடையற்று திரிந்தேன் அப்பா சிலகாலம் . ஒரு நாள் பசி வந்தது அப்பா ஒரு உத்தமன் வீட்டில் பசிக்குது என்று கேட்டேன் அப்பா பைத்தியக்காரன் உள்ளே வந்தான் என்று வெளியே உள்ள கல் தூணில் கட்டி விட்டு உள்ளே சாப்பிட்டு விட்டு வெளியில் இருப்பவருக்கும் சாப்பிட கொடுத்து கட்டை அவிழ்த்து விடலாம் என்று வந்தான் .வந்தவனுக்கு சரீரம் நிறைய இடத்தில் இருப்பது போல் அவனுக்கு காட்சி தெரிந்தது ஐயோ பாவம் செய்து விட்டேனே என்று கதறினான் மீண்டும் பார்க்கும் போது கட்டி இருப்பது போல அப்பன் காட்சி கொடுத்தார் .கட்டை அவிழ்த்துவிட்டு காலில் விழுந்து என்னை மன்னியுங்கள் என்று மன்றாடி கேட்டான் ஆகாரம் அருந்துங்கள் என்றான் .உன்னிடம் சாப்பிட வரவில்லை என்னுடைய அப்பன் உன்னிடத்தில் காட்சி தர கட்டளை இட்டான் அப்பா .போன இடமெல்லாம் பின்னால் தொடர்ந்து வந்து அழுதான் அப்பா .ஐந்தாம் நாள் நான் உட்காரும் இடத்தில் கற்களால் கட்டி கும்பிடலாம் என்று கற்களை கொண்டு வந்து போட்டான் அப்பா.அப்போது அவனை கூப்பிட்டு நீ ஒரு தவறும் செய்ய வில்லை நீ என்ன நினைத்தாயோ அதன் படி செய் உன்னுடன் அமர்ந்து சாப்பிடுகிறேன் என்று சொன்னேன் அப்பா .என்னுடைய சரீரம் சாப்பிடாமல்  ஐந்து வருடங்கள் ஆனாலும்     வாடாது ஆனால் உன் சரீரம் ஐந்து நாளுக்குள் வாடி வதங்கி விட்டது என்று சொன்னேன் அப்பா.பிறகு அவன் ஒரு மாதத்திற்குள் சிறு கோயில் கட்டி அங்கு நூறு பேருக்கு ஆகாரம் அளித்து என்னை அழைத்து மூன்று கை சாப்பிட வைத்தான் அப்பா நீங்கள் என்னுடனேயே இருக்க வேண்டும் என்று காலை பிடித்து அழுதான் அப்பா. உன் அன்புக்கு நான் கட்டுப்பட்டு உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு பத்து நாள்கள் கழித்து  அவனுக்கு தெரியாமல் அப்பன் சந்நிதிக்கு வந்தேன் அப்பா சந்நிதிக்கு வந்து என் குறைகள் எல்லாம் உன்னிடம் ஒப்படைத்து ஊட்டி வளர்த்தேன் அப்பா .சிறிது காலம் அந்த உத்தமன் என்னை தேடி பார்த்து விட்டு கோயிலில் உள்ளுக்குள் தான் இருக்கிறேன் என்று நினைத்து கோயிலை வலம் வந்து   கொண்டு இருக்கிறான் அப்பா .அந்த இடத்திற்கு போகலாம் என்று சுவாமிகளை அழைத்து கொண்டு அழுக்கு சுவாமிகள் சென்றார. அந்த உத்தமனும் மற்றவர்களும் பார்த்துவிட்டு அழுக்கு சுவாமிகள் உயிரோடுதான் உள்ளார் என்று சந்தோஷப்பட்டு சுற்றி கும்பிட்டார்கள் .குழந்தை தான் கடவுள் அவரை கும்பிடுங்கள் என்றார் .அவர்கள் குழந்தையை கும்பிடவும் என்னை ஏன் கும்பிடுகிறீர்கள் என்று குழந்தை( சுவாமிகள்) கல்லால் அடித்தார்.இப்படி இருக்கையில் ஒரு அம்மாவிடம் அடியே அலுமேலு இந்த இடத்தில வில்வ கன்றும் விளாங்கன்னும் வையடி  என்று சொன்னார்.ஐயோ அவன் ரவுடி எந்த இடமெல்லாம் அவனுடையது என்று சொல்கிறான் என்று சொன்னார் அந்த அம்மா. இல்லை இந்த இடமெல்லாம் உனக்குத்தான் ஆகும்  என்றார் .அந்த ரவுடி எந்த கலெக்டர் என்றாலும் மகான் என்றாலும் ஏன் முன்னால் கை கட்டி இருக்க இடம் கேட்டால் கூட நிற்கக்கூட இடம் கொடுக்க மாட்டேன் என்றான் .இதை கேள்விப்பட்டு அவர் விளாமரமும் வில்வ மரமும் வை என்று சொன்னார் .சொல்லி போகையில் ரவுடியின் தாயும் பாட்டியும் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்டார்கள் .எங்களை கும்பிட்டதால் காலையில் இருந்து மாலை வரை நிற்காமல் சுற்றிவரும் இடமெல்லாம் உங்களுக்கு சொந்தம் என்று சொல்லி நிற்க இடம் கொடுக்க மாட்டேன் என்று சொன்னவனின் குடும்பம் பூண்டற்று போகும் என்று சொல்லிவிட்டார்கள்.கொஞ்ச நாளில் அவன் கெட்டு அந்த அம்மாவிடம் ஐந்து பத்து என்று ஏக்கருக்கு குறைத்து விற்று விட்டான் .அதே இடத்தில அங்கேயே நான் சமாதி அடைகிறேன் என்று கல் மேடையில் இந்த வருடம் இந்த மாதம் நாழிகை நிமிடம் என்று கல்லில் எழுதி வைத்தார் .உங்களை கும்பிட சின்னம் இல்லையே என்று சாது சாமிகளும் மற்றவர்களும் கேட்க ஒரு தரம் எடுங்கள் என்று சொன்னார் .படம் எடுத்ததில் இரண்டுதான்  விழுந்தது   அவருடைய படம் தெளிவாக தெரியவில்லை குழந்தை மார்புமேல் கை போட்டு இருந்தது குழந்தை படம் தெளிவாக தெரிந்தது . குழந்தை தான் கடவுள் என்று சொல்லி நான் சமாதி அடைவேன் குழந்தை சிலகாலம் நான் சமாதி ஆனவுடன் மனித சஞ்சாரம் இல்லாத இடம் செல்லவும் என்று கல்லில் எழுதி வைத்தார். குழந்தைதான் எல்லாவற்றிக்கும் கடவுள் என்று சொன்னார் . குழந்தையை கும்பிடப்போனால் குழந்தை என்னை ஏன்  கும்பிடுகிறீர்கள் என்று கல்லால் அடித்தது .சமாதிக்குள் போய் உட்கார்ந்தார் உட்கார்ந்த அரைமணி நேரத்திற்குள் அனல் போல் தோணப் பட்டது போய் பார்கையில் உட்கார்ந்த நிலையில் ஆத்மா இல்லை என்று எல்லோரும் அழத் தொடங்கினார்கள் .நம்மை விட்டு இவரும் போய் விட்டாரே என்று குழந்தை ஓடத் தொடங்கியது .எல்லோரும் பிடித்து சமாதானம் பண்ணி அழைத்து மூன்றாம் நாள் சமாதி வேலையை பூர்த்தி செய்தார்கள் .அன்று யாருக்கும் தெரியாமல் குழந்தை கன்னியாகுமரி மலை நோக்கி சென்றது அங்கு எண்பத்திஐந்து வயது பெரியவர் உட்கார்ந்த நிலையில் இருந்தார் அவருக்கு தினமும்  பனிரெண்டு மணிக்கு ஒரு செம்பு பால் பழம்   
கொண்டு வந்து வைப்பார்கள் இந்த குழந்தை ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறதே என்று பாலை கொடுத்தார் . எனக்கு ஏண்டா பாலை கொடுக்கிறாய் என்று திட்டியது .இருபது நாட்கள்  கழித்து அந்த இடத்தை விட்டு கிளம்பியது .உன்னை பார்த்து பயமாக இருக்கிறது  சிறுவனாக இருக்கிறாய் இந்த கல்லில் உள்ள விலாசத்திற்கு அப்பன் சந்நிதிக்கு போனால் கடிதம் போடு என்று சொன்னார் .நீ சொல்வது எல்லாம் தவறடா என்று குழந்தை கூறியது .நான் ஒரு தவறும் செய்யவில்லையே என்று குழந்தை காலை பிடித்து அழுதார் .நீ ஒரு தவறு செய்யவில்லை இரண்டு தவறு செய்து இருக்கிறாய்  என்று குழந்தை கூறியது என்னவென்று அவர் கேட்க குழந்தை முதல் தவறு நீ பனிரெண்டு மணிக்கு பால் வருகிறதா இல்லையா என்று நினைப்பது முதல் தவறு ,காசை கையில் தொடாதவரை கடிதம் போடு என்று சொல்வது இரண்டாவது தவறு என்று சொல்லி விட்டு மலைபருவ இடங்களுக்கு சென்றது .மலைபருவத்தில் உட்கார்ந்து இருக்கையில் காடு யானைகள் நாற்பது கூச்சலிட்டு சுற்றி நின்றன ,இன்றுதான் நான் சாகப்போகிறேன் என்று குழந்தை எண்ணியது .வலதுபுறம் நூறு வயதான பெரியம்மா ஒரு கட்டாரியை கையில் கொடுத்து இந்த காட்டு யானைகளை அடி என்று சொன்னார் .நான் சாகத்தான் போகிறேன் நீ ஓடி விடு என்று குழந்தை கூறியது .பெரியம்மா இல்லை நான் உன் காலடியில் தான் இருப்பேன் என்று சொன்னார் காட்டு யானைகளை உற்று பார்த்தால் காட்டு யானைகள் அருகில் காட்டாரியுடன் பெரியம்மா இருப்பது போல் தோன்றியது மீண்டும் பார்கையில் பெரியம்மா மாயமாய் மறைந்து விட்டார் .காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக கூச்சல் போட்டு சுற்றி வந்தது காட்டு யானைகள் கூச்சல் போடுகிறது என்று சிறிது தூரம் சென்று ஒரு பாறையின் அருகில் போய் குழந்தை உட்கார்ந்தது .அப்பொழுது காண்டாமிருகங்கள் கூட்டம் கூட்டமாக வந்தது .அப்பொழுதுதான் குழந்தைக்கு பயம் வந்தது நான் இப்பொழுதுதான் சாகப் போகிறேன் என்று நினைத்து கண்களை மூடியது அப்பொழுது காண்டாமிருகம் குழந்தையின் தலைமேல் நாக்கால் நக்கியது .நக்கி விட்டு போகும் போது பாறையின் மீது தன பாலை ஈன்றது .குழந்தை கண் திறந்து பார்த்தவுடன் பாறையின் மேல் பால் இருந்ததை பார்த்தது அப்பொழுது குழந்தைக்கு பசித்தது பாலை   சாப்பிட்டது .சில காலம் அந்த காண்டாமிருகம் பால் கொடுத்து வந்தது  சில காலத்திற்கு பிறகு அந்த காண்டாமிருகம் வரவில்லை ஏன் அது வரவில்லை என்று நினைத்து உற்றுபார்கையில் சகலஜீவன்கள் இடத்திலும்  நம் தாய் தந்தை இருக்கிறார்கள் என்று எண்ணியது .அந்த இடத்தை விட்டு உண்ணாமலும் உறங்காமலும் மலைப்பருவத்தை விட்டு கீழே இறங்கினார் .இறங்கி வருகையில் ஜனங்கள் பார்த்து பாலும் பழமும் கொண்டு வந்து கொடுத்தார்கள் எனக்கு ஏன் பாலும் பழமும் என்று குழந்தை திட்டி அடித்தது .மக்கள் உங்களுக்கு பாலும் பழமும் கொடுத்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லி கதறி அழுதார்கள் .அப்பொழுது ஜனங்களை உற்று பார்த்ததும் பார்த்த முகமெல்லாம் வேர்த முகமாக பார்க்கப்பட்டது .வேர்த்த முகமெல்லாம் பூத்த முகமாவது எப்போதுஎன்று குழந்தை கேட்டது .ஏனப்பா நான் நல்லது தான் உண்டாக்கினேன் உன் தாயை கேள் என்று சொன்னார் தாயை பார்த்து இதை ஏன் என்னை பார்க்க வைத்தாய் என்று கேட்க அறிவதும் மகனே புரிவதும் மகனே உன்னிடம் இருப்பது பின்னே நீ ஏன் அதை உற்றுபார்க்கிறாய் நீ சென்ற இடமெல்லாம் செல்வம் அப்பா என்று சொன்னார் .சில காலத்திற்கு பிறகு பழனியில் புளிய மரத்தின் அடியில் இருக்கும் பாறையின் மேல் குழந்தை படுத்து இருந்தது . சாது மடத்தில் ஐந்தாயிரம் பேருக்கு சாப்பிட அன்னதானம் செய்து  கொண்டு ஒருவர் இருந்தார் .அவர் குழந்தையை சாப்பிடகூப்பிட்டார்  ஏன் சாப்பாடு எனக்கு என்று குழந்தை சாதுவை அடித்தது .காலியி ஆறு கால பூஜை முடித்து ஒரு DSP ஒரு கடிதம் எழுதினான் .குழந்தை அவனைப்பார்த்து நன்றாக படித்து உள்ளாய் பண்பாடு இல்லாமல் எழுதுகிறாயே என்று கேட்டது .அவன் ஏன் எழுத்தை பண்பாடு இல்லை என்று யார் சொன்னது என்று அடிக்க கை ஓங்கினான் .பேனாவும்  பேப்பரும் கொடுத்து எழது பார்க்கலாம்என்றான் .குழந்தை சோறு போட்டு குழம்பு இல்லாதது போல் இருக்கிறது என்று சொல்லி அட்டையை கையில் கொடு என்று கேட்டது .அட்டையை கையில் கொடுத்து எழுது  என்று சொன்னான் எந்த மொழியில் எழுதுவது என்று குழந்தை கேட்க ஆங்கிலத்தில் தான் சொல்வேன் என்றான் . நீ எது வேண்டுமானாலும்   சொல் நான் எழுதுவேன் என்று குழந்தை சொல்லியது ,அப்படி சொல்லிவிட்டு நாம் தப்பாக எழுதினால் மற்றவர்கள் தப்பாக நினைப்பார்களே என்று எண்ணியது .அப்பொழுது பிறந்த இடத்தின் நினைவு வந்தது .ஜமீன் பேரன் பைத்தியக்காரன் என்று எழுதிவிட்டு அவன் சொன்ன ஆங்கில வார்த்தையை மூன்று வரி எழுதவும் அவன் அதை பார்த்து விட்டு கை கட்டி நின்றான் .அவன் பின்னே அதை பார்த்து விட்டு சாதுக்களும் வந்து நின்றார்கள் .ஐந்தாயிரம் பேர்களுக்கு தர்மம் பண்ணப்பட்டவர் எழுந்து பின்புறம் வந்து குழந்தையை பார்த்து அப்பா என்று கதறி அழுதார் .என்னை பார்த்து அப்பா என்று யார் கூப்பிடுவது என்று கேட்டது.பின்னர் குழந்தை இடும்பர் மலைமேல் போய் உட்கார்ந்து இருந்தது அங்கேயும் வந்து பெரியவர்களும் சாதுக்களும் உனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்று சொல்லி கதறி அழுதார்கள் அப்பொழுது குழந்தை ஹரித்துவார் ரிஷிகேஷம் போகிறேன் என்று சொல்லியது .
என்னை நீ தூக்காதே என்று அந்த பெரியவரை பார்த்து சொல்லியது .அந்த பெரியவர் அண்ணன் பேரனை கண்டுவிட்டேன் என்று எழுதி கார் டிரைவரிடம் சீட்டு எழுதி கொடுத்துஅனுப்பினார்.நான்கு மணிக்கு குழந்தை எழுந்து போகவும் பெரியவர்களும் சாதுக்களும் உண்ணாமலும் உறங்காமலும் அழுதுகொண்டு வந்தார்கள் குழந்தை அனைவரையும் திட்டிவிட்டு திருச்சி ஆஞ்சநேயர் கோயிலில் சென்று அமர்ந்தது .சுற்றிலும் ஏன் காவல் போட்டு இருக்கிறார்கள் என்று குழந்தை நினைத்தது .கிட்டே போகாதீர்கள் என்று பெரியவர் சொன்னார் .ஏன் நமக்கு காவல் காக்கிறார் என்று நினைத்து .பெரியவர் ஆறு மணிக்கு குழந்தை அருகில் வந்து அமர்ந்தார் ,நீ யாரடா என் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது என்று கேட்டது .நான் தானப்பா உனது சித்தப்பா என்று பெரியவர் சொன்னார் அப்பொழுதுதான் குழந்தைக்கு பிறந்த இடத்தின் நினைவு வந்தது .

தாய் தந்தை இல்லையே என்று பாலை மலை காடு சென்றாயே அண்ணா யானை கட்டும் கொட்டா எல்லாம் அலமலர்ந்து கிடக்குது உன் குதிரை கட்டும் கொட்டா எல்லாம் சீரழிந்து கிடக்குது என்று அந்த பெண் குழந்தை அழுதது .

உன்னுடைய ஆகாரம் என்று ஆயிரம் கணக்கான தர்மம் செய்து வந்தார்கள் என்று சொல்லப்பட்டது எனது என்று சொல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டு விராலி மலைக்கு சென்றது .அங்கேயும் வந்து உன்னுடைய தர்மம் என்று ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்கள்  என்று சொன்னார்கள் .எனது என்று சொல்லாதீர்கள் கடவுளுடையது என்று சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் பச்சைமலை பருவத்திற்கு சென்றது .தனமுற்று ஊர் அற்று பேர் அற்று காடு உற்று மேற்புரிந்து அந்தமெல்லாம் ஆதமெல்லாம் கருடனைப்போல் வட்டமிட்டு மக்களிடத்தில் பாலுண்டும் பழமுண்டும் தேனுண்டும் தினைமாவுண்டும் மக்கள் நேர்மை தான் அறிவது எப்போது புரிவது எப்போது இந்த திரிலோகம் விட்டு பரலோகம் போவதும் எப்போது சக்தியும் சிவனும் இந்த உலகத்தை மக்களை உன்னை சகல ஜீவன்களையும் முதன் முதலில் எப்படி பிறப்பித்தார் ?                                             

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உலகப்படைப்பு

 சிவன் மக்கள்  ஆக்கல்,அழித்தலுக்கு நான்கு பேரை  பிறப்பித்தார் . அந்த நாலவர் யாரென்றால் முதல் பிள்ளையாக பிறந்தவர் பிரம்மா , இரண்டாவது பிள்ளை நாரதர் , மூன்றாவது பிள்ளை எமதர்மன், நான்காவது பிள்ளை மகாவிஷ்ணு .
இந்த நான்கு பேருக்கும் சகல சக்தியையும் கொடுத்து பிறப்பித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து பிறப்பித்தார் .
நான்கு பேரும் தகப்பன் இடத்திலேயே வேலை பார்க்கலாம் என்று வந்து விட்டார்கள். அதற்கு சிவனும் சக்தியும் என்னை 3-3/4 நாழிகைக்குள் யார் பார்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த வேலை கொடுப்பேன் என்று காற்றாய் மறைந்து விட்டார்.
தனது இல்லதிற்குள்ளேயே இருக்கிறார் என்பதை மறந்து கீழ் லோகம், மேல் லோகம்   எங்கும்  துழவிப் பார்த்தார்கள் கிடைக்காமல் போக பிரம்மா தாழம்பூவை பிடித்து வைத்து நான்தான் பார்த்தேன் என்று மற்ற மூவரிடமும் பொய் சொல்ல சொன்னார் . ஈஸ்வரன் பிரகாசமானவுடன் நீ பொய் சொன்னதால் உன்னை ரட்சிக்க மாட்டார்கள் நான் உண்டாக்க நன்மை தீமைகளை எழுதிகொள் என்று சொன்னார் .
நாரதரை பார்த்து நீ என்னப்பா வேலை என்று கேட்டார். எனக்கு பக்கமாய் இருக்கும் வேலையை கொடுங்கள் என்று நாரதர் கேட்டார் . இந்த உலகத்தில் நன்மை தீமை செய்வது யார் என்று  செய்தி சொல்லி கொண்டிரு என்று சொன்னார் .
இந்த உலகத்தை எப்படி கவனிப்பது என்று சொன்னார். சிவன் தன் சுயரூபம் கொடுத்து காலால் மூன்று எட்டு எடுத்து வைத்தார் உலகம் சரியாய் விடும் என்று சொன்னார் இரண்டு எட்டு வைத்தவுடன் உலகம் சரியாகி விட்டது .மூன்றாவது அடி நான் எங்கே வைப்பது என்று நாரதர் கேட்டார் .அதற்கு சிவன் நானே நீ ,நீயே நான் எனது தோளில் வை என்று சொன்னார் .
எமதர்மரை நீ என்னப்பா வேலை செய்கிறாய் என்று கேட்டார் . எனக்கு பாவமில்லாத வேலையை கொடுங்கள் என்று கேட்டார்.சகல ஜீவன்களையும் பிறப்பித்து சகல ஜீவன்களிடம் நான் ஜீவன் விட்டு பிரியும் போது அந்த கணக்கை நீ எழுதுப்பா என்று சொன்னார். ஐயோ  நான் இம்சை பண்ணித்தான் அந்த கணக்கை ஒப்படைக்க வேண்டும் இது பாவமல்லவா என்று எம தர்மன் கேட்டார்.
ஒவ்வொருத்தர் ஆத்மா பிரிகையில் கீழே விழுந்தது , ஜுரம் வந்தது , விக்கல்  என்று பாவமெல்லாம் எங்களோடையே இருக்கட்டும் நீ இந்த வேலையை செய்யடா என்று சிவன் கூறினார் .
நான்காவது பிள்ளை மஹா விஷ்ணு விடம் நீதான் மற்ற வேலைகள் யாவும் செய்ய வேண்டும் என்று கொடுத்தார் ஐயோ இத்தனை வேலைகளையும் நான் எப்படி பார்ப்பேன் நீங்கள் என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார் நீங்கள் அப்படி செய்தால் தான் சகல ஜீவன்களும் படிந்து கட்டுப்பாடிற்கு வரும் என்று சொன்னார் .
அதற்கு சிவனும் சக்தியும் நாங்கள் கூடவே இருப்பதற்காகவா  உங்களை படைத்தோம் என்று கேட்டார்கள் .
இவ்வளவு வேலையையும் நான் எப்படி பார்கிறது என்று மஹா விஷ்ணு மீண்டும் கேட்க சிவன் பூசை போடுவதை விட்டு நாமம் போடுவது போல் எடுத்து போட்டார் . அப்படி செய்தால் நான் எப்படி காண்பது என்று மகாவிஷ்ணு கேட்க சிவன் வலது புறம் இருப்பது நான், இடது புறம் இருப்பது நீ ,  நடுவில் இருப்பது உன் தாயடா என்று சொன்னார் .நீ எப்போது நினைக்கிறாயோ அப்போது நாங்கள் உன்னுடுடன்  இருப்போம் என்று சொன்னார் .அப்படி வரம் வாங்கி கொண்டு எழுந்து போக உலகம் மொத்தமாக ஒன்றாக அவருடன் வந்தது .நான் எப்படி உலகத்தை தூக்கிகொண்டு இரட்சிப்பது என்று கேட்க ,மக்களை முன்னே பிறப்பித்தோம் அந்த மக்களின் சகல ஆசைகளையும் வெறுத்து  சிவா சிவா என்று உட்கார்ந்து இருப்பவன் உன்னிடம் அடிபணிய மாட்டான் நீங்கள் தான் அவனை அடிபணிந்து ரட்சிக்க வேண்டும் என்று சொன்னார், அப்படியே செய்கிறேன் என்று மகாவிஷ்ணு சொன்னார்.அப்பொழுதுதான் உலகம் ஒன்றாய் சேர்ந்து வரவில்லை மகாவிஷ்ணு சகல வேலைகளையும் செய்கிறேன் என்று ஒத்துகொண்டார் .
நாரதர் விஷ்ணுவுடன் இருப்பது போல் என்னுடன்    நீங்களும் இருக்க வேண்டும் என்று சொன்னார் ,நாரதருக்கு நாமத்தை போட்டார் நீ எல்லோருக்கும் செய்திகளை தூது சொல்லிக்கொண்டு இரு என்று சொன்னார் .சிவன் மக்களுக்கு நல்லது   கெட்டது அறிந்து நேரம் காலத்தை கணித்து வைத்து விதிப்பிரகாரம் அவனுக்கு செய்ய சனீஸ்வரனை பிறப்பித்தார் . அப்பொழுது மக்களுகெல்லாம் அவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் என்னை தண்டனை கொடுக்க சொல்கீறீர்கள் அனால் உங்களிடத்தில் தவறு இருந்தால் உங்களுக்கு தண்டனை கொடுக்கலாமா என்று தகப்பனை கேட்டார் ஈஸ்வரன் என்னிடத்தில் தப்பு இருந்தால் செய்யப்பா என்று சொன்னார் .
ஒன்பது நவகிரகமும் சனிபகவானுக்கு கட்டுப்பட்டவர்கள் இது போல் முதல் யுகத்தை சக்தியும் சிவனும் பிறப்பித்தார்கள் .அப்பொழுது ஈஸ்வரி சந்தோஷத்துடன் முதல் யுகத்தை பிறபித்து பசு நன்றாக மேய்ந்து விட்டு நான்கு கால் வலுவுடன் நிற்பது போல் யுகத்தை படைத்தார் .
மக்கள் முதல் யுகத்தில் அதிக வரம் பெற்று ராட்ஷதனமாக கொடுமை செய்து கொண்டு  குணம் மாறி விட்டார்கள் . அப்பொழுது ஒரு கால் வலுவு இழந்தது .
அப்பொழுது இரு கால்வலுவு இழந்தது போல் இரண்டாவது உலகத்தை படைத்தார்கள் .
மூன்றாவது யுகம் பிறப்பிக்கும் பொழுது மூன்று கால் வலுவு இழந்தது போல் 
உலகத்தை படைத்தார்கள். ஒரு காலில் பசு நிற்க போகும் போது நான்காவது யுகத்தை உலகத்தை அளித்து நல்ல விதமாக பிறபிக்கலாம் என்று நினைத்தார்கள் . இந்த உலகத்தில் உள்ள அணைத்து ஜீவன்களும் தந்தைக்கும் மகளுக்கும் உண்டாகியது
தொடரும்  

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஒம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் அருளுரைகள்




1) பெண்கள் திருநீர் வாங்கும் போது முந்தானையின் மேல் வலது கை வைத்து வாங்க வேண்டும்.

2) வலது கையில் வாங்கும் திருநீரை அப்படியே பூசிக் கொள்ள வேண்டும்.இடது கையில் போடக்கூடாது போட்டால் புண்ணியம் அந்த இடத்திலேயே போய்விடும் பேப்பரில் போட்டு கொள்ளலாம்.

3) துறவியிடம் வரம் வாங்குவது எப்படி? தங்கத்தையும் செப்பையும் இணைப்பது எப்படி? இரண்டையும் உருக்கினால் தான் ஒட்ட முடியும்அதே போல் இரண்டு மனமும் உருக வேண்டும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் பூஜைகளால் கடவுள் கிடைப்பதில்லை நம்பிக்கையால் தான் மட்டும் தான் கிடைப்பார்.

4) பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகாது செய்த தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது.

5) கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும். குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.

6) வீட்டில் ஒரு துளி கஸ்தூரி இருந்தாலே வீடு இலட்சுமிகரமாக இருக்கும் .

7) பந்தி பரிமாறுவதை விட மக்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதுதான் விசேஷம்.

8) கொடுமுடி பார்க்காதவன் கொடும்பாவி மதுரை பார்க்காதவன் மாபாவி.

9) காசியில் நீராடுவதை விட கொடுமுடியில் நீராடுவது விசேஷம்.

10) மந்திரங்கள் அனைத்தும் கரும காண்டம் மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு?

11) குடும்பத்திற்கு வரும் பெண் (மனைவி) எல்லோரையும் தன் கூட பிறந்தவர்களைப் போல் பாவிக்க வேண்டும்,எப்போதும் பொறுமையுடனும் கோபப்படாமலும் இருக்க வேண்டும்.

12) சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும் ஒரு பங்கை சேமித்து வைக்கவும் மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும் தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும்.

13) உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.

14) சுவாமிகள் கூறும் அறுபடை வீடுகள் 1) சுண்டூர் 2) திருப்பதி மலை, 3) மதுரை திருப்பரங்குன்றம் 4) வெள்ளியங்கரி 5) திருச்செந்தூர் 6) பழனி.

15) ஒரு வியாபார ஸ்தலத்தில் அமர்வது மேற்க்கு முகம் அல்லது தெற்க்கு முகம் பார்த்து அமர வேண்டும்.

Swamiji Photo

Swamiji old Photo with his signature

Swamiji Photo

Swamiji photo

Swamiji Photo

Swamiji photo


Swamiji photo

Swamiji photo

வியாழன், 2 செப்டம்பர், 2010

Swamji art

Swamiji Art


Swamiji old Photo


Swamiji photo


Swamiji photo

அன்னதானம்


      உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது 
அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் 
எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் 
கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் 
இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற 
வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை
கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி 
குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி 
நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் 
போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள்
வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது 
சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் 
நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.