வியாழன், 4 நவம்பர், 2010

பிச்சைகாரன்

பிச்சைகாரன்
பிச்சைகாரனுக்கு பிச்சை போட்டால் பாவம் வரும் .காசு கொடுக்காதே .சாப்பிட எதாச்சும் கொடு . காசை போட்டால் அவன் நல்லதிற்கு செலவு செய்தால் பரவாயில்லை . அந்த காசில் குடித்தாலோ வேறு கெட்ட செயல்கள் புரிந்தாலோ அப்பாவம் நம்மை சேரும் .
எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அவன் மனது போதும் என்று சொல்லாது .எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் . அவன் போதும் என்று எப்போது சொல்வது? உனக்கு புண்ணியம் எப்போது வருவது?
சாப்பாடு போட்டால் வயிறார மனதார போதும் என்று சொல்வான் .

ஒருத்தி ஒரு  பிச்சைகாரனுக்கு தினமும் தவறாமல் பிச்சை போடுவாளாம் . ஒருநாள் எதுவும் இல்லை அதனால் போடவில்லை அதற்கு அவன் எப்பவும் போடாத மகராசிதான்  போடவில்லை எப்பவும் போடுகிற கழுதை என் போடவில்லை என்றானாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக