வியாழன், 23 டிசம்பர், 2010

பெண்

மனைவி
குடும்பத்திற்கு வரும் பெண் (மனைவி) எல்லோரையும் தன் கூட பிறந்தவர்களைப் போல் பாவிக்க வேண்டும்,எப்போதும் பொறுமையுடனும் கோபப்படாமலும் இருக்க வேண்டும்.

கல்லானாலும் கணவன் புல்லான்னாலும் புருஷன்.

ஆவதும் பெண்ணாலே கோடான கோடி குடும்பம் கெட்டதும் பெண்ணாலே.
ஆத்திரத்தை பாராட்ட கூடாது, கோபமான சொல் கூடாது.

10   மாதம் சுமந்து 3-3\4 நாழிகை கஷ்டப்பட்டு குழந்தை பிறந்த பிறகு கணவண், குழந்தை
சாப்பிட்டானா என்று பார்பார்கள் .
கணவன் பெரிய குழந்தை தன் வயிற்றில் பிறந்த குழந்தை சின்ன குழந்தை.

தன் மனைவியை   அடிக்கவும்,திட்டவும்,அணைக்கவும் கணவனுக்கு உரிமை உண்டு.

கோபமாக வரும் கணவன்   அடித்தாலும்,திட்டினாலும் மனைவி பொறுத்துக் கொண்டு அடியையும் வாங்கிக் கொண்டு அரைமணி   நேரம் தணித்து கோபம் மாறிய உடன் உணவு பரிமாறிய பிறகு மனைவி அடித்தாலும் கணவன் வாங்கிக்கொள்வான்.

 வீட்டில் எது சமைத்தாலும் முதலில் மாமியாருக்கு கொடுக்கவும்.

நம்மை திட்டுபவபர்கள்தான் நம்மை வாழ்விப்பவர்கள்.

பெண்கள் உருப்படமாட்டாள் என்ற வாய்ச்சொல் வாங்க கூடாது.

பெண்கள் ஆண்களுக்கு   தைரியத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அன்பு மட்டுமே அழியா   சொத்து. பெண்கள் வாயால் இல்லை என்று சொல்ல கூடாது.

கணவனை   தெய்வமாக நினைத்து குடும்பத்திற்காக எந்த தவறு செய்தாலும் அவள் உத்தமி.

தகப்பனுக்கு பின்   தாய்,அம்மாவுக்கு பின் அண்ணி.

தளராத நெஞ்சமும்   இடராத சொல்லும் உடைய மனைவி கிடைப்பது அரிதினும் அரிது.

மனைவியை   தாயாகவும்,கணவரை தகப்பனாகவும் எண்ணி நடப்பவர்கள் கோடியில் கிடைப்பது  அரிது.

கொண்டுகிட்டாலும் சொல்லாதே கொடுத்துகிட்டாலும் சொல்லாதே.

கூடி கெட்டவர்கள்   யாருமில்லை,பிரிந்து கெட்டவர்கள் உண்டு.

அடிப்பதும் தாய்   உண்டாக்குவதும் தாய் ,ஆண்கள் அவர்களுக்கு பொம்மை, அவர்கள் கயிற்றை இழுத்தால்   ஆண்கள் ஆடுகிறார்கள்.

தலைமுடி,குடுமியை   முடியனும்.பக்கத்தில் இருக்கும் முடி அலையப்படாது,குடும்பத்தை அல்லல்   படுத்தும்.

முந்தியில்தான் எந்த   பொருளையும் வாங்க வேண்டும். மடிபிச்சை உயர்ந்தது.

     குடும்பத்தை மூடி   வைக்கும் தத்துவம் நல்லது.எது இருந்தாலும் பொறுமை வேண்டும்.ஆழ்ந்து செயல்பட   வேண்டும்..

   கட்டின   கணவனை தெய்வமாக நினைத்து வாழ்ந்து, கால் கட்டைவிரல்களை ஊன்றி நடந்து,பெரிய   கட்டைவிரல்களை பார்த்து கொண்டு போகும்  பெண்ணை   பேய்,பிசாசு,பில்லி சூன்யம் யாதும் அணுகவே அணுகாது.

தாய்க்கு தலைபிள்ளை   மேல் பற்று அதிகம், தகப்பனுக்கு கடைசிபிள்ளை மேல் பற்று அதிகம்.திட்டினாலும்   உள்ளுக்குள் பாசம் அதிகம்.

பெண்பிள்ளை   வீட்டில் கஷ்டப்பட்டால் குடும்பம் வளர்ச்சியடையாது.

கோபம் வரும்   வீட்டில் சண்டை வளரும்.

குழந்தைகளை   ஒழுக்கமாக வளர்பவர்கள் பெண்கள் தான்.

காலையில்   கணவன்,மாமியார் மாமனாரை கும்பிட வேண்டும்.

பெண்கள் காலை எழுந்தவுடன் கால் பெருவிரல்களை பார்த்து கொண்டு   நடந்துபோனால் கஷ்டப்படமாட்டார்கள்.

நெருப்பும்,தண்ணீரும்   சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்பொழுதும் இலக்ஷ்மி கடாக்ஷம் உண்டு.

கணவனோ   பெரியவர்களோ நாயே, பேயே என்று திட்டினாலும் பெண்கள் சந்தோஷமாக ஏற்று கொள்ள வேண்டும்.

ஆண்கள் செய்யும் நன்மையில்   பெண்கள் பாதி புண்ணியம் பெறுவர்.

பெண்களுக்கு 55 வயதுக்கு   மேல்தான் அமைதி வரும்.

     சதை,இரத்தம்,நீர்  தாய் சக்தியைக்கொடுத்து  இரட்சிக்கிறது,அவ்வளவும் தாரத்திற்கும்  உண்டு. தாயைவிட அதிகமாக பாசமுள்ளவள் தாரம்.

     10 வருடம் தவம் செய்யும்   ஆளைவிட புண்ணியத்தை பெண் சில மாதங்களில் வாங்கி விடுவாள்.

கணவனுக்கு வரும் கண்டத்தை   மனைவிதான் காப்பாற்றுவாள்.

பெண்கள் எப்போதும் கலங்கக்   கூடாது.

     பெண்களிடம்   மன அமைதியும் தெய்வநம்பிக்கையும் எப்போதும் இருந்தால் சனீஸ்வரன் இடம் இல்லை   என்று போய் விடுவார். போகும் போது   கொடுத்துவிட்டுத்தான் போவார்.

  பெத்தமனம் பித்து பிள்ளை மனசு   கல்லு.

ஆண் இல்லாமல் பெண் இல்லை பெண்   இல்லாமல் ஆண் இல்லை.

     பெண்கள் சீக்கிரம் வரம்   வாங்கிவிடுவார்கள், வாங்கவும் முடியும்.கணவன் உயிரை காப்பாற்ற பெண்ணால்தான்   முடியும் (மாங்கல்ய பிச்சை).

  பெண்கள் எப்போதும் பொறுமையுடன்   இருக்க வேண்டும்,ஆண்களுக்கு மன அலைச்சல் கொடுக்கக்கூடாது.
வெற்றிலை - இலக்ஷ்மி, பாக்கு -   சிவன், சுண்ணாம்பு - சக்தி.
     பெண்கள் சக்தி அம்சம்,   உடம்பு-சக்தி ,பெண்கள் சுவாமிகளின் அன்பை சீக்கிரம்  பெறுவார்கள்.
  ஆண் கஷ்டப்படும் போது பெண்கள்   ஊக்கம் கொடுத்து தைரியப்படுத்த வேண்டும்.
பெண்கள் நல்ல இராசியாக   இருந்தால் தான் ஆணுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
     ஆண்கள்   செய்யும் புண்ணியத்தில் பெண்களுக்கு பாதி பங்கு உண்டு. பெண்கள் செய்யும்  பாவத்தில் ஆண்களுக்கு பாதி பங்கு உண்டு.
  நம்பிக்கைக்கு ஆதாரம் மனைவிதான்.
பெண்கள் மதிப்போடு   போனால்தான் ஆண்களுக்கு மதிப்பு.
     சண்டை போட்டுக்கொண்டாலும்   கணவனிடம் அன்பு செலுத்தி சந்தோஷமாக நடந்துக்கொண்டு வரவேண்டும்.
 அடித்தாலும் தாங்கள்தான் என்று   பொறுமையுடனும்,நிதானத்துடனும் இருக்க வேண்டும்.
 பெண் தன் கணவன் நல்லவன் என்று   எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
  ஆணுக்கு கண்டத்தில்   முடி, பெண்ணுக்கு கிடையாது.
இரத்தம், சதை -  தாய்,   எலும்பு - தகப்பன் .
தாய் மடியில் தங்கம்   இருந்தாலும் தன் மடியில் தவிடாகிலும் இருக்க வேண்டும்.
     ஆண் ஆகிலும் பெண் ஆகிலும்   பயந்து திக் என்றால்,அந்த சமயத்தில் தான் பேய் பிடிக்கும். பெரிய கால் கட்டை   விரல்களை ஊன்றி நடந்தால் எதுவும் பிடிக்காது.
     கணவன் சொல்லை மனைவி   தட்டாமலும்,மனைவி சொல்லை கணவன் தட்டாமலும், இருவரும் இருக்க வேண்டும்.

  பெண் பண்போடு   ஒற்றுமையாக இருப்பது தான் பெருமை.

பெண்ணுக்கு வலிமை மார்பு   முனை, மூக்கு முனை.

     கொண்டு வந்தால்தான் - தந்தை.   கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் - தாய், சீர் கொண்டு வந்தால் - சகோதரன்.

  பெண்களிடம் எப்பொழுதும் கையில்   ஜம்பது ரூபாயாகிலும் இருக்க வேண்டும்.

கணவன் நன்றாக வைத்திருக்கையில்   பெண்ணுக்கு காசு ஆசை இருக்க கூடாது.

     குடும்பத்தின் நன்மைக்காக   செலவு செய்வதை கேட்கவோ தடுக்கவோ கூடாது.
 பெண்களின் மன ஆழத்தை   கண்டுபிடிக்க முடியாது பெண்பிள்ளை மன ஆறுதல்.
 பெத்த பிள்ளைக்கு இல்லை என்று   சொல்லப்படாது.
     பெண்களுக்கு   கடவுள் அச்சம், ஆசை, மர்மம் கொடுத்துள்ளார்.
 தாய் வீட்டு பாசம் பெண்ணுக்கு   போகாது
 தான் புருஷனை   திட்டலாம்,மற்றவர்கள் திட்டக்கூடாது போச்சி
  மடிப்பிச்சை வாங்கி கணவனைக் காப்பாற்றுபவர்
 ஆண் செய்யும் வேலையை பெண்   செய்வாள்.பெண்செய்யும் வேலையை ஆண் செய்ய முடியாது.
 குழந்தை பிறந்த இரண்டு மணி   கழித்து புருஷன் சாப்பிட்டாரா என்று கேட்பாள்
     இருமனம் ஒருமனமாக இருந்தால்   நன்றாக அமையும்.
 பெண் தண்ணீரை அதிகமாக செலவு   செய்யக்கூடாது.
 கடவுள்   படைப்பை எல்லாம் பெண்களிடம் கொடுத்துள்ளார்,லகான் கயிறு அவர்களிடம்  கொடுத்துள்ளார்
 இரட்சிப்பதும் பெண்களே   தேடுவதற்காக பாசத்தை
 கொடுத்திருக்கிறார்.
 எவ்வளவு சம்பாதித்தாலும்   ஆண்துணை இல்லாமல் பெண் வாழ முடியாது.
       சொத்து,சரீரம்   பெண்களுக்குத்தான் சொந்தம் பெண் மனம் கஷ்டப்பட்டு நாம் போனால் காரியம்   கெட்டுவிடும்.
     பெண்களின்   மனம் சந்தோஷமாக இருந்தால் வீட்டில் நோய் வராது .
 தாலி கயிறு அறுந்தால் கணவருக்கு கஷ்டம் வரும்
 பெண்ணை தகப்பன் சொல்லுகிற இடத்தில் கொடுப்பது நல்லது .
    பெண்கள் பொறுமையாக இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் .
 பெண்கள் எப்போதும் கலங்ககூடாது
 கணவனுக்கு எப்பொழுதும் முதன் முதலில் மனைவிதான் சாப்பாடு போட வேண்டும் . அப்படி போட்டு வரும் குடும்பம் நன்றாக இருக்கும் .
பெண்களிடம் எப்பொழுதும் கையில்   ஜம்பது ரூபாயாகிலும் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக