வெள்ளி, 24 டிசம்பர், 2010

மருத்துவம் ஒற்றை தலைவலி நீங்க

மருத்துவம் ஒற்றை தலைவலி நீங்க

படரும் தும்பை தழை ,வேலை தழை, பூண்டு,கட்டி கற்பூரம்,மிளகு அளவு பெருங்காயம் சேர்த்து கையால் கசக்கி வலிக்கும் பாகத்தின் எதிர் பக்கம் உள்ள காதில் நான்கு சொட்டு விடவும் .

வெள்ளை பூனைக்காய்ச்சல் இலையை வலி எடுக்கும் பாகத்தில் ஓட்ட வேண்டும் பிடித்து கொண்டால் விட்டு விட வேண்டும் .விழுந்து    விட்டால்  நரம்பின்  மேல்  ஒவ்வொன்றாக    மூன்று  முறை  செய்யவும்  

திருமணத்தடை   நீங்க

     திருமணத்தடை   நீங்க -

 பசுவும்,கன்றையும் 48 நாட்கள் சுற்றினால் நல்லது. வெள்ளி கிழமை   பச்சரிசியும் வெல்லமும் கொடுக்க வேண்டும். அகத்தி   கீரையை வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.பசுவின் பின் புறத்தில் மஞ்சள்   குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி விழுந்து கும்பிடவும்.

கர்ப்பிணி

கர்ப்பிணி.

தாய்பால் கொடுத்தால்   குழந்தைக்கு ஆசைகள் வளர்ந்து வரும்..

     வாயில் எச்சில் ஒழுகும்   குழந்தை நன்றாக பேசும். வாந்தி எடுக்கும் குழந்தைக்கு வளர்ச்சி அதிகம்.

   கர்ப்பிணி சூரியகிரஹ இருளை   பார்க்க கூடாது பார்த்தால் குழந்தையின் மூளையை பாதிக்கும்.
     ஏழுமாத கர்ப்பமாக இருந்தால்   சூரியகிரஹணம் ஒன்றும் செய்யாது.சூரியகிரஹணத்தில் குழந்தை பிறந்தால் அம்சமாக   வளரும்.
     வலதுகால் சுண்டுவிரலில் காப்பு   கட்டி எடுத்த கீழாநெல்லிசெடியை வேருடன் பிடுங்கி கட்டினால் சுகப்பிரசவம் ஆகும்.
     பிரசவ அவதிபடும் பெண் தன்னை   மறந்த நிலையில் சிவ சிவா என்று உணரும் போது தாய் வேறு குழந்தை வேறாகிறது.
     அழும் குழந்தையும் வாயில்   விரல் சப்பும் குழந்தையும் பிற்காலத்தில் நனறாக இருக்கும் .
   குழந்தை மாலையிட்டு பிறந்தால்   மாமனுக்கு ஆகாது கொடிசுத்தி பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது .
     மூல   நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை மிகவும் செல்வாக்காக வளரும்.திருமண காலத்தில்  மாமனாரை பாதிக்கும். தனித்தனியாக இருந்தால்   பாதிக்காது.ஒரே குடும்பமாகஇருந்தால் தொல்லைகள் கொடுக்கும்


சேற்றுப்புண் விலக

ஒரு அம்மையாருக்கு காலில் சேற்றுப்புண் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்கு சுவாமிகளிடம் மருந்து கேட்க அதற்கு சுவாமிகள் " புளியை கரைத்து அத்துடன் மஞ்சள் தூளை அளவாக கரைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி குழம்பு போல் வரும் .அக் குழம்பை சேற்றுப்புண் உள்ள இடத்தில்  போட குணமாகும் என்றார் .

அந்த அம்மையாரும் சுவாமிகள் கூறியபடி செய்தார். மருந்து போடும் போது எரிச்சல் மிகுதியாக இருந்தது . இரு முறை போட்டதும் முற்றிலும் குணமானது .

 

வியாழன், 23 டிசம்பர், 2010

சொறிசிரங்கு விலக

ஆமணக்கு  எண்ணெய்  எருக்கன் பால் சேர்த்து பனியில்  காய வைத்து சொறி சிரங்கு மேல் தேய்க்கவும். பிரம்மதண்டி விதையை வறுத்து தூள் செய்து உடம்பில் தேய்க்கவும். 

குங்குமப்   பூ

குங்குமப் பூ

     குங்குமப்   பூவை பிரசவ பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்து பாலில் போட்டு பால்   மஞ்சளாகிய பின் குடித்து வந்தால்  ஞானமுள்ள சிகப்பான குழந்தை   பிறக்கும்.  

மரணபடுக்கை

மரணபடுக்கை

     மரணபடுக்கையில்   இருக்கும் போது  கோரோசனத்தை தண்ணீரில்   போட்டு,பாலில் வெள்ளி காசு போட்டு சிறிது நேரம் பொறுத்து,  கோரோசனத்தையும் பாலையும்  சுவாமிகளை நினைத்து கொடுத்தால் 3 3\4 நாழிகை   உயிருடன் இருப்பார்கள்.

ஈரைக்கிர கிணறு   ஊறும்

ஈரைக்கிர கிணறு ஊறும்.

ஈரைக்கிர கிணறு   ஊறும்.கெட்ட செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல செலவு செய்தாலும் காசு வந்து சேரும் வந்து சேரும்..

ஆணின் தத்துவம் 

ஆணின் தத்துவம் .

     ஆணின் தத்துவம்   நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே பெண்களிடம் சொல்ல வேண்டும். முன் யோசனை   நாளைக்குச் செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரி பார்க்க வேண்டும்.  

சம்சாரி

 சம்சாரி

ஒரு   சம்சாரி தன் பெண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து நியாயத்துடன் தொழில் நடத்தி   கடமைகளை சரிவர   செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை காட்டில் 36 வருடங்கள் கடுந்தவம் இருந்தாலும்  அடைய முடியாது .


சம்சாரியாக இருந்தாலும் களவும்   கற்றுக்கொள்ளவும். கற்று மறந்து விடு.

ஆண்

ஆண்

ஆண் - இரும்பு பெண் -தங்கம்.

 பெண் -- பூட்டு ஆண் -- சாவி

நம் வீட்டில் பெண் தவறு   செய்தால் அது பாவம் இல்லை காரணம் ஆண்கள் தப்பு.

கட்டின மனைவியைத் தாயாக மதிக்க   வேண்டும்.

பெண்கிட்ட வாங்கி சாப்பிட்டால்   கடன்.

     கட்டிய   மனைவி இல்லாமல் மோட்சத்திற்குப் போக முடியாது. மனைவி விட்டு கொடுத்தால்தான்   கணவன் மோட்சத்திற்கு போவான்.

 தாயும் ஒன்று தான் மனைவியும்   ஒன்று தான்.

ஆணுக்கு வலிமை வலது கை கட்டை   விரல், வலது கால் கட்டை விரல்.

     கடையில் பொருட்கள் வாங்கும்   போது பெண்களிடம் காசு கொடுத்து விட வேண்டும் அழுத்தமாக வாங்குவார்கள். ஆண்   வாங்கினால் குறை சொல்வார்கள்.
  பெண் பிள்ளையிடம்   உத்தரவாதம் சொல்லக்கூடாது.
நம்மை படைத்த,   உலகத்தை படைத்த தாயை மறக்க கூடாது.
     32 வயதுக்கு மேல் ஆணுக்கு   கல்யாணம் செய்தால் சிறந்தது.32க்கு மேல் எல்லா அம்சமும் கிடைக்கும்.
  போதும் என்ற மனமே பொன் செய்த   மனம்.
     ஆண்  சம்பாதிக்க பாடுபடும்போது எந்த கஷ்டம்   வந்தாலும் தைரிய லக்ஷ்மியை கைவிடக்கூடாது.
 ஆட்டி வைப்பதும்,கூட்டி   வைப்பதும் தாய்.

சொர்க்கம்.

சொர்க்கம்.

கட்டை பிராணன் போகும் இடம் தான் சொர்க்கம்.

பர்வத மலை

பர்வத மலை

பர்வத மலை துறவிகள் வாழ்ந்த இடம்.

பர்வத   மலைக்கு,செல்லும் போது அவல் வாங்கி செல்ல வேண்டும் பசி ஆற்ற பயன்படும்.

துறவி

துறவி

பிரம்மாவின் தலை   எழுத்தையே மாற்றக் கூடியவர் துறவி,  துறவிக்கு கடவுளே கட்டுப்பட்டவர்.

7-1/2 நாட்டு சனி

7-1/2 நாட்டு சனி.

7-1/2 நாட்டு சனி வந்தால் ஒரு அரசன் கூட ஆண்டி ஆகி விடுவான் அந்த நேரத்தில் பொருமை அவசியம் .

கிரகங்களின் தோஷம் கெடுதல்களை தடுக்க

கிரகங்களின் தோஷம் கெடுதல்களை தடுக்க .
தர்மம் செய்தால்   மட்டுமே கிரகங்களின் தோஷம்,கெடுதல்களை தடுக்க முடியும்,
பூஜைகளாலும்   தவத்தாலும் கிரகங்களை தடுக்க முடியாது.

சுவாமிகள் கூறும் அறுபடை வீடுகள்

சுவாமிகள் கூறும் அறுபடை வீடுகள் .
1) சுண்டூர் 2) திருப்பதி மலை, 3) மதுரை திருப்பரங்குன்றம் 4) வெள்ளியங்கரி 5) திருச்செந்தூர் 6) பழனி.

பெண்

மனைவி
குடும்பத்திற்கு வரும் பெண் (மனைவி) எல்லோரையும் தன் கூட பிறந்தவர்களைப் போல் பாவிக்க வேண்டும்,எப்போதும் பொறுமையுடனும் கோபப்படாமலும் இருக்க வேண்டும்.

கல்லானாலும் கணவன் புல்லான்னாலும் புருஷன்.

ஆவதும் பெண்ணாலே கோடான கோடி குடும்பம் கெட்டதும் பெண்ணாலே.
ஆத்திரத்தை பாராட்ட கூடாது, கோபமான சொல் கூடாது.

10   மாதம் சுமந்து 3-3\4 நாழிகை கஷ்டப்பட்டு குழந்தை பிறந்த பிறகு கணவண், குழந்தை
சாப்பிட்டானா என்று பார்பார்கள் .
கணவன் பெரிய குழந்தை தன் வயிற்றில் பிறந்த குழந்தை சின்ன குழந்தை.

தன் மனைவியை   அடிக்கவும்,திட்டவும்,அணைக்கவும் கணவனுக்கு உரிமை உண்டு.

கோபமாக வரும் கணவன்   அடித்தாலும்,திட்டினாலும் மனைவி பொறுத்துக் கொண்டு அடியையும் வாங்கிக் கொண்டு அரைமணி   நேரம் தணித்து கோபம் மாறிய உடன் உணவு பரிமாறிய பிறகு மனைவி அடித்தாலும் கணவன் வாங்கிக்கொள்வான்.

 வீட்டில் எது சமைத்தாலும் முதலில் மாமியாருக்கு கொடுக்கவும்.

நம்மை திட்டுபவபர்கள்தான் நம்மை வாழ்விப்பவர்கள்.

பெண்கள் உருப்படமாட்டாள் என்ற வாய்ச்சொல் வாங்க கூடாது.

பெண்கள் ஆண்களுக்கு   தைரியத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அன்பு மட்டுமே அழியா   சொத்து. பெண்கள் வாயால் இல்லை என்று சொல்ல கூடாது.

கணவனை   தெய்வமாக நினைத்து குடும்பத்திற்காக எந்த தவறு செய்தாலும் அவள் உத்தமி.

தகப்பனுக்கு பின்   தாய்,அம்மாவுக்கு பின் அண்ணி.

தளராத நெஞ்சமும்   இடராத சொல்லும் உடைய மனைவி கிடைப்பது அரிதினும் அரிது.

மனைவியை   தாயாகவும்,கணவரை தகப்பனாகவும் எண்ணி நடப்பவர்கள் கோடியில் கிடைப்பது  அரிது.

கொண்டுகிட்டாலும் சொல்லாதே கொடுத்துகிட்டாலும் சொல்லாதே.

கூடி கெட்டவர்கள்   யாருமில்லை,பிரிந்து கெட்டவர்கள் உண்டு.

அடிப்பதும் தாய்   உண்டாக்குவதும் தாய் ,ஆண்கள் அவர்களுக்கு பொம்மை, அவர்கள் கயிற்றை இழுத்தால்   ஆண்கள் ஆடுகிறார்கள்.

தலைமுடி,குடுமியை   முடியனும்.பக்கத்தில் இருக்கும் முடி அலையப்படாது,குடும்பத்தை அல்லல்   படுத்தும்.

முந்தியில்தான் எந்த   பொருளையும் வாங்க வேண்டும். மடிபிச்சை உயர்ந்தது.

     குடும்பத்தை மூடி   வைக்கும் தத்துவம் நல்லது.எது இருந்தாலும் பொறுமை வேண்டும்.ஆழ்ந்து செயல்பட   வேண்டும்..

   கட்டின   கணவனை தெய்வமாக நினைத்து வாழ்ந்து, கால் கட்டைவிரல்களை ஊன்றி நடந்து,பெரிய   கட்டைவிரல்களை பார்த்து கொண்டு போகும்  பெண்ணை   பேய்,பிசாசு,பில்லி சூன்யம் யாதும் அணுகவே அணுகாது.

தாய்க்கு தலைபிள்ளை   மேல் பற்று அதிகம், தகப்பனுக்கு கடைசிபிள்ளை மேல் பற்று அதிகம்.திட்டினாலும்   உள்ளுக்குள் பாசம் அதிகம்.

பெண்பிள்ளை   வீட்டில் கஷ்டப்பட்டால் குடும்பம் வளர்ச்சியடையாது.

கோபம் வரும்   வீட்டில் சண்டை வளரும்.

குழந்தைகளை   ஒழுக்கமாக வளர்பவர்கள் பெண்கள் தான்.

காலையில்   கணவன்,மாமியார் மாமனாரை கும்பிட வேண்டும்.

பெண்கள் காலை எழுந்தவுடன் கால் பெருவிரல்களை பார்த்து கொண்டு   நடந்துபோனால் கஷ்டப்படமாட்டார்கள்.

நெருப்பும்,தண்ணீரும்   சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்பொழுதும் இலக்ஷ்மி கடாக்ஷம் உண்டு.

கணவனோ   பெரியவர்களோ நாயே, பேயே என்று திட்டினாலும் பெண்கள் சந்தோஷமாக ஏற்று கொள்ள வேண்டும்.

ஆண்கள் செய்யும் நன்மையில்   பெண்கள் பாதி புண்ணியம் பெறுவர்.

பெண்களுக்கு 55 வயதுக்கு   மேல்தான் அமைதி வரும்.

     சதை,இரத்தம்,நீர்  தாய் சக்தியைக்கொடுத்து  இரட்சிக்கிறது,அவ்வளவும் தாரத்திற்கும்  உண்டு. தாயைவிட அதிகமாக பாசமுள்ளவள் தாரம்.

     10 வருடம் தவம் செய்யும்   ஆளைவிட புண்ணியத்தை பெண் சில மாதங்களில் வாங்கி விடுவாள்.

கணவனுக்கு வரும் கண்டத்தை   மனைவிதான் காப்பாற்றுவாள்.

பெண்கள் எப்போதும் கலங்கக்   கூடாது.

     பெண்களிடம்   மன அமைதியும் தெய்வநம்பிக்கையும் எப்போதும் இருந்தால் சனீஸ்வரன் இடம் இல்லை   என்று போய் விடுவார். போகும் போது   கொடுத்துவிட்டுத்தான் போவார்.

  பெத்தமனம் பித்து பிள்ளை மனசு   கல்லு.

ஆண் இல்லாமல் பெண் இல்லை பெண்   இல்லாமல் ஆண் இல்லை.

     பெண்கள் சீக்கிரம் வரம்   வாங்கிவிடுவார்கள், வாங்கவும் முடியும்.கணவன் உயிரை காப்பாற்ற பெண்ணால்தான்   முடியும் (மாங்கல்ய பிச்சை).

  பெண்கள் எப்போதும் பொறுமையுடன்   இருக்க வேண்டும்,ஆண்களுக்கு மன அலைச்சல் கொடுக்கக்கூடாது.
வெற்றிலை - இலக்ஷ்மி, பாக்கு -   சிவன், சுண்ணாம்பு - சக்தி.
     பெண்கள் சக்தி அம்சம்,   உடம்பு-சக்தி ,பெண்கள் சுவாமிகளின் அன்பை சீக்கிரம்  பெறுவார்கள்.
  ஆண் கஷ்டப்படும் போது பெண்கள்   ஊக்கம் கொடுத்து தைரியப்படுத்த வேண்டும்.
பெண்கள் நல்ல இராசியாக   இருந்தால் தான் ஆணுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
     ஆண்கள்   செய்யும் புண்ணியத்தில் பெண்களுக்கு பாதி பங்கு உண்டு. பெண்கள் செய்யும்  பாவத்தில் ஆண்களுக்கு பாதி பங்கு உண்டு.
  நம்பிக்கைக்கு ஆதாரம் மனைவிதான்.
பெண்கள் மதிப்போடு   போனால்தான் ஆண்களுக்கு மதிப்பு.
     சண்டை போட்டுக்கொண்டாலும்   கணவனிடம் அன்பு செலுத்தி சந்தோஷமாக நடந்துக்கொண்டு வரவேண்டும்.
 அடித்தாலும் தாங்கள்தான் என்று   பொறுமையுடனும்,நிதானத்துடனும் இருக்க வேண்டும்.
 பெண் தன் கணவன் நல்லவன் என்று   எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
  ஆணுக்கு கண்டத்தில்   முடி, பெண்ணுக்கு கிடையாது.
இரத்தம், சதை -  தாய்,   எலும்பு - தகப்பன் .
தாய் மடியில் தங்கம்   இருந்தாலும் தன் மடியில் தவிடாகிலும் இருக்க வேண்டும்.
     ஆண் ஆகிலும் பெண் ஆகிலும்   பயந்து திக் என்றால்,அந்த சமயத்தில் தான் பேய் பிடிக்கும். பெரிய கால் கட்டை   விரல்களை ஊன்றி நடந்தால் எதுவும் பிடிக்காது.
     கணவன் சொல்லை மனைவி   தட்டாமலும்,மனைவி சொல்லை கணவன் தட்டாமலும், இருவரும் இருக்க வேண்டும்.

  பெண் பண்போடு   ஒற்றுமையாக இருப்பது தான் பெருமை.

பெண்ணுக்கு வலிமை மார்பு   முனை, மூக்கு முனை.

     கொண்டு வந்தால்தான் - தந்தை.   கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் - தாய், சீர் கொண்டு வந்தால் - சகோதரன்.

  பெண்களிடம் எப்பொழுதும் கையில்   ஜம்பது ரூபாயாகிலும் இருக்க வேண்டும்.

கணவன் நன்றாக வைத்திருக்கையில்   பெண்ணுக்கு காசு ஆசை இருக்க கூடாது.

     குடும்பத்தின் நன்மைக்காக   செலவு செய்வதை கேட்கவோ தடுக்கவோ கூடாது.
 பெண்களின் மன ஆழத்தை   கண்டுபிடிக்க முடியாது பெண்பிள்ளை மன ஆறுதல்.
 பெத்த பிள்ளைக்கு இல்லை என்று   சொல்லப்படாது.
     பெண்களுக்கு   கடவுள் அச்சம், ஆசை, மர்மம் கொடுத்துள்ளார்.
 தாய் வீட்டு பாசம் பெண்ணுக்கு   போகாது
 தான் புருஷனை   திட்டலாம்,மற்றவர்கள் திட்டக்கூடாது போச்சி
  மடிப்பிச்சை வாங்கி கணவனைக் காப்பாற்றுபவர்
 ஆண் செய்யும் வேலையை பெண்   செய்வாள்.பெண்செய்யும் வேலையை ஆண் செய்ய முடியாது.
 குழந்தை பிறந்த இரண்டு மணி   கழித்து புருஷன் சாப்பிட்டாரா என்று கேட்பாள்
     இருமனம் ஒருமனமாக இருந்தால்   நன்றாக அமையும்.
 பெண் தண்ணீரை அதிகமாக செலவு   செய்யக்கூடாது.
 கடவுள்   படைப்பை எல்லாம் பெண்களிடம் கொடுத்துள்ளார்,லகான் கயிறு அவர்களிடம்  கொடுத்துள்ளார்
 இரட்சிப்பதும் பெண்களே   தேடுவதற்காக பாசத்தை
 கொடுத்திருக்கிறார்.
 எவ்வளவு சம்பாதித்தாலும்   ஆண்துணை இல்லாமல் பெண் வாழ முடியாது.
       சொத்து,சரீரம்   பெண்களுக்குத்தான் சொந்தம் பெண் மனம் கஷ்டப்பட்டு நாம் போனால் காரியம்   கெட்டுவிடும்.
     பெண்களின்   மனம் சந்தோஷமாக இருந்தால் வீட்டில் நோய் வராது .
 தாலி கயிறு அறுந்தால் கணவருக்கு கஷ்டம் வரும்
 பெண்ணை தகப்பன் சொல்லுகிற இடத்தில் கொடுப்பது நல்லது .
    பெண்கள் பொறுமையாக இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் .
 பெண்கள் எப்போதும் கலங்ககூடாது
 கணவனுக்கு எப்பொழுதும் முதன் முதலில் மனைவிதான் சாப்பாடு போட வேண்டும் . அப்படி போட்டு வரும் குடும்பம் நன்றாக இருக்கும் .
பெண்களிடம் எப்பொழுதும் கையில்   ஜம்பது ரூபாயாகிலும் இருக்க வேண்டும்.

எச்சில் இலை

எச்சில் இலை .

அன்னதானத்தின் போது
பந்தி பரிமாறுவதை விட மக்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதுதான் புண்ணியம் .

பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகுமா ?

பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகுமா ?

 பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகாது.
 செய்த தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கெட்ட நேரம் விலக

கெட்ட நேரம் விலக

குறைந்தது   108 பேருக்கு சாப்பாடு போட்டு அவர்கள் சாப்பிட்ட இலைகளை எல்லாம் எடுக்க வேண்டும் .
குறைந்தது இரண்டு பேருக்காவது அரைசவரன் எடைக்கு குறையாமல் மாங்கல்யம் வாங்கி  ஏழை எளியவர்களுக்கு திருமணத்திற்கு  கொடுக்கவும்.
  

விளக்கு

விளக்கு 

பூஜை விளக்கு ஏற்ற பயன்படும் எண்ணைகள் .

ஆமணக்கு எண்ணை
எள் எண்ணை ( கெட்டது ஒழிக்க நல்லது )
நெய்
தேங்காய் எண்ணை
இலுப்பை  எண்ணை
வேப்பம் எண்ணை ( கெட்டதற்கு பரிகாரம் )
கடலை எண்ணை கூடவே கூடாது .

ஆமணக்கு எண்ணையை லேசாக காய்ச்சி ஏற்றவும் .கொதி வரவிட்டு இறக்கவும் .

விளக்கு ஏற்றுவதற்கு உகந்தது இலுப்ப எண்ணை .

குத்து விளக்கு ஏற்றும்போது ஒரு திரிசல் ஏற்றக்கூடாது .
குறைந்தது இரண்டு திரிசலாவது இருக்கவேண்டும் .
மூன்று திரிசல் போட்டால் கெட்டது போகும்.
நான்கு திரிசல் சகலத்திற்கும் நல்லது .
ஐந்து திரிசல் சர்வ ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் .

மண் அகல் விளக்கு மிகவும் நல்லது .

வடக்கு -சக்தி - கர்மகாண்டம்
தெற்கு - சிவன் -ஞானகாண்டம்
கிழக்கு -சாந்தி - மத்யகாண்டம் .

காமாட்சி அம்மன் விளக்கில் இரண்டு திரிகள் போட்டு விளக்கு ஏற்றினால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
சூரிய உதிக்கும் முன்னும் , சூரிய அஸ்தமனம் முன்னும் ( கால் மணி நேரம் முன் ) ஆமணக்கு எண்ணை விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் அமைதி கிடைக்கும் .
        
விளக்கை ஊதி அணைக்ககூடாது.கையால் பக்கத்தில் ஒட்டி அணைக்கலாம் .
விளக்கிலிருந்து கற்பூரத்தை கொழுத்த கூடாது.




    

புதன், 8 டிசம்பர், 2010

துறவியிடம் வரம் வாங்குவது எப்படி?

துறவியிடம் வரம் வாங்குவது எப்படி?

தங்கத்தையும் செப்பையும் இணைப்பது எப்படி? இரண்டையும் உருக்கினால் தான் ஒட்ட முடியும்அதே போல் இரண்டு மனமும் உருக வேண்டும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் பூஜைகளால் கடவுள் கிடைப்பதில்லை நம்பிக்கையால் தான் மட்டும் தான் கிடைப்பார்.

வியாழன், 2 டிசம்பர், 2010

மருத்துவம் கை வீக்கம்

மருத்துவம் கை வீக்கம்

தழுதாளி இலை, மிளகு சித்திரத்தை ,சுக்கு அரிசி ,கண்டம் திப்பிலி பூண்டு பரங்கிபட்டை இலைகளை கஷாயம் போட்டு தினம் இரண்டு வேளை சாப்பிடவும் 

மருத்துவம் கைகுடைச்சல்

மருத்துவம் கைகுடைச்சல்

அருகம்புல் வேரின் கிழங்கை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிடவும்

மருத்துவம் காலில் கருப்பு படை

மருத்துவம்  காலில் கருப்பு படை

கண்டங் கத்தரிக்காயை இடித்து ஒன்றரை லிட்டர் தேங்காய் எண்ணையில் எரிக்கவும் .சிறிது பூண்டு பற்களை போடவும். பூண்டு மொர மொர என்று இருந்தால் பதமானதாகிவிடும்.நெல்லிக்காய் கந்தகம் பத்துகிராம் சேர்க்கவும் .இந்தக் கலவையை படையின் மேல் தேய்த்து வரவும்      

மருத்துவம் காச நோய்

மருத்துவம் காச நோய்  

கண்டங் கத்தரிக்காயை இரண்டாக வெட்டி வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற வைத்து உலர வைத்து இடித்து தூள் செய்து சாப்பிடவும்          

மருத்துவம் கேன்சர் கட்டி உடைய

மருத்துவம் கேன்சர் கட்டி உடைய

உத்தாமணி சாற்றில் சுண்ணாம்பு விட்டு மஞ்சள் கொம்பால் இழைத்து கட்டியின் மேல் தடவினால் உடைந்துவிடும் அல்லது இழைத்ததை துணியில் தோய்த்து கட்டியின் மேலே போட்டு வரவும் .பழுத்து கட்டி உடைந்து விடும் .    

மருத்துவம் கெட்ட நீரினால் கட்டி இருந்தால்

மருத்துவம் கெட்ட நீரினால் கட்டி இருந்தால்

கருநொச்சி தழையுடன் மிளகையும் சேர்த்து அரைத்து காலையில் கச்சக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிடவும் .

புதன், 1 டிசம்பர், 2010

பல கடவுள்

பல கடவுள்
பல கடவுளை கும்பிடாதே எல்லாம்  குருவே .குருவே கடவுள் ஆவார் .

சாந்தி

சாந்தி

1008 விளக்கு எரிந்தால் எல்லாவற்றையும் சாந்தி செய்யும்

மருத்துவம் பிரசவ காலத்தில் குழந்தை சுலபமாக பெற

மருத்துவம் பிரசவ காலத்தில் குழந்தை சுலபமாக பெற

சிற்றாமணக்கு எண்ணை இரண்டு சோடா பாட்டில் அளவு எடுத்துக்கொண்டு அதில் பேயன் வாழைபழத்தை துண்டு துண்டுகளாகி ஊற வைத்து வெயிலில் காய வைத்து ஜாடியுடன் சூரிய ஸ்புடம் போடவும் .பிரசவகால பெண்கள் இரவு படுக்கும் முன்  சிற்றாமணக்கு எண்ணையில் ஊறிய பேயன்பழ வாழைபழ துண்டை சாப்பிட்டு வந்தால் சூடு தணியும் சுலபமாக குழந்தையும் பிறக்கும் .

முருங்கை தழையை சாம்பாரில் போட்டு கொடுத்தால் சுக பிரசவாமாகும் .     

மருத்துவம் சுகபிரசவம்

மருத்துவம் சுகபிரசவம்

பூச நட்சத்திரத்தில் சிகப்பு நாயுருவி செடியை காப்பு கட்டி சுவாமிகளை மனதார நினைத்து 108 முறை ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று ஜெபித்து மஞ்சள் தண்ணீர் தெளித்து பிடுங்கி வைத்து பிரசவமாகாமல் இருக்கும் பெண் உள்ள அறையில் ஈசான்யம் பக்கம் போட்டால் சுக பிரசவமாகும்

மருத்துவம் பிரசவத்திற்கு

மருத்துவம்  பிரசவத்திற்கு

பிரசவ வலி வந்தவுடன்   கீழாநெல்லி செடியை காப்பு கட்டி வேருடன் பிடுங்கி வலதுகால் சுண்டுவிரலில் கட்ட வேண்டும்.
இரண்டுமணி நேரம் கழித்து குழந்தை பிறக்கும் என்றால் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டால் கொழ கொழ என்றாகும் அந்த தண்ணீரை குடிக்க செய்யவும் .
தாயின் வயிற்றிலேயே இறந்த குழந்தையையும் அப்புற படுத்துவதற்கும் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டு சிறுக சிறுக ஒரு டம்பளர் நிறைய ஐந்து அல்லது ஆறு முறை கொடுத்தால் இறந்த குழந்தையும் நல்லபடியாக வெளியே வரும்.
யானைநேருஞ்சி - சிருகுறிஞ்சி  வகையை சேர்ந்தது .யானை நெருஞ்சி இருக்குமிடத்தில் யானை வராது .

பிரசவ பாதை ஆரம்பித்தவுடன் மூன்றேமுக்கா  நாழிகையிலே என்னை ஏன் பிறக்க வைத்தாய் என்று கடவுளை வேண்ட, உடம்பிலே உள்ள சூட்டை குறைத்தால் உடனே பிரசவமாகும்.கணவன்,மகள் இருந்தால் தாமதமாகும் தனியே விட்டுவிட்டால் ஐந்து நிமிடத்தில் தன்னைதானே மறந்தால் நரம்பை இழுத்து பிடித்திருப்பது விட்டுவிடும் .
நான்குமாதம் ஆன பிறகு கிராம்பு சாப்பிடவேண்டும்,குங்குமப்பூ கொஞ்சமாக கொடுக்கவும்.

கற்பூரம் ஆராதனை செய்யும் முறை

கற்பூரம் ஆராதனை செய்யும் முறை

சுவாமி படங்களுக்கு முதலில் மேலே காட்டி  பிறகு  கீழே வலது பக்கம் மூன்று சுற்றும் இடது பக்கம் ஒரு சுற்று அதிகமாக நான்கு சுற்றுக்கள் சுற்றவேண்டும் [சிவனுக்கு மூன்று சுற்று சக்திக்கு நான்கு சுற்று ]

வெள்ளைகாரம்பசு

 வெள்ளைகாரம்பசு:-
 வெள்ளைகாரம்பசு  (சந்தன கலர்) முடி ,வால்,எல்லாம் வெள்ளை யாக இருக்கும் .திட்டினால் கண்ணீர் விடும்  தனியாகவே ஓடும்.அந்த  வெள்ளைகாரம்பசு விருந்து  தான் கோரோசனம் கிடைக்கும் ."காராம்பசு கடவழிபோகும்".ஒரிடத்தில் நிற்காது 

மருத்துவம் கர்ப்பஸ்திரி

மருத்துவம் கர்ப்பஸ்திரி 

போட்டது போட்டபடி  குழந்தை இருக்கும்.குழந்தை முட்டும்.
சங்கத்தழையை எள் எண்ணையில் வதக்கி சாப்பிட்டால் கைகுத்தல் குடைச்சல் நீங்கும்.
தனியா சுக்கு வறுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிடவும் (.சூடும் குளிமையும் இல்லாத பொருள் பனைவெல்லம்)
இரவு படுக்கும் போது கொதிக்கும் பாலில் குங்குமப்பூவை போட்டு மஞ்சளாக பால் மாறிய பின்  ஆற்றி சாப்பிடவும்.      

புண்ணியம்

புண்ணியம்

பத்துபேருக்கு சாப்பாடு போடுவதில் வரும் புண்ணியத்தில் பாதி சாப்பிட்ட இலையை எடுப்பவர்களுக்கு வந்து சேரும்.

கோயிலுக்கு   சென்றால் கீழே உட்கார வேண்டும் அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

சட்டி எடுத்து   பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.

சாப்பிடும் போது   யாராவது வந்தால் உள்ள சாப்பாட்டை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும்.