செவ்வாய், 30 நவம்பர், 2010

மருத்துவம் சளி கட்டுவது நீங்க

மருத்துவம் சளி கட்டுவது நீங்க

முருங்கை பூ ,மூன்று பூண்டு பள்ளு ,மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிடவும் .

மருத்துவம் கோமக்கோனை கட்டி

மருத்துவம் கோமக்கோனை கட்டி

கும்னா செடியின் வேர்,பட்டையைக் கொண்டு வந்து  சுத்தம் செய்து தூள் செய்யவும். ஒரு படி எள்ளு மாவும் ஐந்து பெரிய பனைவெல்ல கட்டி எல்லாவற்றையும்  இடித்து ஆறு உருண்டைகளாக செய்து ஒரு உருண்டையை தர்மம் செய்யவும், மீதி உருண்டையை தினம் ஒன்று சாப்பிடவும்.     

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் கட்டித்தருகிறேன் என்று போகாதே. நன்கு தெரிந்தவர்கள் பத்து பேர்களிடம் காசு வாங்கி செய்யவேண்டும் .பிரியபட்டதை கொடு என்று கேக்கவேண்டும்.

ஒருவனே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கோயில் நல்லபடியாக இருந்தாலும் கும்பாபிஷேகம் ஆன ஒரு வருடத்தில் இறந்து விடுவான் அல்லது பின்னப்படுவான்.     

திங்கள், 29 நவம்பர், 2010

மருத்துவம் கர்ப்ப கோளாறு

மருத்துவம் கர்ப்ப கோளாறு

அருகம்புல் அரைத்து பாலில் கொடுக்கவேண்டும்

மருத்துவம் இளம்பிள்ளைவாதம் பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க

மருத்துவம் இளம்பிள்ளைவாதம் பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க
கர்ப்பிணிக்கு தனியா அதிகமாகவும்,மோடி குச்சி, மிளகு ,சீரகம்,சுக்கு வறுத்து இடித்து சலித்து தழுதாளி இலையை எள் எண்ணையில் வதக்கி பூண்டு வைத்து ஆட்டி கடுகு போட்டு தாளித்து ஊறுகாய் போல் உபயோகித்து வரவேண்டும் .    

மருத்துவம் கைக்குழந்தைக்கு கபம்,சளி நீங்க

மருத்துவம் கைக்குழந்தைக்கு கபம்,சளி நீங்க 

குப்பை மேனி இலை,துளசி இலை ஆவி கட்டி சாரு எடுத்து அதில் நான்கு சொட்டு தேன் விட்டு  பாலாடையில் தினமும் காலை கொடுத்தால் கபம் ,சளி மூன்று மாத குழந்தைகளுக்கு
விலகும். 

மருத்துவம் குழந்தை மாந்தத்திற்கு

மருத்துவம் குழந்தை மாந்தத்திற்கு
கல்யாணமுருங்கை கொழுந்து ,வெள்ளை வேலம் பட்டை ,உதயங் கொழுந்து இவைகளை சம அளவு சேர்த்து அரைத்து பாலில் ஒரு தேக்கரண்டி ஆறு மாதம் வரை கொடுக்கலாம் .ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைக்கு இரண்டு அவுன்ஸ் கொடுக்கலாம் .

பாகற்காய்  இலையின் சாற்றை சனிக்கிழமை அன்று பாலாடையில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் நீங்கும்.

 
 

மருத்துவம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க

மருத்துவம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க

உத்தாமணிசாறு, வேப்பம் எண்ணை சேர்த்து இரண்டு பூண்டு பள்ளு போட்டு காய்ச்சி கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.    

மருத்துவம் காக்காய் வலி

மருத்துவம் காக்காய் வலி  

உத்தாமணி சாறு, வேப்பம் எண்ணை பூனை காய்ச்சல் பட்டை தூள் கலந்து காய்ச்சி மாதத்திற்கு மூன்று நாள் வீதம் மூன்று அமாவாசை கொடுக்கவும் 

மருத்துவம் காதில் குடு குடு என்ற சப்தம் கேட்பது,பேசுவது கேட்காமல் இருப்பது விலக

மருத்துவம் காதில் குடு குடு என்ற சப்தம் கேட்பது,பேசுவது கேட்காமல் இருப்பது விலக

தேங்காய் எண்ணை , வெள்ளை வேளைகீரை,நாயுருவி வேர் ,பொரித்த பெருங்காய நைஸ்தூள் ,பூண்டு பள்ளு, சிறிது கற்பூரம் இவைகளை எரித்து சூடு தாங்கும் அளவு காதில் ஊற்றி வரவும் .     

32 லட்சணங்கள்

32 லட்சணங்கள்

கைவிரல்கள்--------------------------- பத்து
கால் விரல்கள்------------------------- பத்து
காது--------------------------------------- இரண்டு
கண்---------------------------------------- இரண்டு
மூக்கு துவாரம்------------------------ இரண்டு
வாய்--------------------------------------- ஒன்று
மூத்திரதாரை------------------------- -ஒன்று
தொப்புள்--------------------------------- ஒன்று
மார்பு--------------------------------------- இரண்டு
மலம் அடிக்கும் தாரை --------------ஒன்று

மொத்தம் 32

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மருத்துவம் காது அடைப்பு விலக

மருத்துவம் காது அடைப்பு விலக   

வெள்ளை வேளைக்கீரை வேர் ,சிறுகுருஞ்சா நாயுருவி வேர் ,பெருங்காயம், கற்பூரம் சேர்த்து தேங்காய் எண்ணையில்  எரிக்கவும். எல்லாவற்றையும் போடி செய்து கடைசியில் கற்பூரம் சேர்க்கவும். காது சூடுதாங்கும் வரை காதில் ஊற்றவும் 

சனி, 27 நவம்பர், 2010

கும்பாபிஷேகத்திற்கு எடுத்து வரவேண்டிய தீர்த்தங்கள்

கும்பாபிஷேகத்திற்கு எடுத்து வரவேண்டிய தீர்த்தங்கள்
ஐந்து கிணற்று தண்ணீர்
மூன்று  ஆற்று தண்ணீர் அல்லது மூன்று நதி நீர் .
கடல் நீர்

காலசர்ப்ப யோகம் நீங்க

காலசர்ப்ப யோகம் நீங்க
பற்று அற்ற துறவிக்கு அன்னம் அளித்து அவரை 48 நாட்கள் வலம் ஒன்பதும் இடம் பத்தும் சுற்றிவந்தால் காலசர்ப்ப யோகம் நீங்கும் .

நம் சுவாமிகளை 108 சுற்றுகள் சுற்றி விட்டு வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சுவாமிகள் கோயிலுக்கு சென்று கோயில் ஆருகில் இருக்கும் ஓடையில் குளித்து ஈரத் துணியுடன் அழுக்கு சுவாமிகள் சமாதியை நான்குமுறை அங்க பிரதஷ்டம் செய்தால் தன்னாலே நீங்கும் .

என்றென்றும் காற்றாக உலாவிக்கொண்டு இருக்கும் துறவிகள் ,சித்தர்கள், முனிவர்கள் சமாதியை அங்க பிரதஷ்டம் செய்தால் தன்னாலே எல்லா கஷ்டங்களும் குறைகளும் விலகி விடும் .
முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்           

அம்மனின் பெயர்கள்

அம்மனின் பெயர்கள் 

முதல்  பெயர்
ஜமதகன முனிவரின் மனைவி ரேணுகாதேவி

இரண்டாவது பெயர்
காவேரி

மூன்றாவது  பெயர்
காசி விசாலாட்சி அன்னபூரணி

நான்காவது பெயர்
மதுரை மீனாட்சி

ஐந்தாவது பெயர்
சமயபுரம் மாரியம்மன்

ஆறாவது பெயர்
மலையனூர் மாரியம்மன்

ஏழாவது பெயர்
கழுத்து மாரியம்மன்

எட்டாவது பெயர்
மசான உத்திரி

ஒன்பதாவது பெயர்
காஞ்சி காமாட்சி         




சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் போது சுவாமிகளின் அன்பும் , அருளும் , ஆசிர்வாதமும் , தரிசனமும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்

வெள்ளி, 26 நவம்பர், 2010

சுப்ரமணியர் அம்சம்

சுப்ரமணியர் அம்சம்


நம் தவத்திரு சற்குருநாதர் அப்பா பைத்தியம் சுவாமிகள் சுப்ரமணியரின் அம்சம்

வியாபார ஸ்தலத்தில் எந்த பக்கம் பார்த்து அமர்வது ?

வியாபார ஸ்தலத்தில் எந்த பக்கம் பார்த்து  அமர்வது ?

ஒரு வியாபார ஸ்தலத்தில் அமர்வது மேற்க்கு முகம் அல்லது தெற்க்கு முகம் பார்த்து அமர வேண்டும்.

Swamiji Photo

Swamiji Art (old )

மருத்துவம் கால் கை விழுந்ததற்கு

மருத்துவம் கால் கை விழுந்ததற்கு

தாம்பூலத்தில் தங்க பஸ்பம் அரிசி எடை வைத்து மூன்று வேளையும் கொடுத்தால் குணமாகும்
மருத்துவம் காசம் ( TB ), படை, மூலச்சூடு நீங்க

நிலகடம்பையுடன் மிளகையும் சேர்த்து அரைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நீங்கும்.

கண்டங்கத்தரிக்காயை வெள்ளாட்டு கோமியத்தில்  ஊறவைத்து மறுபடியும் காயவைத்து வறுத்து தூள் செய்து தேய்க்கவும் .காசத்திற்கு உள்ளுக்கு சாப்பிடவும்        

மருத்துவம் கால்களில் உள்ள ஆணி விலக

மருத்துவம் கால்களில் உள்ள ஆணி விலக

கீழாநெல்லியை அரைத்து பாதத்தில் தேய்த்து இரவு அப்படியே கட்டிவிட வேண்டும் .பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் ஆணி வெளியே வரும்    

மருத்துவம் காதுகளில் சீழ் வருவது நிற்க

மருத்துவம் காதுகளில் சீழ் வருவது நிற்க

தேள்கொடுக்கு இலையையும் ,பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து எள் எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். 15 நாட்கள் விட்டு மறுபடியும் போடவும் . பிறகு தேள்கொடுக்கு இலையையும் ,பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து தேங்காய்  எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். இது போல் காது சுத்தம் ஆகும் வரை போடவும்           



மருத்துவம் கண் நன்றாக தெரிய

மருத்துவம்  கண் நன்றாக தெரிய

கரிசலாங்கண்ணி சாப்பிடவேண்டும் .கீழாநெல்லி செடியை பிடுங்கி சீரகத்துடன் அரைத்து சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் .

மருத்துவம் கக்கூஸ் படை

மருத்துவம்  கக்கூஸ் படை 

ஆடுதின்னாபாளை, நெல்லிக்காய் கந்தகம் சம எடை எரித்து தேங்காய் எண்ணையில் சேர்த்து தடவினால் குணமாகும் . 

மருத்துவம் கண் சிகப்பாக இருப்பது & நீர் வடிதல் நிற்க

மருத்துவம்  கண் சிகப்பாக இருப்பது  & நீர் வடிதல் நிற்க

அடுக்கு நந்தியாவட்டை பூவை பாலில் ஊற வைத்து ,ஊறின பாலை கண்ணில் ஊற்றினால் கண்ணீர் வருவது நிற்கும் .

மருத்துவம் கண் பார்வை பெற

மருத்துவம் கண் பார்வை பெற

கீழாநேல்லியையும் ,சீரகமும் அரைத்து லேகியம் செய்து சாப்பிடவேண்டும் .            

மருத்துவம் கண்வலி விலக

மருத்துவம்  கண்வலி விலக

பிரம்மதண்டியின் மஞ்சள் நிறமான பாலை மூன்று நாட்கள் போடவும் 

மருத்துவம் ரத்தம் சுத்தியாக

மருத்துவம்  ரத்தம் சுத்தியாக

சின்ன வெங்காயம் ( சாம்பார் வெங்காயம் ) சாப்பிட ரத்தம் சுத்தியாகும்.

மருத்துவம் தலைவலி குணமாக

மருத்துவம் தலைவலி குணமாக
ஒன்றரைகிலோ மிளகு வாங்கி தலையணை  போல் தைத்து ஒரு மாதம் அதில் தலைவைத்து படுக்க தலைவலி குறையும். தலையில் உள்ள நீரை எல்லாம் மிளகு உறிஞ்சிவிடும்.தலைவலி முற்றும் குணமாகும் . 

மருத்துவம் நரம்பு தளர்ச்சி நீங்க

மருத்துவம்  நரம்பு தளர்ச்சி நீங்க
கல் சுண்ணாம்பு ஒரு மண் காலத்தில் போட்டு தெளிந்த நீரை எடுத்து அதில் ரசமணியை போட்டு பின் நீரை மட்டும் குடிக்கவும்.

அழுக்கு சுவாமிகள்

அழுக்கு சுவாமிகள்

தன்னை உணர்ந்து ( தன் உள்ளத்தை உணர்ந்து  ) புல் பூண்டு எல்லா ஜீவராசிக்குள் இருக்கும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் வேட்டைக்காரன்புத்தூர் அழுக்கு சுவாமிகள் ஆவார்   

மனதை ஒருநிலைப் படுத்துவது

மனதை ஒருநிலைப் படுத்துவது

பூஜைஅறையில் குத்துவிளக்கை எள் எண்ணை விட்டு ஏற்றி நம் பின் வைக்க வேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடி வைத்திருக்க வேண்டும் .இவற்றின் நடுவில் உட்கார்ந்துகொண்டு சுடரொளியை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே வரவேண்டும் .கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை அடையும்போது மனம் ஒருமுகமாக நின்று விட்டதற்கு ஆரம்பமாகும் .

நிலைக்கண்ணாடி முன் நாம் உட்கார்ந்து கொண்டு நாம் நம் உருவத்தை பார்த்துக்கொண்டு வரவேண்டும். மனம் ஒடுங்கும்போது நம் உருவம் நமக்கு கண்ணாடியில் தெரியாது

செய்யும் தர்மத்தை வெளியில் சொல்லாதே

செய்யும் தர்மத்தை வெளியில் சொல்லாதே

செய்யும் தர்மம், நல்லவை செய்யும் போது அடுத்தவனுக்கு தெரியக்கூடாது.தெரிந்தாலும் சொன்னாலும் நாம் செய்த புண்ணியம் போய்விடும் .

மிச்சம்

மிச்சம்
உண்டாகின இடத்தில் சிறிது எப்போதும் இருக்க வேண்டும் . எல்லாம் கொடுத்து விடாமல் சிறிதாகிலும் மிச்சம் வைக்க வேண்டும் . கடவுள் கொடுத்தவர் அவருக்காக மறுநாள் வரை இருக்க வேண்டும் .பாத்திரத்தில் இரவு சமைப்பதில் கொஞ்சம் போட்டு வைக்க வேண்டும் .மறுநாள் எடுத்து நாய், பசு ,காக்கை ஏதோ ஒரு ஜீவராசிக்கு கொடுக்க வேண்டும் .

போகும் காரியம் வெற்றி பெற

போகும்  காரியம்  வெற்றி  பெற


நிலைக்கண்ணாடி , பெரிய கால் விரல்களை பார்த்து புறப்பட்டால் போகும் காரியம் வெற்றியாகும் .

வியாழன், 25 நவம்பர், 2010

கடன்

கடன்

கடன் வாங்கி தொழில் செய்ய கூடாது .


அவசரத்தில் கடன் வாங்கினால் ஆறு மாதத்தில் அடை.


கடன் வாங்கினால் மனது கஷ்டப்படும் .


பிறரிடம் வாங்கும் பணத்தை திருப்பி கொடுத்து விடவேண்டும் . ருனாபாதம் கூடாது பிறர் பொருள் நமக்கு வேண்டாம்

பிள்ளைகளை வளர்க்கும் முறை

பிள்ளைகளை வளர்க்கும் முறை

பிள்ளைகளுக்கு சம்பாதித்து வைத்து செல்ல பிள்ளைகளாக வளர்க்காமல் நல்லது கெட்டது என்பன உணரச் செய்ய வேண்டும் . உணர்ந்து நடக்க பழக்கப்படுத்த வேண்டும் .

உன் வீட்டையும் பிள்ளைகளையும் திருத்தி வைக்க முடியாமல் ஏன் ஊர் விவகாரம் .

மகனை முன்னே விட்டு அவனுக்கு துணையாக இரு

 பிள்ளைகளை காலை 4.30  மணிக்கு படிக்க வைத்தால் படிப்பு நன்றாக வரும் .
பெண் பிள்ளைகள் கட்டின கணவர் வீட்டை பெரியதாக நினைக்க வேண்டும் .அதுவே தாய் வீட்டார்க்கு மதிப்பு .
அடுத்தவர்க்கு கெட்டது செய்யக்கூடாது
திருடன் அபசாரி என்ற பெயர் வாங்கக்கூடாது .
கன்னத்தில் கை வைக்க கூடாது ( தரித்திரம் , கஷ்டம் வரும் )
அப்பன் கொடுக்கும் காசில் இரண்டு தம்படி மிச்சம் பண்ணும் பிள்ளை என்றும்  முன்னுக்கு வருவான்

முருங்கை கிளையை ஒடித்து வளர்க்கனும் , பெண்ணை கிள்ளி  வளர்க்கனும்,பையனை அடித்து வளக்கணும் 16   வயதுக்குள் செய்ய வேண்டும்.
பிள்ளையின் பாதையில்   பெற்றோர்கள் போக வேண்டும் ஆனால் சேரபடாது.


மர்மம்

மர்மம்
தெரியாமல் வருவது தான் மர்மம் .
சொல்லாதே
கண்டேன் என்று சொல்லி நீ தற்பெருமை ஏற்படுத்திக் கொள்ளாதே 

ஆகாது

ஆகாது

ஆகாது என்று சொல்லும் குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்கும்

கருப்பு மாப்பிள்ளை

கருப்பு மாப்பிள்ளை 

கருப்பாக இருக்கிற மாப்பிள்ளை சிகப்பாக இருக்கிற பெண்ணை கட்டி கொண்டால் குடும்பம் நன்றாக இருக்கும் .

பூஜை அறை

பூஜை அறை

சமையல் அறைக்கு மேற்கே பூஜை அறை இருக்க வேண்டும்

சுவாமிகள்

சுவாமிகள்
சுவாமிகளை நோக்கி நாம் ஒரு அடி எடித்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி
வருவார் .
சுவாமிகள் பெற்ற தாயைவிட ஆயிரம் மடங்கு பாசம் உள்ளவர் .
சுவாமிகளுக்கு நாம் ஒரு ரூபாய் செலவு செய்தால் அவர் நமக்கு பத்து ரூபாய் வருமானம் கொடுக்காமல் இருக்க மாட்டார்.
சுவாமிகள் பிரம்மன் எழுத்தையே மாற்றக்கூடியவர் .ஆனால் நாம் வாங்கி வந்த கிரகத்தை ஒரே நாளில் போக்கமுடியாது
சுவாமிகளின் ஆசிர்வாதத்திற்கு மிஞ்சினது எதுவுமே இல்லை .
சுவாமிகளுக்கு மனோபூஜை செய்ய வேண்டும் .மனோபூஜை பத்தியம் இல்லாதது .எந்த நேரமும் கும்பிடலாம்       

ராகு திசை

ராகு  திசை

ராகு திசையில் யாதாகிலும் குறைபாடு கொடுத்துக்கொண்டே இருக்கும்

ராகு  திசை அல்லல் விலக

பசுவுக்கு அவுத்தி கீரை கொடுக்க வேண்டும் . செவ்வாய் கிழமை , வெள்ளி கிழமைகளில் பச்சரிசியும் வெல்லமும் சேர்த்து கொடுக்க வேண்டும் .
வெள்ளிகிழமைகளில் மாட்டின் பின்புறத்தை கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு வலம் ஒன்பதும் இடம் பத்தும் ( சக்திக்கு ஒரு சுற்று அதிகம் ) சுற்றிவிட்டு பின்புறத்தை தொட்டு கும்பிடவேண்டும் ,விழுந்தும் கும்பிடவேண்டும்       

பின்னப்பட்ட பிள்ளையார்

பின்னப்பட்ட பிள்ளையார்

பிள்ளையார் பின்னமாக இருந்தால் பூஜைக்கு வேண்டாம் .

விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க

விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க

கடவுளுக்கு ஒருகாணி நிலம் ஒடுக்கி பயிர் செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் .

ஒரு மூடைக்கு ஒர் மரக்கால் கடவுளுக்கு  ஒடுக்க வேண்டும்


சரணாகதியின் மகத்துவம்

சரணாகதியின் மகத்துவம்

நம் சற்குருநாதர் அப்பா பைத்தியம் சுவாமிகளின் திருவடிகளில் சரணடைந்து எல்லா நிலைகளிலும் எல்லா சந்தர்பங்களிலும் கடைசி வரை அவரையே சரணடைந்து இருப்பவர்கள் உண்மையில் சுவாமிகளின் கிருபையை பெறுவார்கள் .

நமது குருநாதர் தம்மிடம் சரணடைந்தவர்களை காத்து இரட்சித்து திருவருள் புரிகிறார் என்பதில் உறுதியாக நம்பிக்கை வைக்கவேண்டும்.

சுவாமிகளிடம் சரணாகதி அடையும் போது அவன் வாழ்கையில் பெற வேண்டியவை எல்லாம் பெறுவான் .
சுவாமிகளிடம் சரண்புக விரும்புவர்கள் தங்களையே சுவாமிகளிடம் ஒப்படைத்து விட வேண்டும் .
உயிருக்கு சுதந்திரம் இல்லை அது சுவாமிகளையே சார்ந்து வாழ வேண்டும் .எனவே பற்றுகோடு சுவாமிகளே . நாம் பைத்தியக்காரனை போல் எதையோ பிடித்துகொண்டு இருக்கிறோம் . இந்த பைத்தியமும் பித்தும் தெளிவதற்கு மாமருந்தாக விளங்குபவை சுவாமிகள் திருவடிகளை பற்றி கொள்வதேயாகும் .
அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான் நடைபெறுகிறது என்று நினைப்பது   பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் .
சுவாமிகள் கூறும் வழி முறைகளை இயன்றவரை பின்பற்றுவதற்கு எப்பொழுதும் முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும்.
மனிதன் அற்ப விஷயங்களுக்கு  எல்லாம் தன் உள்ளத்தில் இடம் கொடுத்தால் அவன் வாழ்வே பாழாகும், நிலைகுலைந்து விடும் .
சாதகமான சூழ்நிலையோ ,பாதகமான சூழ்நிலையோ எது நேர்ந்தாலும் சுவாமிகள் திருவடிகளை மறக்காமல் இருப்பதே எவ்விதத்திலும் நன்மை தரும் .
திரு அருட்பா , நடராஜர் பத்து எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் .
 சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும் கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும் .ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .அச்சமும் ஆசையும் அறிவுள்ளவர்களுக்கு இல்லை .அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம் .
ஒரே வீடு கடவும் கட்டின வீடு அதில்தான் வாழ வேண்டும் ( ஆன்மா ) சரீரத்தை கட்டுவித்தவர் கடவுள் .
அச்சம், ஆசை, மர்மம் இம்மூன்றையும் போக்கினால் தான் தெரியும் .அதற்கும் நேரம் வர வேண்டும் .இம்மூன்றையும் விட்டால் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் மனம் நிதானமாக இருக்கும் ,இரண்டையும் சமமாக நினைக்கும் மனம் வரும் . இம்மூன்றையும் அடக்கினால் கடவுளை சீக்கிரம் அடையலாம் .வைராக்கியம் விடா முயற்ச்சி சிரத்தை முக்கியமானவை .
அன்பே தெய்வம் நம்பிக்கையே தெய்வம் .
எத்தனை சோதனைகள் வந்து நம்மை துன்புறுத்தினாலும் கஷ்டப்படுத்தினாலும் சுவாமிகளை ஒரே நிர்ணயமாய் அவரையே பிடித்துக்கொள்ள வேண்டும் .
சுவாமிகள் கஷ்டங்களை கொடுக்கிறார் அந்த கஷ்டத்திலும் யாதோ நன்மை இருக்கத்தான் செய்கிறது அந்த நன்மையை நாம் உணரவேண்டும் .
நோயற்ற வாழ்வில் நாம் வாழ்வதும் சுவாமிகளின் திரு அருளால்தான் .
நன்மை தீமை சரிசமமாக ஒரே நிர்ணயமாக பிடித்து வந்தால் எந்த கவலையும் சுவாமிகள் தீர்ப்பார் .
நம்பிக்கை ஆதார பொருள் . சுவாமிகள் சொன்ன சொல்லை மனதில் பதிய வைக்க வேண்டும் . நம்பிக்கை இழக்காமல் பூரண நம்பிக்கையுடன் சுவாமிகளை நம்பினால் எல்லாம் கிடைக்கும் .
சுவாமிகளின் திருவடிகளை தொட்டு கும்பிடும் பொழுது சுவாமிகளின் கடைக்கண் பார்வையாவது தேவை என்றும் ,சுவாமிகளை என்றென்றும் மறவாதிருக்க வேண்டும் என்றும் , சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசிர்வாதமும் எப்பொழுதும் நமக்கு வேண்டும் என்றும் அவருடைய தரிசனமும் தொடர்ந்து கிடைத்து கொண்டு இருக்கவேண்டும் என்றும் மனமார சுவாமிகளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் .        
 


தாலி

தாலி

தாலி வாங்ககூட முடியாத ஏழைகளின் திருமணத்திற்கு 5  பேர் சேர்ந்து தாலி வாங்கி கொடுத்தால் நல்லது . சுவாமிகள் இதனை எப்பொழுதும் கடைபிடிக்க சொல்வார்     


புதன், 24 நவம்பர், 2010

இரண்டு துடப்பங்கள்

இரண்டு துடப்பங்கள்

வீட்டில் இரண்டு துடப்பங்களை ஒரே இடத்தில் அல்லது அருகருகே வைக்ககூடாது சண்டைகள் வரும்  .

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்

காலை 4-1/2 முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம்.
 எந்த நல்ல காரியமும் செய்யலாம்,எந்த   நாளாக இருந்தாலும் பரவாயில்லை.

மருத்துவம் இருதயத்தில் ஓட்டை இருந்தால்

 மருத்துவம் இருதயத்தில் ஓட்டை இருந்தால்

சிதிரமூலக்குச்சி உடன் கடை சரக்கு செலவுகளையும் சேர்த்து ரசம் போல் வைத்து சாப்பிடவும்  அல்லது தட்டி கஷாயம் போல் சாப்பிட்டு வரவும் .
முருங்கை கொழுந்தை வேகவைத்து சாறு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டால் இருதயத்தில் உள்ள சதை வளர்ந்து துவாரத்தை மூடிக்கொள்ளும்  

ஆண் பெண் சக்தி அளவு

ஆண் பெண் சக்தி அளவு

   ஒரு நாள் சுவாமிகளிடம் எல்லா ஆண்களுக்கும் பெண்களை பார்க்க வேண்டும் என்றும் , பார்க்கும் போதும் ஆசை உண்டாகிறது , கண்கள் தானாகவே திரும்பிகிறது ஏன் என்று  கேட்டோம் .
அதற்கு சுவாமிகள் சிரித்துக்கொண்டே கடவுள் ஆணுக்கு மூன்று பாகம் சக்தியையும் பெண்ணுக்கு ஏழு பாகம் சக்தியையும் கொடுத்துள்ளார் . அங்கு சக்தி அதிகம் இருப்பதால் கண் தானாகவே திரும்புகிறது .உலக்கைக்கு சேலை கட்டிவைத்தால் கூட நீங்கள் உற்று பார்ப்பீர்கள் உங்களில் எவனாவது ஒருவனாவது பெண்ணைப்பார்த்து ஆசைப்படாதவன் உண்டா என்றார் யாரும் வாய்  திறக்கவில்லை.பெண்டாட்டி அருகில் இருந்தால் கூடபுத்தி உங்களுக்கு அப்படிதானடா போகும் என்றார் .

பெண்களுக்கு ஆண்களை பார்த்தால் இது போல் ஆசை ஏற்படுமா என்று கேட்க? ஏற்படும் என்றார் .          

தவறு இல்லை

தவறு   இல்லை

மோசம்  செய்பவனிடம்  மோசம்  செய்தால்  தவறு  இல்லை  . வரும்  பணத்தை  நல்ல  செலவிற்கு  தர்மத்திற்கு  பயன்படுத்தவும்

செவ்வாய், 23 நவம்பர், 2010

வயல் நன்றாக விளைய

வயல் நன்றாக விளைய

வயல் நன்றாக விளைய காலை 5 மணிக்கு பசும் கோமியத்தை சூரிய உதயத்திற்கு முன் சுவாமிகளை நினைத்து   எல்லா இடமும் தெளிக்க வயலில்  நல்ல விளைச்சல் விளையும்.

மருத்துவம் இடுப்பு எலும்பு தேய்ந்து இடுப்பு வலி

மருத்துவம்  இடுப்பு எலும்பு தேய்ந்து இடுப்பு வலி

மூங்கில் தழை சாறு இருமடங்கு, எள் எண்ணை ஒரு மடங்கு சேர்த்து எரித்து நூலில் தொட்டு எரித்தால் சிடு சிடு என்ற சப்தம் வரக்கூடாத பக்குவ நிலை வரவேண்டும் .காலையில் உள்ளங்கை அளவு சாப்பிடவேண்டும் .புழுங்கல் அரிசியுடன்  உளுத்தம் பருப்பும் சேர்த்து வறுத்து பவுடர் ஆக்கி மிளகு பூண்டு பள்ளு சேர்த்து புட்டுபோல் ஆவிகட்டி அதை  ஒத்தடம் கொடுக்க வேண்டும் அந்த புழுங்கல் அரிசி புட்டையும் சாப்பிடவேண்டும் .எல்லா எலும்பு வலிக்கும் இதை செய்யலாம் குணமாகும்.   

மூன்று குருவிகள்

மூன்று குருவிகள்

யார் எது செய்தாலும் சுவாமிகளுக்கு தெரிந்து விடும் .  துறவிகளிடம் மொத்தம் மூன்று குருவிகள் உள்ளது . அவை ஊர்க்குருவி,வெளிகுருவி ,மெய்க்குருவி .
ஊர்க்குருவி ஊரில் நடப்பவை எல்லாவற்றையும் வெளி குருவியிடம் சொல்லும் .வெளிக்குருவி மெய்க்குருவியிடம் எல்லா தகவலும் சொல்லும்.
உங்களைபோல் ( நம்மைப்போல் ) பேப்பர் படிக்க வேண்டாம் . எவன் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து விடுவேன் தெரிந்தாலும் வெளியே காட்டிகொள்ள மாட்டேன் . உலகத்தில் நடப்பவை எல்லாம் துறவிக்கு தெரியும் என்றார் .

சுவாமிகளிடம் எதையும் மறைக்காமல் கூற வேண்டும் .அப்படி மறைத்து வைத்தால் திருநீறு மட்டும் கொடுப்பேன் .பொய் சொல்லாமல் உண்மையை கூறி மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும் செய்த தவறுகளையும் சுவாமிகளிடம் மறைக்காமல் கூறினால் அடை சரி செய்ய சுவாமிகள் கடவுளிடம் நீதானே அந்த கெட்ட புத்தியை கொடுத்தாய் அவனுக்கு நல்ல புத்தியை கொடு என்று கேட்பேன் என்றார் .

கோடி நிம்மதி

கோடி நிம்மதி

ஒருவனுக்கு நல்ல பெண் ( மனைவி ) , வீடு , தண்ணீர் அமைந்தாலே போதும் கோடி நிம்மதி கிடைக்கும்

திங்கள், 22 நவம்பர், 2010

மருத்துவம் எலி கடி

மருத்துவம்  எலி கடி

ஆகாசத்தாமரை இலையை எள் எண்ணையில் எரித்து காலையில் சாப்பிட்டு கடிவாயில் தேய்க்கவும் .உப்பு இல்லாத பத்தியம் .

எருக்கன் பால் கடித்த இடத்தில் தேய்க்கலாம் 

மருத்துவம் ஊமையை மெல்லமெல்ல பேச வைக்க

மருத்துவம் ஊமையை மெல்லமெல்ல பேச வைக்க

கீழாநெல்லி தழையை அரைத்து தலையில் தேய்த்து அயக்காந்த செந்தூரம் அரிசி எடை தேனில் கலந்தும், நாயுருவி தழையை பசும்பாலிலும் சாப்பிட்டு வர பேச்சு வரும்     

மருத்துவம் உடம்பு பலம் பெற

மருத்துவம் உடம்பு பலம் பெற

பருத்தி கொட்டை ,வெள்ளை பூசணிக்காய் விதை, அருகம்புல் கிழங்கு இவைகளை நிழலில் காய வைத்து தூள் செய்து சாப்பிடவேண்டும்   

மருத்துவம் உடம்பு எரிச்சல் நீங்க

மருத்துவம் உடம்பு எரிச்சல் நீங்க

குப்பைமேனி தழையுடன் உப்பு மிளகு சேர்த்து  அரைத்து உள்ளுக்கு சாப்பிட்டு எரிச்சல் இருக்கும் இடத்திலும் தேய்க்கலாம்.

தும்பை இலை சாற்றுடன் உப்பையும் சேர்த்து மேல் தடவி விட்டு குளித்தால் சீக்கிரம் போகும் . ( எரிச்சல் தாங்கவேண்டும் ) 

நிலக்கடம்பையை அரைத்து மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு மேலுக்கும் தடவலாம் .

மருத்துவம் உடம்பு அசதி நீங்க

மருத்துவம் உடம்பு அசதி நீங்க

தூதுவேளை கீரையும் முருங்கை கீரையும் சேர்த்து அரைத்து சாப்பிடவும் .


மருத்துவம் இழுப்பு சீதபேதி

மருத்துவம் இழுப்பு சீதபேதி 

உத்தாமணி இலைச்சாறு வேப்ப எண்ணை இரண்டையும் சம எடை எடுத்து காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கொடுக்கவும்

மருத்துவம் ரத்தம் சுத்தி செய்ய

மருத்துவம் ரத்தம் சுத்தி செய்ய

அருகம்புல் வேரை அரைத்து பாலுடன் சாப்பிடவும் .
கேரட் சாப்பிட்டால் ரத்த சுத்தி விருத்தியாகும் .

மருத்துவம் இருமல் ஆஸ்த்மா

மருத்துவம்  இருமல் ஆஸ்த்மா

கருப்பு பூனைக்காய்ச்சல் இலையை பசும் நெய்யால் வதக்கி மிளகு லவங்கம் கிராம்பு மூன்றையும் இடித்து சர்க்கரை கலந்து சாப்பிடவும் . 

மருத்துவம் இருமல் மார்வலி விலக

மருத்துவம்  இருமல் மார்வலி விலக

சிகப்பு பூனை காய்ச்சல் இலை, தூதுவேளை இலை இரண்டையும் வெயிலில் காய வைத்து தூள் செய்து தேனுடன் காலையில் சாப்பிடவும் 

மருத்துவம் இடுப்பு வலி நீங்க

மருத்துவம் இடுப்பு வலி நீங்க

தழுதாளி இலையை எள் எண்ணை விட்டு வதக்கி பூண்டுடன் அரைத்து துவையலாக சாப்பிடவும் . 

மிளகை பொன்வறுவலாக வறுத்து எள் எண்ணையுடன் சேர்த்து சாப்பிடவும் .

கூழாங்கல் சின்ன கற்களை சுடு தண்ணீரில் போட்டு எடுத்து துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும் . வலியுள்ள பாகத்தில் எள் எண்ணை தடவி குண்டு மணி இலையை மேலே ஒட்டி வைக்கவும் .  

மருத்துவம்- வயிற்று புண் அப்பன்டிஸ்

மருத்துவம்- வயிற்று புண்   அப்பன்டிஸ்
வாழை தண்டை பச்சடி செய்து தயிருடன் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்   

மருத்துவம் ஆஸ்த்மா

மருத்துவம் ஆஸ்த்மா
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து விட்டு பிறகு சுட்ட சுண்ணாம்பு கற்களை பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து தெளிந்த சுண்ணாம்பு நீரை ஒரு மண்டலம் ( 48 நாள் ) சாபிடவும் .

சிகப்பு பூனைகாய்ச்சல் தழையை வறுத்து தூள் செய்து, மிளகையும் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து இரண்டையும் சேர்த்து சாபிட்டால் நீங்கும்


ஆஸ்த்மா இஸ்நோபியா விலக
   அரிசி திப்பலி பத்து கிராம் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து அதனுடன்   தூதுவேளை தழையை  காய வைத்து இடித்து தூள் செய்து  இரண்டையும் கலந்து தேனில் கொடுக்கவும்.




மருத்துவம் - அக்கி

மருத்துவம் - அக்கி
சிறுபசலை, சீம ஓடு  தூள்,உப்பு,மிளகாய் இவற்றுடன் மண் அல்லது செம்மண்  போட்டு நன்கு  அரைத்து நான்கு கோடுகள் போட்டு தெரிந்த விலாசத்திற்கு எழுதி ( ஓம் காகா பரா காகா மூவா காகா சுவா காகா.குருவே துணை  ) மூன்று வேளையும் எழுதினால் போகும்.

வயது

வயது
ஆணுக்கு 32 வயதுக்கு மேல் எல்லா அம்சமும் கிடைக்கும்
63 வயதுக்கு மேல் எந்த கிரகமும் ஒன்றும் செய்யாது
90 வயதுக்கு  மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது
120 வயதுக்கு மேல் தெய்வப் பிறவி . உலகத்துக்கு பொதுவானவர் கலசம் வைத்து யாகம் வளர்பதற்கு ஒப்பாகும் 

தெய்வ அம்சம்

தெய்வ  அம்சம்

காட்டு முயல் , பதினெட்டு அடி வேங்கை , கவரி மான் , காராம் பசு தெய்வ அம்சம் பொருந்தியவை .

வேகாத ஒரு புல்

வேகாத ஒரு புல்

வேகாத ஒரு புல் அருகம்புல்
வாடாத ஒரு பயிர் அன்பு
வருத்தமில்லாத ஒரு பாரம் - கரு உருவாகும் குழந்தை

ஞாயிறு, 21 நவம்பர், 2010

மருத்துவம் அல்சர் வயிற்றில் புண் உள்ளது விலக

மருத்துவம்  அல்சர்    ( வயிற்றில் புண் உள்ளது விலக )
அம்மான் பச்சரிசி தழையை அரைத்து எலுமிச்சை பழம் அளவு  பாலில் சாப்பிடவும் .
வலி குறையும் வரை சாப்பிடவும் .புளி காரம் நீக்கவும்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

மருத்துவம் - முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய

மருத்துவம் - முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய

முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய சுண்ணாம்பும் தேனும் சேர்த்து போட்டால் உள்ளே அமுங்கிவிடும் .
உடைந்து விட வேண்டுமானால் அரசமரத்து பழுப்பு இலையை எரித்து தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழைத்து போட வேண்டும் .

வன்னி இலையை வறுத்து  தேங்காய் எண்ணையில் எரித்து போட்டால் எப்பேர்பட்ட ரண காயமும் குணமாகும் .

சித்திரை மூல குச்சியை எருக்கன் பாலில் இழைத்து கட்டியின் மேல் போட்டால் பழுத்து உடைந்து விடும் .
சித்திரமூல வேர் ( கொடிவேலி என்று மற்றொரு பெயர் ) ( மருந்து கடையில் கிடைக்கும் 50 கிராம் வாங்கி  )   எருக்கன் பால் விட்டு அரைத்து அந்த கட்டியின் மேல் போட்டு வந்தால் இளகி கட்டியில் சீழ் வருவது போல் இளகி வந்து அந்த திரவம் இருக்கும் அதை வெளியே அகற்றி விட்டால் கட்டி மறைந்து விடும் .

சங்கை எருக்கன் பாலில் ஊற வைத்து பிறகு பூசலாம்    .

உத்தாமணி சாறு எடுத்து சுண்ணாம்பு கலந்து மஞ்சள் கொம்பால் தேய்த்து  பத்து போடவும். மூன்று நாட்களில் உடையும் .

விதி

விதி

விதியை யாராலும் தடுக்க முடியாது . மதியால் ( குரு கடாட்சத்தால் ) தெய்வ நம்பிக்கையால் பெரியதாக வருவதை சிறியதாக்கலாம் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விடும் .மனோ நம்பிக்கை  வேண்டும் .

விதியை மதியால் வெல்ல வேண்டும்.

விதி முடிந்தால் பாம்பு ஓடிவந்து கடிக்கும்

விதியின் விளையாட்டு கெட்ட நேரம் யாரையும் பிடித்து தள்ளும் .

விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

மண்ணுக்கு மண் மாத்தனும் , தண்ணீருக்கு  தண்ணீர் மாத்தனும் . விதி இருந்தால் தான் மாறும் .

விதியால் வரும் சுகமும் விலக்க முடியாத துக்கமும் வணக்கத்துடன் ஏற்க்கப்பட வேண்டியவை .

பாவம்

பாவம்

முன் ஜென்மத்தில் பிறரை பழித்தவன், வட்டி விட்டு சம்பாதிதவனுக்கு யானைக்கால் வரும் .
கோயில் சொத்தை சாப்பிட்டவன் வவ்வாலாக தொங்குவான்

தான் செய்யும் பாவத்திற்கு தன் மனைவி மக்கள் அனுபவிப்பார்கள் .வியாதி வீண் செலவுகள் போன்றவை அடிகடி ஏற்படும், நஷ்டங்களும் ஏற்படும்.

பாவம் செய்பவன் பணம் சேர சேர தைரியமாக பாவங்கள் செய்வான்.

நாலுபேர் சொத்து சிவன் சொத்து .

சிவன் சொத்து குலநாசம் .

கோயில் கரியங்களில் ஈடுபடக்கூடாது .ஈடுபட்டால் நேர்மையாக ,நேரான வழியில் போகவேண்டும் .

பொருள் சேர சேர கர்வம் அதிகமாகும் .அதனால் அழிவுப் பாதையில் போவான்

திருமூலர் சமாதி

திருமூலர் சமாதி

சிதம்பரத்தின் கோயிலில் உள்ள ஸ்ரீ மூலநாதர் ( லிங்கம் ) தான் திருமூலர் சமாதி .

துறவிகளின் சமாதி ஸ்தலங்களை மனதிலே பதிவு செய்ய வேண்டும்

சற்குரு

சற்குரு
சற்குருவின் மேல் நிர்ணயமாக இருப்பவனிடம் சற்குரு தானும் நிர்ணயமாக இருக்கையில் இருமனமும் ஒன்று கலந்து பிரம்ம தேவனின் எழுத்தை முறியடித்து விடும் .ஆகையால் பக்தனின் நிர்ணயத்தை கலைப்பதற்கு பிரம்ம தேவன் மாயாவையே அனுப்பி அவன் மனதில் சபலத்தை எழுப்பும் .இச் சோதனைகளை எல்லாம் வென்று எல்லாம் சற்குருவே என் செயல் யாது ஒன்றும் இல்லை தனது என்று ஒன்றும் இல்லை பட்டற்றநிலையை ஏற்படுத்தி கொண்டவனுக்கு சற்குருவே சாப்பாடும் கொடுப்பார் குறைகளையும் தவிர்ப்பார்         

ஓம் பராசக்தி துணை

ஓம் பராசக்தி துணை

தாயை நினைத்து ஓம் பராசக்தி துணை என்று எழுது .ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் உதவி செய்யும்.

ஓம் பராசக்தியே துணை நமசிவாய நம :    என்று எப்பொழுதும் ஜெபித்துவா. எல்லா நன்மைகளும் வரும் . மனம் அலைபாய்வது அடங்கும் .மனம் ஒருநிலைப்பட்டவுடன் நம சிவாய நமக என்று உபாசிக்க வேண்டும் .    

குறையில்லாத மனிதன்

குறையில்லாத மனிதன்

குறையில்லாத  மனிதனே கிடையாது.
குறையுடன்  கடவுள் பிறப்பித்தார்
குறையில்லாமல் யாரையும் பிறப்பிக்கவில்லை 

திருமண மூகூர்த்த நேரம்

திருமண மூகூர்த்த நேரம் 

திருமணங்களை விடியற்காலையிலோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்பே  நடந்தால் எல்லா தோஷங்களும் விலகும்     

திதி

திதி

தாய் தந்தை இறந்த நாளில் இரண்டு பேருக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும் .
மாட்டுக்கு அவுத்தி கீரை கொடுக்க வேண்டும் .

எங்கு தர்மம் செய்வது ?

எங்கு  தர்மம் செய்வது ?
எட்ட போய் தர்மம் செய்தால் ( சாப்பாடு போடுதல்  ) தான் புண்ணியம் கிடைக்கும் .
தன் வீட்டில் செய்தால் எப்போதும் புண்ணியம் இல்லை பிறர் இடத்தில்தான் செய்யவேண்டும் .

தன் வீட்டில் செய்யும் போது தனக்கு என்று எடுத்து வைத்திருப்போம் .சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லுவோம் . வீட்டில் இருத்தி வைத்துக்கொண்டே ஆயிடுச்சி என்று சொல்வது தர்மமா ?  

புதன், 17 நவம்பர், 2010

மனிதனுடைய சாப்பாட்டு அளவு

மனிதனுடைய சாப்பாட்டு அளவு

ஒரு மனிதனுடைய சாப்பாட்டு அளவு 32 கவளம் ( கையளவு ) தான் 

தீபாராதனை

தீபாராதனை 
சுவாமி படங்களுக்கு தீபாராதனை செய்யும் போது படத்தின் மேல் ஒருமுறை காட்டி கீழே பாதங்களுக்கு மூன்றுமுறை காட்ட வேண்டும்   

கோபம் வராமல் இருக்க

கோபம் வராமல் இருக்க
காலையில் எழுந்தவுடன் யார் கண்ணிலும் விழிக்காமல் சுவாமிகளை நினைத்துகொண்டு  தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க கோபம் வருவது குறையும் ,கோபம் வராது ,லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும் 

வயதான பெற்றோர்களுக்கு கோபம் அதிகம் வருவது ஏன்?

வயதான பெற்றோர்களுக்கு கோபம் அதிகம் வருவது ஏன்?
63 வயதுக்கு மேல்தான் அதிகமாக கோபம் வரும் ரத்தம் குறைய குறைய கோபம் வரும் வயதான பெற்றோர்களிடம் அதிகம் பேசக்கூடாது .பொறுமையுடன் நிதானமாக பேச வேண்டும் .  எனவே வயதான   பெற்றோர்களிடம் அவர்கள் கோபப்படும் போது நாம் அதிகமாக பேசக்கூடாது.

படிப்பு நன்கு வர

படிப்பு நன்கு வர

வெந்தயம் நாலு கொண்டைகடலை பதினைந்து இரவு ஊற வைத்து காலையில் பிதுக்கி சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட மூளை நன்கு  வளர்ச்சி அடையும்  படிப்பு நன்கு வரும்.

     குழந்தைகளை இரவு   படுக்க போவதற்கு முன் 1 மணி நேரமும்,காலை 4 மணிக்கும் படிக்க வைக்க வேண்டும்.

லக்ஷ்மி கடாட்சம்

லக்ஷ்மி கடாட்சம்

நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு

அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு ( அன்னதானம் செய்ய ) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.

காலையில்   எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு  குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.

முதலில் பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.தம்பி   மேல் பாசம் அதிகம் இருக்கும்.

பிள்ளையாரும் துறவியும்

பிள்ளையாரும் துறவியும்
பிள்ளையாரும் துறவியும் இருவரும் ஒன்றுதான் . இருவரையும் கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் நல்லதே செய்வார்கள்

முகம் லட்சுமிகரமாக இருக்க

முகம் லட்சுமிகரமாக இருக்க

காலையில் குளித்து நெற்றியில் மூன்று  விரல்களால் திருநீறு பூச முகம் லட்சுமிகரமாக இருக்கும்

தாயின் சக்தி

தாயின் சக்தி
தாயின் சக்திதான் ஜோதி
தாயின் சக்திதான் மயில்வாகனம்
தாயின் சக்திதான் குயில்
குயில் கூவுமிடத்தில் நீர் வளம் மிகுந்து இருக்கும்
மயில் கூட்டம் கூட்டமாக உள்ள இடத்தில் முருகர்   சக்தி   மிகுந்து  இருக்கும்
பேயாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான் .
தெய்வமாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான்
தாயினுடைய பாசவலைதான் பேயாகவும், பிசாசாகவும், சாமியாகவும் வந்து ஆடுவது .

நீர் ஊற்று கண்டு பிடிக்க

நீர் ஊற்று கண்டு பிடிக்க

காலை மூன்று மணிக்கு அலாரம் வைத்து அலாரம் அடித்தவுடன் எழுந்து யார் கண்ணிலும் படாமல் கிணறு வெட்டும் இடத்தை இடது  பக்கம் வட்டமாக சுற்றிக்கொண்டு வரவும் எப்பொழுது கோழி கூவுகிறதோ அந்த இடத்தில் கிணறு எடுத்தால் நல்ல தண்ணீர் கிடைக்கும் சுற்றும் பொழுது ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் திருவடிகள் துணை என்று மனதில் நினைத்துகொண்டு மூன்று மணி -நான்கு மணி முப்பது மணிக்குள்  சுற்றவும் . கோழி கூவும் . முதற் கோழி கூவும் நேரம் லக்ஷ்மி வரும் நேரம் .

ஓம் பராசக்தி சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று எழுத்து போட்டு மூன்று வரிசையாக ஒருவரிசைக்கு ஐந்து ஆமணக்கு கொட்டை முலைபக்கம் மேற்கு பக்கமாக வைத்து கூடை வைத்து மூடிவிட வேண்டும் அந்த 15 கொட்டைகள் எத்தனை அதிகம் திரும்பி இருக்கிறதோ அந்த இடத்தில் நீர் ஓட்டம் உண்டு கிணறு வெட்டலாம். இப்படி நிலத்தை சுற்றி வைத்து எந்த இடத்தில் அதிகம் கொட்டை  திரும்பிகிறதோ அந்தஇடத்தில் நீர் வளம் , நீர் ஊற்று அதிகம் என்று கண்டு கொள்ளலாம்

தான் தோன்றி பெருமாள் கோயில்

தான் தோன்றி பெருமாள் கோயில்

திண்டுக்கல்   வேடசந்தூர் அருகே தான் தோன்றி பெருமாள் கோயில் உள்ளது அக் கோயிலின் நிழல் பூமியில் எப்போதும் விழாது . மழை பெய்தால் தண்ணீர் நிற்காது

கெட்ட நேரம் , கிரக தோஷம் விலக

கெட்ட நேரம் , கிரக  தோஷம் விலக

பௌர்ணமி ,அமாவாசை இரவு 12 மணிக்கு சுவாமிகளை ஒன்பது சுற்று வலம்புரி ஒன்பது சுற்று இடம்புரி சுற்றி 108 வலம்புரி சுவாமிகளை மனதில் ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று மனதில் கூறிக் கொண்டே சுற்றிவர கெட்ட நேரம் ,கிரக தோஷம் எல்லாம் விலகும் .

கூலி வாங்காத கடவுள்

கூலி வாங்காத கடவுள்

கூலி  வாங்காத  கடவுள்  பிள்ளையாரும்  அகிலாண்டகோடி  பிரம்மாண்ட  நாயகி  பார்வதி  இந்த  இருவரும்  தான்    

செவ்வாய், 16 நவம்பர், 2010

வீக்கம் வற்ற

வீக்கம் வற்ற

எந்த வித வீக்கமாக இருந்தாலும் அதன்  மேல்  ஒண்ணுக்கு  ( சிறுநீர்  )   தடவ  சரியாகும்

மாங்கல்ய தோஷம் நீங்க

மாங்கல்ய தோஷம் நீங்க .

ஒரு முறை மாங்கல்ய தோஷம் உள்ள ஒரு பெண் மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் சுவாமிகளிடம் கேட்டார் .
அதற்கு சுவாமிகள் மாங்கல்ய தோஷமோ அல்லது எந்த தோஷம் இருந்தாலும் இரவு   வாழை மரத்தையும் அருகில் வைத்து இருந்து அறுபத்து  மூன்று வயது நிரம்பிய பிரம்மசாரி சுவாமியார் அல்லது துறவி உடுத்தியிருந்த துணி மீது படுத்து,  காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு பிள்ளையார் கோயிலைஒன்பது முறை  சுற்றி பின் வாழை மரத்தை வெட்டினால் சரியாகும் என்றார் .
அந்த பெண் துறவி யார் இருகிறார்கள் ? நீங்கள் தான் சுவாமி துறவி நீங்கள் தோஷம் நீங்க அனுமதியும் அருள் புரிய வேண்டும் என்று அழுதார்
சுவாமிகளும் அருள் புரிந்தார் சுவாமிகளின் ஆருளால் தோஷம் நீங்கியது .

வடலூர்

வடலூர்

வடலூர் மண்ணில் நாம் இருந்தாலே நம் பாவங்கள் விலகும் . அந்த மண்ணிற்கு அவ்வளவு மதிப்பு உண்டு

கொடியது

கொடியது

சுரத் தலை , முட மயிர் ,  ஏர் நெற்றி இவர்களிடம் ஞானிகள் கூட பக்குவமாக நடக்க வேண்டும் . அப்பேர்பட்ட பார்வை மிகவும் கொடியது .

கடவுளை கும்பிடும் முறை

கடவுளை கும்பிடும் முறை

ஆண்கள் விழுந்து கும்பிட வேண்டும் .கும்பிடும்போது நெஞ்சு ( மார்பு ) தரையில் பட வேண்டும் . குப்புற படுத்து வணங்கவேண்டும் .

பெண்கள் முட்டிக்கால் ,நெற்றி தரையில் படும்படி கும்பிடவேண்டும் .

திங்கள், 15 நவம்பர், 2010

அன்னதானத்தை விட சிறந்தது

அன்னதானத்தை விட சிறந்தது 

தினை அரிசி நான்கு படி வாங்கி தினமும் மூறு விரல்களால் ( பெரிய விரல் ,நடுவிரல் ,மோதிரவிரல் ) எடுத்து எறும்புக்கு தினமும் போடவும் .நூறுபேருக்கு சாப்பாடு போடுவதை விட மேலானது .தினை அரிசி நான்கு படி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து கொண்டுபோய் பிள்ளைகளுக்கு ( குழந்தைகளுக்கு )    கொடுக்கவேண்டும் 

கிளி மூக்கு

கிளி மூக்கு

கிளி மூக்கு இருப்பவர்கர்கள் எதிரியை வெல்லுவர்

கோர முடி குடியை கெடுக்கும்

சுருட்டை முடி சோறு போடும் 

பூவும் முடி புண்ணியத்தை கொடுக்கும்

மன்னிப்பு

மன்னிப்பு

பாடிய பட்டது பழுதது தவிழ்ந்து விட்டாலும்
நாடியே சுத்தி மத்தாளம் அது நயமது பரிந்து விட்டாலும்
ஆடிய கால்கள் இரண்டும் அடியது பிசகி விட்டாலும்
சொற்குற்றங்கள் பொருட்குற்றங்கள் சகல குற்றங்களையும்
சற்குருநாதா கணநாதா மன்னித்து அருள வேண்டும்
குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே துணை

சுவாமிகள் கூறும் தர்மம்

சுவாமிகள் கூறும்  தர்மம்

கோயில் குறையாக நிற்கும் போது பூர்த்தி செய்ய வேண்டும்
அன்னதானம்
கல்யாணம் கட்டுவிப்பது
தண்ணீர் பந்தல் குடிநீர் வசதி அமைத்தல்
சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை அமைத்தல்
சுமைதாங்கி அமைத்தல் 

வியாழன், 4 நவம்பர், 2010

108

108

தமிழ் வருஷங்கள் 60
நட்சதிரங்கள் ௦          27
இராசிகள்                  12
கிரகங்கள் ---------------9
மொத்தம் =             108






ஏழு சொட்டுக்கு கீழ்உள்ள உயிரனத்தை

ஏழு சொட்டுக்கு கீழ்உள்ள உயிரினத்தை  கொன்றால் பாவம் இல்லை    

நாழி கிணறு


நாழி கிணறு
திருச்செந்தூரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருந்தபோது முருகன் வேலால் ஊன்றி நீர் வந்த இடம் தான் நாழி கிணறு உப்பு கரிக்காது .    

வியாபாரம்

வியாபாரம்
நாஷ்டா கடையில் லாபம் உள்ளது போல் வேறு எந்த வியாபாரத்திலும் லாபம் கிடைக்காது.
 மளிகை கடை , ஹோட்டல் , ஜவுளி கடை வைத்து ஒருவன் முன்னேறவில்லை என்றால் அவன் வேறு எதிலும் முன்னேறமுடியாது.  .
  

பிச்சைகாரன்

பிச்சைகாரன்
பிச்சைகாரனுக்கு பிச்சை போட்டால் பாவம் வரும் .காசு கொடுக்காதே .சாப்பிட எதாச்சும் கொடு . காசை போட்டால் அவன் நல்லதிற்கு செலவு செய்தால் பரவாயில்லை . அந்த காசில் குடித்தாலோ வேறு கெட்ட செயல்கள் புரிந்தாலோ அப்பாவம் நம்மை சேரும் .
எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அவன் மனது போதும் என்று சொல்லாது .எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் . அவன் போதும் என்று எப்போது சொல்வது? உனக்கு புண்ணியம் எப்போது வருவது?
சாப்பாடு போட்டால் வயிறார மனதார போதும் என்று சொல்வான் .

ஒருத்தி ஒரு  பிச்சைகாரனுக்கு தினமும் தவறாமல் பிச்சை போடுவாளாம் . ஒருநாள் எதுவும் இல்லை அதனால் போடவில்லை அதற்கு அவன் எப்பவும் போடாத மகராசிதான்  போடவில்லை எப்பவும் போடுகிற கழுதை என் போடவில்லை என்றானாம் .

வயல் நன்றாக விளைய

வயல் நன்றாக விளைய
வயல் நன்றாக விளைய காலை 5 மணிக்கு பசும் கோமியத்தை சூரிய உதயத்திற்கு முன் சுவாமிகளை நினைத்து எல்லா இடமும் தெளிக்க வயலில் நல்ல விளைச்சல் விளையும்.

 ஞாயிற்று கிழமை விவசாயத்திற்கு   உகந்தது.

பாம்பு

பாம்பு

கொம்பேறி மூக்கன்
கொம்பேறி மூக்கன் பாம்பு வரம் பெற்ற பாம்பு . என்ன வரம் என்றால் தீண்டியவன் சாக வேண்டும் . தீண்டியவனை சுடுகாட்டில் புதைக்கும் வரை சுடுகாட்டில் காத்திருந்து பார்க்குமாம் . அவனை எரித்தவுடன்தான் சுடுகாட்டை விட்டு செல்லும்.
விஷயம் தெரிந்தவர்கள் தென்னமட்டையை கொளுத்தி விட்டு வந்துவிடுவார்கள்     

குடிப்பழக்கம் நீங்க

குடிப்பழக்கம்  நீங்க

கள்ளும் சாராயமும் கலந்து குடித்தால் போதை அதிகமாக இருக்கும்.
 
சாராயம் குடிப்பவன் அப்பழக்கத்தை விட கசகசா கஷாயம் போட்டு குடிக்க லேசான போதை  இருக்கும் .

குதிரையை நன்கு வேகமாக ஓட விட்டு அதன் வேர்வையை குடிபழக்கம் உள்ளவனை ஒரேமடக்கில் குடிக்க வைக்க வேண்டும் .அப்படி அவன் குடித்தால் குடிபழக்கத்தை அடியோடு விட்டுவிடுவான்       

புதன், 3 நவம்பர், 2010

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள்
சாவு பற்றி கனவில்  கண்டால் நல்லது அன்றோடு பீடை கழிந்தது என்று அர்த்தம் .
நரகல் பற்றி கனவில்  கண்டால் நல்லது
தண்ணீர் குடம் கனவில்  கண்டால் நல்லது .
பணம் கனவில்  கண்டால் நல்லதல்ல
பால் குடம் கனவில்  கண்டால் நல்லதல்ல

சுப காரியங்கள் செய்யும் போது

சுப  காரியங்கள் செய்யும் போது

வீட்டில் கிரகபிரவேஷம் புது குடித்தனம் போன்ற சுப காரியங்கள் செய்யும் போது பிள்ளையார் கோயிலில் இருந்து உப்பு தவிடு சாணம் இம் மூன்றையும் சுமங்கலிப் பெண்கள் எடுது செல்ல வேண்டும் .

இருக்கும் இடத்தில் இருந்து மாறுபவர்கள் கிழக்கு வடக்கு திசை நோக்கி செல்வது நல்லது .

எலி கடிக்கு மருந்து

எலி கடிக்கு மருந்து

எலி கடித்தால் ஆகாசத்தாமரை இலையை நல்லெண்ணையில் போட்டு எரித்து ஐந்து  நாட்கள் உப்பு புளி சேர்க்காமல் சாப்பிட குணமாகும் .
ராஜா எலி கடித்தால் பிளக்  நோய் வரும் 

திருமணம்

திருமணம் 

திருமணம் அனைத்தும் பிரம்மாவின் முடிச்சுபடிதான் நடக்கும் .

ஒரு நாட்டில் ராஜா ராணி நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தனர் . அவர்களுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவளுக்கு 32 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை.
ராஜாவுக்கு தனது தங்கை மகனுக்கு மணமுடிக்க ஆசை . ராணிக்கு தனது தம்பிகள் நால்வரில் யாராவது ஒருவருக்கு மணமுடிக்க ஆசை .
ராஜா திருமண பேச்சை எடுத்தால் ராணியும் ராணி திருமண பேச்சை எடுத்தால் ராஜாவும் தட்டி கழித்து விடுவார்கள் .

இப்படி இருக்கையில் சிவபெருமான் பிரம்மனிடம் எப்போது இளவரசிக்கு திருமணம் நடக்கும்? யார் மாப்பிள்ளை ? என்று கேட்டார் . அதற்கு பிரமன் காட்டில் ஒரு குஷ்டரோகி இருக்கிறான் அவன்தான் மாப்பிள்ளை இன்றில் இருந்து  45 வது நாளில் திருமணம் நடக்கும் என்று கூறினார்.
அதற்கு சிவன் அது எப்படி நடக்கும் அவளோ இளவரசி அவனோ குஷ்டரோகி என்றார் .
தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் 45 வது நாள்  வாருங்கள் சென்று பார்க்கலாம் என்று பிரமன் கூறினார் .
ஒரு நாள்  ராணி தனது மகளிடம் உனது தந்தை இந்த ஜென்மத்தில் உனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார் , நான் கூறியபடி கேள் உன்னை ஒரு மரப்பெட்டியில் உட்கார வைத்து அதில் பலகார பட்சணங்கள் , திருமாங்கல்யம் பட்டுடை அனைத்தும் வைத்து கொண்டியிட்டு ஒரு குறிப்பிட்ட தொலை தூரத்தில் வைத்து விட்டு எனது தம்பிமார்களிடம் கூறுகிறேன் யார் வந்து பெட்டியை திறந்து உன்னை முதன் முதலில் பார்கிறார்களோ அவர் யாரகிருந்தாலும் அவரையே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி சத்யம் செய்ய சொன்னாள் . தாயின் கட்டளைப் படி இளவரசியும் சத்யம் செய்தாள். ராணி ராஜாவுக்கு தெரியாமல் ஒரு மரப்பெட்டி செய்து இளவரசியை உட்கார வைத்து அதில் பலகார பட்சணங்கள் , திருமாங்கல்யம் பட்டுடை அனைத்தும் வைத்து கொண்டியிட்டு ஒரு குறிப்பிட்ட தொலை தூரத்தில் வைத்து வருமாறு சேவகர்களை அனுப்பினார் . சேவகர்களும் அவ்வாறே அவர்களும் ராணி கூறிய படியே செய்தனர் .
பின் ராணி தனது தம்பிமார்களிடம் விவரத்தை கூறி இளவரசியை கண்டு பிடிக்க அனுப்பினாள்.
அந்தக்காலத்தில் அண்டரண்ட பட்சி என்று இருந்தது அது ஒரு பெரிய வீட்டையே தூக்கி கொண்டு போய்விடும் . அப்பட்சி பட்சிண வாசனையை கண்டு இளவரசி உள்ள பெட்டியை தூக்கி கொண்டு ஒரு காட்டிற்கு வந்தது . பெட்டியை திறக்க மயற்சி செய்து முடியாமல் பெட்டியை காட்டிலேயே விட்டுவிட்டு சென்று விட்டது .
இளவரசி தனது மாமன்மார்கள் யாராவது வருவார்கள் என்று காத்துக்கொண்டு இருந்தாள். யாரும் வரவில்லை அந்திசாயும் நேரம் ஆகியும் யாரும் வரததால் பயந்து சட்டம் போட ஆரம்பித்தாள். அவ் வழியே வந்த குஷ்டரோகி யாரோ பாவம் என்று பேட்டியின் கொண்டியை திறந்தான். இளவரசி மாமன் என்று எதிர்பார்த்தாள் ஆனால்   குஷ்டரோகியை  கண்டு அதிர்ந்தாள் . தாயிடம் செய்த சத்யப்படி பெட்டியை யார் திறக்கிறார்களோ அவரை மணமுடிக்க ஒப்பு கொண்டதை நினைத்து பார்த்தாள்.விவரத்தை குஷ்டரோகி யிடம் கூறி திருமணம் செய்ய வற்புறுத்தினாள்.அதற்கு அவன் ஏற்கனவே நான் பவம் செய்து குஷ்டரோகியாக அவதிப் படுகிறேன் உன்னை திருமணம் செய்தால் பாவம் இன்னும் மிகுதியாகும் திருமணம் செய்ய மாட்டேன் என்றான். அதற்கு இளவரசி நீ எண்ணை திருமணம் செய்யவில்லை என்றால் நான் ஏன் உயிரை போக்கி கொள்வேன் அந்த பாவமும் உன்னை சேரும் என்றாள்.பிறகு குஷ்டரோகி அவளின் விருப்பபடி மாங்கலயம் அணிவித்து திருமணம் செய்தான் .அவனுக்கு குஷ்டம் இருந்ததால் அவனால் பலகார பட்சணங்களை கையால் எடுத்து சாப்பிட முடியவில்லை. இளவரசி அவனுக்கு அவள் கையால் ஊட்டி விட்டாள்.
பின் அவன் எந்த ஊர் எப்படி காட்டுக்கு வந்தான் என்று கேட்டாள். அதற்கு அவன் நானும் ராஜா வீட்டு பிள்ளைதான் ஏன் சிறு வயதில் ஒரு சாமியார் எங்கள் நாட்டுக்கு வந்திருந்தார் அவர் கந்தலாடை உடுத்தி அழுக்காக இருந்தார் என் அறியாமையால்  அவரை ஏளனம் செய்தேன் அவர் கோபம் கொண்டு குஷ்டரோகியாக அவதிப் படுவாய் என்று சாபமிட்டார் .உடனே எனக்கு குஷ்டம் வந்துவிட்டது மன்னிப்பு கேட்டேன் மன்னிப்பு கிடைக்கவில்லை . எனது தாய் தந்தையும் மன்னிப்பு கேட்டனர் சாப விமோசனம் கொடுக்குமாறு வேண்டினர் . அதற்கு அவர் சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் ஒன்றாக வந்து உன்னை பார்த்தால் குஷ்டம் நீங்கும் என்றார் .
அந்த மூவரும் ஒன்றாக சேர்ந்து எப்போது என்னை பார்ப்பது எனது குஷ்டம் எப்போது நீங்குவது என்று கூறி அழுதான் .
           பிரம்மா கூறியபடி 45 வது நாள் சிவன் பிரம்மாவை அழைத்தார் வா காட்டிற்கு சென்று திருமணம் நடந்ததா என்று பார்த்து வரலாம் என்றார் .பிரம்மா சிவனை பார்க்க செல்லும் போது மகாவிஷ்ணு எங்கு செல்கிறீர்கள் நானும் உடன் வருகிறேன் என்று கூறினார் . மூவரும் ( சிவன் பிரம்மா மகாவிஷ்ணு )  காட்டிற்கு சென்று மணமக்களை கண்டனர் . இளவரசிக்கும் குஷ்டரோகிகும் தரிசனம் கொடுத்து சாபத்தை நீக்கினர் .
குஷ்டரோகி அழகான வாலிபனாய் மாறினான் .