புதன், 29 ஜூன், 2011

விவசாயி

இராம்பாக்கம்  அருகில் உள்ள ஊரில் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான்.இன்னொரு சிறிய விவசாயி மூன்று ஏக்கர் நிலம் வைத்து இருந்தான் .பெரிய பணக்காரனுக்கு அந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் வாங்க வேண்டும் என்று பேராசை. சிறிய விவசாயி ஒத்து கொள்ளவில்லை.சிறிய விவசாயி கஷ்டப்பட்டு மோட்டார் ஒன்று வாங்கி தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தான் .பணக்காரன் அந்த மோட்டாரை திருடி விட்டான் .மறுபடியும் கஷ்டப்பட்டு சிறிய விவசாயி மோட்டார் வாங்கினான் , அதனையும் பணக்காரன் மீண்டும் திருடி விட்டான் .

சிறிய விவசாயி சுவாமிகளிடம் வந்து மோட்டார் காணாமல் போகிறது சுவாமி யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று அழுதார் .

உனக்கு எத்தனை பிள்ளைகள் என்று சுவாமிகள் கேட்டார்?
இருவர் என்றார் விவசாயி
 யார் அதில் தைரியசாலி என்று கேட்டார் சுவாமி
            இளையவன் என்றார் விவசாயி .

இளையவனை வரச்சொல்லி அவனிடம் நம்பிக்கையான ஒருவனை இரவு காட்சி சினிமாவுக்கு அழைத்து செல் பின் பணக்காரன் வயலுக்கு சென்று அவனுடைய மோட்டார், ஸ்டார்ட்டர் களை திருடி எல்லாவற்றையும் தனித்தனியே கழற்றி மோட்டார் சாமான்களை ஆற்றங்கரை மணலில் புதைத்துவிடு, ஸ்டாட்டரை மட்டும் கிணற்றில் போட்டு விடு என்று கூறினார் .

அவனும் அது போல் செய்தான் .

மறுநாள் பணக்காரன் சுவாமிகளிடம் வந்து தனது மோட்டார் திருடு பொய் விட்டது என்று கூறி அழுதான் .

அதற்கு சுவாமிகள் உனது மோட்டார் மட்டும் காணமல் போனதா? மற்றவர்கள் மோட்டார் களும் காணாமல் போனது என்கிறார்களே உனது பக்கத்துக்கு வயல்காரனிடம் மோட்டார் திருடியவன் தான் உன் மோட்டார் களையும் திருடி இருக்க வேண்டும் .போலீஸ் ரிப்போர்ட் கொடு என்று சுவாமிகள் கூறினார்.

சுவாமிகளிடம் பணக்காரன் உண்மையை ஒப்பு கொண்டு செய்தது தவறு என்று ஒப்பு கொண்டான் .

சுவாமிகள் அவர்களிடம் திருடிய மோட்டார் களை யாருக்கும் தெரியாமல் அவர்கள் வயலில் போட்டு விடு உனது மோட்டார் மறுநாள் வந்து விடும் என்று கூறினார் .அவனும் அதே போல் செய்தான் 

மோட்டார்கள் கிடைத்தவுடன் சிறிய விவசாயி இளைய மகனும் மோட்டார் சாமான்களை எடுத்து வந்து  பணக்காரனின் வயலில் போட்டான்  .

மறுநாள் பணக்காரன் மோட்டார் கிடைத்து விட்டது சுவாமி ஆனால் ஸ்டார்ட்டர் கிடைக்கவில்லை என்றான் .
  அதற்கு சுவாமிகள் அவர்கள் சாமான்கள் எல்லாம் சரியாக கொடுத்தாயா என்று கேட்க ? அவன் ஒன்று இரண்டு விட்டு போய் இருக்கும் என்றான் .

அதற்கு ஸ்டார்ட்டர் சரியாக போய் விட்டது போ என்று சுவாமிகள் கூறினார் .

       

திங்கள், 27 ஜூன், 2011

ஆரியநாட்டில் அம்பிகை கோயிலில் எருமைக்கடா வெட்டி தின்று கொண்டு இருந்தார்கள் . அங்குள்ள பெரிய சுனையில் கோயிலுக்கு வரும் பெண்களை குளித்துவிட்டு வரச்சொல்வார்கள் .பெண் குளிக்கும் பொது உள்நீச்சல் தெரிந்தவர்கள் பெண்களின் இரு கால்களையும் பிடித்து உள்ளுக்குள் இழுத்து சாகடித்து நகைகளை திருடிக்கொள்வார்கள்.
ஒருநாள் ராணி குளிக்க வரும் போது நன்றாக உள்ளே இறங்கி குளித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் அம்பாள் வரம் கொடுப்பாள் என்று கூறினார்கள் .ராணி குளிக்க இறங்கியவுடன் காலைபிடித்து  இழுத்தார்கள் ராணி தப்பித்து மேலே வந்து மந்திரியிடம் உள்ளே யாரோ காலை பிடித்து இழுப்பது போல் இருந்தது என்று கூற மந்திரி உஷாராகி உள் நீச்சல் மூச்சு அடக்கி பயிற்சி பெற்றவர்களை அனுப்பி   தண்ணீரில் உள்ளவர்களை அனைவரயும் கொல்லுமாறு கூறி அனுப்பினான் .அதில் இருவர் மட்டும் தப்பித்து ராமர் காலத்தில் இந்தியாவுக்கு வந்தனர் .

பீஷ்மர்

  பீஷ்மர் எல்லாம் அறிந்தவர் ,அவருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை அவருக்கு கண்ணன் யார் துரியோதனன் யார் கடைசியில் என்ன ஆவான் ,கண்ணனுடைய சாகித்யம் எல்லாம் அறிந்தும் ஏன் சும்மா இருந்தார் ?

நாம் நம் வாழ்கையில் அப்படி நடக்க பழகி கொள்ள வேண்டும் .

துரியோதனன் செல்லமாக இளமை முதற்கொண்டே செல்வாக்காக கஷ்டப்படாமல் வளர்ந்து முடிவில் மிகவும் கஷ்டப்பட்டான் .

பாண்டவர்கள் இளமை முதல் கஷ்டப்பட்டு கொண்டு வந்தார்கள் .வனவாசம் யார் கண்ணிலும் படாமல் வளர்ந்தார்கள் .கிருஷ்ணனையே அடைக்கலம் புகுந்தனர் .அவரை முன்னே வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார்கள் .வளமாகவே வாழ்ந்தார்கள் .

( நாமும் நம் சுவாமிகளை அடைக்கலம் புகுந்து அவர் கூறிய நல்வழிகளில் நடந்து வாழக்கற்று கொள்ள வேண்டும் )    

அர்ச்சுனனின் கர்வம்

ஒருமுறை அர்ச்சுனனுக்கு கர்வம் வந்து விட்டது .பீமன் கதாயுதத்தை எடுத்து சண்டை போடுகிறான் ,நானோ ஒரு அம்பு விட்டால் போதும் என்று நினைத்தான்.மகாவிஷ்ணு அர்ச்சுனனை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார் .
அங்கு பெண்கள் ஒரு பூச்செடியில் மலர் பறிக்க பறிக்க மீண்டும் பூக்கள் பூத்து கொண்டே இருந்தன.அர்ச்சுனன் அப்பெண்களிடம் சென்று யாருக்காக பூஜை?எப்படி இந்த பூ பறிக்க பறிக்க பூத்து கொண்டே இருக்கிறது என்று கேட்க அவர்கள் பீமனை பூஜிக்க என்றனர் .

பின்பு பசியை தூண்டிவிட்டார் மகாவிஷ்ணு .இருவருக்கும் நல்ல பசி .ஒரு வீட்டின் முன் பசி என்று கேட்டனர் ,எதுவுமில்லை என்று விரட்டினார் அவ் வீடு பெண்மணி ,தண்ணீராவது கொடுங்கள் என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்று விரட்டினாள்.அவளை பார்த்து மகரசியாய் இரு அம்மா என்றார்.
இன்னொரு வீட்டிற்க்கு வந்து பசி என்று கேட்க நன்கு உபசரித்து மோர் கொடுத்தார் அந்த வீட்டு அம்மா. மோர் முழுவதையும் மீதி வைக்காமல் குடித்து விட்டார் மகாவிஷ்ணு. மீண்டும் ஒரு சொம்பு அர்ச்சுனனுக்கு  கொடுத்தார்.பசி அடங்கியது.அப்போது அவ்வீட்டு பசுங்கன்றுதுள்ளி ஓடி  அருகிலுள்ள கிணற்றில்   விழுந்து விட்டது ,அதை கண்ட தாய்ப்பசுவும் உடன் கிணற்றில் விழுந்தது ,அந்த வீட்டு பெண்ணும் இதை பார்த்து கிணற்றில் விழுந்தார் , உடன் கணவனும் கிணற்றில் விழுந்து விட்டான் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவிடம் காப்பாற்றி இருக்கலாமே என்று கேட்க?போனால் போகட்டும் என்று மகாவிஷ்ணு கூறி பேசாமல் இருந்தார் .
பின்பு இருவரும் நடந்தார்கள் நடக்கும் போது ஒரு முள் மகாவிஷ்ணுவின் காலில் ஏறி விட்டது அதை எடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூற அவன் இவர் மீது கோபமுற்று மனதிற்குள் படுபாவி அவர்கள் அனைவரையும் காப்பாற்றி இருக்கலாமே தண்ணீர் கூட கொடுக்காதவளை மகராசியை இரு என்றாய் ,பசி ஆத்தியவர்களை காப்பாற்றாமல் விட்டு விட்டாயே என்று முள்ளை வெளியே எடுப்பதற்கு பதில் நன்கு உள்ளே தள்ளி விட்டார். மகாவிஷ்ணு பின்பு முள்ளை எடுத்து  விட்டு நன்றாக உற்று பார் என்றார் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவின் காலில் முள் குத்திய இடத்தை பார்க்க கன்று,பசு,கணவன்,மனைவி யாவரும் பாதம் வழியே சொர்கத்திற்கு செல்வதை கண்டான் .பின்பு மகாவிஷ்ணுவிடம் மனிப்பு கேட்டான் .                      

சனி, 25 ஜூன், 2011

தீட்டு

  சக்தி ஒரு சமயம் சிவன் பேரில் சந்தேகம் கொண்டு சகல ஜீவராசிகளுக்கும் இவர் படி அளப்பது உண்மையா என்று அறிய ஒரு எறும்பை பிடித்து ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்துவிட்டு,சகல  ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டீரா என்று கேட்க, ஈஸ்வரன் ஆம் என்றார். இல்லை இந்த பெட்டிக்குள் உள்ள எறும்புக்கு நீர் உணவளிக்க வில்லை என்று சொல்லி திறந்து காட்ட அதில் இருந்த எறும்பு சிறு துண்டு உணவை சாப்பிட்டுகொண்டு இருப்பதை பார்த்த சக்தி அசந்து போனாள்.ஈஸ்வரனுக்கு சக்தி நம்மீதே சந்தேகம் கொண்டு விட்டாளே என எண்ணி கோபம் கொண்டு அவளை அடக்கி வைக்கவும்,தண்டனையாக தள்ளி வைக்கவும் எண்ணினார்.அப்போது சக்தி பயந்து போய் நிக்க அதிர்ச்சியினால் அவள் உடலில் இருந்து உதிரம் வெளியேறியது.இதனை கண்ட சக்திக்கு பயமும், அச்ச உணர்வும்,நாண உணர்வும் ஏற்பட்டு ஈஸ்வரனை விட்டு தள்ளி ஒதுங்கி நின்றாளாம்.மூன்று நாள் கழித்துதான் ஈஸ்வரனிடம் வந்தாளாம்      

வியாழன், 23 ஜூன், 2011

இடும்பர் சிவன் கோயில்

இடும்பர் சிவன் கோயில்இருந்த இடத்தில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார்.
அவ்வூரில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்தது .துறவிகள் கண் திறந்து பார்த்தால் மழை பெய்யும் என்று அவ்வூரில் உள்ள தாசி, முனிவர் சாப்பிடும் தழைகளில் உப்பு நீர் தெளித்தாள்.யார் இது போல் செய்தது என்று துறவி கேட்க ,மரத்தின் பின்னே ஒளிந்து இருந்த தாசி மழையில்லாமல் மக்கள் வேதனைப்படுகிறார்கள்.தங்கள் அருளால் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டினாள்.துறவியின் அருளால் மழை பொழிந்தது .தாசி மகிழ்ச்சியால் நடனமாடினாள்.தாசியின் கொலுசு ( சதங்கை ) அறுந்து விழுந்தது.துறவி அதை மாட்டினார். கணக்கு பிள்ளை ஒருவன் துறவியை தவறாக பேசினான் .துறவிக்கு கோபம் வந்தது . சிவலிங்கம் மூன்று துண்டுகளாக உடையுமாறு சாபமிட்டார் . உடனே சிவலிங்கம் படீர் என வெடித்தது .ஒரு பகுதி தண்ணீரில் சென்று விழுந்தது .மற்றொரு பகுதி விழுந்த இடத்தில் புல் கூட முளைக்கவில்லை.மற்றொரு பகுதி கோயிலிலேயே இருந்தது                    

புதன், 22 ஜூன், 2011

கொங்கனர்

கொங்கனர் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டார் .கல்யாணம் முடிக்க வழியில்லாமல் காவி தரித்து மலை காடுகளுக்கு சென்று சிவ சிவா என்று சொல்லிக்கொண்டு இருந்தார். காய் கனிகளை மட்டும் உண்டார். அப்படி இருக்கையில் ஒரு கொக்கு மரத்தின் மேல் இருந்து கீழே விழுந்தது. இவர் மேலே பார்க்கவும் கொக்கு கீழே  விழவும் சரியாக இருந்தது.உடனே இவர் தவ வலிமை தமக்கு கூடி விட்டது என்று நினைத்தார்.நம் பார்வை பட்டவுடன் கொக்கு கருகி கீழே விழுந்து விட்டது என்று நினைத்தார். அவருக்கு நான் என்ற நினைவு வந்தவுடன் பசித்தது .மலையில் இருந்து கீழே இறங்கினார்.ஒரு வீட்டிற்கு சென்று பசிக்கிறது என்று கேட்டார்.அந்த அம்மா அமருங்கள் சமைத்து சாப்பாடு போடுகிறேன் என்று கூறி சமையல் செய்ய தொடங்கினார்.சிறிது தாமதமாக சமையல் ஆனது. இவருக்கு கோபம் வந்து விட்டது,அந்த அம்மாவை முறைத்து பார்த்தாராம். அந்த அம்மா கொங்கனரே நான் என்ன கொக்கா பொக்குன்னு போகிறதுக்கு என்று கேட்டார். நம்மை விட இந்த அம்மா விஷயம் தெரிந்தவர் என்று அங்கிருந்து கிளம்பி வேறு வீடிற்கு சென்று அங்கிருந்த ஆளிடம் பசிக்கிறது என்று கேட்டார்.அந்த ஆள் சிறிது நேரம் அமர்ந்திருங்கள் என்று கூறி ஒரு ஆட்டை வெளியே ஓட்டி   சென்றார்.ஆட்டை கசாப்பு போட்டு விற்று விட்டு வந்து சமையல் செய்து முதலில் கண் தெரியாத தாயாருக்கு ஊட்டி விட்டு பின்பு கொங்கனரை சாப்பிட அழைத்தார் ,இவருக்கு கோபம் வந்து முறைத்தார் அதற்கு அந்த ஆள் உங்களைப்போல் அம்மாவை நான் அனாதையாக விட்டு விடவில்லை அம்மாவை கவனித்துவிட்டுதான் எனக்கு மறுவேலை என்றார்.இவனுக்கும் நம்மை விட விஷயம் அதிகம் தெரிந்துள்ளது நாம் அம்மாவை விட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று வியந்தார்.பின்பு தாயிடம் வந்து தொண்டு செய்தார்.
பின்பு புலிப்பாணி மந்திரம் கற்றுகொண்டார்.பக்கத்தில் உள்ள ஆடு மாடு மேய்பவர்கள் எல்லாம் இவரை பார்த்து புலி வாயை கட்டிவிடுவார் என்று புகழ்ந்தனர்.
பின்பு ஆசிரமம் வைத்து சிஷ்யர்கள் சேர்ந்தனர்.சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுக்க எதுவும் தெரியவில்லை,ஏதாவது சொல்லவேண்டுமே என்று இந்த சரீரம் மக்களுக்கே சொந்தம்,மக்கள் சந்தோஷமாக இருக்க வழி செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.சிஷ்யர்களில் 32 அங்க லட்சணம் பொருந்தியவர்  போகர் அவரை பார்த்தாலே தொட வேண்டும் போல் இருக்கும் .ஆசிரமத்திற்கு வரும் பெண்கள் அவரை தொட்டு  பார்த்து சந்தோசம் அடைவார்கள்.மக்கள்கூட்டம் எல்லோரும் போகரை சுற்றியே இருக்கும் இதை பார்த்த மற்ற சிஷ்யர்கள் போகர் மீது வெறுப்புற்றும்,பொறாமையுற்றும் கொங்கனரிடம் புகார் செய்தனர் .கொங்கனர் போகரிடம் நீ தான் பெண் பிள்ளைகளோடு சிரித்து கொண்டு இருக்கிறாய்  நீ சம்சாரியா என்று கேட்க நீங்கள் தானே எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க சொன்னீர்கள் என்றார் .கொங்கனவர் மற்றவர்களின் பேச்சை கேட்டு போகரை நாட்டை விட்டே  வெளியேற சொன்னார் .அதன் பின்னர் போகர் ஜப்பான் நாட்டிற்கு சென்று விட்டார்.அங்கு சென்று இறந்தவர்களுக்கு எல்லாம் உயிர்ப்பு சக்தி கொடுத்தார் மற்ற எல்லா விஷயங்களையும் கற்று கொடுத்தார் .கொங்கனவருக்கு இறக்கும் சமத்தில் ஞானம் வந்தது மற்ற சிஷ்யர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் வெட்டி அருமையான சிஷ்யனை இழந்து விட்டேனே என்று வருத்தப்பட்டார்.எப்படி இருந்தாலும் போகர் தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றார் நம்பிக்கையான ஒரு சிஷ்யனை கூப்பிட்டு போகர் எங்கிருந்தாலும் அழைத்து வரச் சொன்னார் .சிஷ்யன் ஜப்பானுக்கு சென்று எல்லா மருந்தும் என்னிடம் உள்ளது என்று அறிமுகப்படுத்திக்கொண்டு நாட்டினுள் சென்றார் .ஒருவன் கையில் அடிபட்டு ரத்தம் வர அதற்கு மருந்து கேட்க இதற்கு மட்டும் இல்லை என்று கூற ,அவரை ராஜாவிடம் கூட்டி சென்றனர்.போகருக்கு ஞான திருஷ்டி மூலம் விவரம் தெரிய வந்தது.தானே தண்டனை கொடுக்கிறேன் என்று கூறி மற்றவர்களை அனுப்பி விட்டார் . உப்பு சாப்பிட்ட இடத்தில் துரோகம் செய்ய கூடாது என்று மாறு வேடமிட்டு இந்தியா வந்தார்கள் .பின்பு திருப்பதியில் கொங்கனவரை போகர்  அடக்கம் செய்தார்.       
                    

பகாசூரன்

பகாசூரன் மிகுந்த  அட்டகாசம் செய்து வந்தான்.ஊர் மக்கள் கூடி வீட்டில் தினம் ஒருவர் மாட்டு வண்டியில் ஆடு கோழி அடித்து சமையல் செய்து எடுத்து சென்று கொடுத்து வர வேண்டும் என்று முடிவு செய்தனர் . சாப்பாடு எடுத்து செல்லும் ஆளையும் சாப்பிட்டு விடுவான் பகாசூரன்.ஒரு வீட்டில் பிள்ளையே இல்லை யாரை அனுப்புவது எந்ரூ அழுதார் ஒரு மூதாட்டியார் .மகாவிஷ்ணு பீமனை அனுப்பினார் .பீமன் மூதாட்டி வீட்டில் நன்கு சாப்பிட்டு  விட்டு  வண்டியில் சாப்பாடு எடுத்து சென்றான் .பீமன் சென்ற நேரம் பாகசூரன் வெளியே சென்று இருந்தான் . பீமனுக்கு பசி வந்து விட்டது வண்டியில் எடுத்து வந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான் . அந்த நேரம் பகாசூரன் வந்து நமக்கு வந்த சாப்பாட்டை யார் சாப்பிடுவது  என்று சத்தம் போட்டு மிரட்டினான் .இருவரம் பலத்த சண்டை போட்டனர் . பீமன் கதாயுதத்தால் பகாசூரனை வீழ்த்தினார் .     

நூறு சக்திகள்

மொத்தம் நூறு சக்திகள் .ஒவ்வொரு சக்தியும்[ 99 சக்தியும் ]  சிவனிடம் அவர்களுக்கு வேண்டிய வரம் பெற்றார்களாம்.இறுதியாக உனக்கு என்ன வரம் வேண்டும் என்று சிவன் கமலதரணியை பார்த்து கேட்டாராம்.அதற்கு அந்த அம்மன் நான் யாரை கண் திறந்து பார்கிறேனோ, அவர்களுக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது என்று கேட்டாராம்.அதற்கு சிவன் அது எப்படி நல்லது கெட்டது கலந்து தானே உலகம் இந்த வரத்தை என்னால் கொடுக்க இயலாது துறவிகளால்தான் முடியும், எனவே துறவியையே கேள் என்று கூறிவிட்டார். கமலதரணீ அம்மன் துறவியை நினைத்து தவம் இருந்தார்களாம். அப்போது முன்று துறவிகள் வந்தார்களாம், அவர்களுக்கு விருந்து பரிமாற செல்கையில் துறவிக்கு முன் அச்சத்ததைதவிர்த்து வர  வேண்டும் .எனவே ஆடை இல்லாமல் வா  என்று கூறினார்களாம். அந்த அம்மையார் சிவனிடம்  இவர்கள் மூன்று பேர் கண்ணுக்கு மட்டும் நான் தெரியவேண்டும் மற்றவர் யாருக்கும் தெரியக்கூடாது என வரம் கேட்டு பின் அவர்களுக்கு பரிமாறி வரத்தை பெற்றார்களாம் கமலதரணீ அம்மன்    [ நிர்வாண அம்மன் ].  
   
  

வெள்ளி, 17 ஜூன், 2011

சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி

ஒரு நாள் சுவாமிகள் அவருடைய சிறு வயதில் நடந்த நிகழ்ச்சியை கூறினார் .

அவர்கள் ஊரில் சுமை தூக்குபவர்கள் சிறிய பாதையில் கை வண்டி வைத்து இழுத்து வருவார்களாம் .அப்போது உள்ள போலீஸ் அதிகாரி வண்டியில் வருவானாம் ,அவன் வண்டியில் வருபோது எதிரே வருபவர்கள் ஒதுங்கி வழி விட வேண்டும் அப்படி வரும் போதுபாதை சிறியதாகவும் , சரியில்லாததாலும்    உடனடியாக ஒதுங்கி வழிவிட முடியாது .அப்படி உடன் ஒதுங்காதவர்களை பூட்ஸ் காலால் மிதித்து கீழே தள்ளி விடுவானாம் . இது பற்றி கூலி ஆட்கள் சுவாமிகளிடம் கூறினார்கள் .அதற்கு சுவாமிகள் அவர்களிடம் நான் எது சொன்னாலும் செய்வீர்களா என்று கேட்டார்கள், செய்கிறேன் என்று அவர்கள் கூறியதும் நீங்கள் கூட்டமாக செல்லுங்கள் போலீஸ்காரன்  வந்தவுடன்   அவனை கீழே தள்ளி உங்களுடைய செருப்பை இடது கையில் எடுத்து நன்றாக அடியுங்கள் அடித்து விட்டு வந்து விடுங்கள் பார்த்து கொள்கிறேன் என்றார் .
அவர்கள் அதே போல் அடித்தார்களாம் .போலீஸ்காரன் ஓடி சிலரை கூட்டி வந்து    அடித்தவர்கள் அனைவரையும் சிறையில் போட்டான்.அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சுவாமிகளிடம் கூறி அழுதார்கள் .சுவாமிகள் வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கொடுக்க வேண்டாம் அரிசி பருப்பு மட்டும் கொடுக்க சொன்னார் ,பின்பு சிறையில் உள்ளவர்களிடம் கோர்ட்டில் எப்படி அடித்தீர்கள் என்று  கேட்கும் போது  செருப்பால் அடித்தேன் என்று கூறும்படியும் எந்த காரணத்தை முன்னிட்டும் மாற்றி சொல்லக்கூடாது என்று தகவல் தரும்படி கூறினார் .
கோர்ட்டில் இது  குறித்து விசாரிக்க அவர்கள் அனைவரும் செருப்பால் தான் அடித்தோம் என்று கூற அனைவரையும் விடுதலை செய்து போலீஸ் காரனுக்கு தண்டனை கொடுத்தார்கள் ,அவனுக்கு வேலை போகும் சூழ்நிலையும் ஏற்பட்டது. பின்பு சுவாமிகளிடம் வந்து மன்னிப்பு கேட்டானாம் .

அந்த காலத்து சட்டம் அப்படி இருந்தது.
"செருப்பால் யாரையும் அடிக்க கூடாது . அடித்தால் அவனுடைய பாவம் முழுவதும் ஒட்டி கொள்ளும் ( அடிபட்டவனின் பாவம் ) அடித்தவனின் புண்ணியம் அடிபட்டவனுக்கு போய் விடும்..அதற்கு தான் இடது கையால் அடிக்க சொன்னார் சுவாமிகள்"  

பூதம்

ஒருமுறை சுவாமிகளிடத்தில் ஏதோ பூதம் நடமாடுவது போல் உள்ளது என்று சிலர் கூறினார்கள் .சுவாமிகள் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாராம் ,எதையாவது நினைத்துகொண்டு இருப்பீர்கள்  போங்கடா என்று திட்டினார்.மறுநாள் மதியம் யாரும் இல்லை எல்லா கதவுகளும் திறந்து இருந்தது அப்போது சுவாமிகள் சாய்வு நாற்காலியில் படுத்து இருந்தார் .அப்போது தொலைவில் வலது புறம் ஒரு பெரிய ஆண் பூதம் இடது புறம் ஒரு பெரிய பெண் பூதம் சுவாமிகளை நோக்கி வந்து கொண்டு இருந்தது .திடீர் என்று ஆண் பூதம் பெண் பூதமாகவும் , பெண் பூதம் ஆண் பூதமாகவும் மாறியதாம்.இருவரும் பெரிய மந்திரவாதிகள் போல் உள்ளார்கள் நம்மை சாக்கு பையில் போட்டு எடுத்து செல்ல போகிறார்கள் என்று நினைத்தார்களாம் .
இரண்டு பூதங்களும் அருகில் வந்தவுடன் கையை அசைத்து மந்திரம் போட்டதும் சுவாமிகள் சிறு குழந்தையை போல் ஆகிவிட்டாராம் .எல்லாம் சுவாமிகளுக்கு தெரிகிறதாம் ஆனால் பேச முடியவில்லையாம் .சுவாமிகள் பெண் பூதம் ஆனவுடன் பெண் பூதம் வாரிஎடுத்து மார்போடு அணைத்து கொண்டது ,பின் இரு பூதங்களும் குழந்தையை தூக்கி கொண்டு தோட்டதிற்கு    சென்றார்களாம்.குழந்தையை படுக்க போட்டு பெண் பூதம் முகத்தை தடவி கொடுத்தது ஆண் பூதம் கால்களை தடவி  கொடுத்தது. இவர்கள் இருவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என சுவாமிகள் யோசித்துக்கொண்டு இருந்தாராம் அவர்கள் ஏமாந்த சமயம் பார்த்து குடு குடு என ஓடி வந்து சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டாராம் .

வந்த பூதங்கள் யார் என்று தெரியுமா என்று கேட்டார் ?
தெரியாது என்று பக்தர்கள் கூற ஆண் பூதமாக வந்தது சிவன் என்றும் பெண் பூதமாக வந்தது பார்வதி என்றும் கூறினார் .   

புதன், 15 ஜூன், 2011

முருகர்

சூரசம்ஹாரம் செய்வதற்காக முருகர் தோன்றினார் .
ஈஸ்வரனும் ஈஸ்வரியும் முதலில் விநாயகரை பிறப்பித்தனர் . ஈஸ்வரி விநாயகரை கொஞ்சிக்கொண்டிருக்கையில் ஈஸ்வரர் விநாயகரை தூக்க ஈஸ்வரி மறுத்தார். அப்போது சிவன் இன்னொரு பிள்ளையும் இருந்தால் இருவரும் கொஞ்சலாமே என்று முருகனை பிறப்பித்தார் .முருகருக்கு ஐந்து வயது ஆகையில் எல்லா கலைகளிலும் தேர்ச்சிபெற்றார்.சிவனிடம் எல்லா வரங்களையும் பெற்றார்.பிள்ளையார் எதுவும் கேட்கவில்லை எல்லா வரங்களையும் தம்பிக்கே கொடுத்துவிடுங்கள் என்றார்.முருகர் யார் சண்டைக்கு வந்தாலும் அடித்து போட்டு விடுவார் .ஒருமுறை சிவன் துரு துரு என்று இருக்கிறானே அமைதியான பிள்ளையை பிறப்பித்து இருக்கலாமோ என்று நினைத்தார்.முருகர் பேசாமல்  ஊமை   போல் ஆகிவிட்டார் .பார்வதிக்கு இது தெரிந்தவுடன் ஏன் அது போல் நினைத்தீர்கள்  என்று    கேட்க சிவன் தவறாக நினைத்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டார் .
குழந்தையிலே அழித்துவிடலாம் என்று அசுரர்கள் திட்டம் போட்டனர் .முருகன் தொட்டிலிலே இருக்கும் பொழுது ஆராரோ நீ யாரோ நான் யாரோ வயது வாலிபன் ஆனேன் அம்மா என்றார் .உடனே வயது வாலிபன் தோற்றம் அடைந்தார் .பின்பு ஆராரோ நீ யாரோ நான் யாரோ ஏழு அடுக்கு மாளிகையை கண்டேன் அம்மா என்றார் உடனே ஏழு அடுக்கு மாளிகை தோன்றியது .அடுத்து  ஆராரோ நீ யாரோ நான் யாரோ கிழவனாய் ஆனேன் அம்மா என்றதும் கிழவனாய் காட்சி அளித்தார் .( அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கனிவாய் மொழி பேசி ...அதனால்தான் தொட்டிலில் உள்ள குழந்தைகளை ஆராரோ என்று தாலட்டுகிறோம் ) பின்பு முருகர் அசுரர்களை வதம் செய்தார்  

செவ்வாய், 14 ஜூன், 2011

குசேலர்

புல்லில் வரும் புல்லரிசியை தான் அவல் அரிசியாக குசேலர் கிருஷ்ணரிடம் செல்லும் பொது எடுத்து சென்றார் .கிருஷ்ணர் எல்லா இடத்திலும் இருக்கிறார் புல்,பூண்டு ,புழு ,பூச்சியிலும் கிருஷ்ணன் இருக்கிறார் .கிருஷ்ணன் இரண்டு பிடி அவல் சாப்பிட குசேலனுக்கு செல்வம் சேர்ந்தது .இலட்சுமி மூன்றாவது பிடியை சாப்பிட விடவில்லை தடுத்து விட்டார் .
அன்பான பொருள் புல்லரிசி  அவல்.
அன்பான பொருள்   அளவோடு இருக்க வேண்டும் அதிகம் கொடுத்தால் ( செல்வம் ) அகம்பாவம் வரும்.  

கிருஷ்ணன் பிறந்த கதை

யசோதைக்கு ஆண் குழந்தை பிறந்தால் அண்ணன் கம்சன் அழிப்பதாக இருந்தது.பிறக்கும் ஆண் குழந்தையை மட்டும் அழிப்பதாக இருந்தவன்  பிறக்கும் பெண் குழந்தைகளையும் கொன்று விட்டான் .   யசோதைக்கு( கிருஷ்ணன் ) ஆண் குழந்தை பிறக்கையில் ஈஸ்வரியே பெண் குழந்தையாக மாறி யாதவாள் குடும்பத்தில் மாற்ற முடிவு செய்தனர் .யசோதையின் அண்ணன் காவல் பலமாக போட்டு இருந்தான் கருங்கழுதை, கரு நாய், கரும் பூனை எல்லாம் காவலுக்கு இருந்தது .ஈஸ்வரன் கருங்கழுதையின் காலைப் பிடித்துகொண்டு 15 நிமிடங்கள் கத்தாமல் இரு என்று கெஞ்சினார் .குழந்தைகளை மாற்றி விட்டனர் . பெண் குழந்தையை தூக்கி வெட்டும் பொழுது குழந்தை மேலே சென்று உன்னை அழிக்க கிருஷ்ணன் தோன்றி விட்டான் என்று கூறி மறைந்தது        

பக்த ராமதாஸ்

பக்த ராமதாஸ் 32 இலட்சணங்கள் பொருந்தியவர்.தெய்வப்பிறவி .அவருக்கு 36  கூத்தியார்கள் இருந்தனர் .30 பேர் பணத்தாசை பிடித்தவர்கள் ,மீதி ஆறு பேர் நல்லவர்கள் .முப்பது பேரும் அவரிடமுள்ள சொத்துக்களை எல்லாம் வாங்கிவிட்டனர்,எல்லாம் வாங்கிய பிறகும் ஆசை போக வில்லை. அவரது மனைவியின் தோட்டை கேட்டனர் . அவரும் வாங்கி வருகிறேன் என்று கூறினார் .மனைவியிடம் தோட்டை கேட்க அவர் தர மறுத்துவிட்டார் இன்று தோட்டை கேட்பார்கள் நாளை தாலியையும் கேட்பார்கள் என்று கூறினார் மனைவி.இறுதியில் நான் தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை தோட்டை அவளிடம் கொடுக்கும் போது நிர்வாணமாக வந்து கவுட்டுக்குள் கையை விட்டு வாங்க வேண்டும் என்று என்று சொல்லுங்கள் என்றார் .அவரும் தோட்டை கேட்டவளிடம் இது போல் கூற அவளும் அதே போல் வந்து வாங்க ச்சே நம் மனைவியிடம் இருப்பது தானே இவளிடம் உள்ளது இதற்கு ஆசைப்பட்டா நாம் நம் சொத்து முழுவதும் இழந்தோம் என்று வருத்தப்பட்டார் .அன்று முதல் ராம ராம என்று சொலிக்கொண்டு இருந்தார் .
அந்த நாட்டு மன்னன்  இரண்டு ஜில்லா கந்தாயம் பாத்து வருடம் வரிப்பணம் ராமதாசிடம் கொடுக்க வேண்டும் யாரு எதுவும் கேட்க கூடாது என்றான் .வரும் பணத்தை எல்லாம் நகைகளாக மாற்றி ராமருக்கும் சீதைக்கும் போடு அழகு பார்த்தார் .அரசன் பணம் கேட்க   பணம் இல்லை என்றார் .அரசன் ராமதாசை சிறையில் அடைத்தான். 45 நாட்கள் சிறையில் இருந்தார் ராமர் லட்சுமனுருக்குதான்  கண்  தெரியவில்லை என்றால் சீதைக்கு கூடவா கண் தெரியவில்லை என்றார் .அன்று நாமம் போட்ட ஒருவர் நகை மூட்டையை மன்னரிடம் கொடுத்து மறைந்தார் .மன்னர் இது குறித்து ராமதாசிடம் கூறி விடுதலை செய்தார் .நான் பாவி எனக்கு தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டார் .ஏன் இந்த சிறைவாசம் என்று ராமனிடம் கேட்க போனஜென்மத்தில் கிளி குஞ்சை தாயின் கூண்டில் இருந்து ஏழு நாட்கள் பிரித்துவிட்டாய் அதனால் தான் கஷ்டப்பட்டது என்றார் .             
 

பூதம் புதையல் காத்த கதை

பெரிய பணக்காரன் ஒரு வீடு கட்டினான் ,நான்கு அறைகள் போட்டு மெத்தை மேல் எழுப்பி அதில் யாருக்கும் தெரியாமல் மிளகாய் பவுன் சவரன்கள்  வைத்து மூடிவிட்டான்.பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று இருந்தவன் திடீரென்று இறந்துவிட்டான்.நான்கு வருடங்கள் ஆனது.இரவு நேரங்களில்  புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .பிள்ளைகள் பயந்து வீட்டை வாடகைக்கு விட்டனர் .தொடர்ந்து இரவு நேரங்களில்  புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது.வாடகைக்கு வந்தவர்களும் பயந்து வீட்டை காலி செய்தனர் . வீட்டைவந்த விலைக்கு விற்றுவிட்டு போய்விடலாம் இந்த வீடே வேண்டாம் என்று முடிவு செய்து  விற்க முயன்றும் யாரும் வாங்க வில்லை.வீட்டருகில் உள்ள ஏரிக்கரையில் ஒருவன் டீக்கடை வைத்து இருந்தான் மழைக்காலம் வந்தவுடன் அந்த வீட்டின் தாழ்வாரத்தில் கடை வைத்து    கொள்கிறேன் என்று கேட்க தாரளமாக வைத்துகொள் என்று கூறி வீட்டு சாவியை   கொடுத்தனர் .இரவு நேரம் வீட்டினுள் படுக்கும் பொது புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .டீக்கடைக்காரன் மறுநாள் நம் சுவாமிகளை போல் உள்ளவரிடம் சென்று இது குறித்து கூற ,அவர் டீக்கடைக்காரனுக்கு தைரியம் கூறி இரவு நேரத்தில் சத்தம் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று  கேட்கும் போது  நீ போடு புடிசிக்கிறேன் என்று கூறி முந்தி ஏந்து என்று கூறி அவன் கையில் அவருடைய நகத்தை கொடுத்தார் .அன்று இரவு அவன் சுவாமிகளை நினைத்து கொண்டு படுத்து இருந்தான் இரவு நேரத்தில் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று சத்தம்  கேட்கையில் சுவாமிகளை நினைத்துகொண்டு தைரியமாக போடு புடித்து கொள்கிறேன் என்று கூற மேல் இருந்த சுவர் வெடித்து தங்க காசுகள் கீழே விழுந்தது .அதை அவன் யாருக்கும் தெரியாமல் அப்படியே வைத்து ஒரு வருடம் கழித்து அந்த வீட்டையே வாங்கி நன்கு தொழில் செய்தும்  தான தருமங்கள் செய்தும் நன்கு வாழ்ந்தான் .    

திங்கள், 13 ஜூன், 2011

இடும்பன்

இடும்பாசூரனுக்கும் முருகனுக்கும் சண்டை வந்தது .சண்டை நீடித்து கொண்டே இருந்தது.முடிவது போல் தெரியவில்லை .இடும்பன் காலால் தூக்கி அடிக்க முருகை மேலே சென்று தலைகீழாக விழ அப்போது மகாவிஷ்ணு நெற்றியிலே நீறு  இருக்க உனக்கு நினைவு தப்பி போனதென்ன உச்சியிலே முருகையா சடையிருக்க உள்ளங்கையில் பழனியப்பா உனக்கு புத்தி தடுமாறி போனதென்ன என்றார் .அப்போதுதான் முருகருக்கு அன்னை கொடுத்த வேல் ஞாபகம் வந்தது .இடும்பன் உட்கார்ந்து இருந்த மலையை நோக்கி வேலுடன் பாய நடுவில் புகுந்து மகாவிஷ்ணு சமாதானம் செய்தார் .
இடும்பனுக்கு தேங்காய் உடைத்துவிட்டுத்தான் பழனி கோயிலுக்கு செல்ல வேண்டும் .

ஆஞ்சநேயர்

ஆஞ்சனேயரிடம் சஞ்சீவி மலையை எடுத்துவர சொன்னார் மகாவிஷ்ணு .முருகருக்கு கொடுத்ததுபோல் எனக்கு வரம் தர வேண்டும் என்று ஆஞ்சநேயர் கேட்க பொய் வரம் கொடுத்தார் மகாவிஷ்ணு .ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வருகையில் சிற்றரசன் ஒருவர் காலமாகி விட்டார் வரம் உள்ளதே என்று ஆஞ்சநேயர் மந்திரம் கூறி உயிர்ப்பு சக்தி கொடுத்து மன்னரை எழுப்பினார்.பொய் வரம் ஆனதால் ஆஞ்சநேயர் சக்தி முழுவதும் போய் விட்டது.பின்பு அரசியிடம் சென்று புருஷன் வேண்டுமா குழந்தை வேண்டுமா என்று கேட்க அரசி புருஷன் வேண்டும் என்று கூற குழந்தையிடம் இருந்து இழந்த சக்தியை பெற்றார் .

வெள்ளி, 10 ஜூன், 2011

குருடனுக்கு கண் கிடைத்த கதை

 கண்ணன் [ மகாவிஷ்ணு ]  வெண்ணை  திருடுகையில் யார் திருடர்கள் என்று கேட்டால் மாமியார் இடம் மருமகள் என்றும் மருமகளிடம் மாமியார் என்றும்  கூறி தப்பித்துகொள்வார் .ஒரு நாள் எல்லோரும்  சேர்ந்து  திருடனை தேடுகயில்    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக்கொண்டு இருந்தார் ஒரு அறுவது  வயதான கிழவர்  ஒரு கூடையின்  மேல் அமர்ந்து கொண்டிருந்தார்  ஓடி வந்த    கண்ணன் கிழவரை  எழுப்பி கூடைக்குள்சிறிது நேரம்  ஒளிந்து கொள்வதாக கூறி கூடைக்குள் ஒளிந்து கொண்டு  கிழவரை  மேலே அமர்ந்து கொள்ள சொன்னார். அவரும் சம்மதித்தார் .  தேடிவந்தவர்கள் திருடனை காணவில்லை என்று சென்றுவிட்டனர் . கிழவருக்கு கண் தெரியவில்லை என்றாலும் ஞானக்கண் உண்டு .உள்ளே ஒளிந்து கொண்டு இருப்பது கண்ணன் என்பதை அறிந்தார் .கூடையை திற என்று கண்ணன்  சொல்ல கிழவர் கண்பார்வை கொடுத்தால் தான் கூடையை திறப்பேன் என்றார் .கண்ணபிரானும் கண் பார்வையையும் ஆசியையும் கொடுத்தார் .










   

புலிக்கு குரு பூனை

முதன்முதலில் புலிக்கு வேட்டை ஆடத் தெரியாது .காட்டு பூனை நன்கு வேட்டை ஆடும் .புலி பூனையிடம் சென்று எனக்கு வேட்டை ஆட கற்றுகொடு என்று கெஞ்சியது . பூனையும் எப்படி பதுங்கவது எப்படி  பாய்வது  என்று கற்றுகொடுத்தது .தினமும் புலி வேட்டையாடி சாப்பிட்டது .ஒரு நாள் புலிக்கு இரை எங்கு  தேடியும் கிடைக்கவில்லை பூனையையே அடிக்க வந்தது ( காட்டு பூனை கொழு கொழு என்று இருக்கும் ) உடனே பூனை மரத்தின் மேல் ஏறிக்கொண்டது ,நீ இப்படி செய்வாய் என்று எனக்கு தெரியும் அதனால்தான் உனக்கு மரம் ஏறும் வித்தையை கற்றுகொடுக்கவில்லை .நான் பேண்ட குண்டியை கூட நீ பார்க்க முடியாது என்று மரத்தின் மீது ஏறி விட்டது .

பூனை மலம் கழித்தவுடன் மண் போட்டு மூடிவிடும் .பூனை சாப்பிட்டவுடன் நாக்கினால் சுத்தம் செய்யும் புலிக்கு அது போல் செய்ய தெரியாது .

பூனையை அடித்தால் பாவம் ,சாபம் கொடுக்கும் .
வீட்டுப்பால் சாப்பிடும் போது கண்ணை திறந்து குடிக்கும்,திருட்டுப்பால் குடிக்கும் போது( கண்ணை திறந்து கொண்டு குடித்தால் பாவம் வரும் என்று ) கண்ணை மூடிக்கொண்டு குடிக்குமாம்             

இந்து முஸ்லீம்

முன்பு இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாகவே இருந்தனர் .அம்மியும் குழவியும் வைத்து வழிபட்டு வந்தனர் .பின்பு இருவருக்கும்அம்மி குழவி யாருக்கு சொந்தம் என்று சண்டை வந்தது . அப்போது மருள் வந்து குறி சொன்னார்கள் அதில் அம்மியை ஒரு ஆளும் குழவியை ஒரு ஆளும் தலையில் தூக்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தூக்கி கொண்டு செல்ல வேண்டும் எங்கும் கீழே வைக்க கூடாது .இருவரும் தூக்கி செல்லும் போது இருவருக்கும் வயிற்றை கலக்கியது என்ன செய்வது என்று கேட்க மருளில் கீழே வைத்து விட்டு போய் வாருங்கள் மூன்று முறை குரல் கொடுப்பேன் அதற்குள் வந்து தூக்கி கொள்ள வேண்டும் தாமதம் செய்பவனுக்கு சொந்தம் இல்லை என்றது .குரல் கிடைத்தவுடன் முஸ்லீம் கால் கழுவாமல் ஓடி வந்து தூக்கி கொண்டான் .இந்து தண்ணீர் தேடி ஓடி கழுவி வர தாமதம் ஆகி விட்டது .அம்மியும் குழவியும் முஸ்லீமுக்கே சொந்தமாகி விட்டது .இந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் .பிறகு நம்பி உடனே வந்தவனுக்கு உருவ வழிபாடு தேவை இல்லை என்று கூறி அம்மியும் குழவியும் இந்துவுக்கே கொடுத்துவிட சொன்னார்கள் .     
( முஸ்லீமிடம் ஒன்று கூறினால் அதை நம்பி அப்படியே செய்வார்கள் இந்து நம்பமாட்டார்கள் முஸ்லீமுக்கு இருக்கும் அறிவு இந்துக்களுக்கு இல்லை என்று கூறுவார் சுவாமிகள் )

புதன், 1 ஜூன், 2011

ஆரவல்லி சூரவல்லி

ஆரவல்லி சூரவல்லிஇருவரும் ஆண்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்தனர் .
இருவரும் சாகா வரம் பெற்றவர்கள் .அவர்களுக்கு ஒரே பெண் பல்வரிசை அவள் பெயர் .அவளை திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகளை விதித்தார்கள் .ஒரு பெரிய இரும்பு குண்டை கையாலே தேய்த்து கரைக்க வேண்டும் ,இரும்பு கம்பத்தை ஒரே வெட்டில் மூன்று துண்டுகளாக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் .இப் போட்டிகளில் ஜெயித்தால் திருமணம் இல்லையென்றால் அடிமையாக இருக்க வேண்டும் .எவராலும் ஜெயிக்க முடியவில்லை எல்லோரும் அடிமையாகினர் .பீமன் போட்டிக்கு சென்றான் எல்லாவற்றிலும் ஜெயித்தான் ஆனால் இரும்பு கம்பத்தை  ஒரே வெட்டில் மூன்று துண்டுகளாக்க முடியவில்லை இரண்டு துண்டுகள்தான் ஆகியது .பீமனையும் சிறையில் அடைத்து விட்டனர் .மகாவிஷ்ணு பெருசாளியாகப்  போய் சிறையில் இருந்து பீமனை விடுவித்து வந்தார் . தர்மர் இதை அறிந்து ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் காதிற்கு வந்தோம் பீமனை ஜெயிலில் விட்டு விட்டு வாருங்கள்   போட்டியில் ஜெயிக்க பாருங்கள் என்றார் .மகாவிஷ்ணுவான கண்ணபிரான் சகாதேவனை கூப்பிட்டு சாஸ்திரத்தை எடுத்து பார்க்க சொன்னார் , அந்த பெண்ணின் கணவன் அல்லி முத்து என்று இருந்தது . அவன் துரியோதனின் தங்கையின் பிள்ளை அவர்    தருமரிடம்   பாசமாக  இருப்பவர் தகவல் கூறி அழைத்துவரச் சொன்னார்கள் பின்பு அவனை அழைத்து கொண்டு துறவியிடம் சென்று ஆசி பெற்று முட்டை வாங்கி கொண்டு போட்டிக்கு அனுப்பினார்கள் . அல்லி முத்துக்கு இரும்பு கம்பத்தை வெட்ட மகாவிஷ்ணு சொல்லி கொடுத்தார் .கம்பத்தை வெட்டும் போது முதலில் கம்பத்தை U போல் வளைத்து பின்பு வெட்ட சொன்னார் .அல்லிமுத்து எல்லா போட்டிகளிலும் ஜெயித்துவிட்டான்.பேசியபடியே பெண்ணை மணம் முடித்து   எங்கள் ராஜியத்திலேயே இரு என்றனர் .அல்லிமுத்து  உங்கள் ராஜ்யமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்றான். நம்மை மதிக்கவில்லையே என்று பெண்ணிடம் விஷம் கலந்த பலகாரத்தை கொடுத்து உன் கணவனுக்கு மட்டும் ஊருக்கு செல்லும் வழியில் கொடு என்றனர் பெண்ணுக்கு பலகாரத்தில் விஷம் உள்ளது தெரியாது .வழியில் தின்ன கொடுத்தாள் தின்னவுடன் அவன் உடம்பு நீலம் பாய்ந்தது. அதைபார்த்து பல்வரிசை கதறி அழுதாள்.துறவியிடம் வரம் பெற்றதால் அல்லிமுத்து இறக்கவில்லை .ஆனால் அவன் நான் இறந்ததற்கு சமம் என்றான் அப்போது பாடிய பாடல் தான் இப்போது சுடுகாட்டிற்கு செல்லும்போது வெட்டியான் பாடுவது . இதை கேள்விப்பட்ட அர்ஜுனன் கோபமடைந்தான் அவர்களை வீழ்த்த சென்றான் . ஆரவல்லியும் சூரவல்லியும் சாகாவரம் பெற்றவர்கள் அர்ச்சுனன் பாணம் விட்டால்தான் இறப்பார்கள் .அர்ச்சுனன் வருவதை கேள்விப்பட்டு இருவரும் நாட்டை விட்டு ஓடிவிட்டனர் பின் கடலில் வீழ்ந்து உயிரை மாய்த்து    கொண்டனர் .அவர்களின் ஆவி திருமூர்த்தி மலையில் நீண்ட நாட்களாக சுற்றிக்கொண்டு இருந்தது. மரமே நடந்து வருமாம் அப்படி சக்தி அவர்களுக்கு .திருமூர்த்தி மலையில் யாரும் ஏற முடியாது ஏறியவர்கள் திரும்பியது இல்லை .அப்படி இருக்கும் பொழுது நம் சுவாமிகள் திருமூர்த்தி மலைக்கு மேல்  செல்லும் போது போகவேண்டாம் என்று எல்லோரும் தடுத்தார்கள்.சுவாமிகள் மலை மேலே ஏறிப் போய் படுத்து கொண்டார். மரங்களின்  மீது நெருப்பும் பெரிய சத்தங்களும் கேட்டது சுவாமிகள் அமைதியாக இருந்தார் .ஆவிகளின் ஆரவாரத்தை அடக்கினார் .