சனி, 30 அக்டோபர், 2010

உடல் பலம் பெற

 உடல் பலம் பெற
சிறுவயது முதல் குழந்தைகளுக்கு தாமரை கொட்டை கொடுத்து வந்தால் எந்த வியாதியும் வராது .தாமரை கொட்டை குளிர்ச்சியானது 
சின்ன பருத்தி கொட்டையை ஊற வைத்து ஆட்டிபிழிந்து பசும் பாலுடன் காய்ச்சி பாயசம் போல் செய்து தினமும் குடித்து வர மார்பு பலம் பெரும் . நெஞ்சில் தேங்காய் உடைக்கலாம்
எருக்கன் வேர் மண்ணில் இருந்து ஒரு அடிக்கு ( பூமி மட்டத்தில் இருந்து ஒரு அடி வரை இருப்பது விஷத் தன்மை உள்ளது )   கீழே உள்ள வேரை எடுத்து இடித்து பசும்பாலில் போட்டு காய்ச்சி வடகம் போல் தட்டி வெயிலில்  காயவைத்து ( சிலநாட்கள் இது போல் தொடந்து செய்ய வேண்டும் ) பின் நன்றாக தூள் செய்ய வேண்டும் . பின் பனங்கற்கண்டு( சம எடை )  தேனுடன் சேர்த்து அரைத்து லேகியம் போல் செய்து சாப்பிடவேண்டும்  . உடம்பு தானே பலம் பெரும் ( இம் மருந்து சூட்டை அதிகப்படுத்தும் )  .
இம்மருந்தை சுவாமிகள் கூறிய முறைப்படி செய்து 85 வயதான கிழவருக்கு 45 நாட்கள்   கொடுக்க தள்ளாடி நடந்து கொண்டு இருந்தவர் ஓட ஆரம்பித்து விட்டார் ............
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக