புதன், 24 மே, 2023

இறைக்கிற கிணறு ஊறும்

 இறைக்கிற கிணறு ஊறும்.

கெட்ட செலவு செய்யாமல் நல்ல செலவு(தர்மம்) செய்தாலும் காசு வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்

புதன், 10 மே, 2023

அன்னதானம்

 

உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது .
அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது, மற்றபடி ஜப தவங்கள் 
எல்லாம் கர்ம வினைகளை போக்காது . வீட்டிலே இருந்தாலும், 
கோயிலுக்கு போனாலும், கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் 
இல்லாமல் காப்பாற்று, நல்ல சுகத்துடன் வைத்திரு, என மனமாற 
வேண்டிவந்தால் போதுமானது .

கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை
கொண்டு செல்ல வேண்டும். மற்றபடி சம்சாரிகள் மனைவி 
குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி 
நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது .

 
அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல்
 ஏழைகளாக பார்த்து அவர்கள்
வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது 
சிறந்தது.   இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் 
நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்