வெள்ளி, 19 நவம்பர், 2010

மருத்துவம் - முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய

மருத்துவம் - முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய

முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய சுண்ணாம்பும் தேனும் சேர்த்து போட்டால் உள்ளே அமுங்கிவிடும் .
உடைந்து விட வேண்டுமானால் அரசமரத்து பழுப்பு இலையை எரித்து தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழைத்து போட வேண்டும் .

வன்னி இலையை வறுத்து  தேங்காய் எண்ணையில் எரித்து போட்டால் எப்பேர்பட்ட ரண காயமும் குணமாகும் .

சித்திரை மூல குச்சியை எருக்கன் பாலில் இழைத்து கட்டியின் மேல் போட்டால் பழுத்து உடைந்து விடும் .
சித்திரமூல வேர் ( கொடிவேலி என்று மற்றொரு பெயர் ) ( மருந்து கடையில் கிடைக்கும் 50 கிராம் வாங்கி  )   எருக்கன் பால் விட்டு அரைத்து அந்த கட்டியின் மேல் போட்டு வந்தால் இளகி கட்டியில் சீழ் வருவது போல் இளகி வந்து அந்த திரவம் இருக்கும் அதை வெளியே அகற்றி விட்டால் கட்டி மறைந்து விடும் .

சங்கை எருக்கன் பாலில் ஊற வைத்து பிறகு பூசலாம்    .

உத்தாமணி சாறு எடுத்து சுண்ணாம்பு கலந்து மஞ்சள் கொம்பால் தேய்த்து  பத்து போடவும். மூன்று நாட்களில் உடையும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக