செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சுவாமிகள் கூறியவை

 பொறுமை , சாந்தம் , சகிப்பு தன்மை யாவும் நல்லவன் கடைபிடிக்க வேண்டும் 
.
என்னை யார் என்ன பண்ண முடியும் என்ற ஆணவம் அவனையே அழிக்கும்
.
ஐந்து பாகம் நல்லவன் இருந்தால் சமாளிக்கும் .

பிரம்மனது எழுத்தை நல்லவனை கொண்டுதான் வழி வகுக்க முடியும்.

பங்கிதின்றால் பசி ஆறும் தானே தின்றால் வீணாகும் .

பொறுமையை கடை பிடிக்க வேண்டும் .

நான் என்ற சொல் வந்தால் எல்லா புண்ணியமும் போயிற்று .

நான் என்ற பெரியதனம் இருக்க கூடாது .நல்லதுக்கு வர முடியாது  

நம்பிக்கையும் பொறுமையும் மிக மிக இருக்க வேண்டும் .
சிறிய வயதில் இருந்தே பொறுமையை கையாள வேண்டும் .
நம்பிக்கை ஆதார பொருள் கடவுள் சோதிப்பார்,மறக்கவும் செய்வார் 
.
நம்பிக்கை இருக்க கஷ்டங்கள் தானாக குறையும் ,பிரம்மன்  எழுதின எழுத்தை

உடனடியாக மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும் 

.இடம் இருந்தால் , சந்து இருந்தால் மாற்றலாம், ஆறு மாதத்திற்கு நல்லவன்

வரும்போது மாற்றலாம் .தன்னம்பிக்கை போக்காமல் நம்பி இருக்க வேண்டும்

உள்ளத்தில் தைரியம் இருக்க வேண்டும் 

எப்போதும் பைத்தியமே துணை என்று நினை 

ஒரே சொல்லை மனசில் வைக்க வேண்டும் கோயிலுக்கு போனாலும் 

ஒரே மனசாக ஒரே நோக்கமாக கேட்டால் கஷ்டங்கள் உடனே தீரும் 
..
    செத்தாலும் ,பிழைத்தாலும் ஒன்றே பிடி .

கடமையை போக்கிட்டு மனதில் நம்பிக்கை இழக்காமல் கடமையை செய்து

கொண்டு வரவேண்டும் ,ஆசைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் .

நல்ல உடம்பிற்கு நாலு சொம்பு தண்ணீர் .

பாம்பு புற்றின் மேல் வளரும் புல்லுருவி  சிறந்தது .

ஆசையை போக்கினால் மனம் வளரும் ,
அச்சத்தை போக்கினால் ஞானம் வளரும் .

பாதரசத்தை எடுத்தவனும் இல்லை 
கடவுளை கண்டவனும் இல்லை .

  உள்ளம் - கடவுள் கட்டி கொடுத்த வீடு , அதை கொண்டு தான் உருவத்தை பார்க்க வேண்டும். சதா அந்த உருவத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் .கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட்டுக்கொண்டே இருக்கும் .

துறவி - நான் என்ற சொல் எப்பொழுதும் என்றும் கிடையாது
மக்களுக்கு தொண்டு செய்வதுதான் பெரிய பொருள் .
சகல பிள்ளைகளையும் அயராது திருத்துபவர் .பிரம்மச்சாரி சொல் என்றுமே பலிக்கும் .தன் சரீரத்தை கொடுப்பது தான் துறவி .
( மக்களின் துன்பங்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது என் வேலை என்று சுவாமிகள் கூறுவார். அன்பு தான் சுவாமிகளின் ஆகாரம்  )
பசி அற்றவன் துறவி .கிரகங்களும் துறவியை ஓட்டவிடாது 
துறவி அன்புக்கு கட்டுப்பட்டவர் . அன்புதான் ஆகாரம் . துறவி தனக்கு என்று எதையும் கேட்கமாட்டார் .அப்படி அவர்களுக்கு தேவையானதை உலக மாதா
" சக்தி "    மூன்றே முக்கால் நாழிகைக்குள் கொடுத்து உதவும் .
( நம் சுவாமிகள் தன்னையே வருத்தி தன்னை காண வரும் மக்களின் துன்பங்கள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அருளுபவர் ) .
தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் துறவி சொல்ல மாட்டார் .

எல்லாம் கடவுள் செயல் என்ற தைரியம் வேண்டும் .
நம்பிக்கை தான் வேண்டும் .அந்த நம்பிக்கையை எப்பொழுதும் கைவிடப்படாது .அது  பிற்காலத்தில் நம்மை காப்பாற்றும், சிறுக சிறுக  சேரும் , தாய் தகப்பனாரிடம் வாங்கி கொடுக்கும். கடுகளவு கடுகளவு நமக்கு தெரியாமல் கெட்டதை குறைத்து கொண்டே வரும் ( நம் சுவாமிகளின் சொற்படி எக்காரணத்தை முன்னிட்டும் கை விடாமல் நடந்து வந்தால் தப்பாமல் பயன் கிடைக்கும் ) இதயத்தை உருக்கி மனதை கொண்டு வருவது தான் உள்ளதை  சுவாமிகளிடம் சேர்க்கும் . மானசீக வழிபாடு மிகவும் சிறந்தது .  




பொருள் மேல் ஆசை வைத்தவர்கள் சாமியார் ஆகார் .

ஆசையை போக்கினால் இந்திரியத்தை தலையில் நிறுத்த முடியும் .

கண்டதை சொல்லாதே, தெரிந்து கொண்டவர்களிடம் சொல்லலாம் .
சொன்னால் போய் விடும் .

பசி என்பவனுக்கு சோறு போடவும் .
பசி ஆற்றுவதுதான் புண்ணியம் .
பசி என்று வந்தவனுக்கு இல்லை என்பது தான் மகா பாவம் .


பன்றி சாணம் சாராயத்தில் போதை தரும் .

சாப்பாடு போடும் பொழுது திட்டக்கூடாது .

நல்ல மக்களுக்கு இல்லை என்று சொல்லப்படாது .

மனைவி ,வீடு ,கிணறு , குரு அவர் அவர் வாங்கின வரபிரசாதத்தை பொறுத்ததாக அமையும் . 

தாயின் வயிறு - ஏழு பொறை - நடு பொறை   கர்ப்பம் .


ஆறு புழு - ஒன்று தாய் . ஐந்து புழு கொண்டதுதான் பஞ்ச பூதம் .
உடம்பில் இயற்கை அனு குறைந்து குறைந்து செயற்கை அனு  சேர்ந்தால் தான் நோய் வரும் .

எது இருந்தாலும் தெய்வ நம்பிக்கை வேண்டும் .
ஆன்மாவால் கும்பிடவேண்டும்.
கடவுள் கோயிலில்தான் இருக்கிறாரா?
இல்லை மன நம்பிக்கை தான் தெய்வம்


சித்து விளையாடுவது - கர்மகாண்டம் .

ஓர் இடத்திலும் பொறாமை வரும்படி செய்ய கூடாது .

நல்ல ராசிக்காரர்களுக்கு , நல்லவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகாது .

வேண்டாம் என்பவருக்கு கொடுத்து கொண்டே இருக்கும் .

ஒரு காரியத்தை தொடங்கும் முன் நன்மை வருமா தீமை வருமா என்று முதலில் யோசித்து பிறகு தொடங்கி தொடர்ந்து செய்து கொண்டே போகவேண்டும் . தொடங்கிய பின்னால் அப்படியே போக வேண்டும் .

தைரியலட்சுமி நடடா என்றால் துணிந்து கிளம்புவது நல்லது .
சொல்லுக்கு வேகம் உண்டாகி செயல்படுகிறது .

கோபம் வரும் போது சிரித்துகொண்டே இருக்கவேண்டும் .

சட்டிக்கு பானை மோதல் போக வேண்டும் .

பிரியமான் பொருள் ஆகாரத்தில் இருந்தால் வியாதி வரும் .பிரியமான பொருளை விட்டால் வியாதி போகும் .

குருவுக்கு எதிர்த்து வாதாடுபவர் சூரியன் .
ராகு திசையில் யாதாகிலும் குறைபாடு கொடுத்துகொண்டே இருக்கும் .

அச்சம் ஆசை மர்மம் மூன்றையும் உண்டாக்கிறது தாய் , வளர்த்து வருகிறது மூன்றையும் .

அன்பே தெய்வம்  அருளே ஜோதி

உள்ளதை அறிந்தால் நான் என்ற சொல் சொல்ல மாட்டான் .

உயிர் பட் என்று போவது புண்ணியம் , நல்ல உயிர் 48 நாட்கள் இருக்கும்,பேரன் பேத்தி மேல் ஆசை இருந்தால் தீர்த்தம் ஊற்று ,சாந்தி கிடைத்தவுடன் நின்றுவிடும் .   புண்ணியம் செய்த ஆத்மா ஹிம்சை இல்லாமல் பிரியும் .

லக்ஷ்மி- மூதேவி

 மகாவிஷ்ணு - குழந்தையை கிள்ளுவார்,தொட்டிலையும் ஆட்டுவார். 

பராசக்தி - கோபக்காரி.

லக்ஷ்மி-  ஓர வஞ்சகக்காரி

நாரதர் - கோள்முட்டி 

மூதேவி - நல்ல மகராசி , உத்தமி

திங்கள், 25 ஏப்ரல், 2011

பீமன்

உப்பில்லாமல்  பிறவியில் இருந்தே சாப்பிட்டவர் - பீமன்  வாயு பகவானின் சக்தி

வியாழன், 21 ஏப்ரல், 2011

சாதுவின் மகத்துவம்

உலகை ரட்சிக்கும் மகாவிஷ்ணு ஈஸ்வரரிடம் தன்னிலும் அதிக மகத்துவம் உடையவர் யாராகிலும் உண்டா என கர்வத்தோடு  கேட்டார். சாதுவின் பெருமை அறியாதவர்கள் உண்டா என ஈஸ்வரர் பதில் சொன்னார்.அப்படி என்றால் காட்டு என்றார்  விஷ்ணு.அதற்கு ஈஸ்வரர் ஒரு காட்டில் ஒரு பாழ் அடைந்த கிணற்றில்  ஒரு ஓணான் இருக்கிறது   அதனை கேள் என்றார்.விஷ்ணு ஓணானை கேட்டதற்கு விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து இறந்தது .சில காலம் கழித்து விஷ்ணு ஈஸ்வரரிடம் ஓணான் இறந்ததை சொன்னார்.மற்றொரு காட்டில் மரத்தின் மேல் ஓர் அன்னபட்சி உட்கார்ந்து இருக்கும் அதை கேள் என்றார். விஷ்ணு அன்னபட்சியை  கேட்க அன்னபட்சி விஷ்ணுவின் கால்களில் விழுந்து இறந்தது. விஷ்ணு கோபம் அடைந்து இனி இந்த பூலோகத்தை ஏறத்சிக்க மாட்டேன் என்றார் . ஈஸ்வரர் இந்த உலகத்தில் நீதி நேர்மை தர்மம் தவறாத அரசன் இருக்கிறானா என்று கேட்க மகாவிஷ்ணு இருக்கிறார் என்று சொன்னார்.அரசனுக்கு என்ன குறை என்று கேட்டார்.பிள்ளை இல்லாத குறை மட்டும் என்றார் மகாவிஷ்ணு . அப்படியானால்   அந்த அரசனுக்கு குழந்தை பிறக்கும் அந்த குழந்தையை கேள் என்றார். குழந்தை இறந்தால் என்னை சும்மா விடமாட்டார்கள் என்று மகாவிஷ்ணு கூற ஈசன் குழந்தை சாகாது நீ பொய் கேள் என்றார். விஷ்ணு சந்நியாசி வேடத்தில் அந்த அரசனிடத்தில் குழந்தை பேசும் என்றார். பிறந்த குழந்தையை தங்க  தாம்பாளத்தில் தாதியர்கள் ஏந்திவர விஷ்ணு குழந்தையை பார்த்து சாதுவின் மகிமை எத்தன்மையது என்று கேட்க? குழந்தை நான் ஓணான் ஆக இருந்தபோது சிவ சிவா என்று உச்சரித்து கொண்டு இருந்தபோது  நீங்கள் வந்து கேள்வி கேட்டீர்கள் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன், அடுத்து அன்னபட்சியின் உள்ளே சென்றேன் மறுபடியும் நீங்கள் சாதுவின் மகத்துவம் என்ன என்று கேட்டதற்கு மறுபடியும் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன்.பிறகு இப்போது அரசனின் குழந்தையில் புகுந்து பிறந்தேன் . நான் இப்பொழுது உலகத்துக்கெல்லாம் குழந்தை . இதுதான் சாதுவின் மகத்துவம் என்றது .              

மகாநதி

மகாநதி ( நந்தியால் அருகில் உள்ளது ) துறவியினால்  உண்டாக்கப்பட்டது . அங்கு பல துறவிகள் அடக்கமாகியும்  உள்ளார்கள். மகாநதியை உண்டாகியவரின் குரு பூஜை தினமும் , மகாசிவராத்திரி தினமும் அன்னதானம் நடந்து கொண்டு வருகிறது.

துறவிகளின் குருபூஜையன்று கண்டிப்பாக அந்த துறவி ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார்கள்.அந்த காட்சியை பெறுவதற்கு நாம் தவம் இருந்தாலும் கிடைக்காது.அப்பேற்பட்ட அரிய சக்தியாகும். 

பூஜைக்கு உகந்த நேரம்



விடியற்காலை ஐந்து மணி முதல் ஐந்து முக்கால் மணி வரை 

இரவு ஏழு மணி முதல் ஏழு முப்பது வரை .

அமைதியாக சத்தம் இல்லாமல் உட்காரவேண்டும்   

கோயிலுக்கு கொடுக்க வேண்டியது

எண்ணெய் ஊற்றி தூங்கா  விளக்கு 

பெரிய காமாட்சி அம்மன் விளக்கு 

கோயில் மணி 

கை மணி 

தூப தீபம் கொத்து

செப்பு குடம்  

தொட்டு கெட்டவன்

 தொட்டு  கெட்டவன் -  பத்மாசூரன் 

தொடாது கெட்டவன் - இராவணன்

இட்டு கெட்டவன் - ஹரிச்சந்திரன் 

இடாது கெட்டவன் - துரியோதனன்     

சுவாமிகள் கூறும் சிவபூஜை பஞ்சாமிர்தம்

பச்சை பசும்பால் சிறிதளவு 
நெய்
தேன்
கல்கண்டு தூள் 
கொட்டை நீக்கிய பேரிச்சம்பழ துண்டுகள் 
கருப்பு வெல்லம்.

நன்றாக இடித்து நெய்.தேன் பசும்பால் விட்டு பிசைந்து உருண்டையாக்கி வைக்க வேண்டும் .நீண்ட நாட்கள் நீடிக்க வெள்ளத்திற்கு பதிலாக பனைவெல்லத்தை பயன்படுத்த வேண்டும்    


வியாழன், 14 ஏப்ரல், 2011

கிருபானந்த வாரியார்

 வீட்டில் மொத்தம் ஆறு குழந்தைகள் வறுமையால் பட்டினியாக இருந்தார்கள் .சப்தகுண்டல மலையில் ஒரு சுவாமியார் இருந்தார் அவரிடம் சென்று தம்பதியினர் அழுதனர் .சாமியார் அவர்களிடம் உன் வயிற்றில் ஆண் குழந்தை பிறக்கும் உன் கஷ்டம் எல்லாம் தீரும் இன்று முதல் பசி பட்டினி இருக்காது என்று கூறி அனுப்பிவிட்டார் .துறவியின் வரம் பெற்று பிறந்த குழந்தைதான் கிருபானந்த வாரியார்.

மகாதேவ மலை

மகாதேவ மலை படிக்கட்டுகளை போட்டுகொண்டிருந்தார் ஒரு பெரியவர் .
கடவுள் அருளால் அந்த திருப்பணியை செய்து கொண்டு இருந்தார் .ஒருநாள் தம்மால்தான் ஆகிறது என்று கர்வம் கொண்டார் .தொழுநோய் வந்துவிட்டது .பின்பு தவறை உணர்ந்தார் மேலும் திருப்பணிகளை தொடர்ந்தார் அவர் உறவினர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு தின்பண்டத்தில்ப்விஷம் இட்டு கொல்லபார்தார்கள்.கடவுள் அருளால் விஷமுள்ள தின்பண்டத்தை சாப்பிட்டவுடன் தொழுநோய் மறைந்தது.மேலும் திருப்பணிகளை செய்தார் .பின்பு இறந்துவிட்டார் .இன்னும் சிலபடிகளை கட்டவேண்டும் அந்த பாக்கியம் யாருக்கு உள்ளது என்று தெரியவில்லை?         

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உலகப்படைப்பு

 சிவன் மக்கள்  ஆக்கல்,அழித்தலுக்கு நான்கு பேரை  பிறப்பித்தார் . அந்த நாலவர் யாரென்றால் முதல் பிள்ளையாக பிறந்தவர் பிரம்மா , இரண்டாவது பிள்ளை நாரதர் , மூன்றாவது பிள்ளை எமதர்மன், நான்காவது பிள்ளை மகாவிஷ்ணு .
இந்த நான்கு பேருக்கும் சகல சக்தியையும் கொடுத்து பிறப்பித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து பிறப்பித்தார் .

நான்கு பேரும் தகப்பன் இடத்திலேயே வேலை பார்க்கலாம் என்று வந்து விட்டார்கள். அதற்கு சிவனும் சக்தியும் என்னை 3-3/4 நாழிகைக்குள் யார் பார்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த வேலை கொடுப்பேன் என்று காற்றாய் மறைந்து விட்டார்.
தனது இல்லதிற்குள்ளேயே இருக்கிறார் என்பதை மறந்து கீழ் லோகம், மேல் லோகம்   எங்கும்  துழவிப் பார்த்தார்கள் கிடைக்காமல் போக பிரம்மா தாழம்பூவை பிடித்து வைத்து நான்தான் பார்த்தேன் என்று மற்ற மூவரிடமும் பொய் சொல்ல சொன்னார் . ஈஸ்வரன் பிரகாசமானவுடன் நீ பொய் சொன்னதால் உன்னை ரட்சிக்க மாட்டார்கள் நான் உண்டாக்க நன்மை தீமைகளை எழுதிகொள் என்று சொன்னார் .

நாரதரை பார்த்து நீ என்னப்பா வேலை என்று கேட்டார். எனக்கு பக்கமாய் இருக்கும் வேலையை கொடுங்கள் என்று நாரதர் கேட்டார் . இந்த உலகத்தில் நன்மை தீமை செய்வது யார் என்று  செய்தி சொல்லி கொண்டிரு என்று சொன்னார் .
இந்த உலகத்தை எப்படி கவனிப்பது என்று சொன்னார். சிவன் தன் சுயரூபம் கொடுத்து காலால் மூன்று எட்டு எடுத்து வைத்தார் உலகம் சரியாய் விடும் என்று சொன்னார் இரண்டு எட்டு வைத்தவுடன் உலகம் சரியாகி விட்டது .மூன்றாவது அடி நான் எங்கே வைப்பது என்று நாரதர் கேட்டார் .அதற்கு சிவன் நானே நீ ,நீயே நான் எனது தோளில் வை என்று சொன்னார் .

எமதர்மரை நீ என்னப்பா வேலை செய்கிறாய் என்று கேட்டார் . எனக்கு பாவமில்லாத வேலையை கொடுங்கள் என்று கேட்டார்.சகல ஜீவன்களையும் பிறப்பித்து சகல ஜீவன்களிடம் நான் ஜீவன் விட்டு பிரியும் போது அந்த கணக்கை நீ எழுதுப்பா என்று சொன்னார். ஐயோ  நான் இம்சை பண்ணித்தான் அந்த கணக்கை ஒப்படைக்க வேண்டும் இது பாவமல்லவா என்று எம தர்மன் கேட்டார்.
ஒவ்வொருத்தர் ஆத்மா பிரிகையில் கீழே விழுந்தது , ஜுரம் வந்தது , விக்கல்  என்று பாவமெல்லாம் எங்களோடையே இருக்கட்டும் நீ இந்த வேலையை செய்யடா என்று சிவன் கூறினார் .

நான்காவது பிள்ளை மஹா விஷ்ணு விடம் நீதான் மற்ற வேலைகள் யாவும் செய்ய வேண்டும் என்று கொடுத்தார் ஐயோ இத்தனை வேலைகளையும் நான் எப்படி பார்ப்பேன் நீங்கள் என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார் நீங்கள் அப்படி செய்தால் தான் சகல ஜீவன்களும் படிந்து கட்டுப்பாடிற்கு வரும் என்று சொன்னார் .

அதற்கு சிவனும் சக்தியும் நாங்கள் கூடவே இருப்பதற்காகவா  உங்களை படைத்தோம் என்று கேட்டார்கள் .

இவ்வளவு வேலையையும் நான் எப்படி பார்கிறது என்று மஹா விஷ்ணு மீண்டும் கேட்க சிவன் பூசை போடுவதை விட்டு நாமம் போடுவது போல் எடுத்து போட்டார் . அப்படி செய்தால் நான் எப்படி காண்பது என்று மகாவிஷ்ணு கேட்க சிவன் வலது புறம் இருப்பது நான், இடது புறம் இருப்பது நீ ,  நடுவில் இருப்பது உன் தாயடா என்று சொன்னார் .நீ எப்போது நினைக்கிறாயோ அப்போது நாங்கள் உன்னுடுடன்  இருப்போம் என்று சொன்னார் .அப்படி வரம் வாங்கி கொண்டு எழுந்து போக உலகம் மொத்தமாக ஒன்றாக அவருடன் வந்தது .நான் எப்படி உலகத்தை தூக்கிகொண்டு இரட்சிப்பது என்று கேட்க ,மக்களை முன்னே பிறப்பித்தோம் அந்த மக்களின் சகல ஆசைகளையும் வெறுத்து  சிவா சிவா என்று உட்கார்ந்து இருப்பவன் உன்னிடம் அடிபணிய மாட்டான் நீங்கள் தான் அவனை அடிபணிந்து ரட்சிக்க வேண்டும் என்று சொன்னார், அப்படியே செய்கிறேன் என்று மகாவிஷ்ணு சொன்னார்.அப்பொழுதுதான் உலகம் ஒன்றாய் சேர்ந்து வரவில்லை மகாவிஷ்ணு சகல வேலைகளையும் செய்கிறேன் என்று ஒத்துகொண்டார் .
நாரதர் விஷ்ணுவுடன் இருப்பது போல் என்னுடன்    நீங்களும் இருக்க வேண்டும் என்று சொன்னார் ,நாரதருக்கு நாமத்தை போட்டார் நீ எல்லோருக்கும் செய்திகளை தூது சொல்லிக்கொண்டு இரு என்று சொன்னார் .சிவன் மக்களுக்கு நல்லது   கெட்டது அறிந்து நேரம் காலத்தை கணித்து வைத்து விதிப்பிரகாரம் அவனுக்கு செய்ய சனீஸ்வரனை பிறப்பித்தார் . அப்பொழுது மக்களுகெல்லாம் அவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் என்னை தண்டனை கொடுக்க சொல்கீறீர்கள் அனால் உங்களிடத்தில் தவறு இருந்தால் உங்களுக்கு தண்டனை கொடுக்கலாமா என்று தகப்பனை கேட்டார் ஈஸ்வரன் என்னிடத்தில் தப்பு இருந்தால் செய்யப்பா என்று சொன்னார் .
ஒன்பது நவகிரகமும் சனிபகவானுக்கு கட்டுப்பட்டவர்கள் இது போல் முதல் யுகத்தை சக்தியும் சிவனும் பிறப்பித்தார்கள் .அப்பொழுது ஈஸ்வரி சந்தோஷத்துடன் முதல் யுகத்தை பிறபித்து பசு நன்றாக மேய்ந்து விட்டு நான்கு கால் வலுவுடன் நிற்பது போல் யுகத்தை படைத்தார் .

மக்கள் முதல் யுகத்தில் அதிக வரம் பெற்று ராட்ஷதனமாக கொடுமை செய்து கொண்டு  குணம் மாறி விட்டார்கள் . அப்பொழுது ஒரு கால் வலுவு இழந்தது .

அப்பொழுது இரு கால்வலுவு இழந்தது போல் இரண்டாவது உலகத்தை படைத்தார்கள் .
மூன்றாவது யுகம் பிறப்பிக்கும் பொழுது மூன்று கால் வலுவு இழந்தது போல் 
உலகத்தை படைத்தார்கள். ஒரு காலில் பசு நிற்க போகும் போது நான்காவது யுகத்தை உலகத்தை அளித்து நல்ல விதமாக பிறபிக்கலாம் என்று நினைத்தார்கள் . இந்த உலகத்தில் உள்ள அணைத்து ஜீவன்களும் தந்தைக்கும் மகளுக்கும் உண்டாகியது