சனி, 8 ஜனவரி, 2011

உரல் உலக்கை

அந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உரல், உலக்கை,அம்மி, அம்மிக்கல் இருக்கும்.அதன் மகத்துவமே தனி. அம்மிகல்லையும் உரலையும் சேர்த்து சிவலிங்கமாகவே வீட்டில் வழிபட்டு வந்தார்கள். வீட்டில் புழங்கப்பட்டு  வந்த உரல் அம்மியை கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்பனை செய்ய மாட்டார்கள். வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அதனையும் சேர்த்துதான் வழி படுவார்கள். இப்படி புழக்கத்தில் இருந்து வந்த அம்மி அம்மிக்கல் உரல் உலக்கை இவைகளை திருடுவதற்கு அந்தக்காலத்தில் ஆள் வைப்பார்களாம். அதை திருடிக்கொண்டு போய் வீட்டில் வைத்தால் அன்றில் இருந்து அவனுக்கு நல்ல காலம் உண்டாகி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்று கூறினார். இந்தக்காலத்தில் உரல் உலக்கை அம்மி அம்மிக்கல் இவைகளில் அக்கறை கொள்வதில்லை.புழக்கத்தில் இருக்கும் உரல் உலக்கை அம்மி அம்மிக்கல் விசேஷ மகத்துவம் வாய்ந்தது என அருளுரைத்தார் .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக