வெள்ளி, 7 ஜனவரி, 2011

இடுப்பு வலி

ஒரு 25 வயது உள்ள  அன்பருக்கு சில மாதங்களாக இடுப்பு வலி இருந்து வந்தது . அவர் சுவாமிகளிடம் வந்து தனக்கு நடு இடுப்பில் சுருக் சுருக் என்று குத்துவது போல் வலி உள்ளது என்றார், மாத்திரை மருந்துகள் சாப்பிடும் பலன் இல்லை, மருத்துவர்கள் எலும்பு தேய்ந்து உள்ளது என்கிறார்கள் என்று கூறினார்.
அதற்கு சுவாமிகள் "மிளகை லேசாக நெய் விட்டுவறுத்து  அரைத்து தூள் செய்து திரிகடிகை பிரமானம் மூன்று வேளை சாப்பிட சொன்னார்.
சுவாமிகள் கூறிபடி அவரும் மிளகை நெய் விட்டு வறுத்து அரைத்து மூன்று  நாட்கள் சாப்பிட்டார்.சாப்பிட்டவுடன் அவரின் இடுப்பு வலி மிகவும் அதிகமாகி விட்டது.முதலில் அவருக்கு  ஏன் மிளகை சாப்பிட்டோம் என்றாகிவிட்டது. சுவாமிகள் கூறியதை நம்பிக்கையுடன் ஒழுங்காக செய்யவேண்டும்,என்னவானாலும் பரவாயில்லை என்று அவர் சுவாமிகளை மனமார நினைத்து தொடர்ந்து சாப்பிட்டார். ஒரே வாரத்தில் இடுப்பு வலி எப்படடி போனது என்று தெரியவில்லை. அதன் பிறகு அவருக்கு அந்த இடுப்பு வலி வரவேயில்லை. எல்லாம் ஸ்ரீலஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகளின் திருவருள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக