வியாழன், 13 ஜனவரி, 2011

வயது அதிகம் ஆகி திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் ஆக

வயது  அதிகம் ஆகி திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் ஆக சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட்டு தனியாக இருக்கும் பிள்ளையாருக்கு
( வீதியிலோ,குளக்கரையிலோ,ஆற்றங்கரையிலோ உள்ள பிள்ளையார் ) அகல் விளக்கு ஏற்றி கற்பூரம் கொளுத்தி வலது கை பக்கம் ஒன்பது சுற்றும் இடது கை பக்கம் பத்து சுற்றும் ( சக்திக்கு ஒரு சுற்று கூடுதலாக ) சுற்றிவிட்டு பிள்ளையார் தலையில் மூன்று கொட்டுக்கள் கொட்டி விட்டு ( நீ தான் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறாய் எனக்கு நல்லபடியாக நல்ல குணமுள்ளவனை மணம் முடித்துவை)   வணங்க வேண்டும். நெய்வேத்தியம் பனைவெல்லம் அல்லது வெல்லம் அதன் மேல் நெய் கொஞ்சம் ஊற்றி வைக்க வேண்டும். விக்னம் அற விநாயகனை தொழு.உமா மகேஸ்வரி தன் பிள்ளைகளை கொண்டே மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நீக்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக