ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சகல விஷத்திற்கும் மருந்து

   நஞ்சு முறிச்சான்,(கக்கு பாலை - மாடு தீனி எடுக்காவிட்டால் கொடுப்பது) வெள்ளை நொச்சி,வெள்ளைபூனைக்காய்ச்சல்,கொடிதும்பை இல்லை.மேற்கூறிய நான்கு செடிகளின் தழையை காப்பு கட்டி எடுத்து தனி தனியாக 15 நாட்கள் நிழலில் காய வைக்க வேண்டும்.பிறகு நான்கு  நாட்கள் சூரிய வெயிலில் காலை எட்டு மணி வரை, மாலை நான்கு மணி முதல்,ஆறு மணி வரை,சூரிய ஸ்புடம் போடவும்.ஒவ்வொரு நாளும் பிரட்டி கொடுக்கவும்.இந்த நான்கையும் தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்யவும்.பிறகு நான்கையும் சம அளவு எடுத்து வஸ்திரகாயம் செய்யவும் ..பூரான் கடிக்கு ஒரு சிட்டிகை ,தேள் கடிக்கு  ஒரு  திரிகடிகை பிரமாணமும்,பாம்பு கடிக்கு மூன்று திரிகடிகை  பிரமாணமும்,இரண்டு மணிக்கு ஒரு முறை கொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக