திங்கள், 4 ஜூலை, 2011

மந்திரம்

வட ஆற்காட்டில் ஒரு முறை சுவாமிகள் இருந்தபோது தினம் ஒருவர் சுவாமிகளை பார்க்க வருவார், சுவாமிகளிடம் தனக்கு மந்திரம் எதாவது சொல்லி கொடுங்கள் என்று கேட்பாராம் .சுவாமிகள் எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது போடா என்று திட்டுவாராம் .அடுத்த நாளும் வந்து  மந்திரம் எதாவது சொல்லி கொடுங்கள் என்று கேட்பாராம். தினசரி வந்து இதே போல் நச்சரிப்பார்.ஒருநாள் அவர் மந்திரம் சொல்லி கொடுங்கள் என்று கேட்க  சுவாமிகள் விளையாட்டாக ஒரு துடைப்பத்தை எடுத்து கொள் " உனக்கு வலித்தால் எனெக்கென்ன எனக்கு வலித்தால் உனக்கென்ன " என்று அடிடா எல்லாம் சரியாகி விடும் என்றார்.அவரும் அதையே சுவாமிகளை நினைத்து கொண்டு எப்போதும் சொல்லிக்கொண்டு இருந்தார் .இப்போது அவர் வட ஆற்காட்டில் பாம்பு கடி, தேள் கடி, விஷக்கடி என்று வருபவர்களுக்கு சுவாமிகளை மனதில் நினைத்துக்கொண்டு துடைப்பத்தை வைத்து அடித்து கொண்டு  " உனக்கு வலித்தால் எனெக்கென்ன எனக்கு வலித்தால் உனக்கென்ன "என்று மூன்று முறை அடிக்க விஷம் இறங்கிவிடுமாம் ,

சுவாமிகள் சும்மா விளையாட்டுக்கு சொன்னதை கெட்டியாக பிடித்து கொண்டு முழு நம்பிக்கையுடன் அவர் செய்ததால் பலித்தது . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக