புதன், 27 ஜூலை, 2011

ஒரு ஊரில் ஒரு பெரியவருக்கு உடல் நலமில்லாமல் இருந்தது .மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள். சுவாமிகளிடம் கூடி வந்தனர் .எங்கள் ஊர் ஜோசியர் மிகவும் திறமை வாய்ந்தவர்,எங்கள் மகனின் ஜாதகத்தை கணிக்கும்  போது குழந்தையின் தகப்பனுக்கு ஆயுள் 80 வயது வரை கெட்டி என்று கூறியுள்ளார் .மேலும் பையனுக்கு இத்தனை வயது நடக்கும் போது வயல்,பம்ப் செட் ,வீடு அமையும் என்றார் அது போலவே நடந்தது . இப்போது இவருக்கு வயது 60 தான் ஆகிறது ,நீங்கள் மனது வைத்தால் குணமாக்கலாம் என்றார்கள் .அந்த ஆள் சுவாமிகள் அருகில் இருக்கும் போது நன்றாக இருக்கிறார் , அந்த பக்கம் தூக்கி கொண்டு செல்லுங்கள் என்று சுவாமிகள் கூற வெளியே தூக்கி சென்றால் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சுவாமிக்கு தெரிந்து விட்டது ,இவனது ஆயுள் முடிந்து விட்டது  என்று. ஜோசியர் போட்ட கணக்கு தான் என்னவென்று தெரியவில்லை .பின்பு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த பெண்ணிடம் உண்மையைச் சொல் உன் கணவனுக்கு மட்டும் முந்தி விரித்தாயா ? மற்றவர்களுக்கும் விரித்தாயா ? என்று கேட்க ,அப் பெண் என்னுடைய அத்தை பசங்களுடன் மணம் முடித்தபிறகு கூட உறவு வைத்து கொண்டு இருந்தேன் என்று கூறினாள். அப்போது சுவாமிகள் கூறினார் ஜோசியர் கூறியது உண்மை,உன் பிள்ளை இவனுக்கு பிறக்கவில்லை , உன் அத்தை பையனுக்கு தான் பிறந்துள்ளான், அவனுக்குதான் ஆயுசு கெட்டி ,இவனுக்கல்ல என்று கூறி தூக்கி செல்லுமாறு  கூறினார்.சுவாமிகள் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக