புதன், 27 ஜூலை, 2011

ஒரு முறை சுவாமிகளிடம் ஒரு ஜோசியர் வந்திருந்தார்,அப்போது பல்லி ஒன்று கத்தியது .உடனே அவர் சுவாமிகளிடம் நாளை தங்களிடம் வரும் ஒருவருக்கு உயிர் போகப்போகிறது என்று பல்லி சொல்லுகிறது என்றான் .அதற்கு சுவாமிகள்  என்னை நம்பி வருபவனுக்கு எந்த ஆபத்தும் வராது ,அவன் உயிரும் போகாது , முதலில் நாளை அந்த பல்லி உயிரோடு உள்ளதா பார் என்று கூறினார் .எனது ஜோசியம் இதுவரை பொய்த்ததில்லை,என்றான் ஜோசியர் .நாளை வாடா
பார்க்கலாம் என்றார் சுவாமிகள் .
மறுநாள் ஜோசியர் காலையில் வந்தான் ,ஜோசியர் கூறியபடியே, உடல் நலம் சரியில்லாமல் ஒருவர் வந்தார் ,அவருடன் வந்தவர்கள் உடல் நலம் மோசமாக உள்ளது ,மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர் ,நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அழுதனர். சுவாமிகள் கவலை படவேண்டாம் என்று கூறி திருநீறு கொடுத்தார்.உடல் நலம் சரி இல்லாமல் இருந்தவர் பத்து நிமிடத்தில் எழுந்து உட்கார்ந்தார் .அனைவரும் சந்தோஷப்பட்டனர்.திடீரென மேலே உள்ள கூரையில் சத்தம் கேட்டது.சுவாமிகள் மேலே என்ன சத்தம் ஒரு குச்சியை வைத்து தட்டுங்கள் என்றார்  .மேலே உள்ள கூரையை தட்ட ஒரு பாம்பு கீழே விழுந்தது. பாம்பு வாயில் பல்லி இருந்தது,என்ன ஜோசியரே என்று சுவாமி கேட்க, ஜோசியர் எதுவும்  கூறவில்லை .

ஒரு ஆளிடம் சுவாமிகள் உன் வீட்டில் ஏதேனும் சினையாக உள்ளதா என்று கேட்டார் . நாய் மட்டும் சினையாக உள்ளது என்றார் அவர் .நாய் குட்டி போடும் போது ஒரு குட்டியை  மையால் குறியிட்டு நேரத்தை குறித்து கொள்,பிறகு உனக்கு பேரனோ,பேத்தியோ பிறந்து இருப்பதாக கூறி ஜோசியரிடம் ஜாதகம் கணிக்கச்சொல் என்றார் .அவ்விதமே அவர் ஜோசியரிடம் சொல்ல ஜோசியர் ஜாதகம் கணித்து என்ன என்னவோ எழுதி கொடுத்து ஆயுள் 80 என்று கணித்தார் .பிரக்ஹு தான் நாய் என்று சொன்னார்கள் .நாயிக்கு ஆயுள் 80 தாடா என்று கேட்டார் சுவாமிகள்?


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக