புதன், 27 ஜூலை, 2011

ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தார் .அவர்  கோயில் ஒன்று கட்ட விரும்பி  வேலையை ஆரம்பித்தார், கட்டும் போது பயங்கர வறுமையை அடைந்தார்.கடன் மிகுதியானது,வீடு மற்றும் நிலங்களை வைத்து கடன் வாங்கியதால் குறிப்பிட்ட நாளில்  மீட்க முடியவில்லை, கடன் கொடுத்தவர்கள் ஜப்தி செய்ய வந்தனர் .இனி உயிரோடு இருப்பது என்ன பயன் எங்கேயாவது சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று காட்டிற்கு சென்றார் .அப்போது சுவாமிகள் ஒரு பாறையின் மேல் அமர்ந்து இருந்தார்.பணக்காரனை கூப்பிட்டு எங்கே போகிறாய் என்றார்? பணக்காரன் நடந்தவற்றை எல்லாம் கூறினார் .
சுவாமிகள் நான் எது கூறினாலும் செய்கிறாயா என்று கேட்டார் .பணக்காரன் நீங்கள் எது சொன்னாலும் செய்கிறேன் என்று கூறினார் . பின்பு அவரிடம் சுவாமிகள் அவரிடம் உனக்கு 45 நாட்கள் நேரம் சரியில்லை,எனவே பக்கத்தில் உள்ள சேரிக்கு சென்று தோட்டி வேலை செய் என்றார். அவரும் அது போல் சுவாமிகள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கௌரவம் பார்க்காமல் தோட்டி வேலை செய்தார் . 25 நாட்கள் ஆனது அன்று குப்பையை கொட்டும் போது குப்பை தொட்டியில் ரூபாய் 10000 துணியில் சுற்றி இருந்தது கிடைத்தது .அதை எடுத்து பத்திரப்படுத்தி மேலும் 20 நாட்கள் தோட்டி வேலையை செய்தார்.45 நாட்கள் ஆனவுடன் சுவாமிகளிடம் அப்பணத்தை எடுத்து சென்றார் .சுவாமிகள் அப்பணத்தை கொண்டு கடன்களை எல்லாம் அடைத்து விடு என்றார் . அவரும் கடன்களை அடைத்து வீடு மற்றும் நிலங்களை மீட்டார் .மீண்டும் அவர் சுவாமிகளை வந்து தரிசனம் செய்து நிலத்தில் என்ன பயிரிடுவது என்று கேட்டார். மறுபடியும் சுவாமி நான் எது கூறினாலும் செய்வாயா என்று அவரிடமுள்ள நோஞ்சான் மாடு இரண்டு தருமாறு கேட்டான் ,வசதி வந்தவுடன் பணம் கொடுப்பதாக கூறினான் . ஜமீன்  வேலையாளை கூப்பிட்டு இருப்பதிலேயே நல்ல மாடு இரண்டும் ,ஒரு வண்டியும் பூட்டி கொடு ,என்றார் திருப்பி தர தேவை இல்லை  என்றார். விட்டுக்கு திரும்பும் வழியில் குப்பையில்  போட இருந்த மூன்று மூட்டை கொத்தமல்லியை ஒரு விவசாயி மாட்டு  வண்டியில் போட்டான்.பணக்காரன் சுவாமிகள் கூறிய படி வெங்காயத்தையும் நடுநடுவே கொத்தமல்லியும் விதைதான்  .எல்லோரும் கேலி செய்தனர் ,இவர்  சுவாமிகள் கூறியதை வேத வாக்காக நினைத்து பயிரிட்டார். தீடீரென்று வெங்காயம் விலையும்,கொத்தமல்லி விலையும் எக்கசக்கமாக ஏறி விட்டது .நிலத்தில் உள்ளவற்றை அறுவடைக்கு முன்னமே விலை பேசி வாங்க பொடி போட்டனர்.நல்ல விலைக்கு விற்று பழைய நிலைமையை அடைந்தார் பணக்காரன் .சுவாமிகளிடம் வந்து கோவில் கட்டுவது குறித்து கேட்க சுவாமிகள் எல்லோரிடமும் சிறிது பணம் வாங்கி கட்டு ,தனியாக செய்யாதே என்று அறிவுரை கூறினார் .

எப்படி பணக்காரன் பழைய நிலைமையை அடைந்தார்?

முதலில் சுவாமிகள் ஆசீர்வாதம் ,
இரெண்டாவது சுவாமிகள் மேல் அவர் கொண்ட நம்பிக்கை ,
மூன்றாவது கௌரவம் பார்க்காமல் சுவாமிகள் சொன்னதை வேத வாக்காக ஏற்று நடந்தது .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக