வெள்ளி, 10 ஜூன், 2011

குருடனுக்கு கண் கிடைத்த கதை

 கண்ணன் [ மகாவிஷ்ணு ]  வெண்ணை  திருடுகையில் யார் திருடர்கள் என்று கேட்டால் மாமியார் இடம் மருமகள் என்றும் மருமகளிடம் மாமியார் என்றும்  கூறி தப்பித்துகொள்வார் .ஒரு நாள் எல்லோரும்  சேர்ந்து  திருடனை தேடுகயில்    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக்கொண்டு இருந்தார் ஒரு அறுவது  வயதான கிழவர்  ஒரு கூடையின்  மேல் அமர்ந்து கொண்டிருந்தார்  ஓடி வந்த    கண்ணன் கிழவரை  எழுப்பி கூடைக்குள்சிறிது நேரம்  ஒளிந்து கொள்வதாக கூறி கூடைக்குள் ஒளிந்து கொண்டு  கிழவரை  மேலே அமர்ந்து கொள்ள சொன்னார். அவரும் சம்மதித்தார் .  தேடிவந்தவர்கள் திருடனை காணவில்லை என்று சென்றுவிட்டனர் . கிழவருக்கு கண் தெரியவில்லை என்றாலும் ஞானக்கண் உண்டு .உள்ளே ஒளிந்து கொண்டு இருப்பது கண்ணன் என்பதை அறிந்தார் .கூடையை திற என்று கண்ணன்  சொல்ல கிழவர் கண்பார்வை கொடுத்தால் தான் கூடையை திறப்பேன் என்றார் .கண்ணபிரானும் கண் பார்வையையும் ஆசியையும் கொடுத்தார் .










   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக