புதன், 22 ஜூன், 2011

பகாசூரன்

பகாசூரன் மிகுந்த  அட்டகாசம் செய்து வந்தான்.ஊர் மக்கள் கூடி வீட்டில் தினம் ஒருவர் மாட்டு வண்டியில் ஆடு கோழி அடித்து சமையல் செய்து எடுத்து சென்று கொடுத்து வர வேண்டும் என்று முடிவு செய்தனர் . சாப்பாடு எடுத்து செல்லும் ஆளையும் சாப்பிட்டு விடுவான் பகாசூரன்.ஒரு வீட்டில் பிள்ளையே இல்லை யாரை அனுப்புவது எந்ரூ அழுதார் ஒரு மூதாட்டியார் .மகாவிஷ்ணு பீமனை அனுப்பினார் .பீமன் மூதாட்டி வீட்டில் நன்கு சாப்பிட்டு  விட்டு  வண்டியில் சாப்பாடு எடுத்து சென்றான் .பீமன் சென்ற நேரம் பாகசூரன் வெளியே சென்று இருந்தான் . பீமனுக்கு பசி வந்து விட்டது வண்டியில் எடுத்து வந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான் . அந்த நேரம் பகாசூரன் வந்து நமக்கு வந்த சாப்பாட்டை யார் சாப்பிடுவது  என்று சத்தம் போட்டு மிரட்டினான் .இருவரம் பலத்த சண்டை போட்டனர் . பீமன் கதாயுதத்தால் பகாசூரனை வீழ்த்தினார் .     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக