புதன், 15 ஜூன், 2011

முருகர்

சூரசம்ஹாரம் செய்வதற்காக முருகர் தோன்றினார் .
ஈஸ்வரனும் ஈஸ்வரியும் முதலில் விநாயகரை பிறப்பித்தனர் . ஈஸ்வரி விநாயகரை கொஞ்சிக்கொண்டிருக்கையில் ஈஸ்வரர் விநாயகரை தூக்க ஈஸ்வரி மறுத்தார். அப்போது சிவன் இன்னொரு பிள்ளையும் இருந்தால் இருவரும் கொஞ்சலாமே என்று முருகனை பிறப்பித்தார் .முருகருக்கு ஐந்து வயது ஆகையில் எல்லா கலைகளிலும் தேர்ச்சிபெற்றார்.சிவனிடம் எல்லா வரங்களையும் பெற்றார்.பிள்ளையார் எதுவும் கேட்கவில்லை எல்லா வரங்களையும் தம்பிக்கே கொடுத்துவிடுங்கள் என்றார்.முருகர் யார் சண்டைக்கு வந்தாலும் அடித்து போட்டு விடுவார் .ஒருமுறை சிவன் துரு துரு என்று இருக்கிறானே அமைதியான பிள்ளையை பிறப்பித்து இருக்கலாமோ என்று நினைத்தார்.முருகர் பேசாமல்  ஊமை   போல் ஆகிவிட்டார் .பார்வதிக்கு இது தெரிந்தவுடன் ஏன் அது போல் நினைத்தீர்கள்  என்று    கேட்க சிவன் தவறாக நினைத்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டார் .
குழந்தையிலே அழித்துவிடலாம் என்று அசுரர்கள் திட்டம் போட்டனர் .முருகன் தொட்டிலிலே இருக்கும் பொழுது ஆராரோ நீ யாரோ நான் யாரோ வயது வாலிபன் ஆனேன் அம்மா என்றார் .உடனே வயது வாலிபன் தோற்றம் அடைந்தார் .பின்பு ஆராரோ நீ யாரோ நான் யாரோ ஏழு அடுக்கு மாளிகையை கண்டேன் அம்மா என்றார் உடனே ஏழு அடுக்கு மாளிகை தோன்றியது .அடுத்து  ஆராரோ நீ யாரோ நான் யாரோ கிழவனாய் ஆனேன் அம்மா என்றதும் கிழவனாய் காட்சி அளித்தார் .( அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கனிவாய் மொழி பேசி ...அதனால்தான் தொட்டிலில் உள்ள குழந்தைகளை ஆராரோ என்று தாலட்டுகிறோம் ) பின்பு முருகர் அசுரர்களை வதம் செய்தார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக