சனி, 25 ஜூன், 2011

தீட்டு

  சக்தி ஒரு சமயம் சிவன் பேரில் சந்தேகம் கொண்டு சகல ஜீவராசிகளுக்கும் இவர் படி அளப்பது உண்மையா என்று அறிய ஒரு எறும்பை பிடித்து ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்துவிட்டு,சகல  ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டீரா என்று கேட்க, ஈஸ்வரன் ஆம் என்றார். இல்லை இந்த பெட்டிக்குள் உள்ள எறும்புக்கு நீர் உணவளிக்க வில்லை என்று சொல்லி திறந்து காட்ட அதில் இருந்த எறும்பு சிறு துண்டு உணவை சாப்பிட்டுகொண்டு இருப்பதை பார்த்த சக்தி அசந்து போனாள்.ஈஸ்வரனுக்கு சக்தி நம்மீதே சந்தேகம் கொண்டு விட்டாளே என எண்ணி கோபம் கொண்டு அவளை அடக்கி வைக்கவும்,தண்டனையாக தள்ளி வைக்கவும் எண்ணினார்.அப்போது சக்தி பயந்து போய் நிக்க அதிர்ச்சியினால் அவள் உடலில் இருந்து உதிரம் வெளியேறியது.இதனை கண்ட சக்திக்கு பயமும், அச்ச உணர்வும்,நாண உணர்வும் ஏற்பட்டு ஈஸ்வரனை விட்டு தள்ளி ஒதுங்கி நின்றாளாம்.மூன்று நாள் கழித்துதான் ஈஸ்வரனிடம் வந்தாளாம்      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக