செவ்வாய், 14 ஜூன், 2011

பக்த ராமதாஸ்

பக்த ராமதாஸ் 32 இலட்சணங்கள் பொருந்தியவர்.தெய்வப்பிறவி .அவருக்கு 36  கூத்தியார்கள் இருந்தனர் .30 பேர் பணத்தாசை பிடித்தவர்கள் ,மீதி ஆறு பேர் நல்லவர்கள் .முப்பது பேரும் அவரிடமுள்ள சொத்துக்களை எல்லாம் வாங்கிவிட்டனர்,எல்லாம் வாங்கிய பிறகும் ஆசை போக வில்லை. அவரது மனைவியின் தோட்டை கேட்டனர் . அவரும் வாங்கி வருகிறேன் என்று கூறினார் .மனைவியிடம் தோட்டை கேட்க அவர் தர மறுத்துவிட்டார் இன்று தோட்டை கேட்பார்கள் நாளை தாலியையும் கேட்பார்கள் என்று கூறினார் மனைவி.இறுதியில் நான் தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை தோட்டை அவளிடம் கொடுக்கும் போது நிர்வாணமாக வந்து கவுட்டுக்குள் கையை விட்டு வாங்க வேண்டும் என்று என்று சொல்லுங்கள் என்றார் .அவரும் தோட்டை கேட்டவளிடம் இது போல் கூற அவளும் அதே போல் வந்து வாங்க ச்சே நம் மனைவியிடம் இருப்பது தானே இவளிடம் உள்ளது இதற்கு ஆசைப்பட்டா நாம் நம் சொத்து முழுவதும் இழந்தோம் என்று வருத்தப்பட்டார் .அன்று முதல் ராம ராம என்று சொலிக்கொண்டு இருந்தார் .
அந்த நாட்டு மன்னன்  இரண்டு ஜில்லா கந்தாயம் பாத்து வருடம் வரிப்பணம் ராமதாசிடம் கொடுக்க வேண்டும் யாரு எதுவும் கேட்க கூடாது என்றான் .வரும் பணத்தை எல்லாம் நகைகளாக மாற்றி ராமருக்கும் சீதைக்கும் போடு அழகு பார்த்தார் .அரசன் பணம் கேட்க   பணம் இல்லை என்றார் .அரசன் ராமதாசை சிறையில் அடைத்தான். 45 நாட்கள் சிறையில் இருந்தார் ராமர் லட்சுமனுருக்குதான்  கண்  தெரியவில்லை என்றால் சீதைக்கு கூடவா கண் தெரியவில்லை என்றார் .அன்று நாமம் போட்ட ஒருவர் நகை மூட்டையை மன்னரிடம் கொடுத்து மறைந்தார் .மன்னர் இது குறித்து ராமதாசிடம் கூறி விடுதலை செய்தார் .நான் பாவி எனக்கு தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டார் .ஏன் இந்த சிறைவாசம் என்று ராமனிடம் கேட்க போனஜென்மத்தில் கிளி குஞ்சை தாயின் கூண்டில் இருந்து ஏழு நாட்கள் பிரித்துவிட்டாய் அதனால் தான் கஷ்டப்பட்டது என்றார் .             
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக