செவ்வாய், 14 ஜூன், 2011

பூதம் புதையல் காத்த கதை

பெரிய பணக்காரன் ஒரு வீடு கட்டினான் ,நான்கு அறைகள் போட்டு மெத்தை மேல் எழுப்பி அதில் யாருக்கும் தெரியாமல் மிளகாய் பவுன் சவரன்கள்  வைத்து மூடிவிட்டான்.பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று இருந்தவன் திடீரென்று இறந்துவிட்டான்.நான்கு வருடங்கள் ஆனது.இரவு நேரங்களில்  புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .பிள்ளைகள் பயந்து வீட்டை வாடகைக்கு விட்டனர் .தொடர்ந்து இரவு நேரங்களில்  புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது.வாடகைக்கு வந்தவர்களும் பயந்து வீட்டை காலி செய்தனர் . வீட்டைவந்த விலைக்கு விற்றுவிட்டு போய்விடலாம் இந்த வீடே வேண்டாம் என்று முடிவு செய்து  விற்க முயன்றும் யாரும் வாங்க வில்லை.வீட்டருகில் உள்ள ஏரிக்கரையில் ஒருவன் டீக்கடை வைத்து இருந்தான் மழைக்காலம் வந்தவுடன் அந்த வீட்டின் தாழ்வாரத்தில் கடை வைத்து    கொள்கிறேன் என்று கேட்க தாரளமாக வைத்துகொள் என்று கூறி வீட்டு சாவியை   கொடுத்தனர் .இரவு நேரம் வீட்டினுள் படுக்கும் பொது புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .டீக்கடைக்காரன் மறுநாள் நம் சுவாமிகளை போல் உள்ளவரிடம் சென்று இது குறித்து கூற ,அவர் டீக்கடைக்காரனுக்கு தைரியம் கூறி இரவு நேரத்தில் சத்தம் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று  கேட்கும் போது  நீ போடு புடிசிக்கிறேன் என்று கூறி முந்தி ஏந்து என்று கூறி அவன் கையில் அவருடைய நகத்தை கொடுத்தார் .அன்று இரவு அவன் சுவாமிகளை நினைத்து கொண்டு படுத்து இருந்தான் இரவு நேரத்தில் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று சத்தம்  கேட்கையில் சுவாமிகளை நினைத்துகொண்டு தைரியமாக போடு புடித்து கொள்கிறேன் என்று கூற மேல் இருந்த சுவர் வெடித்து தங்க காசுகள் கீழே விழுந்தது .அதை அவன் யாருக்கும் தெரியாமல் அப்படியே வைத்து ஒரு வருடம் கழித்து அந்த வீட்டையே வாங்கி நன்கு தொழில் செய்தும்  தான தருமங்கள் செய்தும் நன்கு வாழ்ந்தான் .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக