வெள்ளி, 10 ஜூன், 2011

புலிக்கு குரு பூனை

முதன்முதலில் புலிக்கு வேட்டை ஆடத் தெரியாது .காட்டு பூனை நன்கு வேட்டை ஆடும் .புலி பூனையிடம் சென்று எனக்கு வேட்டை ஆட கற்றுகொடு என்று கெஞ்சியது . பூனையும் எப்படி பதுங்கவது எப்படி  பாய்வது  என்று கற்றுகொடுத்தது .தினமும் புலி வேட்டையாடி சாப்பிட்டது .ஒரு நாள் புலிக்கு இரை எங்கு  தேடியும் கிடைக்கவில்லை பூனையையே அடிக்க வந்தது ( காட்டு பூனை கொழு கொழு என்று இருக்கும் ) உடனே பூனை மரத்தின் மேல் ஏறிக்கொண்டது ,நீ இப்படி செய்வாய் என்று எனக்கு தெரியும் அதனால்தான் உனக்கு மரம் ஏறும் வித்தையை கற்றுகொடுக்கவில்லை .நான் பேண்ட குண்டியை கூட நீ பார்க்க முடியாது என்று மரத்தின் மீது ஏறி விட்டது .

பூனை மலம் கழித்தவுடன் மண் போட்டு மூடிவிடும் .பூனை சாப்பிட்டவுடன் நாக்கினால் சுத்தம் செய்யும் புலிக்கு அது போல் செய்ய தெரியாது .

பூனையை அடித்தால் பாவம் ,சாபம் கொடுக்கும் .
வீட்டுப்பால் சாப்பிடும் போது கண்ணை திறந்து குடிக்கும்,திருட்டுப்பால் குடிக்கும் போது( கண்ணை திறந்து கொண்டு குடித்தால் பாவம் வரும் என்று ) கண்ணை மூடிக்கொண்டு குடிக்குமாம்             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக