வெள்ளி, 17 ஜூன், 2011

பூதம்

ஒருமுறை சுவாமிகளிடத்தில் ஏதோ பூதம் நடமாடுவது போல் உள்ளது என்று சிலர் கூறினார்கள் .சுவாமிகள் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாராம் ,எதையாவது நினைத்துகொண்டு இருப்பீர்கள்  போங்கடா என்று திட்டினார்.மறுநாள் மதியம் யாரும் இல்லை எல்லா கதவுகளும் திறந்து இருந்தது அப்போது சுவாமிகள் சாய்வு நாற்காலியில் படுத்து இருந்தார் .அப்போது தொலைவில் வலது புறம் ஒரு பெரிய ஆண் பூதம் இடது புறம் ஒரு பெரிய பெண் பூதம் சுவாமிகளை நோக்கி வந்து கொண்டு இருந்தது .திடீர் என்று ஆண் பூதம் பெண் பூதமாகவும் , பெண் பூதம் ஆண் பூதமாகவும் மாறியதாம்.இருவரும் பெரிய மந்திரவாதிகள் போல் உள்ளார்கள் நம்மை சாக்கு பையில் போட்டு எடுத்து செல்ல போகிறார்கள் என்று நினைத்தார்களாம் .
இரண்டு பூதங்களும் அருகில் வந்தவுடன் கையை அசைத்து மந்திரம் போட்டதும் சுவாமிகள் சிறு குழந்தையை போல் ஆகிவிட்டாராம் .எல்லாம் சுவாமிகளுக்கு தெரிகிறதாம் ஆனால் பேச முடியவில்லையாம் .சுவாமிகள் பெண் பூதம் ஆனவுடன் பெண் பூதம் வாரிஎடுத்து மார்போடு அணைத்து கொண்டது ,பின் இரு பூதங்களும் குழந்தையை தூக்கி கொண்டு தோட்டதிற்கு    சென்றார்களாம்.குழந்தையை படுக்க போட்டு பெண் பூதம் முகத்தை தடவி கொடுத்தது ஆண் பூதம் கால்களை தடவி  கொடுத்தது. இவர்கள் இருவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என சுவாமிகள் யோசித்துக்கொண்டு இருந்தாராம் அவர்கள் ஏமாந்த சமயம் பார்த்து குடு குடு என ஓடி வந்து சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டாராம் .

வந்த பூதங்கள் யார் என்று தெரியுமா என்று கேட்டார் ?
தெரியாது என்று பக்தர்கள் கூற ஆண் பூதமாக வந்தது சிவன் என்றும் பெண் பூதமாக வந்தது பார்வதி என்றும் கூறினார் .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக