புதன், 22 ஜூன், 2011

நூறு சக்திகள்

மொத்தம் நூறு சக்திகள் .ஒவ்வொரு சக்தியும்[ 99 சக்தியும் ]  சிவனிடம் அவர்களுக்கு வேண்டிய வரம் பெற்றார்களாம்.இறுதியாக உனக்கு என்ன வரம் வேண்டும் என்று சிவன் கமலதரணியை பார்த்து கேட்டாராம்.அதற்கு அந்த அம்மன் நான் யாரை கண் திறந்து பார்கிறேனோ, அவர்களுக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது என்று கேட்டாராம்.அதற்கு சிவன் அது எப்படி நல்லது கெட்டது கலந்து தானே உலகம் இந்த வரத்தை என்னால் கொடுக்க இயலாது துறவிகளால்தான் முடியும், எனவே துறவியையே கேள் என்று கூறிவிட்டார். கமலதரணீ அம்மன் துறவியை நினைத்து தவம் இருந்தார்களாம். அப்போது முன்று துறவிகள் வந்தார்களாம், அவர்களுக்கு விருந்து பரிமாற செல்கையில் துறவிக்கு முன் அச்சத்ததைதவிர்த்து வர  வேண்டும் .எனவே ஆடை இல்லாமல் வா  என்று கூறினார்களாம். அந்த அம்மையார் சிவனிடம்  இவர்கள் மூன்று பேர் கண்ணுக்கு மட்டும் நான் தெரியவேண்டும் மற்றவர் யாருக்கும் தெரியக்கூடாது என வரம் கேட்டு பின் அவர்களுக்கு பரிமாறி வரத்தை பெற்றார்களாம் கமலதரணீ அம்மன்    [ நிர்வாண அம்மன் ].  
   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக