செவ்வாய், 1 மார்ச், 2011

திருவண்ணாமலை மகத்துவம்

வல்லாளன் என்ற அரசன் ஆண்டுவரும் காலத்தில் அண்ணாசாமி என்ற சாமியார் எப்பொழுதும் மலையை சுற்றிக்கொண்டு இருப்பாராம். (வல்லாளன் கஞ்சன்,குழந்தை பாக்கியம் இல்லை )  சுவாமிகளை பார்த்து ஏன் சுற்றுகிறீர்கள் என்று கேட்க கடவுளை சுற்றி வருகிறேன் என்றார் சாமியார்.எனக்கு காட்டுகிறீர்களா என்றான் அரசன், நீயும் தொடர்ந்து சுற்று கடவுள் காட்சி அளிப்பார்கள் என்று சுவாமிகள் கூறினார்.அரசனும் தொடர்ந்து சுற்ற ஒருநாள் பெரிய மின்னல் மலையின் உச்சியில் இருந்து கீழ்வரை தெரிந்தது அதுதான் அடிமுடிகண்ட உண்ணாமலையுடன் கூடிய அண்ணாமலை என்றார் சுவாமிகள்     அரசன் வேண்டியபடி குழந்தை அவனுக்கு பிறந்தது பின் தான தருமங்கள் நிறைய செய்து அண்ணாமலையாருக்கு கோயில் கட்டினான் .

 அந்த மின்னல் தெரிந்த அன்றுதான் கார்த்திகை தீபம் என்கிறோம் .அன்றுதான் திருவண்ணாமலை ஜோதி என்று நம் சுவாமிகள் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக