வியாழன், 24 மார்ச், 2011

தகப்பனும் மகளும் சேர்ந்து உண்டாக்கிய உலகம்

சிவன் சக்தி சிருஷ்டி கர்த்தாவும் ,மும்மூர்த்திகளும் கலந்து யோசித்து 
உத்வேகம் கொண்டு இருந்தார்கள் .  இப்படி இருக்கையில் உலகை யாராலும் அழிக்க முடியாது . தாயால் தான் அழிக்க முடியும் என உணர்ந்து 
தண்ணீரை   பெருவெள்ளமாக்கினார்கள்.தாயும் மகனும் ஒரு பக்கம் ஓடினார்கள் .
விதைகள் நீக்கப்பட்ட சுரக்குடுவையின் உள்   தகப்பனும் மகளும் தண்ணீருக்கு 
பயந்து  புகுந்தனர்.உலகத்தில் உள்ள அனைவரும் அழிந்தனர்  .
48 நாட்கள் கழித்து சுரைக்குடுவை உள் இருந்த இருவர் மட்டும் தப்பினார்கள் 


மகாவிஷ்ணு கருட அவதாரம் எடுத்து  உலகை நல்லவிதமாக படைக்க 
சுற்றி பறந்துவரும் சமயம்   தகப்பனை பார்க்கையில் விபூதியை கையில் 
வைத்துகொண்டு  சிவா சிவா என்று கூறிக்கொண்டு இருந்தவரை பார்த்து இந்த ஒருவனை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்  என எண்ணி ரக்கையால் அடிக்க போகையில் கழுத்தை கெட்டியாக பிடித்துகொண்டு 
உலகமே அழிந்து விட்டது எங்களை மட்டும்   ஏன் வைத்துள்ளாய் என்னையும் 
என் மகளையும்  அழைத்து கொண்டு போ என்று கூறினார் ( அவர் திருநீர் கையுடன் 
கருடனை பிடித்த்தால் தான் கருடன் கழுத்து வெள்ளையானது ) . ஒரு ஆணையும் பெண்ணையும் 
நீதிக்கு புறம்பாய் கொல்வது  பாவம் என விடு விட்டார் . இதைப்பற்றி மகாவிஷ்ணு சிவனிடம் கூறினார். அப்போது அவர் அந்த இருவராலும் உலகம் உண்டாகட்டும் காமத்துக்கு கண் இல்லை ,செத்த நாய் என்றில்லை பெத்த பிள்ளை என்றில்லை என கூறி நான்காவது உலகத்தை படைபித்தார்.
இப்படியாக உலகில் மக்கள் அதிகமாக ஒழுக்கமாக தாய், தந்தை என உறவு முறைகளை உண்டாக்கி வளர்ந்து வந்தது .மனிதனுடைய அறிவு ஒழுக்கம் திறமைகளாலும் நன்மை, தீமை என உணர்ந்து பல கடவுள்களும் உண்டாகி உள்ளது       
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக