திங்கள், 7 மார்ச், 2011

குரு நம்பிக்கை

  குருவை சதா மானசீகமாக நினைப்பவனுக்கு ஒன்றுமே கஷ்டங்கள் வாராது .குருவானவர் அவைகளை தாங்கி கொள்வார் .தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விடும், தோளுக்கு அருகில் வரும் கடைசியாக காலுக்கு பக்கத்தில் போய் விழுந்து விடும்.

குருவின் மேல் சதா ஒரே நிர்ணயமாய் இருப்பவனிடம் , குருவும் தன்னை சதா நினைப்பவனை பற்றி நினைக்கும் போது ( குரு , பக்தன் )  இருவர்   மனமும்  ஒன்று  கலக்கும்  போது   பிரம்மா தேவன் எழுத்தையே முறியடித்து விடுமாம். ஆகையால் சதா குருவையே நினைத்து வருபவனிடம் நிர்ணயத்தை கலைபதற்கு பிரம்மா தேவன் மாயவை அனுப்பி குருவை நினப்பவனுடைய மனதில் சபலத்தை எழுப்பும் , இன்னல்களை கொடுக்கும், வாட்டும் .இச் சோதனைகளை எல்லாம் வென்றும் எல்லாம் குருவே என் செயல் ஒன்றும் இல்லை , தனது என்று ஒன்றும் இல்லாத நிலை , பற்றுஅற்ற நிலை ஏற்படுத்திகொண்டவனுக்கு குருவே தான் சகலமும் . குருவேதான் பசியாற்றுவார் குறைகளையும் தவிர்ப்பார்கள். 
என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் சற்குருநாதரே , தான் அவருடைய கருவியாக உள்ளேன் என்பான் .

( ஓடி பிழைத்தாலும் குரு வேண்டும் ( 9 ல் குரு இருக்க வேண்டும் )

கஷ்டத்திலும் நம்பிக்கை இழக்காமல் இருபது தான் புண்ணியம் .
நம்பிக்கை தான் பொறை மோர் .
பூரண  நம்பிக்கை இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் .
தேகத்தை வருத்தியாகிலும் நல்லது செய்யவேண்டும் .
பொறுமையை கடைபிடிக்க வேண்டும் .
    

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக