வியாழன், 24 மார்ச், 2011

சிதம்பர இரகசியம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்பு நடராஜர் என்ற துறவி இருந்தார் ,கோயிலில் சதா சர்வ காலமும் இருப்பார்,அவர் மீது பொறாமை கொண்டவர்கள் அவரை திருடன் என்றும் பைத்தியக்காரன் என்றும் திருமலை நாயக்கரிடம்  கோள் முட்டினார்கள் .ஒரு நாள் மன்னன் கோயிலுக்கு வந்து நடராஜரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அம்பாளையே முழு மதியாக பார்த்து கொண்டு இருந்த நடராஜர் பௌர்ணமி என்றார் .அன்று அமாவாசை இது கேட்ட திருமலை நாயக்கர் இரவு 3 3 /4  நாழிகை (1 1/2  மணி ) குள் நிலா வானத்தில் தோன்றா விட்டால் நெருப்பின் மேல் உரி கட்டி இறக்கப்படுவீர் என்றான் .அப்போது தான் நடராஜர் "நடராஜர் பத்து" பாடினார் அப்போது அம்பாள் காற்சிலம்பை எடுத்து வீச வானத்தில் நிலவு போல் தெரிந்தது ஆடு கண்டதும் தவறு செய்து விட்டோம் என்று மன்னன் வருந்தினான் 
.அதன் பிறகு மதுரையை விட்டு நடராஜர் சிதம்பரம் வந்தார் அங்குள்ள தேவர் அடியாருடன் நடனப்போட்டி நடந்தது இருவரும் திறமையாக ஆடினார்கள் நடராஜர் துறவி அவருக்கு அச்சமில்லை தலைக்கு மேலே    ஒரு காலை  தூக்கி ஆடினார்  அந்த அம்மாள் அதே போல் காலை தூக்க பாவாடை தடுத்தது அச்சத்தால் காலை தூக்கமுடியவில்லை காலை கீழே வைத்து நின்று விட்டார் இதுதான் உண்மையில் நடந்தது சிதம்பர ரகசியம் இதுதான் ..
       
சிதம்பரத்தில் உள்ள கோயிலில் உள்ள ஸ்ரீ மூல நாதர் ( லிங்கம் ) தான் திருமூலர் சமாதியாகும் .
     




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக