திங்கள், 28 பிப்ரவரி, 2011

மொட்டை அடித்து கொள்வது எதற்கு

இனிய தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது.முருகர் சாமியார் உருவம் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து பசியாற்றுங்கள் என்றார் , அவர்கள் உணவு பரிமாறும் போது உங்கள் வீட்டு குழந்தையை கூப்பிடுங்கள் என்றார்  அவர்கள் குழந்தையில்லை என்றனர் குழந்தை இல்லாத வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று எழுந்து விட்டார்.தம்பதிகள் இருவரும் காலில் விழுந்து வணங்கி அழுதனர்.நீங்கள் கேட்டபடி பிள்ளைபேறு வரம் அளிக்கிறேன் நீங்கள் பதிலுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டார்.நீங்கள் கேட்பதை தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் .அதற்கு அவர் உயிர் பொருளை கொடுங்கள் என்றார்.

குழந்தையும் பிறந்தது.சிறிது நாட்கள் கழித்து பேசியபடி உயிர்பொருளை கொடுக்க முருகர் கோயிலுக்கு சென்றனர் பின் குழந்தையை பலியிட்டு தன் நாக்கையும் அறுத்து கொண்டனர் . உடனே முருகர் தோன்றி ஏனப்பா உயிர் பொருளை தானே கேட்டேன் உயிரையா கேட்டேன் என்று கேட்க அவர்கள் உயிர் பொருள் எது என்று அவர்கள் முருகனிடம் கேட்க முருகன் தலைமுடி என்றார். குழந்தை சேவலாக மாறியது .

அதனால் தான்  சேவல் பலிகொடுப்பது , மொட்டை அடித்து கொள்வது .
தலைமுடியும் நகமும் உயிர்போருட்கள் நெருப்புக்கு மட்டும் அழியும் மற்ற எதுவாலும் அழியாது . மொட்டை மூன்றுமுறை அடித்தால் கிரக தோஷம் நீங்கும் மொட்டை சாமிக்கு நேர்ந்து கொண்டு அடித்தால் பாத்து காவு ( பலி ) கொடுப்பதற்கு சமம் என்று கூறுவார் நம் சுவாமி . சுவாமிகள் நகம் வைத்து இருப்பது  மிக்க விசேஷம் எதாவது பெரிய கஷ்டம் வரும்போது சுவாமிகள் உயிர்பொருள் ஆன நகத்தை கொடுப்பார் .                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக