கோ தரிசனம் பாபவிமோசனம்.
சாது தரிசனம் பாபா விமோசனம்.
| அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான்
நடைபெறுகிறது, என்று நினைப்பது பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் . |
| சாதகமான சூழ்நிலையோ , பாதகமான சூழ்நிலையோ எது நேர்ந்தாலும் சுவாமிகள் திருவடிகளை மறக்காமல் இருப்பதே எவ்விதத்திலும் நன்மை தரும் . |
| உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது . |
| அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது, மற்றபடி ஜப தவங்கள் |
| எல்லாம் கர்ம வினைகளை போக்காது . வீட்டிலே இருந்தாலும், |
| கோயிலுக்கு போனாலும், கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் |
| இல்லாமல் காப்பாற்று, நல்ல சுகத்துடன் வைத்திரு, என மனமாற |
| வேண்டிவந்தால்
போதுமானது . கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை |
| கொண்டு செல்ல வேண்டும். மற்றபடி சம்சாரிகள் மனைவி |
| குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி |
| நேர்மையுடன்
வாழ்ந்து வந்தால் போதுமானது . |
| அன்னதானம் செய்யும் போது
ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் |
| வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது |
| சிறந்தது. இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் |
| நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும். |