செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சுவாமிகள் கூறியவை

 பொறுமை , சாந்தம் , சகிப்பு தன்மை யாவும் நல்லவன் கடைபிடிக்க வேண்டும் 
.
என்னை யார் என்ன பண்ண முடியும் என்ற ஆணவம் அவனையே அழிக்கும்
.
ஐந்து பாகம் நல்லவன் இருந்தால் சமாளிக்கும் .

பிரம்மனது எழுத்தை நல்லவனை கொண்டுதான் வழி வகுக்க முடியும்.

பங்கிதின்றால் பசி ஆறும் தானே தின்றால் வீணாகும் .

பொறுமையை கடை பிடிக்க வேண்டும் .

நான் என்ற சொல் வந்தால் எல்லா புண்ணியமும் போயிற்று .

நான் என்ற பெரியதனம் இருக்க கூடாது .நல்லதுக்கு வர முடியாது  

நம்பிக்கையும் பொறுமையும் மிக மிக இருக்க வேண்டும் .
சிறிய வயதில் இருந்தே பொறுமையை கையாள வேண்டும் .
நம்பிக்கை ஆதார பொருள் கடவுள் சோதிப்பார்,மறக்கவும் செய்வார் 
.
நம்பிக்கை இருக்க கஷ்டங்கள் தானாக குறையும் ,பிரம்மன்  எழுதின எழுத்தை

உடனடியாக மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும் 

.இடம் இருந்தால் , சந்து இருந்தால் மாற்றலாம், ஆறு மாதத்திற்கு நல்லவன்

வரும்போது மாற்றலாம் .தன்னம்பிக்கை போக்காமல் நம்பி இருக்க வேண்டும்

உள்ளத்தில் தைரியம் இருக்க வேண்டும் 

எப்போதும் பைத்தியமே துணை என்று நினை 

ஒரே சொல்லை மனசில் வைக்க வேண்டும் கோயிலுக்கு போனாலும் 

ஒரே மனசாக ஒரே நோக்கமாக கேட்டால் கஷ்டங்கள் உடனே தீரும் 
..
    செத்தாலும் ,பிழைத்தாலும் ஒன்றே பிடி .

கடமையை போக்கிட்டு மனதில் நம்பிக்கை இழக்காமல் கடமையை செய்து

கொண்டு வரவேண்டும் ,ஆசைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் .

நல்ல உடம்பிற்கு நாலு சொம்பு தண்ணீர் .

பாம்பு புற்றின் மேல் வளரும் புல்லுருவி  சிறந்தது .

ஆசையை போக்கினால் மனம் வளரும் ,
அச்சத்தை போக்கினால் ஞானம் வளரும் .

பாதரசத்தை எடுத்தவனும் இல்லை 
கடவுளை கண்டவனும் இல்லை .

  உள்ளம் - கடவுள் கட்டி கொடுத்த வீடு , அதை கொண்டு தான் உருவத்தை பார்க்க வேண்டும். சதா அந்த உருவத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் .கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட்டுக்கொண்டே இருக்கும் .

துறவி - நான் என்ற சொல் எப்பொழுதும் என்றும் கிடையாது
மக்களுக்கு தொண்டு செய்வதுதான் பெரிய பொருள் .
சகல பிள்ளைகளையும் அயராது திருத்துபவர் .பிரம்மச்சாரி சொல் என்றுமே பலிக்கும் .தன் சரீரத்தை கொடுப்பது தான் துறவி .
( மக்களின் துன்பங்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது என் வேலை என்று சுவாமிகள் கூறுவார். அன்பு தான் சுவாமிகளின் ஆகாரம்  )
பசி அற்றவன் துறவி .கிரகங்களும் துறவியை ஓட்டவிடாது 
துறவி அன்புக்கு கட்டுப்பட்டவர் . அன்புதான் ஆகாரம் . துறவி தனக்கு என்று எதையும் கேட்கமாட்டார் .அப்படி அவர்களுக்கு தேவையானதை உலக மாதா
" சக்தி "    மூன்றே முக்கால் நாழிகைக்குள் கொடுத்து உதவும் .
( நம் சுவாமிகள் தன்னையே வருத்தி தன்னை காண வரும் மக்களின் துன்பங்கள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அருளுபவர் ) .
தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் துறவி சொல்ல மாட்டார் .

எல்லாம் கடவுள் செயல் என்ற தைரியம் வேண்டும் .
நம்பிக்கை தான் வேண்டும் .அந்த நம்பிக்கையை எப்பொழுதும் கைவிடப்படாது .அது  பிற்காலத்தில் நம்மை காப்பாற்றும், சிறுக சிறுக  சேரும் , தாய் தகப்பனாரிடம் வாங்கி கொடுக்கும். கடுகளவு கடுகளவு நமக்கு தெரியாமல் கெட்டதை குறைத்து கொண்டே வரும் ( நம் சுவாமிகளின் சொற்படி எக்காரணத்தை முன்னிட்டும் கை விடாமல் நடந்து வந்தால் தப்பாமல் பயன் கிடைக்கும் ) இதயத்தை உருக்கி மனதை கொண்டு வருவது தான் உள்ளதை  சுவாமிகளிடம் சேர்க்கும் . மானசீக வழிபாடு மிகவும் சிறந்தது .  




பொருள் மேல் ஆசை வைத்தவர்கள் சாமியார் ஆகார் .

ஆசையை போக்கினால் இந்திரியத்தை தலையில் நிறுத்த முடியும் .

கண்டதை சொல்லாதே, தெரிந்து கொண்டவர்களிடம் சொல்லலாம் .
சொன்னால் போய் விடும் .

பசி என்பவனுக்கு சோறு போடவும் .
பசி ஆற்றுவதுதான் புண்ணியம் .
பசி என்று வந்தவனுக்கு இல்லை என்பது தான் மகா பாவம் .


பன்றி சாணம் சாராயத்தில் போதை தரும் .

சாப்பாடு போடும் பொழுது திட்டக்கூடாது .

நல்ல மக்களுக்கு இல்லை என்று சொல்லப்படாது .

மனைவி ,வீடு ,கிணறு , குரு அவர் அவர் வாங்கின வரபிரசாதத்தை பொறுத்ததாக அமையும் . 

தாயின் வயிறு - ஏழு பொறை - நடு பொறை   கர்ப்பம் .


ஆறு புழு - ஒன்று தாய் . ஐந்து புழு கொண்டதுதான் பஞ்ச பூதம் .
உடம்பில் இயற்கை அனு குறைந்து குறைந்து செயற்கை அனு  சேர்ந்தால் தான் நோய் வரும் .

எது இருந்தாலும் தெய்வ நம்பிக்கை வேண்டும் .
ஆன்மாவால் கும்பிடவேண்டும்.
கடவுள் கோயிலில்தான் இருக்கிறாரா?
இல்லை மன நம்பிக்கை தான் தெய்வம்


சித்து விளையாடுவது - கர்மகாண்டம் .

ஓர் இடத்திலும் பொறாமை வரும்படி செய்ய கூடாது .

நல்ல ராசிக்காரர்களுக்கு , நல்லவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகாது .

வேண்டாம் என்பவருக்கு கொடுத்து கொண்டே இருக்கும் .

ஒரு காரியத்தை தொடங்கும் முன் நன்மை வருமா தீமை வருமா என்று முதலில் யோசித்து பிறகு தொடங்கி தொடர்ந்து செய்து கொண்டே போகவேண்டும் . தொடங்கிய பின்னால் அப்படியே போக வேண்டும் .

தைரியலட்சுமி நடடா என்றால் துணிந்து கிளம்புவது நல்லது .
சொல்லுக்கு வேகம் உண்டாகி செயல்படுகிறது .

கோபம் வரும் போது சிரித்துகொண்டே இருக்கவேண்டும் .

சட்டிக்கு பானை மோதல் போக வேண்டும் .

பிரியமான் பொருள் ஆகாரத்தில் இருந்தால் வியாதி வரும் .பிரியமான பொருளை விட்டால் வியாதி போகும் .

குருவுக்கு எதிர்த்து வாதாடுபவர் சூரியன் .
ராகு திசையில் யாதாகிலும் குறைபாடு கொடுத்துகொண்டே இருக்கும் .

அச்சம் ஆசை மர்மம் மூன்றையும் உண்டாக்கிறது தாய் , வளர்த்து வருகிறது மூன்றையும் .

அன்பே தெய்வம்  அருளே ஜோதி

உள்ளதை அறிந்தால் நான் என்ற சொல் சொல்ல மாட்டான் .

உயிர் பட் என்று போவது புண்ணியம் , நல்ல உயிர் 48 நாட்கள் இருக்கும்,பேரன் பேத்தி மேல் ஆசை இருந்தால் தீர்த்தம் ஊற்று ,சாந்தி கிடைத்தவுடன் நின்றுவிடும் .   புண்ணியம் செய்த ஆத்மா ஹிம்சை இல்லாமல் பிரியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக