புதன், 3 ஆகஸ்ட், 2011

ஒரு கிழவி கொல்லன் குடி கோட்டை என்ற ஊரில் மலையாள பகவதி மந்திரத்தை கொண்டு ஊர் மக்களை மிரட்டி பயந்து வாழும்படி செய்து வந்தாள்.ஒரு குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். சுவாமிகளிடம் வந்து அழுதார்கள் .ஸ்வாமிகள் ஒரு காரியம் செய்ய சொன்னார்கள் , அவர்கள் பயந்தனர் .என்னை நினைத்து கொண்டு தைரியமாக செல்லுங்கள் ,மலையாள பகவதி மந்திரத்திற்கு எதிர் மந்திரம் கற்று கொண்டோம் என்று கிழவி காதில் விழும்படி கூறுங்கள் என்றார். கிழவி காதில் அது விழ சுவாமிகள் படுத்து இருக்கும் இடத்திற்கு வந்தாள்.மந்திரத்தை கூறி பார்த்தாள்,எதுவும் நடக்க வில்லை,சுவாமிகளை பார்த்து மிரட்டினாள்.சுவாமிகள் அமைதியாக இருந்தார் .பின்பு கிழவி அழ ஆரம்பித்து விட்டாள்.மன்னிப்பும் கேட்டாள். பின்புதான் கிழவிக்கு அடிமையாக இருந்த கிராம மக்கள் விடுதலை பெற்று மகிழ்ச்சியாக இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக