புதன், 3 ஆகஸ்ட், 2011

பசி

ஒருவனுக்கு எழுத, படிக்க தெரியாது .எப்பொழுதும் முருகர் துணை ,ஓம் பராசக்தி துணை என்று எழுதிக்கொண்டு இருப்பான். சுவாமிகளிடம் வந்து குறைகளை கூறினான் .அதற்கு சுவாமிகள்  "அப்பா பைத்தியமே துணை" இவ்வாறு எழுதினால் கஷ்டம் தீரும் ஆனால் சோதனை வரும் என்றார் .அந்த ஆளுக்கு எழுத தெரியாது.பக்கத்தில் இருந்தவர் எழுதி கொடுக்க அதன் மேல் எழுதி பழகி ,15 நாட்கள் விடாமல் எழுதினான். எழுத எழுத சக்தி  நிறைய வந்தது .
எலுமிச்சம் பழத்தை கையில் வைத்து மந்திரம் சொன்னால் திருடு போன பொருட்கள் இருக்குமிடம், திருடர்கள் யார் யார் என்றுகூறிவிடுவானாம்.எலுமிச்சம் பழத்தை கையில்வதால் மேலே ஏறி இறங்குமாம் .ஒவ்வொரு நாளும் எலுமிச்சை பழம் விற்பவரிடம் சென்று இலவசமாக வாங்கி விடுவான் .பழம் விற்ப்பவரும் சுவாமிகளிடம் வது செல்பவர் .ஒரு முறை பழம் கிராக்கி மார்க்கெட்டில் எங்கும் கிடைக்கவில்லை .
அந்த நேரத்தில் பழம் நிறைய கேட்கும் கையில் சிறிது மட்டும் எடுத்து செல்லுமாறு கூறினார் கடைக்காரர் .நான் மந்திரம் போட்டால் உனது கடை என்ன ஆகும் தெரியுமா என்று பயமுறுத்தினான் அந்த ஆள் .அதற்கு பழ கடைக்காரர் உன் மந்திரத்தை எல்லாம் வேறு யாரிடம்மாவது வைத்து கொள் நான் அப்பா பைத்தியம் சுவாமிகளை பயபக்தியுடன் கும்பிடுகிறேன்,அவர் இருக்கும் போது என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார் .
அதற்கு அவன் நான் எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்து மந்திரம் போட்டால் சுவாமியையே இங்கு வரவழைப்பேன் என்று ஆணவமாக கூறினான்.அன்று இரவு அவன் மேற்க்கு தலை வைத்து கிழக்கு கால் நீட்டி  படுத்துறங்கும் போது விடியற்காலை 3 . 30 மணிக்கு ஒரு பெண் குழந்தை அருகில் நின்று கொண்டு இருந்தது,அக்குழந்தை அருகில் பீமன் போல் ஒரு ஆள் இருந்தார் ,அவரிடம் ஏறி மிதித்து கொல் என்றது குழந்தை.அந்த ஆள் ஏற மந்திரவாதி அலறினான் .
அப்போது சுவாமி அங்கு வந்து அவனை விட்டு விடுங்கள் பாவம், அந்த புத்தியை நீங்கள் தானே கொடுத்தீர்கள் என்றார். பின் யாவரும் மறைந்து   விட்டார்கள்  . விடிந்ததும்  சுவாமிகளை தேடி ஓடி வந்து மன்னிப்பு கேட்டான் .

சுவாமிகளிடம் எதாவது சாப்பிடுங்கள் என்றான்,வேண்டாம் என்று கூறினார் சுவாமிகள் .கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினான் .எனது வயிறுக்கு யாரும் சாப்பாடு போட முடியாது என்றார் சுவாமி ,நான் போடுகிறேன் என்றான் மந்திரவாதி .அங்குள்ள செட்டியார் கடையில் 159 இட்லி ,15 பக்கெட் சாம்பார், சட்னி ,18 ரவா தோசை ,உப்புமா எடுத்து வந்தனர் .சுவாமிகள் தனது கைகளால் பிசைந்து சாப்பிட்டார் .செம்பு செம்பாக காபி, ஒரு சொட்டு கூட மீதி வைக்கவில்லை .அப்படி இருந்தும் சுவாமிகளுக்கு பசி நீங்கவில்லை .மறுபடியும் மன்னிப்பு கேட்டான்,எல்லாம் காலி,கொடுப்பதற்கு எதுவும் இல்லை .பசியை ஏன் உண்டாக்கினீர்கள் என்றார் சுவாமி,இத்தனைக்கும் வயிறு ஒட்டித்தான் இருந்தது .சாயந்தரம் ஏழு மணிக்கு தண்ணீர் குடித்தவுடன் தான் பசி அடங்கியது .சுவாமி சாப்பிட்டாரா?பூதம் சாப்பிடதா ? என்றனர் அனைவரும் .பூதமல்ல என்றார் சுவாமிகள் .தாயின் வயிற்றின் அகலம், ஆழம் தெரிந்தவன் தான் எனக்கு வயிறு பூரா சாப்பாடு போட முடியும் என்றார் சுவாமி. 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக