ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

இராமலிங்க சுவாமிகள்

இராமலிங்க சுவாமிகளின்  அண்ணி ,அண்ணனுக்கு தெரியாமல்  இராமலிங்க சுவாமிகளை வரவழைத்து  அமுதம் அளிப்பார்கள்.அண்ணியின் மேல் அண்ணன் சந்தேகப்பட்டு அண்ணியை திட்டி வெளியே அனுப்பி தாழ்பாள் போட்டார் .அண்ணியாகிய தாய்க்கு தனக்கு தலைவாரி பேன் எடுத்து அழகாகவும் ஒழுங்காகவும் வைத்து இருந்ததற்காக தமையனார் அண்ணியை தண்டித்தற்காக அன்று அடித்து கொண்ட மொட்டைதான் வாழ்நாள் வரை மொட்டையாக மாறிவிட்டார்கள். அண்ணியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கல்யாணம் செய்து கொண்டார்.பின் பந்தத்தை துறந்தார்.

கருங்குழி ரெட்டியார் வீட்டில் சுவாமிகள் இருக்கும் பொழுது விளக்கு அணையாமல் எரிந்துகொண்டு இருக்கும்.தினமும் மாலை 5 மணிக்கு ஒரு குவளை எண்ணெய் கொண்டு வந்து வைப்பார்கள்.ஒருநாள் உறவினர் வீடு விசேஷம் சென்றவர்கள் மலை 5 மணிக்கு வர இயலவில்லை,எண்ணெய் யாரும் வைக்கவில்லை.அந்த அம்மாவிற்கு மிக்க வருத்தம்,அந்த அம்மா வீட்டிற்கு வந்து பார்க்கும் போது விளக்கு எரிந்து கொண்டு இருந்தது அப்போது அந்த அம்மா இராமலிங்க சுவாமிகளிடம் தண்ணீர் விட்டா எரித்தீர்கள் என்று கேட்க தண்ணீர் விட்டா எரித்தேன் ? தன் நீர் விட்டு எரித்தேன் என்றாராம் .தண்ணீர் ( தாயின் சக்தி ) .

ஒரு தாசில்தார் தான தர்மங்கள் நிறைய செய்பவர். அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். திருமணம் முடிந்தது.வீட்டிற்கு வந்தவுடன் பெண்டாட்டி திட்டுகிறாள்,இவரை சேர்க்க வில்லை,ஒரு வருடம் இதே போல் இருந்தது. முதல் பெண்டாட்டி சரியில்லை என்று மறுகல்யாணம் செய்தி வைத்தார்கள். அவளும் அப்படியே நடந்துகொண்டாள்.இருவரும் சேர்ந்து கொண்டு திட்டுவார்களாம்,உனக்கு வீட்டில் என்ன வேலை வெளியே போ என்பார்களாம்.தாசில்தார் இராமலிங்க சுவாமிகளிடம் சென்று தம் குறைகளை கூறினார். மூன்று நாட்கள் சுவாமிகளிடம் முறையிட்டு  நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் சாகிறேன் என்றாராம்.அன்று இரவு தாசில்தார் வீட்டிற்கு இராமலிங்க சுவாமிகள் சென்றார் பெண்டாட்டிகள் இருவரும் சுவாமிகளை நமஸ்கரித்து நன்கு கவனித்து கொண்டார்கள், அப்போது புருஷனை வெளியே போ என்று திட்டினார்கள் . இரவு 12 மணிக்கு வெளிநடையில் படுத்து இருந்த சுவாமிகள் இருவர் படுத்து இருந்த அறைக்குள் சென்றாராம் தன் கணவன் தான் வந்து இருக்கிறான் என்று எண்ணி இருவரும் சுவாமிகளின் முதுகில் அடித்தார்கள்,பின்பு பார்கையில் சுவாமிகள் என்று அறிந்து மன்னிப்பு  கேட்டனர்.அப்போதுதான் இராமலிங்க சுவாமிகள் தாசில்தாருக்கு இருந்த பிரமஹத்தி தோஷத்தை வாங்கிகொண்டு தெருவில் பாடிக்கொண்டு சென்றார்களாம். "வீதியிலே சென்றேனடியம்மா ஆனி பொன்னம்பலத்தை கண்ட காட்சி அற்புதகாட்சி"   அதன்பிறகு மனைவிமார்கள் இருவரும் தாசில்தாரை  நன்கு கவனித்து கொண்டார்கள்.குளிப்பாட்டும் போது இருவரும் போட்டிபோட்டு கொண்டு முதுகு தேய்த்து விடுவார்களாம் .

கருங்குழி ரெட்டியார் வீட்டு பையன் சுவாமிகளை நம்ப மாட்டானாம். இராமலிங்க சுவாமிகள் தங்கம் செய்வார் என்று அவரை தங்கம் செய்து கொடுங்கள் என்றும் வைரமாலை வேண்டும் என்றும் துன்புறுத்தினார்கள்  .
இறுதியில் மிகவும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். அவர்களின் சந்ததியினர் இன்னும் குறிஞ்சிப்பாடியில் கஷ்டப்படுவதாக நம் சுவாமிகள் கூறினார்கள் .           
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக