திங்கள், 28 பிப்ரவரி, 2011

கொடிமரம்

 ஒரு ராஜா பெரிய கோயில் ஒன்றை கட்டினான் எல்லா வேலையும் முடிந்துவிட்டது,கொடிமரம் ( கருட கம்பம் ) வைக்க வேண்டும் என்ன செய்தாலும் எவ்வளவு பேர் தூக்கினாலும் அதை நிற்க வைக்க முடியவில்லை .அங்குள்ளவர்கள் தானம் நிறைய செய்தால் கொடிமரம் நின்று விடும் என்று கூறி அரசனை ஏமாற்றி பொன் பொருள் வாங்கி கொண்டார்கள் .அப்போது ஒரு பைத்தியக்காரன் ( நம் சுவாமிகளை  போல் பற்று அற்ற துறவி ) யாராவது அபசாரி தொட்டால் கொடிமரம் தானாகவே நின்றுவிடும் என்று கூற அருகில் இருந்தவர்கள் அபச்சாரம்  அபச்சாரம் என்று கூறினார்கள்.ஒரு நாள் ஒரு பெண் வந்து எல்லோரும் கஷ்டப்படுகிறார்களே என்று நாமும் பொய் தூக்கிவிடலாம் என்று பொய் தொட்டாளாம் உடனே கொடிமரம் நின்று விட்டதாம். எல்லோரும் அவள் காலில் விழுந்து வணங்கினார்கள் அம்மா மகாலட்சுமி நீ யார் ? எந்த ஊர் என்று விசாரிக்கையில் அவள் பக்கத்துக்கு ஊரில் தாசியாக இருப்பதை கூறினாள்.ஆயிரத்துக்கு ஒன்று குறைவாக உள்ள அபசாரி,அபசாரி யாரிடமும் பணம் வாங்காமல் அன்பை கொடுத்ததினால் அந்த சக்தி அவளிடம் இருந்ததாம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக