ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ராஜா திருந்திய கதை

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான், அவன் காம உணர்வு மிக்கவன்,ஊரில் உள்ள அழகான பெண்கள் யாராக இருந்தாலும் கூப்பிட்டு அனுபவித்து விடுவான்.
ஒருநாள் ராஜாவும் மந்திரியும் குதிரை மீது செல்லும் போது பெண்கள் ஓரிடத்தில் நீர் எடுத்து கொண்டு இருந்தார்கள். எல்லா பெண்களும் ராஜாவை பார்த்து கைகொட்டிச் சிரிக்க ஒரு பெண் மட்டும் சிரிக்காமல் தலையை குனிந்து வீட்டிற்கு சென்று விட்டாள்.அவள் மீது ராஜாவிற்கு ஆசை வந்தது.மந்திரியை அனுப்பி அவளை இரவு ஏற்பாடு செய் என்று கூறினான்.மந்திரி விசாரிக்கையில் புதியதாக மணம் முடித்த பெண்  பக்கத்துக்கு ஊரில் இருந்து வந்துள்ளாள் என்பதை அறிந்தான் அவளின் மாமனாரிடமும் ,கணவனிடமும் தகவல் கூறினான். கணவன் மனைவியிடம் இவ்வூரில் இது போல் நடப்பது நீண்ட நாட்களாக உள்ளது என்றும் நடக்க தவறினால் குடும்பத்தையே கொன்று விடுவான் என்றும் அவளை இரவு ராஜாவின் அரண்மனைக்கு செல்லுமாறு கூறினான் .

மனைவி மந்திரியிடம் நான் ஏழ்மையில் வாழ்ந்தவள் அரண்மனை படுக்கை தனக்கு சரிவராது எனவே ராஜாவை இன்று இரவு இங்கு எங்கள் வீட்டிற்க்கு வரச் சொல்லுங்கள் எனறாள். ராஜாவிடம் இது பற்றி கூறுகையில் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன் என்றான் .அவள் வீட்டில் உள்ள அனைவரையும் அன்று வெளியே செல்லுமாறு கூறி இரவு ராஜாவிற்காக காத்து கொண்டு இருந்தாள். இரவில் ராஜா அவளை தேடி வந்தான்,வீட்டிற்கு வந்தவனை உபசரித்து பாய் போட்டு உட்கார வைத்தாள்.பின் ராஜாவை பார்த்து முதன் முதலாக   ஏழையின் குடிசைக்கு வந்துள்ளீர்கள் எதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்டாள்.அவனும் எது கொடுத்தாலும் சாப்பிடுகிறேன் என்று கூறினான் .அவள் காபி  போட்டு ஒரு குவளையில் ( மண்   ) எடுத்து வந்து கொடுத்தாள் அரசனும் இரு மடக்கு குடித்தான். சற்று பொறுங்கள் என்று அவள் கூறி உள்ளே சென்று வேறு ஒரு குவளையில் ( பித்தளை ) காபி எடுத்து வந்து கொடுத்து குடிக்க சொன்னாள். அரசனும் குடித்தான் , அவள் இரண்டிலும் சுவை எப்படி இருந்தது என்று கேட்க ராஜா இரண்டும் ஒரே சுவை உள்ளது என்று கூறினான் . நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்று அவள் கூற மீண்டும் இரண்டையும் பருகி இரண்டின் ருசியும் ஒன்றே என்று கூறினான். அதற்கு அவள் சரியாக சொன்னீர்கள் மகாராஜா அதே போல் ராணியிடம் இருப்பது தான் என்னிடமும் உள்ளது இரண்டும் ஒன்றுதான் என்றாள்.அப்போதுதான் ராஜாவிற்கு புத்தி வந்தது ,அவளிடம் மன்னிப்பு கேட்டு திருந்தினானாம் .

பெண் மோகம் உள்ளவர்களை சுவாமிகள் யானை மாதிரி அழகான மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி கூத்தியார் வேண்டும் என்று அலைகிறீர்கள் என்று திட்டுவார் .        

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக