வியாழன், 24 மார்ச், 2011

சிதம்பர இரகசியம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்பு நடராஜர் என்ற துறவி இருந்தார் ,கோயிலில் சதா சர்வ காலமும் இருப்பார்,அவர் மீது பொறாமை கொண்டவர்கள் அவரை திருடன் என்றும் பைத்தியக்காரன் என்றும் திருமலை நாயக்கரிடம்  கோள் முட்டினார்கள் .ஒரு நாள் மன்னன் கோயிலுக்கு வந்து நடராஜரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அம்பாளையே முழு மதியாக பார்த்து கொண்டு இருந்த நடராஜர் பௌர்ணமி என்றார் .அன்று அமாவாசை இது கேட்ட திருமலை நாயக்கர் இரவு 3 3 /4  நாழிகை (1 1/2  மணி ) குள் நிலா வானத்தில் தோன்றா விட்டால் நெருப்பின் மேல் உரி கட்டி இறக்கப்படுவீர் என்றான் .அப்போது தான் நடராஜர் "நடராஜர் பத்து" பாடினார் அப்போது அம்பாள் காற்சிலம்பை எடுத்து வீச வானத்தில் நிலவு போல் தெரிந்தது ஆடு கண்டதும் தவறு செய்து விட்டோம் என்று மன்னன் வருந்தினான் 
.அதன் பிறகு மதுரையை விட்டு நடராஜர் சிதம்பரம் வந்தார் அங்குள்ள தேவர் அடியாருடன் நடனப்போட்டி நடந்தது இருவரும் திறமையாக ஆடினார்கள் நடராஜர் துறவி அவருக்கு அச்சமில்லை தலைக்கு மேலே    ஒரு காலை  தூக்கி ஆடினார்  அந்த அம்மாள் அதே போல் காலை தூக்க பாவாடை தடுத்தது அச்சத்தால் காலை தூக்கமுடியவில்லை காலை கீழே வைத்து நின்று விட்டார் இதுதான் உண்மையில் நடந்தது சிதம்பர ரகசியம் இதுதான் ..
       
சிதம்பரத்தில் உள்ள கோயிலில் உள்ள ஸ்ரீ மூல நாதர் ( லிங்கம் ) தான் திருமூலர் சமாதியாகும் .
     




தகப்பனும் மகளும் சேர்ந்து உண்டாக்கிய உலகம்

சிவன் சக்தி சிருஷ்டி கர்த்தாவும் ,மும்மூர்த்திகளும் கலந்து யோசித்து 
உத்வேகம் கொண்டு இருந்தார்கள் .  இப்படி இருக்கையில் உலகை யாராலும் அழிக்க முடியாது . தாயால் தான் அழிக்க முடியும் என உணர்ந்து 
தண்ணீரை   பெருவெள்ளமாக்கினார்கள்.தாயும் மகனும் ஒரு பக்கம் ஓடினார்கள் .
விதைகள் நீக்கப்பட்ட சுரக்குடுவையின் உள்   தகப்பனும் மகளும் தண்ணீருக்கு 
பயந்து  புகுந்தனர்.உலகத்தில் உள்ள அனைவரும் அழிந்தனர்  .
48 நாட்கள் கழித்து சுரைக்குடுவை உள் இருந்த இருவர் மட்டும் தப்பினார்கள் 


மகாவிஷ்ணு கருட அவதாரம் எடுத்து  உலகை நல்லவிதமாக படைக்க 
சுற்றி பறந்துவரும் சமயம்   தகப்பனை பார்க்கையில் விபூதியை கையில் 
வைத்துகொண்டு  சிவா சிவா என்று கூறிக்கொண்டு இருந்தவரை பார்த்து இந்த ஒருவனை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்  என எண்ணி ரக்கையால் அடிக்க போகையில் கழுத்தை கெட்டியாக பிடித்துகொண்டு 
உலகமே அழிந்து விட்டது எங்களை மட்டும்   ஏன் வைத்துள்ளாய் என்னையும் 
என் மகளையும்  அழைத்து கொண்டு போ என்று கூறினார் ( அவர் திருநீர் கையுடன் 
கருடனை பிடித்த்தால் தான் கருடன் கழுத்து வெள்ளையானது ) . ஒரு ஆணையும் பெண்ணையும் 
நீதிக்கு புறம்பாய் கொல்வது  பாவம் என விடு விட்டார் . இதைப்பற்றி மகாவிஷ்ணு சிவனிடம் கூறினார். அப்போது அவர் அந்த இருவராலும் உலகம் உண்டாகட்டும் காமத்துக்கு கண் இல்லை ,செத்த நாய் என்றில்லை பெத்த பிள்ளை என்றில்லை என கூறி நான்காவது உலகத்தை படைபித்தார்.
இப்படியாக உலகில் மக்கள் அதிகமாக ஒழுக்கமாக தாய், தந்தை என உறவு முறைகளை உண்டாக்கி வளர்ந்து வந்தது .மனிதனுடைய அறிவு ஒழுக்கம் திறமைகளாலும் நன்மை, தீமை என உணர்ந்து பல கடவுள்களும் உண்டாகி உள்ளது       
      

புதன், 23 மார்ச், 2011

துறவி

 பற்று அற்றவர்கள் துறவிகள் .
முற்றும் துறந்த முனிவர்கள் .
இவர்களின் அன்பை பெற்றவர்களிடம் எந்த துன்பமும் நெருங்க அஞ்சுமாம் .
துறவிகளின் அன்பை பெற்றவர்களுக்கு எந்த பிராயசித்தமும்    தேவையில்லை .

செவ்வாய், 22 மார்ச், 2011

செட்டியார்கள் குறித்து சுவாமிகள் கூறியது

முன்பு உப்புகார செட்டி என்று ஓர் இனம் இருந்தது.முன்பு உப்பு மிளகாய் கழுதை மேல் ஏற்றி விற்பார்களாம் .முன்பு சைவமாக இருந்தார்களாம் .அவர்கள் ஏழு கும்பல்களாக பிரிந்து எல்லா இடமும் சென்று வியாபாரம் செய்து வந்தார்கள் .அவர்களிடம் வெள்ளி பிள்ளையார் ஒன்று இருந்தது.அப்பிள்ளையாரை வாரம் ஒரு கும்பல் வைத்து இருக்கும் அடுத்த வாரம் மற்றொரு கும்பலிடமும் என்று ஏழு கும்பலிடமும் பிள்ளையாரை மாறி மாறி வைத்து கொள்வார்களாம் .இவர்களின் தலைவன் ராஜ சேனாதிபதி செட்டி .அப்போது நவாப் கொள்ளை நிறைய அடித்தான்.அப்போது ஏழு கும்பல்களும் பிரிந்து இரண்டு மாதம் கழித்து ஒன்று கூடினர் அப்போது வெள்ளி பிள்ளையார் தொலைந்துபோய் விட்டது என்றனர் சோதனை போடுகையில் பிள்ளையார் இருந்தது பொய்  சொன்னவனை  மொட்டை  அடித்து  கரும்புள்ளி  செம்புள்ளி குத்தி அனுப்பினார்களாம்  .
 
செட்டியின் பிரிவுகள் 
நாட்டு கோட்டை செட்டி,பேரி செட்டி, அச்சரபாக்கம்   செட்டி ,வடம் செட்டி,ஆயுதம் செட்டி, வெள்ளாள செட்டி, சோழி செட்டி,ஆயிரம் செட்டி, வைசியர் செட்டி, கோமுட்டி செட்டி.

கோமுட்டி செட்டிக்கு சாமர்த்தியம் ஜாஸ்தி , ஆத்தோடு செட்டி போனாலும் ஆதயத்தோடு தான் போவான்      



 .
       

திங்கள், 7 மார்ச், 2011

குரு நம்பிக்கை

  குருவை சதா மானசீகமாக நினைப்பவனுக்கு ஒன்றுமே கஷ்டங்கள் வாராது .குருவானவர் அவைகளை தாங்கி கொள்வார் .தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விடும், தோளுக்கு அருகில் வரும் கடைசியாக காலுக்கு பக்கத்தில் போய் விழுந்து விடும்.

குருவின் மேல் சதா ஒரே நிர்ணயமாய் இருப்பவனிடம் , குருவும் தன்னை சதா நினைப்பவனை பற்றி நினைக்கும் போது ( குரு , பக்தன் )  இருவர்   மனமும்  ஒன்று  கலக்கும்  போது   பிரம்மா தேவன் எழுத்தையே முறியடித்து விடுமாம். ஆகையால் சதா குருவையே நினைத்து வருபவனிடம் நிர்ணயத்தை கலைபதற்கு பிரம்மா தேவன் மாயவை அனுப்பி குருவை நினப்பவனுடைய மனதில் சபலத்தை எழுப்பும் , இன்னல்களை கொடுக்கும், வாட்டும் .இச் சோதனைகளை எல்லாம் வென்றும் எல்லாம் குருவே என் செயல் ஒன்றும் இல்லை , தனது என்று ஒன்றும் இல்லாத நிலை , பற்றுஅற்ற நிலை ஏற்படுத்திகொண்டவனுக்கு குருவே தான் சகலமும் . குருவேதான் பசியாற்றுவார் குறைகளையும் தவிர்ப்பார்கள். 
என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் சற்குருநாதரே , தான் அவருடைய கருவியாக உள்ளேன் என்பான் .

( ஓடி பிழைத்தாலும் குரு வேண்டும் ( 9 ல் குரு இருக்க வேண்டும் )

கஷ்டத்திலும் நம்பிக்கை இழக்காமல் இருபது தான் புண்ணியம் .
நம்பிக்கை தான் பொறை மோர் .
பூரண  நம்பிக்கை இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் .
தேகத்தை வருத்தியாகிலும் நல்லது செய்யவேண்டும் .
பொறுமையை கடைபிடிக்க வேண்டும் .
    

            

பூக்களின் சிறப்பு

வெள்ளை அரளி ,தும்பை பூ சிவனாருக்கு சிறப்பு 
எருக்கன் மாலை பிள்ளையார், தாய்க்கு சிறப்பு 
ரோஜா இராமலிங்க சுவாமிகளுக்கு  சிறப்பு 
வெள்ளை அருகம்புல் மாலை - பிள்ளையாருக்கு சிறப்பு     

சைவம் அசைவம்

சைவ உணவு சாப்பிடுகிறவர்க்கு  கோபம் சீக்கிரம் வரும் , சீக்கிரம் குறையும் .
அசைவ உணவு சாப்பிடுகிறவர்க்கு கோபம் சீக்கிரம் குறையாது .

மாமிசம் என்று நினைத்தால் மாமிசமாகும். உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் கடவுள் என்று சாப்பிட்டால் நாய் மாமிசம் பதார்த்தமாகும் .