திங்கள், 3 ஜனவரி, 2011

மருத்துவம் சர்க்கரை வியாதி விலக

சிறுகுறிஞ்சானை பவுடர் ஆக்கி தேங்காய் பாலில் கலந்து விடாமல் நான்கு மாதங்கள் சாப்பிட வேண்டும் .
சிறுகுறிஞ்சான், காட்டு சீரகம் சேர்த்து சாப்பிட்டாலும் ,
ஆடுதொடாபாளை ( ஆடு தின்னா பாளை ) யை அரைத்து சுண்டக்காய் அளவு காலையில் சாப்பிட்டு  வந்தாலும் சர்க்கரை வியாதி நீங்கும்.               

மருத்துவம் சளி கட்டுவது நீங்க


முருங்கைப் பூ , மூன்று பூண்டு பள்ளு , மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிடவும்

மருத்துவம் கோமக்கொனை கட்டி


கும்ணா செடியின் வேர் பட்டையை கொண்டு  வந்து சுத்தம் செய்து தூள் செய்யவும் . ஒரு படி எள்ளு மாவும் ஐந்து பெரிய பனைவெல்ல கட்டியும் சேர்த்து இடித்து ஆறு உருண்டைகளாக செய்து ஒரு உருண்டை தர்மம் செய்யவும் மீதி உருண்டைகளை தினம் ஒன்று சாப்பிட்டு வரவும்.

விலை மதிக்க முடியாத சொத்து

விலை மதிக்க  முடியாத  சொத்து படிப்பு ஒன்றுதான் 

புண்ணியம்



நாம் கெட்டது செய்யாமல் இருந்தால் அதுவே புண்ணியம்   

எட்டு வகை பூக்கள்


பூக்கள் 
அலரி
பாதிரி
புன்னை
செந்தாமரை
குவளை
வெள்ளெருக்கு
சண்பகம்
நந்தியா வர்த்தம்

மனதில் மலர்கின்ற எட்டுவகை பூக்கள்

கொல்லாமை
புலனடக்கம்
சாந்தம்
அன்பு
தியானம்
தவம் ( சகிப்புதன்மை )
சத்தியம்
மெய்யறிவு


திருமூலர் கூறுவது

கொல்லாமை
பொய்யாமை
விருப்பு இல்லாமை
வெறுப்பு இல்லாமை
கள்ளுன்னாமை
ஆசையின்மை
சாந்தம்
கொடை குணம்
முதலிய தீர்த்தங்கள் உள்ளன . இத் தீர்த்தங்களில் மூழ்கினால் வினைகள் யாவும் கெட்டொழியும் 









இடம்புரி வலம்புரி

இடம்புரி - இடது பக்கம் துதிக்கை வளைந்து துதிக்கை வாயின் நுனி வலது பக்கம் பார்த்து கொண்டு இருக்கும் .

வலம்புரி
வலது  பக்கம் துதிக்கை வளைந்து துதிக்கை வாயின் நுனி இடது  பக்கம் பார்த்து கொண்டு இருக்கும் .

வீட்டுக்கு ---------- இடம்புரி விநாயகர்
கோயிலுக்கு -------வலம்புரி விநாயகர்

யானைக்கு கோபம் வந்தால் வலது பக்கம் ஆட்டும்