வியாழன், 2 செப்டம்பர், 2010

அன்னதானம்


      உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது 
அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் 
எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் 
கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் 
இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற 
வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை
கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி 
குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி 
நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் 
போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள்
வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது 
சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் 
நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக