வியாழன், 9 செப்டம்பர், 2010

ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் அருளுரைகள்

ஓம் சற்குரு அப்பா   பைத்தியம் சுவாமிகளின் அருளுரைகள்.
தர்மம் செய்தால்   மட்டுமே கிரகங்களின் தோஷம்,கெடுதல்களை தடுக்க முடியும்,
பூஜைகளாலும்   தவத்தாலும் கிரகங்களை தடுக்க முடியாது.
7-1/2 நாட்டு சனி   வந்தால் ஒரு அரசன் கூட ஆண்டி ஆகி விடுவான் அந்த நேரத்தில்
பொருமை அவசியம் .

கோயிலுக்கு   சென்றால் கீழே உட்கார வேண்டும் அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

கடவுள் ஆணுக்கு 3   பாகம் சக்தியையும் பெண்ணுக்கு 7 பாகம் சக்தியையும்
கொடுத்துள்ளார்.

சட்டி எடுத்து   பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.
கருடனைப் பார்த்தால் மகா விஷ்ணுவை பார்ப்பது போன்று.
கருடனைப்   பார்த்தால் தலைக்கு மேல்  இரு கைகளையும்   தூக்கி கும்பிட வேண்டும். 
சுவாமிகளை நினைத்து   ஜெபம் செய்தால் கருடன் வரும்.
கருடன் வந்தால் நம்   தோஷங்கள் நம்மை விட்டு விலகுவதாக அர்த்தம்.
சாப்பிடும் போது   யாராவது வந்தால் உள்ள சாப்பாட்டை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க
வேண்டும்.

மூன்று கண்ணுள்ள   கொட்டாங்குச்சியை திருஷ்டி பொட்டு வைத்து கயிற்றினால் கட்ட  
யாருடையதிருஷ்டியும் ஒன்றும் செய்யாது.

செல்வம் வரும் போது   செருக்கு வரக்கூடாது.
பிரம்மாவின் தலை   எழுத்தையே மாற்றக் கூடியவர் துறவி,  துறவிக்கு கடவுளே
கட்டுப்பட்டவர்.

தலைமுடியும் நகமும்   உயிர் பொருட்கள்,நெருப்பால் மட்டுமே அழியும் மற்றது
எதுவாலும் அழியாது.

காலை   4-1/2 முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் எந்த நல்ல காரியமும்
செய்யலாம்,எந்த   நாளாக இருந்தாலும் பரவாயில்லை. 

வயல் நன்றாக விளைய   காலை 5 மணிக்கு பசும் கோமியத்தை சூரிய உதயத்திற்கு முன்
சுவாமிகளை நினைத்து   எல்லா இடமும் தெளிக்க வயலில்

 நல்ல விளைச்சல் விளையும். 
பர்வத மலை துறவிகள்   வாழ்ந்த இடம்,கரும் நொச்சி கரும் தும்பை கற்பக விருட்சம்
யாருக்கும் தெரியாது.   தெய்வீக மூலிகை.

பர்வத   மலைக்கு,செல்லும் போது அவல் வாங்கி செல்ல வேண்டும் பசி ஆற்ற பயன்படும்.
கட்டை பிராணன்   போகும் இடம் தான் சொர்க்கம்.
பெண்கள் திருநீறு   வாங்கும் போது முந்தானையின் மேல் வலது கை வைத்து வாங்க
வேண்டும்.

வலது   கையில் வாங்கும் திருநீறை அப்படியே பூசிக் கொள்ள வேண்டும்.இடது கையில்  
போடக்கூடாது 

போட்டால் புண்ணியம்   அந்த இடத்திலேயே போய்விடும் காகிதத்தில்  போட்டு
கொள்ளலாம்.

துறவியிடம் வரம்   வாங்குவது எப்படி? தங்கத்தையும் செப்பையும் இணைப்பது எப்படி?   
இரண்டையும்

 உருக்கினால் தான் ஒட்ட முடியும் . அதே போல்   இரண்டு மனமும் உருக வேண்டும்  
மனிதனுக்கு

 நம்பிக்கை என்பது முக்கியம். அந்த   நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து
வரம் கிடைக்கும்

. பூஜைகளால் கடவுள்   கிடைப்பதில்லை நம்பிக்கையால் மட்டும் தான் கிடைப்பார்.பாவம்
செய்து விட்டு,

 காசிக்கு சென்றால் பாவம் போகாது.செய்த   தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு
கேட்டால் போதுமானது

கல்லடி   பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல
எண்ணை   விட்டு      

நனைத்து அதை   தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி
திருஷ்டி சுற்றி   தேங்காயை

முக்கூட்டில்   உடைக்கவும். குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை
பழத்தை 4 துண்டாக

நறுக்கி, உள்ளே   குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி, திருஷ்டி
சுற்றி பிழிந்து,

4 துண்டுகளையும் 4   திசைகளில் எறிய வேண்டும். குங்குமச் சாந்தை குழந்தைகளுக்கு
பூச  திருஷ்டி விலகும்

 பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.வீட்டில் ஒரு   துளி கஸ்தூரி இருந்தாலே வீடு
இலட்சுமிகரமாக இருக்கும்

பந்தி பரிமாறுவதை   விட மக்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதுதான் விசேஷம்.
கொடுமுடி   பார்க்காதவன் கொடும்பாவி மதுரை பார்க்காதவன் மாபாவி
காசியில் நீராடுவதை   விட கொடுமுடியில்  நீராடுவது விசேஷம்.
மந்திரங்கள்   அனைத்தும் கரும காண்டம் மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு?
குடும்பத்திற்கு   வரும் பெண் (மனைவி) எல்லோரையும் தன் கூட பிறந்தவர்களைப் போல்
பாவிக்க   வேண்டும்,

எப்போதும்   பொறுமையுடனும் கோபப்படாமலும் இருக்க வேண்டும்.
சம்பாதிக்கும்   பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும். ஒரு பங்கை சேமித்து
வைக்கவும்.  

மூன்று பங்கை   செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட
காலத்தில் உதவும்

தர்மம் செய்யும்   பங்கு மறு ஜென்மத்தில் உதவும்
உலகத்திலேயே   அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க
கூடியது

மற்றபடி ஜப தவங்கள்   எல்லாம் கர்ம வினைகளை போக்காது. வீட்டிலே
இருந்தாலும்,கோயிலுக்கு

போனாலும்   கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியும் இல்லாமல் காப்பாற்று,நல்ல  
சுகத்துடன் 

வைத்திரு என மனமாற   வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை
கொண்டு

செல்ல   வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு  
விரோதமின்றி 

நேர்மையுடன்   வாழ்ந்து வந்தால் போதுமானது.
அன்னதானம்   செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள்  
.வயிறும் 

மனமும் திருப்தி   அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த
ஜென்மத்திற்கும் அடுத்த

ஜென்மத்திற்கும்   நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.
சுவாமிகள் கூறும்   அறுபடை வீடுகள் 1) சுண்டூர்  2)   திருப்பதி மலை, 3) மதுரை
திருப்பரங்குன்றம்

 4) வெள்ளியங்கரி 5) திருச்செந்தூர் 6) பழனி.
ஒரு வியாபார   ஸ்தலத்தில் அமர்வது மேற்க்கு முகம் அல்லது தெற்க்கு முகம் பார்த்து
அமர   வேண்டும்.

ஆண்   - இரும்பு  பெண் -தங்கம்.கல்லானாலும்   கணவன் புல்லான்னாலும் புருஷன்.ஆவதும்
பெண்ணாலே 

கோடான கோடி   குடும்பம் கெட்டதும் பெண்ணாலே.ஆத்திரத்தை பாராட்ட கூடாது, கோபமான
சொல் கூடாது

10   மாதம் சுமந்து 3-3\4 நாழிகை கஷ்டப்பட்டு குழந்தை பிறந்த பிறகு கணவண், குழந்தை  
சாப்பிட்டானா 

என்று பார்பார்கள்   கணவன் பெரிய குழந்தை தன் வயிற்றில் பிறந்த குழந்தை சின்ன
குழந்தை

தன் மனைவியை   அடிக்கவும்,திட்டவும்,அணைக்கவும் கணவனுக்கு உரிமை உண்டு. கோபமாக
வரும்

கணவன்   அடித்தாலும்,திட்டினாலும் மனைவி பொறுத்துக் கொண்டு அடியையும் வாங்கிக்
கொண்டு

அரைமணி   நேரம் தணித்து கோபம் மாறிய உடன் உணவு பரிமாறிய பிறகு மனைவி அடித்தாலும் 
கணவன் வாங்கிக்   கொள்வான்.வீட்டில் எது சமைத்தாலும் முதலில் மாமியாருக்கு
கொடுக்கவும் .நம்மை

திட்டுபவபர்கள்தான்   நம்மை வாழ்விப்பவர்கள் பெண்கள் உருப்படமாட்டாள் என்ற
வாய்ச்சொல் வாங்க கூடாது

இரவில்   படுக்கும் போது தலையை தெற்க்கு அல்லது மேற்க்கு பக்கத்தில் தான் வைத்து
படுக்க   வேண்டும் 

தலையை தெற்க்கு   வைத்து படுத்தால் கோபம் தணிந்து சாந்த நிலையுடன் மனம் இருக்கும்
கல்லா பெட்டியில்   ஒரு மண் குடுவையில் உப்பு போட்டு மஞ்சள் துணியில் சுற்றி
வைத்து கொண்டால்

கூடிய வரை   பணத்தட்டுப்பாடு வராது
நாம் ஒருவரை குருவாக   ஏற்றுக்கொண்டு அவருடைய படத்தை தெற்க்கு முகம் பார்த்து
வைக்க வேண்டும்

 குரு என்பவர் ஞானகாரகர்  உனக்கு நல்லது கெட்டதுகளை சொல்ல கூடியவர்
ஒரு   சம்சாரி தன் பெண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து நியாயத்துடன் தொழில்
நடத்தி   கடமைகளை 

சரிவர   செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை காட்டில் 36 வருடங்கள்  
கடுந்தவம் இருந்தாலும் 

அடைய முடியாது
.ஞாயிற்று கிழமையில்   வரும் அமாவாசை மிக விசேஷமானது அன்று விநாயகர்
முருகர்   சிவன் மகான்களை தரிசனம் செய்வது புண்ணியமானது அன்று
கடாரங்காய்,காரைக்காய்  நகம் 

படாமலும் தரையில்   விளாமலும் பறித்து சுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற்று பூஜை
அறையில்

காற்றோட்டமான   இடத்தில் வைத்து பூஜை செய்ய வீடு இலட்சுமிகரமாக இருக்கும் 
கடுங்காற்றும்   மழையாகும் கடும் உறவும் பகையாகும் 
ஆடி ஆவணியில்   அதிகமாக காற்றடித்தால்  அந்த வருட   பருவமழை நன்றாக இருக்கும்.ஆறு
வழியில்

கொல்லும் காலம்   தெளிவில் கொல்லும் வரப்பு தண்ணீரைக் கெடுக்கும் துரும்பு கல
தண்ணீரைக்   கெடுக்கும்

வேலி வெள்ளாமையை   கெடுக்கும் வெள்ளாடு தோப்பை கெடுக்கும் ஆற்றை நாணல் கெடுக்கும்
விதியை மதியால்   வெல்ல வேண்டும்.கொண்டுகிட்டாலும் சொல்லாதே கொடுத்துகிட்டாலும்
சொல்லாதே

அன்பு மட்டுமே அழியா   சொத்து. பெண்கள் வாயால் இல்லை என்று சொல்ல கூடாது.
பெண்கள் ஆண்களுக்கு   தைரியத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தைகளை இரவு   படுக்க போவதற்கு முன் 1 மணி நேரமும்,காலை 4 மணிக்கும் படிக்க
வைக்க வேண்டும்.

நெருப்பும்,தண்ணீரும்   சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்பொழுதும் இலக்ஷ்மி
கடாக்ஷம் உண்டு

அப்பன் கொடுக்கும்   காசில் இரண்டு தம்படி மிச்சம் பிள்ளை என்றும் முன்னுக்கு
வருவான்.

வெந்தியம்   4 கொண்டகடலை 15 இரவு ஊற வைத்து காலையில் சர்க்கரை போட்டு தினமும்
சாப்பிட 

நல்ல மூளை   வளர்ச்சியும், படிப்பும் வரும்.
தரம்   அறிந்து, கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு,பெண்ணை வாங்கு. 
62   வயதுக் மேல்தான் அதிகமாக கோபம் வரும், இரத்த வீக்கம் குறைய குறைய கோபம்
அதிகம்   வரும் 

எனவே வயதான   பெற்றோர்களிடம் அவர்கள் கோபப்படும் போது நாம் அதிகமாக பேசக்கூடாது.

தளராத நெஞ்சமும்   இடராத சொல்லும் உடைய மனைவி கிடைப்பது அரிதினும் அரிது.
மனைவியை   தாயாகவும்,கணவரை தகப்பனாகவும் எண்ணி நடப்பவர்கள் கோடியில் கிடைப்பது  
அரிது. 

முருங்கை   மரத்தை (கிளையை) ஒடித்து வளர்கனும்,பெண்ணை கிள்ளி வளர்கனும்,பையனை
அடித்து 

வளர்கனும், 16   வயதுக்குள் செய்ய வேண்டும்.
பிள்ளையின் பாதையில்   பெற்றோர்கள் போக வேண்டும் ஆனால் சேரபடாது.
கணவனை   தெய்வமாக நினைத்து குடும்பத்திற்காக எந்த தவறு செய்தாலும் அவள் உத்தமி. 
கூடி கெட்டவர்கள்   யாருமில்லை,பிரிந்து கெட்டவர்கள் உண்டு.
தகப்பனுக்கு பின்   தாய்,அம்மாவுக்கு பின் அண்ணி.
அடிப்பதும் தாய்   உண்டாக்குவதும் தாய் ,ஆண்கள் அவர்களுக்கு பொம்மை, அவர்கள்
கயிற்றை இழுத்தால்   ஆண்கள் ஆடுகிறார்கள்.

குப்புற பிறந்த   குழந்தை அதிஷ்டகார குழந்தை,செல்வமாக வாழ்வார்கள்.
தலைமுடி,குடுமியை   முடியனும்.பக்கத்தில் இருக்கும் முடி அலையப்படாது,குடும்பத்தை
அல்லல்   படுத்தும். 

காலையில்   எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு  
குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.

மரணபடுக்கையில்   இருக்கும் போது  கோரோசனத்தை தண்ணீரில்   போட்டு,பாலில் வெள்ளி
காசு போட்டு சிறிது நேரம் பொறுத்து,

 கோரோசனத்தையும் பாலையும்  சுவாமிகளை நினைத்து கொடுத்தால் 3 3\4 நாழிகை  
உயிருடன் இருப்பார்கள்.

குங்குமப்   பூவை பிரசவ பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்து பாலில் போட்டு
பால்   மஞ்சளாகிய பின் குடித்து வந்தால் 

ஞானமுள்ள சிகப்பான குழந்தை   பிறக்கும். 
ஈரைக்கிர கிணறு   ஊறும்.கெட்ட செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல செலவு செய்தாலும் காசு
வந்து சேரும்.

முந்தியில்தான் எந்த   பொருளையும் வாங்க வேண்டும். மடிபிச்சை உயர்ந்தது.
குடும்பத்தை மூடி   வைக்கும் தத்துவம் நல்லது.எது இருந்தாலும் பொறுமை
வேண்டும்.ஆழ்ந்து செயல்பட   வேண்டும்.

ஆணின் தத்துவம்   நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே பெண்களிடம் சொல்ல வேண்டும்.
முன் யோசனை   நாளைக்குச் செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரி பார்க்க வேண்டும்.
ஞாயிற்று கிழமை விவசாயத்திற்கு   உகந்தது. 
பழுப்பு அரச இலையில்   கையிலை தைத்தால் அழகாக இருக்கும்.
கட்டின   கணவனை தெய்வமாக நினைத்து வாழ்ந்து, கால் கட்டைவிரல்களை ஊன்றி நடந்து,பெரிய  
கட்டைவிரல்களை பார்த்து கொண்டு போகும் 

பெண்ணை   பேய்,பிசாசு,பில்லி சூன்யம் யாதும் அணுகவே அணுகாது.
முதலில்   பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம்.பின் ஆண்குழந்தை பிறந்தால்
நல்லது.தம்பி   மேல் பாசம் அதிகம் இருக்கும். 

தாய்க்கு தலைபிள்ளை   மேல் பற்று அதிகம், தகப்பனுக்கு கடைசிபிள்ளை மேல் பற்று
அதிகம்.திட்டினாலும்   உள்ளுக்குள் பாசம் அதிகம்

பெண்பிள்ளை   வீட்டில் கஷ்டப்பட்டால் குடும்பம் வளர்ச்சியடையாது. 
கோபம் வரும்   வீட்டில் சண்டை வளரும்.
குழந்தைகளை   ஒழுக்கமாக வளர்பவர்கள் பெண்கள் தான்.
காலையில்   கணவன்,மாமியார் மாமனாரை கும்பிட வேண்டும்
பெண்கள் காலை எழுந்தவுடன் கால் பெருவிரல்களை பார்த்து கொண்டு   நடந்துபோனால்
கஷ்டப்படமாட்டார்கள்.

இடது கை கால் தாயின் சக்தி கொடுத்த புண்ணியத்தை வாங்கி கொள்ளும்.


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக