| அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி | ||||||
| முந்தி உதித்தவரே முக்கண்ணணார் தன் மகனே | ||||||
| சக்தி விநாயகரே நீர் தானோ சண்முகரே நீர் தானோ | ||||||
| நாவில் சரஸ்வதியே நல்ல கணபதியே | ||||||
| நான் காலமும் தொழுவேன் | ||||||
| அல்லல் வினைகள் எல்லாம் அகளியிடம் சொல்லி அறிவேன் | ||||||
| தொல்லல் வினைகள் எல்லாம் துரிதமாய் நீக்குவாயோ | ||||||
| சிவ சிவா என்ற திருநாமம் சிந்தைதனில் நான் மறவேன் | ||||||
| ஓதி வைத்த என் குருவே ஓரு நாளும் நான் மறவேன் | ||||||
| பாடி வைத்த என் குருவே பல நாளும் நான் மறவேன் | ||||||
| காற்றாய் நீராய் நெருப்பாய் | ||||||
| அனலாகும் தனலாகும் அன்பு தெய்வமே | ||||||
| கல்லார்க்கும் கருடார்க்கும் புல்லார்க்கும் | ||||||
| பூண்டார்க்கும் புழுவார்க்கும் தெய்வமே | ||||||
| ஒரு ஆணார்க்கும் பெண்ணார்க்கும் தெய்வமே | ||||||
| நாதாந்த தெய்வமே நடுவிருக்கும் தெய்வமே | ||||||
| வேதாந்த தெய்வமே | ||||||
| வேதமுடி மேலிருந்து வேண்டுகின்ற தெய்வமே | ||||||
| தாயாகி தந்தையாகி தாங்கி வளர்க்கும் தெய்வமே | ||||||
| ஆணும் நீயே பெண்ணும் நீயே ஆள வந்த அரசும் நீயே | ||||||
| எங்கும் நிறைந்தவரும் நீ இதயத்தில் உள்ளவரும் நீ | ||||||
| இந்த கொரக்குரும்பை கட்டடக்க வந்த வல்லவரும் நீ |
புதன், 22 செப்டம்பர், 2010
Swamigal Padiya padalgal Akilaanda Kodi
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக