வெள்ளி, 24 டிசம்பர், 2010

மருத்துவம் ஒற்றை தலைவலி நீங்க

மருத்துவம் ஒற்றை தலைவலி நீங்க

படரும் தும்பை தழை ,வேலை தழை, பூண்டு,கட்டி கற்பூரம்,மிளகு அளவு பெருங்காயம் சேர்த்து கையால் கசக்கி வலிக்கும் பாகத்தின் எதிர் பக்கம் உள்ள காதில் நான்கு சொட்டு விடவும் .

வெள்ளை பூனைக்காய்ச்சல் இலையை வலி எடுக்கும் பாகத்தில் ஓட்ட வேண்டும் பிடித்து கொண்டால் விட்டு விட வேண்டும் .விழுந்து    விட்டால்  நரம்பின்  மேல்  ஒவ்வொன்றாக    மூன்று  முறை  செய்யவும்  

திருமணத்தடை   நீங்க

     திருமணத்தடை   நீங்க -

 பசுவும்,கன்றையும் 48 நாட்கள் சுற்றினால் நல்லது. வெள்ளி கிழமை   பச்சரிசியும் வெல்லமும் கொடுக்க வேண்டும். அகத்தி   கீரையை வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.பசுவின் பின் புறத்தில் மஞ்சள்   குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி விழுந்து கும்பிடவும்.

கர்ப்பிணி

கர்ப்பிணி.

தாய்பால் கொடுத்தால்   குழந்தைக்கு ஆசைகள் வளர்ந்து வரும்..

     வாயில் எச்சில் ஒழுகும்   குழந்தை நன்றாக பேசும். வாந்தி எடுக்கும் குழந்தைக்கு வளர்ச்சி அதிகம்.

   கர்ப்பிணி சூரியகிரஹ இருளை   பார்க்க கூடாது பார்த்தால் குழந்தையின் மூளையை பாதிக்கும்.
     ஏழுமாத கர்ப்பமாக இருந்தால்   சூரியகிரஹணம் ஒன்றும் செய்யாது.சூரியகிரஹணத்தில் குழந்தை பிறந்தால் அம்சமாக   வளரும்.
     வலதுகால் சுண்டுவிரலில் காப்பு   கட்டி எடுத்த கீழாநெல்லிசெடியை வேருடன் பிடுங்கி கட்டினால் சுகப்பிரசவம் ஆகும்.
     பிரசவ அவதிபடும் பெண் தன்னை   மறந்த நிலையில் சிவ சிவா என்று உணரும் போது தாய் வேறு குழந்தை வேறாகிறது.
     அழும் குழந்தையும் வாயில்   விரல் சப்பும் குழந்தையும் பிற்காலத்தில் நனறாக இருக்கும் .
   குழந்தை மாலையிட்டு பிறந்தால்   மாமனுக்கு ஆகாது கொடிசுத்தி பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது .
     மூல   நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை மிகவும் செல்வாக்காக வளரும்.திருமண காலத்தில்  மாமனாரை பாதிக்கும். தனித்தனியாக இருந்தால்   பாதிக்காது.ஒரே குடும்பமாகஇருந்தால் தொல்லைகள் கொடுக்கும்


சேற்றுப்புண் விலக

ஒரு அம்மையாருக்கு காலில் சேற்றுப்புண் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்கு சுவாமிகளிடம் மருந்து கேட்க அதற்கு சுவாமிகள் " புளியை கரைத்து அத்துடன் மஞ்சள் தூளை அளவாக கரைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி குழம்பு போல் வரும் .அக் குழம்பை சேற்றுப்புண் உள்ள இடத்தில்  போட குணமாகும் என்றார் .

அந்த அம்மையாரும் சுவாமிகள் கூறியபடி செய்தார். மருந்து போடும் போது எரிச்சல் மிகுதியாக இருந்தது . இரு முறை போட்டதும் முற்றிலும் குணமானது .

 

வியாழன், 23 டிசம்பர், 2010

சொறிசிரங்கு விலக

ஆமணக்கு  எண்ணெய்  எருக்கன் பால் சேர்த்து பனியில்  காய வைத்து சொறி சிரங்கு மேல் தேய்க்கவும். பிரம்மதண்டி விதையை வறுத்து தூள் செய்து உடம்பில் தேய்க்கவும். 

குங்குமப்   பூ

குங்குமப் பூ

     குங்குமப்   பூவை பிரசவ பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்து பாலில் போட்டு பால்   மஞ்சளாகிய பின் குடித்து வந்தால்  ஞானமுள்ள சிகப்பான குழந்தை   பிறக்கும்.  

மரணபடுக்கை

மரணபடுக்கை

     மரணபடுக்கையில்   இருக்கும் போது  கோரோசனத்தை தண்ணீரில்   போட்டு,பாலில் வெள்ளி காசு போட்டு சிறிது நேரம் பொறுத்து,  கோரோசனத்தையும் பாலையும்  சுவாமிகளை நினைத்து கொடுத்தால் 3 3\4 நாழிகை   உயிருடன் இருப்பார்கள்.